மேலும் அறிய

பண்டிகை கால பலகாரங்களில் பிரச்சனையா? புகாரை தொலைபேசியில் தெரிவிக்கலாம் - கரூர் கலெக்டர்

கரூர் மாவட்ட கலெக்டர் மாற்றுத்திறனாளிகளிடம் இருந்து 29 மனுக்கள் பெறப்பட்டு உரிய நிவாரணம் வழங்கப்பட்டது.

கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை, மாவட்ட கலெக்டர் பிரபு சங்கர் வழங்கினார். இந்த கூட்டத்தில் ஓய்வூதியம், வங்கி கடன், இலவச வீட்டுமனை பட்டா, உதவி உபகரணங்கள், குடும்ப அட்டை மற்றும் இதர மனுக்கள் போன்றவைகளை கேட்டு, மொத்தம் 360 மனுக்கள் பெறப்பட்டது. இதில் மாற்றுத்திறனாளிகளிடம் இருந்து 29 மனுக்கள் பெறப்பட்டது.


பண்டிகை கால பலகாரங்களில் பிரச்சனையா? புகாரை தொலைபேசியில் தெரிவிக்கலாம் - கரூர் கலெக்டர்

மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் கோரிக்கை மனு அளிக்க வரும் மாற்றுத்திறனாளிகளை கூட்ட அரங்கு வரை அழைத்து வருவதை தவிர்த்து, அவர்களுக்கு என பிரத்யேக இருக்கைகள் அமைத்து அமர வைக்கப்பட்டனர். மாற்றுத்திறனாளிகள் இருக்கும் இடத்திற்குச் சென்று, கலெக்டர் கோரிக்கை மனுக்களை பெற்று, மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டிய மனுக்களுக்கு உடனே நடவடிக்கை எடுத்தும், பிற மனுக்களுக்கு ஒரு வார காலத்திற்குள் துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, தகுதியான பயனாளிகளுக்கு உரிய நிவாரணம் உடனுக்குடன் வழங்கப்பட்டு வருகிறது என கலெக்டர் தெரிவித்துள்ளார்.

அந்த வகையில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 2 பயனாளிகளுக்கு ரூ. 4999 வீதம் ரூ.9,998 மதிப்பில் காதோலி கருவிகளையும், ஒரு பயனாளிக்கு ரூ. 380 மதிப்பில் ஒளிரும் மடக்கு குச்சியும், ஒரு பயனாளிக்கு ரூ. 1480 மதிப்பில் நடைமுறை பயிற்சி உபகரணமும், வருவாய்த்துறை சார்பில் 2 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டாவும், 3 பயனாளிகளுக்கு ஆதரவற்ற விதவை சான்றும், 1 பயனாளிக்கு உட்பிரிவு பட்டாவுக்கான சான்றும், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையினர் சார்பாக 10 பயனாளிகளுக்கு தலா ரூ. 4871 வீதம் ரூ. 48710 மதிப்பில் இலவச சலவைப் பெட்டியும், தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் 4 பயனாளிகளுக்கு அடுக்குமாடி குடியிருப்புக்கு தற்காலிக ஒதுக்கீட்டான ஆணைகளையும் என மொத்தம் 24 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் பிரபுசங்கர் வழங்கினார். இந்த நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் லியாகத், திட்ட இயக்குனர் மந்திராசலம், தனித்துணை ஆட்சியர் சைபுதீன், மாவட்ட வழங்கல் அலுவலர் தட்சிணாமூர்த்தி உட்பட அனைத்து துறை அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.


பண்டிகை கால பலகாரங்களில் பிரச்சனையா? புகாரை தொலைபேசியில் தெரிவிக்கலாம் - கரூர் கலெக்டர்


பண்டிகை காலங்களில் உணவுப்பொருட்கள் புகாரை தொலைபேசியில் தெரிவிக்கலாம் 

இதுகுறித்து அவர் விடுத்துள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளதாவது, தீபாவளி பண்டிகை காலங்களில் இனிப்பு, பலகாரங்கள், காரங்கள் மற்றும் கேக் போன்ற பேக்கரி உணவுப் பொருட்களை தயாரிப்பவர்கள் மற்றும் பண்டிகை காலங்களில் இனிப்பு மற்றும் கார திண்பண்டங்கள், சீட்டு நடத்துபவர்கள் உட்பட அனைத்து தயாரிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்களும் உணவு பாதுகாப்பு துறையில் பதிவு செய்து, உரிமம் பெற்று பொதுமக்களுக்கும் விநியோகம் செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஸ்வீட்ஸ் மற்றும் பேக்கரி பொருட்கள் தயாரிப்பாளர்கள் தரமான மூலப்பொருட்களை கொண்டு சுகாதாரமான முறையில் தயாரித்து, பாதுகாப்பான உணவுப் பொருட்களை பொதுமக்களுக்கு வழங்க வேண்டும்.

 உணவு தயாரிப்பில் கலப்படமான பொருட்களையும், அனுமதிக்கப்பட்ட அளவுக்கு அதிகமான வர்ணங்களையோ உபயோகிக்க கூடாது எனவும், உணவு பாதுகாப்பு துறை ஆய்வின் போது, தரமற்ற பொருட்கள் மற்றும் எண்ணெய்கள் பலமுறை பயன்படுத்தியது கண்டறியப்பட்டால், பறிமுதல் செய்யப்பட்டு  பொருட்கள் அழிக்கப்பட்டு, சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், பேக்கிங் செய்யப்பட்ட உணவுப் பொருட்களுக்கு விரைவு சீட்டு (லேபிள்) விடும்போது, அதில் தயாரிப்பாளர்களின் முழு முகவரி, உணவுப் பொருளின் பெயர், தயாரிப்பு அல்லது பேக்கிங் செய்யப்பட்ட தேதி, காலாவதி தேதி, சைவ மற்றும் அசைவ குறியீடு ஆகியவற்றை அவசியம் குறிப்பிட வேண்டும்.

 

 


பண்டிகை கால பலகாரங்களில் பிரச்சனையா? புகாரை தொலைபேசியில் தெரிவிக்கலாம் - கரூர் கலெக்டர்

 


மேலும் உணவுப் பொருட்களை ஈக்கள், பூச்சிகள் மற்றும் கிருமிகள் தொற்று இல்லாத வகையில், சுகாதாரமான சூழலில் வைத்து பொதுமக்களுக்கு விற்பனை செய்திட வேண்டும் எனவும் கலெக்டர் தெரிவித்துள்ளார்.அனைத்து வகையான உணவு வணிகர்களும், உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டம் 2006 இன் கீழ் தங்களது வணிகத்தினை பதிவு செய்து, உரிமம் பெற்றுக்கொள்ள வேண்டும். இதற்கான இணையதளம் மூலமும் தெரிவிக்கலாம். மேலும், உணவுப் பொருட்கள் தொடர்பான புகார்கள் ஏதும் இருப்பின், உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாக துறையின் தொலைபேசி எண் 9444042322 எண்ணுக்கு புகார் தெரிவிக்கலாம் எனவும் கலெக்டர் பிரபுசங்கர் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Senthil Balaji: 10 வருடங்கள் கள்ள ஓட்டு கண்ணுக்குத் தெரியவில்லையா? முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கேள்வி
Senthil Balaji: 10 வருடங்கள் கள்ள ஓட்டு கண்ணுக்குத் தெரியவில்லையா? முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கேள்வி
சாதி வெறி.. பாலியல் வன்கொடுமை செய்து தங்கையை கொலை செய்ய வைத்த அண்ணன் - நண்பனுக்கு உதவி
சாதி வெறி.. பாலியல் வன்கொடுமை செய்து தங்கையை கொலை செய்ய வைத்த அண்ணன் - நண்பனுக்கு உதவி
Personal Loan வாங்கப் போறீங்களா? எந்த வங்கியில் எவ்வளவு வட்டி? மாசம் EMI எவ்வளவு?
Personal Loan வாங்கப் போறீங்களா? எந்த வங்கியில் எவ்வளவு வட்டி? மாசம் EMI எவ்வளவு?
Tamilnadu Headlines: நெல்லையில் முதலமைச்சர்... சென்னையில் வாக்காளர் சிறப்பு முகாம் - 10 மணி சம்பவங்கள்
Tamilnadu Headlines: நெல்லையில் முதலமைச்சர்... சென்னையில் வாக்காளர் சிறப்பு முகாம் - 10 மணி சம்பவங்கள்
ABP Premium

வீடியோ

Bus Accident | தூங்கி வழிந்த ஓட்டுநர் ஆம்னி பஸ் கவிழ்ந்து விபத்து!அந்தரத்தில் தொங்கும் காட்சிகள்
Thiruparankundram Case | “சர்வே கல்லா? சமணர் தூணா?”திருப்பரங்குன்றம் தீபம் சர்ச்சை நீதிமன்றத்தில் காரசார விவாதம்
Edappadi Meet Adani ”தேர்தல் செலவு நான் பார்த்துக்கிறேன்”அதானியை சந்தித்த EPS! டீல் முடித்த அமித்ஷா
”கோவையை பிடிச்சே ஆகணும்” தூக்கியடிக்கும் செந்தில் பாலாஜி! 70 நிர்வாகிகள் ராஜினாமா
”10 நிமிஷம் பத்தாது” செங்கோட்டையன் அட்வைஸ்! விஜய்யின் அடுத்த மூவ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Senthil Balaji: 10 வருடங்கள் கள்ள ஓட்டு கண்ணுக்குத் தெரியவில்லையா? முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கேள்வி
Senthil Balaji: 10 வருடங்கள் கள்ள ஓட்டு கண்ணுக்குத் தெரியவில்லையா? முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கேள்வி
சாதி வெறி.. பாலியல் வன்கொடுமை செய்து தங்கையை கொலை செய்ய வைத்த அண்ணன் - நண்பனுக்கு உதவி
சாதி வெறி.. பாலியல் வன்கொடுமை செய்து தங்கையை கொலை செய்ய வைத்த அண்ணன் - நண்பனுக்கு உதவி
Personal Loan வாங்கப் போறீங்களா? எந்த வங்கியில் எவ்வளவு வட்டி? மாசம் EMI எவ்வளவு?
Personal Loan வாங்கப் போறீங்களா? எந்த வங்கியில் எவ்வளவு வட்டி? மாசம் EMI எவ்வளவு?
Tamilnadu Headlines: நெல்லையில் முதலமைச்சர்... சென்னையில் வாக்காளர் சிறப்பு முகாம் - 10 மணி சம்பவங்கள்
Tamilnadu Headlines: நெல்லையில் முதலமைச்சர்... சென்னையில் வாக்காளர் சிறப்பு முகாம் - 10 மணி சம்பவங்கள்
Teacher Job: ஆசிரியர்களுக்கு குஷி.! மாதம் ரூ.1.25 லட்சம் சம்பளம் - சூப்பரான வாய்ப்பை அறிவித்த தமிழக அரசு
ஆசிரியர்களுக்கு குஷி.! மாதம் ரூ.1.25 லட்சம் சம்பளம் - சூப்பரான வாய்ப்பை அறிவித்த தமிழக அரசு
காவல் உதவி ஆய்வாளர் தேர்வு... 4 மையங்கள்: 4200 விண்ணப்பதாரர்கள் எழுதுகின்றனர்
காவல் உதவி ஆய்வாளர் தேர்வு... 4 மையங்கள்: 4200 விண்ணப்பதாரர்கள் எழுதுகின்றனர்
Maruti Suzuki: பட்ஜெட்டில் கார் வேண்டுமா? 5+ புது மாடல்களுக்கு ப்ளூ-ப்ரிண்ட் ரெடி - மாருதி அதிரடி, ரெண்டே வருஷம்
Maruti Suzuki: பட்ஜெட்டில் கார் வேண்டுமா? 5+ புது மாடல்களுக்கு ப்ளூ-ப்ரிண்ட் ரெடி - மாருதி அதிரடி, ரெண்டே வருஷம்
Shubman Gill: ஸ்கெட்ச் போட்டு கில்லை தூக்கிய பிசிசிஐ? வார்னிங்கில் கேப்டன் சூர்யகுமார்? - கடைசி நேர ட்விஸ்ட்
Shubman Gill: ஸ்கெட்ச் போட்டு கில்லை தூக்கிய பிசிசிஐ? வார்னிங்கில் கேப்டன் சூர்யகுமார்? - கடைசி நேர ட்விஸ்ட்
Embed widget