மேலும் அறிய

திருமாநிலையூரில் ரூ.40 கோடி மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலையம் - நினைத்ததை சாதித்த அமைச்சர் செந்தில் பாலாஜி

கரூர் பேருந்து நிலையம் அருகே, தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேர்தல் வாக்குறுதியில், கரூர் மாவட்டத்திற்கு புதிய பேருந்து நிலையம் கட்டி தரப்படும் என வாக்குறுதி அளித்தார்.

கரூர் திருமாநிலையூர் பகுதியில் ரூ. 40 கோடி மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலையம் அமைப்பதற்கான பூமி பூஜை. அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் இன்று நடைபெறுகிறது. கரூர் மாவட்டத்தில், மக்கள் தொகை பெருக்கத்திற்கு ஏற்ப புதிய பேருந்து நிலையம் வேண்டும் என பல்வேறு ஆண்டுகளாக, மாவட்ட மக்கள் அரசியல் கட்சியிடம் கோரிக்கை வைத்து தேர்தல் நேரத்தில் அரசியல் கட்சிகள் தங்களது தேர்தல் வாக்குறுதியாக புதிய பேருந்து நிலையம் கட்டாயம் அமையும் என வாக்குறுதி அளித்து வந்தனர். இந்நிலையில் கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர் முயற்சியால் சுக்காலியூர் அருகே இடங்கள் தேர்வு செய்யப்பட்டு, அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிச்சாமி, கரூர் வருகை புரிந்த போது அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.


திருமாநிலையூரில் ரூ.40 கோடி மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலையம் - நினைத்ததை சாதித்த அமைச்சர் செந்தில் பாலாஜி

அதன் தொடர்ச்சியாக, அந்தப் பணிகள் துவக்கத்தில் சட்டமன்றத் தேர்தல் செய்தி அறிவிக்கப்பட்டதால் பணிகள் நிறுத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து, தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு திராவிட முன்னேற்ற கழகம், ஆட்சியமைந்தது. அப்போது கரூர் பேருந்து நிலையம் அருகே, தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேர்தல் வாக்குறுதியில், கரூர் மாவட்டத்திற்கு புதிய பேருந்து நிலையம் கட்டி தரப்படும் என வாக்குறுதி அளித்தார். அவர் அளித்த வாக்குறுதிகளின் அடிப்படையில் தமிழக மின்சாரம் மற்றும் மதுவிலக்கு துறை அமைச்சர் புதிய பேருந்து கட்டுமான பணிக்காக பல்வேறு இடங்களை ஆய்வு செய்தார்.


திருமாநிலையூரில் ரூ.40 கோடி மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலையம் - நினைத்ததை சாதித்த அமைச்சர் செந்தில் பாலாஜி

அப்பொழுது முந்தைய ஆட்சி காலத்தில் தேர்வு செய்யப்பட்ட, கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட திருமாநிலையூர் பகுதியில் புதிய பேருந்து நிலையம் அமையும் என பரவலாக பேசப்பட்டது. அதே நிலையில் அதிமுக ஆட்சி காலத்தில் அடிக்கல் நாட்டப்பட்ட இடத்தில் இலங்கை தமிழர்களுக்காக மறுவாழ்வு முகாம் அமைக்கும் பணியும் தொடங்கியது. இதனை, அப்பகுதியில் உள்ள சில சமுதாய தலைவர்கள் எதிர்த்தனர். நீதிமன்றத்திற்கும் சென்றனர். நீதிமன்றத்தில் கரூர் மாவட்டத்திற்கு விரைவாக புதிய பேருந்து நிலையம் கட்ட, இடங்களை தேர்வு செய்ய வேண்டும் என நீதிமன்றத்தால் அறிவுறுத்தப்பட்டது. அதன்படி முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா ஆட்சி காலத்தில் தேர்வு செய்யப்பட்ட திருமாநிலையூர் பகுதியில் பேருந்து நிலையம் அமையும் என தெரிவித்தனர்.


திருமாநிலையூரில் ரூ.40 கோடி மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலையம் - நினைத்ததை சாதித்த அமைச்சர் செந்தில் பாலாஜி

அதனைத் தொடர்ந்து, அதன் பணிகள் தொடர்ச்சியாக, மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் புதிய பேருந்து நிலையம் தொடங்குவதற்காக, தீர்மானம் நிறைவேற்றப்பட்டு நிதிகளும் ஒதுக்கப்பட்டது. அதன்படி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கரூர் மாவட்டத்திற்கு முதல்வராக பதவி ஏற்ற பிறகு முதன்முறையாக நலத்திட்ட உதவிகளை வழங்க வருகை புரிந்தார். அந்த நிகழ்ச்சி திருமாநிலையூர் புதிய பேருந்து நிலையம் அமையும் இடத்திலே நடைபெற்றது. அப்போது நிகழ்ச்சியில் பேசிய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விரைவில் கரூர் மாவட்டத்திற்கு புதிய பேருந்து நிலையம் திருமண பகுதியில் அமையும் என வாக்குறுதி அளித்தார். அதனைத் தொடர்ந்து விறுவிறுப்பாக பணிகள் நடைபெற்று வந்த நிலையில் இன்று காலை 12:30 மணியளவில் தொழில்துறை அமைச்சர் த.மு.அன்பரசன் மற்றும் தமிழக மின்சாரம், மதுவிலக்குத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் பொதுமக்களை நீண்ட நாள் கோரிக்கையாக கரூர் மாவட்டத்தில், புதிய பேருந்து நிலையம் அமைக்கும் பணி இன்று தொடங்க உள்ளது என்பதால், மாவட்ட மக்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.


திருமாநிலையூரில் ரூ.40 கோடி மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலையம் - நினைத்ததை சாதித்த அமைச்சர் செந்தில் பாலாஜி

கடந்த ஆட்சிக் காலத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட இடத்தில் வேறு ஒரு பணி தொடங்கி விட்டதால், நீதிமன்றமும் அந்த இடத்தில் பேருந்து நிலைய அமைய வாய்ப்புகள் இல்லை என தெரிவித்தனர். ஆகவே, இன்று தொடங்க உள்ள புதிய பேருந்து நிலையம் பூஜை பணி விறுவிறுப்பாக நடைபெற்று, அடுத்த ஆண்டு இறுதிக்குள் புதிய பேருந்து நிலையம் அமைய பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது. திருமாநிலையூர் புதிய பேருந்து நிலையம் அமைய, இந்த இடம் கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அமைச்சரவையில் போக்குவரத்துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, முன்பே தேர்வு செய்த இடத்தில் மீண்டும் திமுக ஆட்சிக் காலத்தில் மின்சார துறை அமைச்சராக இருக்கும் செந்தில் பாலாஜி இந்த பணிகளை முன்னெடுத்து இருப்பது வரவேற்கத்தக்க ஒன்றாக அமைந்துள்ளது. நினைத்ததை முடிப்பவன் என்று புரட்சித்தலைவர் எம்ஜிஆர் பாடல் வரிகள் இடம்பெற்றுள்ள நிலையில் தற்போது அந்த பாடலுக்கு இணையாக கரூரில் எங்கள் புரட்சித்தலைவர் நினைத்ததை முடித்துவிட்டார் என்ற கருத்துக்களும் பரிமாறப்பட்டு வருகிறது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

மதுரையில் முதலீட்டு மாநாடு: ரூ.36,000 கோடி அறிவிப்பு, ஆனால் மதுரைக்கு வெறும் 4% மட்டும் தானா?
மதுரையில் முதலீட்டு மாநாடு: ரூ.36,000 கோடி அறிவிப்பு, ஆனால் மதுரைக்கு வெறும் 4% மட்டும் தானா?
UGC: இனி கல்லூரிகளிலும் மும்மொழிக் கொள்கை; யுஜிசி உத்தரவு- தமிழ்நாட்டில் எப்படி?
UGC: இனி கல்லூரிகளிலும் மும்மொழிக் கொள்கை; யுஜிசி உத்தரவு- தமிழ்நாட்டில் எப்படி?
பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு குஷி; இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது- வெளியான முக்கிய அறிவிப்பு- யார் யாருக்கெல்லாம்?
பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு குஷி; இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது- வெளியான முக்கிய அறிவிப்பு- யார் யாருக்கெல்லாம்?
IPL Auction 2026: கீரினுக்கு ஸ்கெட்ச் போடும் சிஎஸ்கே! ஏலத்தில் குதிக்கும் 350 வீரர்கள்.. யார் யாருக்கு என்ன அடிப்படை விலை?
IPL Auction 2026: கீரினுக்கு ஸ்கெட்ச் போடும் சிஎஸ்கே! ஏலத்தில் குதிக்கும் 350 வீரர்கள்.. யார் யாருக்கு என்ன அடிப்படை விலை?
ABP Premium

வீடியோ

Kanchi Ekambareswarar Temple Kumbabishekam | காஞ்சி ஏகாம்பரநாதர் கோயில்மகா கும்பாபிஷேக விழா!
KN NEHRU ED | ’’உடனே FIR போடுங்க!’’நெருக்கும் அமலாக்கத்துறைசிக்கலில் K.N.நேரு?
பல்லத்தில் கவிழ்ந்த கார் ஒரே குடும்பத்தில் மூவர் பலிபதற வைக்கும் காட்சி | Villupuram Accident News
“என் கல்யாணம் நின்னுருச்சு” இது தான் காரணம்? ஸ்மிருதி மந்தனா பகீர் பதிவு | Palash Muchchal Smriti Mandhana Marriage Called Off
Sabareesan Meet Rahul | DEAL-ஐ முடித்த சபரீசன்! OK சொன்ன ராகுல்.. பிரவீன் சக்ரவர்த்தி அதிர்ச்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மதுரையில் முதலீட்டு மாநாடு: ரூ.36,000 கோடி அறிவிப்பு, ஆனால் மதுரைக்கு வெறும் 4% மட்டும் தானா?
மதுரையில் முதலீட்டு மாநாடு: ரூ.36,000 கோடி அறிவிப்பு, ஆனால் மதுரைக்கு வெறும் 4% மட்டும் தானா?
UGC: இனி கல்லூரிகளிலும் மும்மொழிக் கொள்கை; யுஜிசி உத்தரவு- தமிழ்நாட்டில் எப்படி?
UGC: இனி கல்லூரிகளிலும் மும்மொழிக் கொள்கை; யுஜிசி உத்தரவு- தமிழ்நாட்டில் எப்படி?
பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு குஷி; இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது- வெளியான முக்கிய அறிவிப்பு- யார் யாருக்கெல்லாம்?
பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு குஷி; இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது- வெளியான முக்கிய அறிவிப்பு- யார் யாருக்கெல்லாம்?
IPL Auction 2026: கீரினுக்கு ஸ்கெட்ச் போடும் சிஎஸ்கே! ஏலத்தில் குதிக்கும் 350 வீரர்கள்.. யார் யாருக்கு என்ன அடிப்படை விலை?
IPL Auction 2026: கீரினுக்கு ஸ்கெட்ச் போடும் சிஎஸ்கே! ஏலத்தில் குதிக்கும் 350 வீரர்கள்.. யார் யாருக்கு என்ன அடிப்படை விலை?
IND vs SA 1st T20:டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா.. மேட்ச்சை ஜெயிக்குமா இந்தியா? பேட்டிங் செய்யும் சூர்யா பாய்ஸ்
IND vs SA 1st T20:டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா.. மேட்ச்சை ஜெயிக்குமா இந்தியா? பேட்டிங் செய்யும் சூர்யா பாய்ஸ்
Kia Sonet: ரூ.8 லட்சம் இருந்தால் போதும்.. Kia Sonet கார் மைலேஜ், சிறப்புகள் என்னென்ன?
Kia Sonet: ரூ.8 லட்சம் இருந்தால் போதும்.. Kia Sonet கார் மைலேஜ், சிறப்புகள் என்னென்ன?
Suryakumar Yadav: சொதப்போ சொதப்பல்.. என்னதான் ஆச்சு சூர்யகுமார்? கடைசி 13 டி20 ரன்களை பாருங்க!
Suryakumar Yadav: சொதப்போ சொதப்பல்.. என்னதான் ஆச்சு சூர்யகுமார்? கடைசி 13 டி20 ரன்களை பாருங்க!
சாதனை படைத்த வந்தாரா! அனந்த் அம்பானிக்கு கிடைத்த பெருமை! விலங்கு நலனுக்காக உலகளாவிய அங்கீகாரம்..
சாதனை படைத்த வந்தாரா! அனந்த் அம்பானிக்கு கிடைத்த பெருமை! விலங்கு நலனுக்காக உலகளாவிய அங்கீகாரம்..
Embed widget