மேலும் அறிய

பார்வை இழந்த மாற்றுத்திறனாளிக்கு பாசத்தோடு வீடு வழங்கிய கரூர் ஆட்சியர்

கணவனை இழந்த கண்பார்வையற்ற மாற்றுத்திறனாளி பெண்ணிற்கு அவர்களின் இரண்டு பெண் குழந்தைகளை கருத்தில் கொண்டு இலவச வீட்டுமனை பட்டாவினை வழங்கிய ஆட்சித்தலைவர்.

கணவனை இழந்த கண்பார்வையற்ற  மாற்றுத்திறனாளி பெண்ணிற்கு அவர்களின் இரண்டு பெண் குழந்தைகளை கருத்தில் கொண்டு இலவச வீட்டுமனை பட்டாவினை வழங்கி , வீடியல் வீடு,  வீட்டின் ஒரு பகுதியில் கடை, குழந்தைகளுக்கு மாதந்திர கல்வி உதவி தொகை வழங்கவதற்கான நடவடிக்கைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் பிரபுசங்கர் மேற்கொண்டார்.

 

 


பார்வை இழந்த மாற்றுத்திறனாளிக்கு பாசத்தோடு வீடு வழங்கிய கரூர் ஆட்சியர்


கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் பிரபுசங்கர் கண்பார்வையற்ற மாற்றுத்திறனாளி ஜெகஜோதிக்கு இலவச வீட்டுமனை பட்டாவிற்கான ஆணைகளை வழங்கினார். பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவிக்கையில், கரூர் மாவட்டம், கடவூர் வட்டம், வடவாம்பாடியை சேர்ந்த  கணவனையிழந்த கண்பார்வையற்ற மாற்றுத்திறனாளி  ஜெகஜோதி என்பவர் கௌசல்யா, கனிஷ்கா என்ற இரண்டு பெண் குழந்தையுடன் கஷ்டபடுகிறேன் என்று மக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டத்தில் கோரிக்கை மனு அளித்தார்.

 


பார்வை இழந்த மாற்றுத்திறனாளிக்கு பாசத்தோடு வீடு வழங்கிய கரூர் ஆட்சியர்

அவருடைய சொந்த ஊரிலேயே தகுந்த இடத்தில் வீட்டுமனை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வரும் திங்கள் கிழமை குறைத்தீர்க்கும் நாள் கூட்டத்தில் வழங்கப்பட இருந்தது. இது குறித்து தகவலும் அவருக்கு தெரிவிக்கப்பட்டது. கரூர் மாவட்டத்தில் வேறு எந்த மாவட்டத்திலும் இல்லாத அளவில் மனு கொடுக்கப்பட்ட ஒரு மணிநேரத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் வீடு வழங்கியுள்ளோம் இதுவரைக்கும் 20க்கும் மேற்பட்ட நபர்களுக்கு வீடுகள் வழங்கியுள்ளோம். 

 

 


பார்வை இழந்த மாற்றுத்திறனாளிக்கு பாசத்தோடு வீடு வழங்கிய கரூர் ஆட்சியர்

அதனைத்தொடர்ந்து இன்றைய தினம் கண்பார்வையற்ற மாற்றுத்திறனாளி திருமதி ஜெகதேவி என்பவருக்கு அவர் வசிக்கும் கிராமத்திலேயே இலவச வீட்டுமனை பட்டாவிற்க்கான ஆணை வழங்கப்பட்டுள்ளது. அவர் கண்பார்வையற்றவர் என்பதால் அதே இடத்தில்  எளிதாக பயன்படுத்தக்கூடிய வகையில் விடியல் வீடு திட்டத்தின் கீழ் கண்பார்வையற்ற மாற்றுத்திறனாளிக்காக கழிவறை, சாய்தளம் உள்ளிட்ட பிற அடிப்படை வசதிகளுடன் வீட்டிற்குள்ளேயே இருக்கும் வகையில் பிரதியோகமாக வடிவமைப்புடன் வீடு கட்டித் தரப்படும்.

 

 


பார்வை இழந்த மாற்றுத்திறனாளிக்கு பாசத்தோடு வீடு வழங்கிய கரூர் ஆட்சியர்

மேலும், அவரின் பெண் குழந்தைக்கு சமூக குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் பள்ளி செல்லும் குழந்தைகளுக்கான கல்வி நிதி ஆதரவு திட்டத்தின் கீழ் மாதம் ரூ.4000 கிடைப்பதற்கான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையில்  அந்த வீட்டிலேயே ஒரு பகுதியில் சிறிய கடை அமைத்து தரப்படும்.  இரண்டாவது குழந்தை வாய் பேசாமலும். காது கேட்காமல் இருப்பதால் அந்த குழந்தைக்கு தேவையான  மருத்துவ வசதிகளும் செய்து தரப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் பிரபுசங்கர் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து பெண்குழந்தைகளுக்கு பள்ளிக்கு கொண்டு செல்லும் நோட்கள் புத்தகப்பை, புதிய ஆடைகள், காலணிகள் உள்ளிட்ட பொருட்களை வழங்கினார்கள். இந்நிகழ்வில் தனித்துணை ஆட்சியர்(சபாதி) சைபுதீன் ஆகியோர் உள்ளார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

CM Stalin: கலைஞர் மகளிர் உரிமைத்தொகை - இன்று முதல் யார் யாருக்கு கிடைக்கும்? - முழு விவரம் இதோ
CM Stalin: கலைஞர் மகளிர் உரிமைத்தொகை - இன்று முதல் யார் யாருக்கு கிடைக்கும்? - முழு விவரம் இதோ
Magalir urimai thogai: காலையிலேயே வங்கி கணக்கிற்கு வந்த ரூ.1000... குஷியில் துள்ளி குதிக்கும் குடும்பத்தலைவிகள்
காலையிலேயே வங்கி கணக்கிற்கு வந்த ரூ.1000... குஷியில் துள்ளி குதிக்கும் குடும்பத்தலைவிகள்
Bus Accident: மீண்டும் பேருந்து கவிழ்ந்து கோர விபத்து - 9 பேர் பலி, 29 பேரின் நிலை என்ன?
Bus Accident: மீண்டும் பேருந்து கவிழ்ந்து கோர விபத்து - 9 பேர் பலி, 29 பேரின் நிலை என்ன?
Tamilnadu Round Up: 17 லட்சம் பேருக்கு ரூ.1000, ரஜினி பிறந்தநாள், திருப்பரங்குன்றம் வழக்கு - தமிழ்நாட்டில் இதுவரை
Tamilnadu Round Up: 17 லட்சம் பேருக்கு ரூ.1000, ரஜினி பிறந்தநாள், திருப்பரங்குன்றம் வழக்கு - தமிழ்நாட்டில் இதுவரை
ABP Premium

வீடியோ

Tindivanam Bus Accident - டயர் வெடித்து விபத்து ஒருவர் பலி, 15 பேர் படுகாயம்; உதவிய விழுப்புரம் கலெக்டர்
Nainar Nagendran Meet EPS | டெல்லிக்கு அழைத்த அமித் ஷா; ஈபிஎஸ்-நயினார் திடீர் சந்திப்பு; அண்ணாமலை பலே ப்ளான்!
LAW & ORDER இனிமே இவர் கையில் தமிழகத்தின் புதிய பொறுப்பு DGPயார் இந்த அபய் குமார் சிங் IPS? | Abhay Kumar Singh | MK Stalin | TN New DGP
அன்று நீதிபதி மீது காலணி எறிந்த Lawyer இன்று செருப்பால் அடிவாங்கினார் நீதிமன்ற வாசலில் சம்பவம் | Rakesh Kishore | Supreme Court | BR Gavai
”எந்த ஷா வந்தாலென்ன? தமிழ்நாடு Out of Control தான்” ஸ்டாலின் பதிலடி! | MK Stalin On Amit Shah

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Stalin: கலைஞர் மகளிர் உரிமைத்தொகை - இன்று முதல் யார் யாருக்கு கிடைக்கும்? - முழு விவரம் இதோ
CM Stalin: கலைஞர் மகளிர் உரிமைத்தொகை - இன்று முதல் யார் யாருக்கு கிடைக்கும்? - முழு விவரம் இதோ
Magalir urimai thogai: காலையிலேயே வங்கி கணக்கிற்கு வந்த ரூ.1000... குஷியில் துள்ளி குதிக்கும் குடும்பத்தலைவிகள்
காலையிலேயே வங்கி கணக்கிற்கு வந்த ரூ.1000... குஷியில் துள்ளி குதிக்கும் குடும்பத்தலைவிகள்
Bus Accident: மீண்டும் பேருந்து கவிழ்ந்து கோர விபத்து - 9 பேர் பலி, 29 பேரின் நிலை என்ன?
Bus Accident: மீண்டும் பேருந்து கவிழ்ந்து கோர விபத்து - 9 பேர் பலி, 29 பேரின் நிலை என்ன?
Tamilnadu Round Up: 17 லட்சம் பேருக்கு ரூ.1000, ரஜினி பிறந்தநாள், திருப்பரங்குன்றம் வழக்கு - தமிழ்நாட்டில் இதுவரை
Tamilnadu Round Up: 17 லட்சம் பேருக்கு ரூ.1000, ரஜினி பிறந்தநாள், திருப்பரங்குன்றம் வழக்கு - தமிழ்நாட்டில் இதுவரை
Kia Hybrid: சூப்பர் கார்.. ஹைப்ரிட் எடிஷனில் விற்பனையில் இறக்கும் கியா - உள்ளூர் உற்பத்தி, லாஞ்ச் எப்போது?
Kia Hybrid: சூப்பர் கார்.. ஹைப்ரிட் எடிஷனில் விற்பனையில் இறக்கும் கியா - உள்ளூர் உற்பத்தி, லாஞ்ச் எப்போது?
Trump Modi: புதின் எண்ட்ரி.. கால் போட்ட ட்ரம்ப்.. முக்கிய விவகாரங்களை கையிலெடுத்த பிரதமர் மோடி
Trump Modi: புதின் எண்ட்ரி.. கால் போட்ட ட்ரம்ப்.. முக்கிய விவகாரங்களை கையிலெடுத்த பிரதமர் மோடி
Japan sunami alert: மீண்டும் அதிகாலையில் நில நடுக்கம்... மெகா சுனாமி அலர்ட்.? அலறி அடித்து ஓடும் மக்கள்
மீண்டும் அதிகாலையில் நில நடுக்கம்... மெகா சுனாமி அலர்ட்.? அலறி அடித்து ஓடும் மக்கள்
TVK Vijay ERD Meeting: ஈரோட்டில் தவெக மாநாடு நடைபெறுமா.? அறநிலையத்துறை வடிவில் வந்த சிக்கல்.? என்ன பிரச்னை.?
ஈரோட்டில் தவெக மாநாடு நடைபெறுமா.? அறநிலையத்துறை வடிவில் வந்த சிக்கல்.? என்ன பிரச்னை.?
Embed widget