மேலும் அறிய

திருமாநிலையூரில் ரூ.40 கோடி மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலையம் - நினைத்ததை சாதித்த அமைச்சர் செந்தில் பாலாஜி

கரூர் பேருந்து நிலையம் அருகே, தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேர்தல் வாக்குறுதியில், கரூர் மாவட்டத்திற்கு புதிய பேருந்து நிலையம் கட்டி தரப்படும் என வாக்குறுதி அளித்தார்.

கரூர் திருமாநிலையூர் பகுதியில் ரூ. 40 கோடி மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலையம் அமைப்பதற்கான பூமி பூஜை. அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் இன்று நடைபெறுகிறது. கரூர் மாவட்டத்தில், மக்கள் தொகை பெருக்கத்திற்கு ஏற்ப புதிய பேருந்து நிலையம் வேண்டும் என பல்வேறு ஆண்டுகளாக, மாவட்ட மக்கள் அரசியல் கட்சியிடம் கோரிக்கை வைத்து தேர்தல் நேரத்தில் அரசியல் கட்சிகள் தங்களது தேர்தல் வாக்குறுதியாக புதிய பேருந்து நிலையம் கட்டாயம் அமையும் என வாக்குறுதி அளித்து வந்தனர். இந்நிலையில் கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர் முயற்சியால் சுக்காலியூர் அருகே இடங்கள் தேர்வு செய்யப்பட்டு, அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிச்சாமி, கரூர் வருகை புரிந்த போது அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.


திருமாநிலையூரில் ரூ.40 கோடி மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலையம் - நினைத்ததை சாதித்த அமைச்சர் செந்தில் பாலாஜி

அதன் தொடர்ச்சியாக, அந்தப் பணிகள் துவக்கத்தில் சட்டமன்றத் தேர்தல் செய்தி அறிவிக்கப்பட்டதால் பணிகள் நிறுத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து, தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு திராவிட முன்னேற்ற கழகம், ஆட்சியமைந்தது. அப்போது கரூர் பேருந்து நிலையம் அருகே, தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேர்தல் வாக்குறுதியில், கரூர் மாவட்டத்திற்கு புதிய பேருந்து நிலையம் கட்டி தரப்படும் என வாக்குறுதி அளித்தார். அவர் அளித்த வாக்குறுதிகளின் அடிப்படையில் தமிழக மின்சாரம் மற்றும் மதுவிலக்கு துறை அமைச்சர் புதிய பேருந்து கட்டுமான பணிக்காக பல்வேறு இடங்களை ஆய்வு செய்தார்.


திருமாநிலையூரில் ரூ.40 கோடி மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலையம் - நினைத்ததை சாதித்த அமைச்சர் செந்தில் பாலாஜி

அப்பொழுது முந்தைய ஆட்சி காலத்தில் தேர்வு செய்யப்பட்ட, கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட திருமாநிலையூர் பகுதியில் புதிய பேருந்து நிலையம் அமையும் என பரவலாக பேசப்பட்டது. அதே நிலையில் அதிமுக ஆட்சி காலத்தில் அடிக்கல் நாட்டப்பட்ட இடத்தில் இலங்கை தமிழர்களுக்காக மறுவாழ்வு முகாம் அமைக்கும் பணியும் தொடங்கியது. இதனை, அப்பகுதியில் உள்ள சில சமுதாய தலைவர்கள் எதிர்த்தனர். நீதிமன்றத்திற்கும் சென்றனர். நீதிமன்றத்தில் கரூர் மாவட்டத்திற்கு விரைவாக புதிய பேருந்து நிலையம் கட்ட, இடங்களை தேர்வு செய்ய வேண்டும் என நீதிமன்றத்தால் அறிவுறுத்தப்பட்டது. அதன்படி முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா ஆட்சி காலத்தில் தேர்வு செய்யப்பட்ட திருமாநிலையூர் பகுதியில் பேருந்து நிலையம் அமையும் என தெரிவித்தனர்.


திருமாநிலையூரில் ரூ.40 கோடி மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலையம் - நினைத்ததை சாதித்த அமைச்சர் செந்தில் பாலாஜி

அதனைத் தொடர்ந்து, அதன் பணிகள் தொடர்ச்சியாக, மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் புதிய பேருந்து நிலையம் தொடங்குவதற்காக, தீர்மானம் நிறைவேற்றப்பட்டு நிதிகளும் ஒதுக்கப்பட்டது. அதன்படி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கரூர் மாவட்டத்திற்கு முதல்வராக பதவி ஏற்ற பிறகு முதன்முறையாக நலத்திட்ட உதவிகளை வழங்க வருகை புரிந்தார். அந்த நிகழ்ச்சி திருமாநிலையூர் புதிய பேருந்து நிலையம் அமையும் இடத்திலே நடைபெற்றது. அப்போது நிகழ்ச்சியில் பேசிய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விரைவில் கரூர் மாவட்டத்திற்கு புதிய பேருந்து நிலையம் திருமண பகுதியில் அமையும் என வாக்குறுதி அளித்தார். அதனைத் தொடர்ந்து விறுவிறுப்பாக பணிகள் நடைபெற்று வந்த நிலையில் இன்று காலை 12:30 மணியளவில் தொழில்துறை அமைச்சர் த.மு.அன்பரசன் மற்றும் தமிழக மின்சாரம், மதுவிலக்குத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் பொதுமக்களை நீண்ட நாள் கோரிக்கையாக கரூர் மாவட்டத்தில், புதிய பேருந்து நிலையம் அமைக்கும் பணி இன்று தொடங்க உள்ளது என்பதால், மாவட்ட மக்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.


திருமாநிலையூரில் ரூ.40 கோடி மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலையம் - நினைத்ததை சாதித்த அமைச்சர் செந்தில் பாலாஜி

கடந்த ஆட்சிக் காலத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட இடத்தில் வேறு ஒரு பணி தொடங்கி விட்டதால், நீதிமன்றமும் அந்த இடத்தில் பேருந்து நிலைய அமைய வாய்ப்புகள் இல்லை என தெரிவித்தனர். ஆகவே, இன்று தொடங்க உள்ள புதிய பேருந்து நிலையம் பூஜை பணி விறுவிறுப்பாக நடைபெற்று, அடுத்த ஆண்டு இறுதிக்குள் புதிய பேருந்து நிலையம் அமைய பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது. திருமாநிலையூர் புதிய பேருந்து நிலையம் அமைய, இந்த இடம் கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அமைச்சரவையில் போக்குவரத்துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, முன்பே தேர்வு செய்த இடத்தில் மீண்டும் திமுக ஆட்சிக் காலத்தில் மின்சார துறை அமைச்சராக இருக்கும் செந்தில் பாலாஜி இந்த பணிகளை முன்னெடுத்து இருப்பது வரவேற்கத்தக்க ஒன்றாக அமைந்துள்ளது. நினைத்ததை முடிப்பவன் என்று புரட்சித்தலைவர் எம்ஜிஆர் பாடல் வரிகள் இடம்பெற்றுள்ள நிலையில் தற்போது அந்த பாடலுக்கு இணையாக கரூரில் எங்கள் புரட்சித்தலைவர் நினைத்ததை முடித்துவிட்டார் என்ற கருத்துக்களும் பரிமாறப்பட்டு வருகிறது.

தலைப்பு செய்திகள்

எதிர்க்கட்சிகள் புறக்கணிப்புக்கு மத்தியில் எம்பிக்கள் கூட்டம்! டெல்லிக்கு எதிராக முதல்வர் விஜய் எடுத்த முடிவு என்ன?
எதிர்க்கட்சிகள் புறக்கணிப்புக்கு மத்தியில் எம்பிக்கள் கூட்டம்! டெல்லிக்கு எதிராக முதல்வர் விஜய் எடுத்த முடிவு என்ன?
தென் மாவட்ட பயணிகளுக்கு வரப்பிரசாதம்! திருநெல்வேலி - தாம்பரம் சிறப்பு ரயில்கள்!
தென் மாவட்ட பயணிகளுக்கு வரப்பிரசாதம்! திருநெல்வேலி - தாம்பரம் சிறப்பு ரயில்கள்!
மதுரையை மிஞ்சும் திண்டிவனம் மல்லி: சிப்காட்டில் உருவாகுமா வாசனை திரவிய சாம்ராஜ்யம்?
மதுரைக்கு செக் வைத்த திண்டிவனம்! மல்லிகை காட்டில் வாசனை புரட்சி வரப்போகுதா?
தொகுதி மறுவரையறை தென்னிந்தியாவிற்கே மிகப்பெரிய பேராபத்து: அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை!
தொகுதி மறுவரையறை தென்னிந்தியாவிற்கே மிகப்பெரிய பேராபத்து: அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை!

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
UDISE+: என்ன கொடுமை? வகுப்பறைகளில் ஏஐ; ஆனா 1 லட்சம்+ பள்ளிகளில் மாணவிகளுக்கு கழிப்பறையே இல்லை!
UDISE+: என்ன கொடுமை? வகுப்பறைகளில் ஏஐ; ஆனா 1 லட்சம்+ பள்ளிகளில் மாணவிகளுக்கு கழிப்பறையே இல்லை!
E20 பெட்ரோலால் கார்களுக்கு அதிக ஆபத்தா; பைக்குக்கா? துரு, மைலேஜ் பாதிப்பு உறுதி
E20 பெட்ரோலால் கார்களுக்கு அதிக ஆபத்தா; பைக்குக்கா? துரு, மைலேஜ் பாதிப்பு உறுதி
US Tariff on India: இந்தியாவிற்கு பெரிய ஆப்பாக வைத்த US நாடாளுமன்றம்; 100% வரி விதிக்க வழிவகுக்கும் மசோதா நிறைவேற்றம்
இந்தியாவிற்கு பெரிய ஆப்பாக வைத்த US நாடாளுமன்றம்; 100% வரி விதிக்க வழிவகுக்கும் மசோதா நிறைவேற்றம்
டேங்க் ஃபுல் செய்தால் 1200 கி.மீ; 30 மாதங்களில் 4 லட்சம் கார்கள் விற்பனையாகி சாதனை- எந்த கார் தெரியுமா?
டேங்க் ஃபுல் செய்தால் 1200 கி.மீ; 30 மாதங்களில் 4 லட்சம் கார்கள் விற்பனையாகி சாதனை- எந்த கார் தெரியுமா?
Lottery Martin's donation ; ”லாட்டரி கிங் மார்ட்டின்” ஒவ்வொரு கட்சிக்கும் இத்தனை கோடியில் நன்கொடை கொடுத்தாரா.!! ஷாக் கொடுக்கும் பட்டியல்
”லாட்டரி கிங் மார்ட்டின்” ஒவ்வொரு கட்சிக்கும் இத்தனை கோடியில் நன்கொடை கொடுத்தாரா.!! ஷாக் கொடுக்கும் பட்டியல்
China Firm Unhappy Leave: அட, இது லிஸ்ட்லயே இல்லையே.! மன வருத்தத்துல இருக்குற பணியாளர்களுக்கு விடுப்பு கொடுக்கும் கம்பெனி; எங்கே.?
அட, இது லிஸ்ட்லயே இல்லையே.! மன வருத்தத்துல இருக்குற பணியாளர்களுக்கு விடுப்பு கொடுக்கும் கம்பெனி; எங்கே.?
CM விஜய் விடுத்த அழைப்பு.! நிராகரித்த திமுக, அதிமுக,தேமுதிக.! அப்போ யார் தான் கலந்துக்குவாங்க.?
CM விஜய் விடுத்த அழைப்பு.! நிராகரித்த திமுக, அதிமுக,தேமுதிக.! அப்போ யார் தான் கலந்துக்குவாங்க.?
Embed widget