மேலும் அறிய

குழந்தைக்கு 6 மாதம் வரை தாய்ப்பால் மட்டுமே கொடுக்க வேண்டும் - கரூர் ஆட்சியர் பிரபு சங்கர்

தாய்ப்பால் கொடுக்க வேண்டியது நமது கடமை அதற்கு விழிப்புணர்வு ஏற்படுத்த அவசியமே இல்லை. இருந்த போதும் நவ நாகரிக உலகில் இது போன்ற விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்ற கட்டாயத்தில் இருக்கிறோம்.

குழந்தை பிறந்து ஆறு மாதம் வரை தாய்ப்பால் மட்டுமே உணவாக கொடுக்க வேண்டும் என உலக தாய்ப்பால் வாரவிழாவில் மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் பிரபு சங்கர் கூறினார்.

கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் வட்டம் வீரராக்கியம் கிராமத்தில் நேற்று உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் பிரபு சங்கர் தலைமையில் நடைபெற்றது. இது குறித்து  மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது: ஒவ்வொரு வருடமும் ஆகஸ்ட் முதல் வாரத்தில் தாய்ப்பால் கொடுப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. தாய்ப்பால் கொடுக்க வேண்டியது நமது கடமை அதற்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று அவசியமே இல்லை. இருந்த போதும் நவ நாகரிக உலகில் இது போன்ற விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்ற கட்டாயத்தில் இருக்கிறோம்.



குழந்தைக்கு 6 மாதம் வரை தாய்ப்பால் மட்டுமே கொடுக்க வேண்டும் - கரூர் ஆட்சியர் பிரபு சங்கர்

குழந்தைகளை பாதுகாப்பதில் இரண்டு வகை பிரச்னைகள் உள்ளது. ஒன்று பழமைவாதம் மற்றொன்று புதுமை வாதம், பழமை வாதத்தை பொருத்தவரை குழந்தை பிறந்தவுடன் சர்க்கரை தண்ணீர் வாயில் ஊற்றுவது, பெயர் வைக்கும் போது மோதிரத்தை தேனில் மூழ்கி வாயில் வைப்பது இதெல்லாம் மிகவும் தவறான செயல். அதேபோல் புதுமை வாதத்தை பொருத்தவரை ஆறு மாதம் வரை தாய்ப்பால் மட்டுமே உணவாக கொடுக்க வேண்டும். ஆறு மாதத்திற்கு பிறகு அதாவது 181வது நாட்களுக்கு பின் இணை உணவு கொடுக்க வேண்டும். இணை உணவு எக்காரணத்தைக் கொண்டும் ஏதாவது ஒரு ஆலையில் தயார் செய்து பாக்கெட்டில் அடைக்கப்பட்ட உணவுகளை கொடுக்கக் கூடாது. இயற்கையாக பாரம்பரியமிக்க நமது வீட்டில் சமைக்கப்படும் உணவுகளை மட்டுமே எளிமையான உணவுகளை குழந்தைக்கு கொடுக்க வேண்டும். அதுவும் குறிப்பாக குழந்தை பிறந்தவுடன் சீம்பால் அவசியம் கொடுக்க வேண்டும் அதில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருக்கிறது.


குழந்தைக்கு 6 மாதம் வரை தாய்ப்பால் மட்டுமே கொடுக்க வேண்டும் - கரூர் ஆட்சியர் பிரபு சங்கர்

தாய்ப்பால் கொடுப்பதிலோ அல்லது தாய்ப்பால் சுரப்பதிலோ ஏதாவது சிக்கல் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவர் மற்றும் செவிலியர்களிடம் மட்டுமே ஆலோசனை கேட்க வேண்டும். தாய்ப்பால் கொடுப்பதன் காரணமாக குழந்தைகளுக்கு ஏகப்பட்ட நன்மையும் அதேபோல் தாய்மார்களுக்கும் ஏகப்பட்ட நன்மைகளும் உள்ளது என்பதை புரிந்து கொள்ள வேண்டும். செயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட உணவுகளை எக்காரணத்தைக் கொண்டும் குழந்தைகளுக்கு கொடுக்கக் கூடாது. முதியோர்கள் தயவு கூர்ந்து இந்த கருத்துக்களை உங்கள் வீட்டில் உள்ள இளம் தாய்மார்களுக்கு கொண்டு செல்ல வேண்டும். ஆறு மாதங்களுக்கு தாய்ப்பால் மட்டுமே கொடுக்க வேண்டும் என்பதில் அனைவரும் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும். இதன் மூலம் எதிர்காலத்தில் நல்ல ஆரோக்கியமான குழந்தைகளை உருவாக்கிட முடியும் என்பதை அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் பிரபு சங்கர், முன்னதாக கர்ப்பினி தாய்மார்களுக்கு பச்சிளம் குழந்தைகள் மற்றும் இளம் குழந்தைகளுக்கு உணவு ஊட்டும் முறை மற்றும் விளையாட்டு மூலம் கற்றல் புத்தகங்களை  வழங்கினார். மேலும் தாய்ப்பால் அவசியம் குறித்து விழிப்புணர்வு உறுதிமொழி எடுக்கப்பட்ட பின்னர் அது குறித்த விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார்கள்.


குழந்தைக்கு 6 மாதம் வரை தாய்ப்பால் மட்டுமே கொடுக்க வேண்டும் - கரூர் ஆட்சியர் பிரபு சங்கர்

தொடர்ந்து அப்பகுதியில் உள்ள அங்கன்வாடி மையத்தை ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சித்தலைவர் குழந்தைகளின் வயசு அதற்கேற்ற உயரம் மற்றும் எடை உள்ளதா என்பதை ஆய்வு மேற்கொண்டு எடை குறைவாக உள்ள குழந்தைகளுக்கு சத்தான உணவுகளை வழங்க ஆலோசனைகள் வழங்கினார். நிகழ்ச்சியில் ஒருங்கிணைந்த குழந்தைகள் திட்ட அலுவலர் நாகலட்சுமி, குளித்தலை வருவாய் கோட்டாட்சியர் புஷ்பாதேவி, ஒன்றிய கவுன்சிலர் லீலாவதி, ஊராட்சி மன்ற தலைவர் வசந்தி, கிருஷ்ணராயபுரம் வட்டாட்சியர் முருகன், கர்ப்பிணி தாய்மார்கள், அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் அரசுஅலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

CM MK Stalin: 2 நாட்கள் திருநெல்வேலியில்.. முக்கிய அறிவிப்பை வெளியிடும் முதலமைச்சர் ஸ்டாலின்!
CM MK Stalin: 2 நாட்கள் திருநெல்வேலியில்.. முக்கிய அறிவிப்பை வெளியிடும் முதலமைச்சர் ஸ்டாலின்!
TN SIR Voter List: உங்க பேரு வாக்காளர் பட்டியலில் இருக்கா? SIR வரைவு பட்டியல் வெளியீடு: 3 வழியில் சரிபார்க்கலாம்- எப்படி?
TN SIR Voter List: உங்க பேரு வாக்காளர் பட்டியலில் இருக்கா? SIR வரைவு பட்டியல் வெளியீடு: 3 வழியில் சரிபார்க்கலாம்- எப்படி?
SIR 2026 Voter List: தமிழ்நாட்டில் லட்சக்கணக்கில் நீக்கப்பட்ட வாக்காளர்கள் - எந்தெந்த மாவட்டத்தில் எத்தனை பேர்?
SIR 2026 Voter List: தமிழ்நாட்டில் லட்சக்கணக்கில் நீக்கப்பட்ட வாக்காளர்கள் - எந்தெந்த மாவட்டத்தில் எத்தனை பேர்?
TN SIR Voter List LIVE: தமிழ்நாட்டில் 97.37 லட்ச வாக்காளர்காள் நீக்கம்... தேர்தல் ஆணையம் கொடுத்த ஷாக்... மாவட்ட வாரியாக எத்தனை பேர் நீக்கம்?
TN SIR Voter List LIVE: தமிழ்நாட்டில் 97.37 லட்ச வாக்காளர்காள் நீக்கம்... தேர்தல் ஆணையம் கொடுத்த ஷாக்... மாவட்ட வாரியாக எத்தனை பேர் நீக்கம்?
ABP Premium

வீடியோ

Thiruparankundram Case | “சர்வே கல்லா? சமணர் தூணா?”திருப்பரங்குன்றம் தீபம் சர்ச்சை நீதிமன்றத்தில் காரசார விவாதம்
Edappadi Meet Adani ”தேர்தல் செலவு நான் பார்த்துக்கிறேன்”அதானியை சந்தித்த EPS! டீல் முடித்த அமித்ஷா
”கோவையை பிடிச்சே ஆகணும்” தூக்கியடிக்கும் செந்தில் பாலாஜி! 70 நிர்வாகிகள் ராஜினாமா
”10 நிமிஷம் பத்தாது” செங்கோட்டையன் அட்வைஸ்! விஜய்யின் அடுத்த மூவ்
TN IPS Officers Transfer | அருண் ஐபிஎஸ் மாற்றம்? டேவிட்சனுக்கு முக்கிய பதவி.. தயாரான ஐபிஎஸ் பட்டியல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM MK Stalin: 2 நாட்கள் திருநெல்வேலியில்.. முக்கிய அறிவிப்பை வெளியிடும் முதலமைச்சர் ஸ்டாலின்!
CM MK Stalin: 2 நாட்கள் திருநெல்வேலியில்.. முக்கிய அறிவிப்பை வெளியிடும் முதலமைச்சர் ஸ்டாலின்!
TN SIR Voter List: உங்க பேரு வாக்காளர் பட்டியலில் இருக்கா? SIR வரைவு பட்டியல் வெளியீடு: 3 வழியில் சரிபார்க்கலாம்- எப்படி?
TN SIR Voter List: உங்க பேரு வாக்காளர் பட்டியலில் இருக்கா? SIR வரைவு பட்டியல் வெளியீடு: 3 வழியில் சரிபார்க்கலாம்- எப்படி?
SIR 2026 Voter List: தமிழ்நாட்டில் லட்சக்கணக்கில் நீக்கப்பட்ட வாக்காளர்கள் - எந்தெந்த மாவட்டத்தில் எத்தனை பேர்?
SIR 2026 Voter List: தமிழ்நாட்டில் லட்சக்கணக்கில் நீக்கப்பட்ட வாக்காளர்கள் - எந்தெந்த மாவட்டத்தில் எத்தனை பேர்?
TN SIR Voter List LIVE: தமிழ்நாட்டில் 97.37 லட்ச வாக்காளர்காள் நீக்கம்... தேர்தல் ஆணையம் கொடுத்த ஷாக்... மாவட்ட வாரியாக எத்தனை பேர் நீக்கம்?
TN SIR Voter List LIVE: தமிழ்நாட்டில் 97.37 லட்ச வாக்காளர்காள் நீக்கம்... தேர்தல் ஆணையம் கொடுத்த ஷாக்... மாவட்ட வாரியாக எத்தனை பேர் நீக்கம்?
TN SIR Voter List: வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லையா.? புதிதாக பெயரை சேர்க்க என்ன செய்ய வேண்டும்.? இதோ ஈசியான வழிமுறை
வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லையா.? புதிதாக பெயரை சேர்க்க என்ன செய்ய வேண்டும்.? இதோ ஈசியான வழிமுறை
EPS on SIR; வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லையா? பதற்றப்பட வேண்டாம்.. தொண்டர்களுக்கு கட்டளையிட்ட இபிஎஸ்
EPS on SIR; வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லையா? பதற்றப்பட வேண்டாம்.. தொண்டர்களுக்கு கட்டளையிட்ட இபிஎஸ்
PIT BULL , ROTTWEILLER DOG: பிட்புல், ராட்வீலர் நாய்களை வளர்த்தால் இனி அவ்வளவு தான்.. நாளை முதல் ரூ.1 லட்சம் அபராதம்
பிட்புல், ராட்வீலர் நாய்களை வளர்த்தால் இனி அவ்வளவு தான்.. நாளை முதல் ரூ.1 லட்சம் அபராதம்
விஜய் VS நயினார்:
விஜய் VS நயினார்: "அய்யோ பாவம் தம்பி" - விழுப்புரத்தில் தெறித்த அரசியல் தீப்பொறி!
Embed widget