மேலும் அறிய

குழந்தைக்கு 6 மாதம் வரை தாய்ப்பால் மட்டுமே கொடுக்க வேண்டும் - கரூர் ஆட்சியர் பிரபு சங்கர்

தாய்ப்பால் கொடுக்க வேண்டியது நமது கடமை அதற்கு விழிப்புணர்வு ஏற்படுத்த அவசியமே இல்லை. இருந்த போதும் நவ நாகரிக உலகில் இது போன்ற விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்ற கட்டாயத்தில் இருக்கிறோம்.

குழந்தை பிறந்து ஆறு மாதம் வரை தாய்ப்பால் மட்டுமே உணவாக கொடுக்க வேண்டும் என உலக தாய்ப்பால் வாரவிழாவில் மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் பிரபு சங்கர் கூறினார்.

கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் வட்டம் வீரராக்கியம் கிராமத்தில் நேற்று உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் பிரபு சங்கர் தலைமையில் நடைபெற்றது. இது குறித்து  மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது: ஒவ்வொரு வருடமும் ஆகஸ்ட் முதல் வாரத்தில் தாய்ப்பால் கொடுப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. தாய்ப்பால் கொடுக்க வேண்டியது நமது கடமை அதற்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று அவசியமே இல்லை. இருந்த போதும் நவ நாகரிக உலகில் இது போன்ற விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்ற கட்டாயத்தில் இருக்கிறோம்.



குழந்தைக்கு 6 மாதம் வரை தாய்ப்பால் மட்டுமே கொடுக்க வேண்டும் - கரூர் ஆட்சியர் பிரபு சங்கர்

குழந்தைகளை பாதுகாப்பதில் இரண்டு வகை பிரச்னைகள் உள்ளது. ஒன்று பழமைவாதம் மற்றொன்று புதுமை வாதம், பழமை வாதத்தை பொருத்தவரை குழந்தை பிறந்தவுடன் சர்க்கரை தண்ணீர் வாயில் ஊற்றுவது, பெயர் வைக்கும் போது மோதிரத்தை தேனில் மூழ்கி வாயில் வைப்பது இதெல்லாம் மிகவும் தவறான செயல். அதேபோல் புதுமை வாதத்தை பொருத்தவரை ஆறு மாதம் வரை தாய்ப்பால் மட்டுமே உணவாக கொடுக்க வேண்டும். ஆறு மாதத்திற்கு பிறகு அதாவது 181வது நாட்களுக்கு பின் இணை உணவு கொடுக்க வேண்டும். இணை உணவு எக்காரணத்தைக் கொண்டும் ஏதாவது ஒரு ஆலையில் தயார் செய்து பாக்கெட்டில் அடைக்கப்பட்ட உணவுகளை கொடுக்கக் கூடாது. இயற்கையாக பாரம்பரியமிக்க நமது வீட்டில் சமைக்கப்படும் உணவுகளை மட்டுமே எளிமையான உணவுகளை குழந்தைக்கு கொடுக்க வேண்டும். அதுவும் குறிப்பாக குழந்தை பிறந்தவுடன் சீம்பால் அவசியம் கொடுக்க வேண்டும் அதில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருக்கிறது.


குழந்தைக்கு 6 மாதம் வரை தாய்ப்பால் மட்டுமே கொடுக்க வேண்டும் - கரூர் ஆட்சியர் பிரபு சங்கர்

தாய்ப்பால் கொடுப்பதிலோ அல்லது தாய்ப்பால் சுரப்பதிலோ ஏதாவது சிக்கல் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவர் மற்றும் செவிலியர்களிடம் மட்டுமே ஆலோசனை கேட்க வேண்டும். தாய்ப்பால் கொடுப்பதன் காரணமாக குழந்தைகளுக்கு ஏகப்பட்ட நன்மையும் அதேபோல் தாய்மார்களுக்கும் ஏகப்பட்ட நன்மைகளும் உள்ளது என்பதை புரிந்து கொள்ள வேண்டும். செயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட உணவுகளை எக்காரணத்தைக் கொண்டும் குழந்தைகளுக்கு கொடுக்கக் கூடாது. முதியோர்கள் தயவு கூர்ந்து இந்த கருத்துக்களை உங்கள் வீட்டில் உள்ள இளம் தாய்மார்களுக்கு கொண்டு செல்ல வேண்டும். ஆறு மாதங்களுக்கு தாய்ப்பால் மட்டுமே கொடுக்க வேண்டும் என்பதில் அனைவரும் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும். இதன் மூலம் எதிர்காலத்தில் நல்ல ஆரோக்கியமான குழந்தைகளை உருவாக்கிட முடியும் என்பதை அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் பிரபு சங்கர், முன்னதாக கர்ப்பினி தாய்மார்களுக்கு பச்சிளம் குழந்தைகள் மற்றும் இளம் குழந்தைகளுக்கு உணவு ஊட்டும் முறை மற்றும் விளையாட்டு மூலம் கற்றல் புத்தகங்களை  வழங்கினார். மேலும் தாய்ப்பால் அவசியம் குறித்து விழிப்புணர்வு உறுதிமொழி எடுக்கப்பட்ட பின்னர் அது குறித்த விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார்கள்.


குழந்தைக்கு 6 மாதம் வரை தாய்ப்பால் மட்டுமே கொடுக்க வேண்டும் - கரூர் ஆட்சியர் பிரபு சங்கர்

தொடர்ந்து அப்பகுதியில் உள்ள அங்கன்வாடி மையத்தை ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சித்தலைவர் குழந்தைகளின் வயசு அதற்கேற்ற உயரம் மற்றும் எடை உள்ளதா என்பதை ஆய்வு மேற்கொண்டு எடை குறைவாக உள்ள குழந்தைகளுக்கு சத்தான உணவுகளை வழங்க ஆலோசனைகள் வழங்கினார். நிகழ்ச்சியில் ஒருங்கிணைந்த குழந்தைகள் திட்ட அலுவலர் நாகலட்சுமி, குளித்தலை வருவாய் கோட்டாட்சியர் புஷ்பாதேவி, ஒன்றிய கவுன்சிலர் லீலாவதி, ஊராட்சி மன்ற தலைவர் வசந்தி, கிருஷ்ணராயபுரம் வட்டாட்சியர் முருகன், கர்ப்பிணி தாய்மார்கள், அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் அரசுஅலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

திமுகவுக்கு கெட்அவுட்.. தவெகவுக்கு கட் அவுட்... விஜய்யுடன் கரம்கோர்க்கும் திருமாவளவன் - அதிகாரப்பூர்வ அறிவிப்பால் அதிர்ந்த மாநாடு
திமுகவுக்கு கெட்அவுட்.. தவெகவுக்கு கட் அவுட்... விஜய்யுடன் கரம்கோர்க்கும் திருமாவளவன் - அதிகாரப்பூர்வ அறிவிப்பால் அதிர்ந்த மாநாடு
62 மத்திய அரசு பணியிடங்கள்... செப்.15 வரை விண்ணப்பிக்கலாம்: எங்கு தெரியுங்களா?
62 மத்திய அரசு பணியிடங்கள்... செப்.15 வரை விண்ணப்பிக்கலாம்: எங்கு தெரியுங்களா?
தமிழகத்தில் போதைப்பொருள் கோரத்தாண்டவம்: 24 மணி நேரத்தில் 5 படுகொலைகள்!- புது ஆட்சியிலும் இதே நிலையா?அன்புமணி
தமிழகத்தில் போதைப்பொருள் கோரத்தாண்டவம்: 24 மணி நேரத்தில் 5 படுகொலைகள்!- புது ஆட்சியிலும் இதே நிலையா?அன்புமணி
வெட்கக்கேடு, மோசம்; திருப்புகழ் குழு அறிக்கையை தமிழக அரசு ஒளித்து வைத்திருப்பது ஏன்? பாமக கேள்வி
வெட்கக்கேடு, மோசம்; திருப்புகழ் குழு அறிக்கையை தமிழக அரசு ஒளித்து வைத்திருப்பது ஏன்? பாமக கேள்வி

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN GOVT Announcements : 20 லட்சம் பேருக்கு வீட்டுமனைப்பட்டா.! சட்டமன்றத்தில் கொத்து கொத்தாக அறிவிப்பு- வருவாய்துறை அசத்தல்
20 லட்சம் பேருக்கு வீட்டுமனைப்பட்டா.! சட்டமன்றத்தில் கொத்து கொத்தாக அறிவிப்பு- வருவாய்துறை அசத்தல்
தமிழகத்தில் போதைப்பொருள் கோரத்தாண்டவம்: 24 மணி நேரத்தில் 5 படுகொலைகள்!- புது ஆட்சியிலும் இதே நிலையா?அன்புமணி
தமிழகத்தில் போதைப்பொருள் கோரத்தாண்டவம்: 24 மணி நேரத்தில் 5 படுகொலைகள்!- புது ஆட்சியிலும் இதே நிலையா?அன்புமணி
Crop Loan Waivers : தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
TVK vs DMK:
TVK vs DMK: "உதயநிதிக்கு கண்ணியத்தை கற்றுக்கொடுங்கள்.." ஓ.பன்னீர்செல்வத்துக்கு அமைச்சர் ரமேஷ் அட்வைஸ்
வெட்கக்கேடு, மோசம்; திருப்புகழ் குழு அறிக்கையை தமிழக அரசு ஒளித்து வைத்திருப்பது ஏன்? பாமக கேள்வி
வெட்கக்கேடு, மோசம்; திருப்புகழ் குழு அறிக்கையை தமிழக அரசு ஒளித்து வைத்திருப்பது ஏன்? பாமக கேள்வி
Maruti Fronx Finance Plan: மாருதி ஃபிரான்க்ஸ் வாங்குற ஐடியா இருக்கா.? அதோட ஒவ்வொரு வேரியண்ட்டுக்கும் EMI எவ்வளவு வரும்னு பாருங்க
மாருதி ஃபிரான்க்ஸ் வாங்குற ஐடியா இருக்கா.? அதோட ஒவ்வொரு வேரியண்ட்டுக்கும் EMI எவ்வளவு வரும்னு பாருங்க
Udhayanidhi: உதயநிதிக்கு சவால் விட்ட அமைச்சர் கில்லி சரத்..! போதைப்பொருள் விவகாரம் - கடுப்பான கே.என். நேரு
உதயநிதிக்கு சவால் விட்ட அமைச்சர் கில்லி சரத்..! போதைப்பொருள் விவகாரம் - கடுப்பான கே.என். நேரு
சட்டசபையில் உதயநிதி- ஆதவ் நேருக்கு நேர் கடும் வாக்குவாதம்.! மோதிக்கொண்ட திமுக- தவெக.! நடந்தது என்ன.?
சட்டசபையில் உதயநிதி- ஆதவ் நேருக்கு நேர் கடும் வாக்குவாதம்.! மோதிக்கொண்ட திமுக- தவெக.! நடந்தது என்ன.?
Embed widget