மேலும் அறிய

கரூர் மாவட்டத்தில் ஆண்டின் சராசரியை விட அதிக அளவு மழைப்பொழிவு

2011 ஆம் ஆண்டில் இருந்து 2022 ஆம் ஆண்டு வரை 12 ஆண்டுகளில் 2011, 2015 ,2016, 2017, 2020, 2021 ஆண்டுகளில் மட்டுமே ஆண்டின் சராசரி மலையை விட அதிக அளவு மழையை கரூர் மாவட்டம் பெற்றிருந்தது.

தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக கரூர் மாவட்டத்தில் ஆண்டின் சராசரி மழையை விட அதிக அளவு மழை பெய்து உள்ளதால் மக்களும், விவசாயிகளு மகிழ்ச்சி அடைந்துள்ளனர். .

 


கரூர் மாவட்டத்தில் ஆண்டின் சராசரியை விட அதிக அளவு மழைப்பொழிவு

கரூர் மாவட்டத்தின் ஆண்டு சராசரி மழை அளவு 652.20 ஆக உள்ளது. இந்த மழையை ஜனவரி, பிப்ரவரி ஆகிய குளிர்காலங்களில் 16. 80 மில்லி மீட்டரும் மார்ச், ஏப்ரல், மே ஆகிய கோடை காலத்தில் 109.5 மில்லி மீட்டர் தென்மேற்கு பருவ காலமாக ஜூன், ஜூலை, ஆகஸ்ட் செப்டம்பர் ஆகிய நான்கு மாதங்களில் 238.4 மில்லி மீட்டர் வடகிழக்கு பருவமழை காலமாக அக்டோபர் ,நவம்பர், டிசம்பர் மாதம் ஆகிய மூன்று மாதங்களில் 287.5 மில்லி மீட்டரும் என மொத்தமாக 652.20மில்லி மீட்டர் மழையை மாவட்டம் பெற்று வருகிறது. 2022 ஆம் ஆண்டில் குளிர்காலத்தில் பதிவாக வேண்டிய 16. 80 மில்லி மீட்டர் பதிலாக 13.8 மில்லி மீட்டர் மழையே பெய்தது. கோடை காலத்தில் 109.80 மில்லி மீட்டருக்கு பதிலாக கூடுதலாகவே 125.40 மில்லி மீட்டர் மழை பெய்தது தென்மேற்கு சீசனில் 238.4 மில்லி மீட்டரை காட்டிலும் கூடுதலாக 273.66 மழை பெய்தது. உச்சபட்சமாக வடகிழக்கு பருவமழை காலத்தில் 287.5 விட அதிகபட்சமாக 336.53 மில்லி மீட்டர் மழை பெய்திருந்தது.

2011 ஆம் ஆண்டில் இருந்து 2022 ஆம் ஆண்டு வரை 12 ஆண்டுகளில் 2011, 2015 ,2016, 2017, 2020, 2021 ஆண்டுகளில் மட்டுமே ஆண்டின் சராசரி மலையை விட அதிக அளவு மழையை கரூர் மாவட்டம் பெற்றிருந்தது. 12 ஆண்டுகளில் 6 ஆண்டுகள் சராசரியை விட குறைவான அளவில் தான் மழை பெய்திருந்தது.

 


கரூர் மாவட்டத்தில் ஆண்டின் சராசரியை விட அதிக அளவு மழைப்பொழிவு

அந்த ஆண்டுகளில் கரூர் மாவட்டத்தில் குடிநீர் தட்டுப்பாடு, வறட்சி, விவசாய பாதிப்பு போன்றவை ஏற்பட்டு மக்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகினர் ஆனால் கடந்த மூன்று ஆண்டுகளாக தொடர்ந்து கரூர் மாவட்டத்தில் சராசரியை விட மழை கூடுதலாக பெய்து வருவதால் மக்கள் தற்போது சந்தோஷ மனநிலையில் உள்ளனர் அதன்படி, 2020 ஆம் ஆண்டு 757.03 மில்லி மீட்டர் 2021 ஆம் ஆண்டு 934.56 மில்லி மீட்டர் கடந்த 2022 ஆம் ஆண்டு 748.37 மில்லி மீட்டர் என்ற அடிப்படையில் மழைப் பதிவாகியுள்ளது. கடந்த 12 ஆண்டுகளில் 2021 ஆம் ஆண்டு தான் அதிகபட்ச மழையை மாவட்டம் பெற்றுள்ளது. 2016 ஆம் ஆண்டு மிக குறைந்த அளவிலான மழையை மாவட்ட பெற்றுள்ளது. என்பது குறிப்பிடத்தக்கது. கரூர் மாவட்டத்தின் வழியாக காவிரி மற்றும் அமராவதி என இரண்டு ஆறுகள் பயணிக்கிறது. குறிப்பிட்ட தூரம் வரை இரண்டு ஆறுகள் தனித்தனியாகவும், திறமைக்குழு பகுதியில் இருந்து ஆறுகள் இணைந்து ஒருங்கிணைந்த காவிரி ஆக திருச்சியை நோக்கியும் மாயனூர், குளித்தலையை தாண்டி செல்கிறது. இந்த ஆறுகள் பாயும் கரூர் மாவட்ட பகுதிகளில் ஆற்றுப் பாசனம் மூலமும், மற்ற பகுதிகளில் கிணறு, ஏறி மற்றும் குளம் ஆகியவற்றின் மூலமும், வானம் பார்த்த பூமியின் மூலமாகவும் பாசனம் நடைபெறுகிறது. 

மாவட்டத்தின்  விவசாய தேவைக்கு ஆண்டின் சராசரி மழையும் முக்கியம் என்பதால் மழையை கரூர் மாவட்ட விவசாயிகள் ஆண்டுதோறும் ஆர்வத்துடன் எதிர்நோக்கி அதைச் சார்ந்த விவசாயத்தை மேற்கொண்டு வருகின்றனர். கரூர் மாவட்டத்தை பொருத்தவரை நெல், சம்பா, குருவை, சிறுதானியங்கள், கம்பு, சோளம், கரும்பு பயிர் வகைகள் பருத்தி, மஞ்சள், மற்றும் வாழை போன்றவை ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இந்த விவசாய தேவைக்கு ஆண்டுதோறும் சராசரி மழையை தொடர்ந்து பெய்தால் மட்டுமே விவசாயமும் மாவட்டத்தில் செழிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.


கரூர் மாவட்டத்தில் ஆண்டின் சராசரியை விட அதிக அளவு மழைப்பொழிவு

அந்த வகையில், 2022  சேர்த்து கடந்த மூன்று ஆண்டுகளாக ஆண்டின் சராசரியையும் தாண்டி மழை பெய்து, மாவட்டத்தின் மாவட்ட மக்களையும் மழை குளிர்வித்து வருகிறது. கடந்த மூன்று ஆண்டுகளாக ஆண்டின் சராசரியை தாண்டியும் மழை பெய்து வரும் நிலையில், 2023 ஆம் ஆண்டு பிறந்துள்ளது. எனவே, இந்த ஆண்டும் அனைத்து சீசன்களிலும் அதிக அளவு மலையை கரூர் மாவட்ட பெற வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகவும், வேண்டுகோளாகவும் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Patanjali : பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Mallikarjun Kharge | ”நாங்கதான் முடிவு எடுப்போம்! I.N.D.I.A கூட்டணியில் மம்தா” எகிறி அடித்த கார்கேPadayappa elephant Viral Video | ஆட்டம் காட்டிய படையப்பா தூக்கிய வனத்துறையினர் யானையின் அட்ராசிட்டிChennai's Amirtha Aviation | சென்னைஸ் அமிர்தா சர்வதேச விமானக் கல்லூரி படிக்கும் போதே 15000 சம்பளம்Sathyaraj in Modi Biopic | அப்போ பெரியார்  இப்போ மோடிஅதிர்ச்சி கொடுத்த சத்யராஜ் மகள் சொன்ன GOOD NEWS

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Patanjali : பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Fact Check : காலி பாத்திரத்தில் இருந்து உணவு பரிமாறினாரா பிரதமர்? வைரல் புகைப்படம் உண்மையானதா?
காலி பாத்திரத்தில் இருந்து உணவு பரிமாறினாரா பிரதமர்? வைரல் புகைப்படம் உண்மையானதா?
"ஆம் ஆத்மியை ஒழிக்க ஆபரேஷன் ஜாது.. பாஜகவின் சதி திட்டம் இதுதான்" கெஜ்ரிவால் பகீர்!
Rohit Sharma: எல்லாமே வியூஸுக்காகவா? : ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மீது ரோஹித் ஷர்மா ஆவேசம்
Rohit Sharma: எல்லாமே வியூஸுக்காகவா? : ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மீது ரோஹித் ஷர்மா ஆவேசம்
பட்டப்பகலில் வழிப்பறியில் ஈடுபட்ட பா.ஜ.க இளைஞர் அணி தலைவர் கிளி, உட்பட 3 பேர்  கைது
பட்டப்பகலில் வழிப்பறியில் ஈடுபட்ட பா.ஜ.க இளைஞர் அணி தலைவர் உட்பட 3 பேர் கைது
Embed widget