மேலும் அறிய

திருமாநிலையூரில் ரூ.40 கோடி மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலையம் - நினைத்ததை சாதித்த அமைச்சர் செந்தில் பாலாஜி

கரூர் பேருந்து நிலையம் அருகே, தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேர்தல் வாக்குறுதியில், கரூர் மாவட்டத்திற்கு புதிய பேருந்து நிலையம் கட்டி தரப்படும் என வாக்குறுதி அளித்தார்.

கரூர் திருமாநிலையூர் பகுதியில் ரூ. 40 கோடி மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலையம் அமைப்பதற்கான பூமி பூஜை. அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் இன்று நடைபெறுகிறது. கரூர் மாவட்டத்தில், மக்கள் தொகை பெருக்கத்திற்கு ஏற்ப புதிய பேருந்து நிலையம் வேண்டும் என பல்வேறு ஆண்டுகளாக, மாவட்ட மக்கள் அரசியல் கட்சியிடம் கோரிக்கை வைத்து தேர்தல் நேரத்தில் அரசியல் கட்சிகள் தங்களது தேர்தல் வாக்குறுதியாக புதிய பேருந்து நிலையம் கட்டாயம் அமையும் என வாக்குறுதி அளித்து வந்தனர். இந்நிலையில் கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர் முயற்சியால் சுக்காலியூர் அருகே இடங்கள் தேர்வு செய்யப்பட்டு, அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிச்சாமி, கரூர் வருகை புரிந்த போது அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.


திருமாநிலையூரில் ரூ.40 கோடி மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலையம் - நினைத்ததை சாதித்த அமைச்சர் செந்தில் பாலாஜி

அதன் தொடர்ச்சியாக, அந்தப் பணிகள் துவக்கத்தில் சட்டமன்றத் தேர்தல் செய்தி அறிவிக்கப்பட்டதால் பணிகள் நிறுத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து, தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு திராவிட முன்னேற்ற கழகம், ஆட்சியமைந்தது. அப்போது கரூர் பேருந்து நிலையம் அருகே, தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேர்தல் வாக்குறுதியில், கரூர் மாவட்டத்திற்கு புதிய பேருந்து நிலையம் கட்டி தரப்படும் என வாக்குறுதி அளித்தார். அவர் அளித்த வாக்குறுதிகளின் அடிப்படையில் தமிழக மின்சாரம் மற்றும் மதுவிலக்கு துறை அமைச்சர் புதிய பேருந்து கட்டுமான பணிக்காக பல்வேறு இடங்களை ஆய்வு செய்தார்.


திருமாநிலையூரில் ரூ.40 கோடி மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலையம் - நினைத்ததை சாதித்த அமைச்சர் செந்தில் பாலாஜி

அப்பொழுது முந்தைய ஆட்சி காலத்தில் தேர்வு செய்யப்பட்ட, கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட திருமாநிலையூர் பகுதியில் புதிய பேருந்து நிலையம் அமையும் என பரவலாக பேசப்பட்டது. அதே நிலையில் அதிமுக ஆட்சி காலத்தில் அடிக்கல் நாட்டப்பட்ட இடத்தில் இலங்கை தமிழர்களுக்காக மறுவாழ்வு முகாம் அமைக்கும் பணியும் தொடங்கியது. இதனை, அப்பகுதியில் உள்ள சில சமுதாய தலைவர்கள் எதிர்த்தனர். நீதிமன்றத்திற்கும் சென்றனர். நீதிமன்றத்தில் கரூர் மாவட்டத்திற்கு விரைவாக புதிய பேருந்து நிலையம் கட்ட, இடங்களை தேர்வு செய்ய வேண்டும் என நீதிமன்றத்தால் அறிவுறுத்தப்பட்டது. அதன்படி முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா ஆட்சி காலத்தில் தேர்வு செய்யப்பட்ட திருமாநிலையூர் பகுதியில் பேருந்து நிலையம் அமையும் என தெரிவித்தனர்.


திருமாநிலையூரில் ரூ.40 கோடி மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலையம் - நினைத்ததை சாதித்த அமைச்சர் செந்தில் பாலாஜி

அதனைத் தொடர்ந்து, அதன் பணிகள் தொடர்ச்சியாக, மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் புதிய பேருந்து நிலையம் தொடங்குவதற்காக, தீர்மானம் நிறைவேற்றப்பட்டு நிதிகளும் ஒதுக்கப்பட்டது. அதன்படி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கரூர் மாவட்டத்திற்கு முதல்வராக பதவி ஏற்ற பிறகு முதன்முறையாக நலத்திட்ட உதவிகளை வழங்க வருகை புரிந்தார். அந்த நிகழ்ச்சி திருமாநிலையூர் புதிய பேருந்து நிலையம் அமையும் இடத்திலே நடைபெற்றது. அப்போது நிகழ்ச்சியில் பேசிய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விரைவில் கரூர் மாவட்டத்திற்கு புதிய பேருந்து நிலையம் திருமண பகுதியில் அமையும் என வாக்குறுதி அளித்தார். அதனைத் தொடர்ந்து விறுவிறுப்பாக பணிகள் நடைபெற்று வந்த நிலையில் இன்று காலை 12:30 மணியளவில் தொழில்துறை அமைச்சர் த.மு.அன்பரசன் மற்றும் தமிழக மின்சாரம், மதுவிலக்குத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் பொதுமக்களை நீண்ட நாள் கோரிக்கையாக கரூர் மாவட்டத்தில், புதிய பேருந்து நிலையம் அமைக்கும் பணி இன்று தொடங்க உள்ளது என்பதால், மாவட்ட மக்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.


திருமாநிலையூரில் ரூ.40 கோடி மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலையம் - நினைத்ததை சாதித்த அமைச்சர் செந்தில் பாலாஜி

கடந்த ஆட்சிக் காலத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட இடத்தில் வேறு ஒரு பணி தொடங்கி விட்டதால், நீதிமன்றமும் அந்த இடத்தில் பேருந்து நிலைய அமைய வாய்ப்புகள் இல்லை என தெரிவித்தனர். ஆகவே, இன்று தொடங்க உள்ள புதிய பேருந்து நிலையம் பூஜை பணி விறுவிறுப்பாக நடைபெற்று, அடுத்த ஆண்டு இறுதிக்குள் புதிய பேருந்து நிலையம் அமைய பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது. திருமாநிலையூர் புதிய பேருந்து நிலையம் அமைய, இந்த இடம் கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அமைச்சரவையில் போக்குவரத்துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, முன்பே தேர்வு செய்த இடத்தில் மீண்டும் திமுக ஆட்சிக் காலத்தில் மின்சார துறை அமைச்சராக இருக்கும் செந்தில் பாலாஜி இந்த பணிகளை முன்னெடுத்து இருப்பது வரவேற்கத்தக்க ஒன்றாக அமைந்துள்ளது. நினைத்ததை முடிப்பவன் என்று புரட்சித்தலைவர் எம்ஜிஆர் பாடல் வரிகள் இடம்பெற்றுள்ள நிலையில் தற்போது அந்த பாடலுக்கு இணையாக கரூரில் எங்கள் புரட்சித்தலைவர் நினைத்ததை முடித்துவிட்டார் என்ற கருத்துக்களும் பரிமாறப்பட்டு வருகிறது.

தலைப்பு செய்திகள்

சென்னையில் மின்தடை !! ஆகஸ்ட் - 1 ம் தேதி 5 மணி நேர மின்தடை !! எங்கெங்கு தெரியுமா ?
சென்னையில் மின்தடை !! ஆகஸ்ட் - 1 ம் தேதி 5 மணி நேர மின்தடை !! எங்கெங்கு தெரியுமா ?
பெருவெளி பிழைத்தது... திட்டம் கைவிடப்பட்டது! பாமகவின் தொடர் போராட்டங்களுக்கு கிடைத்த வெற்றி - அன்புமணி பெருமிதம்....
பெருவெளி பிழைத்தது... திட்டம் கைவிடப்பட்டது! பாமகவின் தொடர் போராட்டங்களுக்கு கிடைத்த வெற்றி - அன்புமணி பெருமிதம்....
நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்: அன்புமணி ராமதாஸ் நாடாளுமன்றத்தில் காரசார வாதம்!
நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்: அன்புமணி ராமதாஸ் நாடாளுமன்றத்தில் காரசார வாதம்!
" திமுக செஞ்ச துரோகத்தால தான் ஆட்சியே போச்சு " - எடப்பாடியை கழட்டி விட்ட பூவை ஜெகன் மூர்த்தி

வீடியோ

Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?
RSS to கல்வி அமைச்சர் மோடியின் நம்பிக்கை!யார் இந்த பிரகலாத் ஜோஷி?
வைத்திலிங்கம் ரூ.28 கோடி ஊழல்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
வந்தே மாதரம் பாடல் மசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புதல் தரக்கூடாது - திருமா ஏன் இப்படி கூறுகிறார்?
வந்தே மாதரம் பாடல் மசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புதல் தரக்கூடாது - திருமா ஏன் இப்படி கூறுகிறார்?
குட்பை சொன்ன ராமதாஸ்? அன்புமணிக்கு எதிராக சவுண்ட் விட்ட ஆதரவாளர்கள் கதி என்ன?
குட்பை சொன்ன ராமதாஸ்? அன்புமணிக்கு எதிராக சவுண்ட் விட்ட ஆதரவாளர்கள் கதி என்ன?
Iran China US: நட்பு நாட்டையே பதம் பார்த்த ஈரான்; குவைத்தில் உள்ள சீன நிறுவனம் மீது தாக்குதல்; நடந்தது என்ன.?
நட்பு நாட்டையே பதம் பார்த்த ஈரான்; குவைத்தில் உள்ள சீன நிறுவனம் மீது தாக்குதல்; நடந்தது என்ன.?
அதிர்ச்சி !! வாட்ஸ் அப் மூலம் இளம் பெண்களின் புகைப்படங்களை அனுப்பி நடந்த பாலியல் தொழில்
அதிர்ச்சி !! வாட்ஸ் அப் மூலம் இளம் பெண்களின் புகைப்படங்களை அனுப்பி நடந்த பாலியல் தொழில்
Trump Netanyahu Plan: ஈரானை போட்டுத் தாக்க 3 பிளான்கள்; ட்ரம்ப் - நெதன்யாகு ரகசிய சந்திப்பில் பேசியது என்ன.? முக்கிய தகவல்
ஈரானை போட்டுத் தாக்க 3 பிளான்கள்; ட்ரம்ப் - நெதன்யாகு ரகசிய சந்திப்பில் பேசியது என்ன.? முக்கிய தகவல்
Mahindra BE 6 New Upgrades: 3 ஸ்க்ரீன்கள், புதிய டேஷ்போர்ட், கூடுதல் ஸ்டைல்; மொத்தமாக மாறும் மஹிந்திரா BE 6; என்னென்ன மாற்றங்கள்.?
3 ஸ்க்ரீன்கள், புதிய டேஷ்போர்ட், கூடுதல் ஸ்டைல்; மொத்தமாக மாறும் மஹிந்திரா BE 6; என்னென்ன மாற்றங்கள்.?
வாவ்... அமேசிங்.. வரப்போது Kia Sorento Hybrid! அப்படி என்ன வசதிகள் இருக்குது?
வாவ்... அமேசிங்.. வரப்போது Kia Sorento Hybrid! அப்படி என்ன வசதிகள் இருக்குது?
US Iran War: ஜோர்டான் அமெரிக்க ராணுவ தளத்தை துவம்சம் செய்த ஈரான்; டென்ஷனான ட்ரம்ப்; ஏவுகணைகளால் பதிலடி
ஜோர்டான் அமெரிக்க ராணுவ தளத்தை துவம்சம் செய்த ஈரான்; டென்ஷனான ட்ரம்ப்; ஏவுகணைகளால் பதிலடி
Embed widget