மேலும் அறிய

குழந்தைக்கு 6 மாதம் வரை தாய்ப்பால் மட்டுமே கொடுக்க வேண்டும் - கரூர் ஆட்சியர் பிரபு சங்கர்

தாய்ப்பால் கொடுக்க வேண்டியது நமது கடமை அதற்கு விழிப்புணர்வு ஏற்படுத்த அவசியமே இல்லை. இருந்த போதும் நவ நாகரிக உலகில் இது போன்ற விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்ற கட்டாயத்தில் இருக்கிறோம்.

குழந்தை பிறந்து ஆறு மாதம் வரை தாய்ப்பால் மட்டுமே உணவாக கொடுக்க வேண்டும் என உலக தாய்ப்பால் வாரவிழாவில் மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் பிரபு சங்கர் கூறினார்.

கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் வட்டம் வீரராக்கியம் கிராமத்தில் நேற்று உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் பிரபு சங்கர் தலைமையில் நடைபெற்றது. இது குறித்து  மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது: ஒவ்வொரு வருடமும் ஆகஸ்ட் முதல் வாரத்தில் தாய்ப்பால் கொடுப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. தாய்ப்பால் கொடுக்க வேண்டியது நமது கடமை அதற்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று அவசியமே இல்லை. இருந்த போதும் நவ நாகரிக உலகில் இது போன்ற விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்ற கட்டாயத்தில் இருக்கிறோம்.



குழந்தைக்கு 6 மாதம் வரை தாய்ப்பால் மட்டுமே கொடுக்க வேண்டும் - கரூர் ஆட்சியர் பிரபு சங்கர்

குழந்தைகளை பாதுகாப்பதில் இரண்டு வகை பிரச்னைகள் உள்ளது. ஒன்று பழமைவாதம் மற்றொன்று புதுமை வாதம், பழமை வாதத்தை பொருத்தவரை குழந்தை பிறந்தவுடன் சர்க்கரை தண்ணீர் வாயில் ஊற்றுவது, பெயர் வைக்கும் போது மோதிரத்தை தேனில் மூழ்கி வாயில் வைப்பது இதெல்லாம் மிகவும் தவறான செயல். அதேபோல் புதுமை வாதத்தை பொருத்தவரை ஆறு மாதம் வரை தாய்ப்பால் மட்டுமே உணவாக கொடுக்க வேண்டும். ஆறு மாதத்திற்கு பிறகு அதாவது 181வது நாட்களுக்கு பின் இணை உணவு கொடுக்க வேண்டும். இணை உணவு எக்காரணத்தைக் கொண்டும் ஏதாவது ஒரு ஆலையில் தயார் செய்து பாக்கெட்டில் அடைக்கப்பட்ட உணவுகளை கொடுக்கக் கூடாது. இயற்கையாக பாரம்பரியமிக்க நமது வீட்டில் சமைக்கப்படும் உணவுகளை மட்டுமே எளிமையான உணவுகளை குழந்தைக்கு கொடுக்க வேண்டும். அதுவும் குறிப்பாக குழந்தை பிறந்தவுடன் சீம்பால் அவசியம் கொடுக்க வேண்டும் அதில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருக்கிறது.


குழந்தைக்கு 6 மாதம் வரை தாய்ப்பால் மட்டுமே கொடுக்க வேண்டும் - கரூர் ஆட்சியர் பிரபு சங்கர்

தாய்ப்பால் கொடுப்பதிலோ அல்லது தாய்ப்பால் சுரப்பதிலோ ஏதாவது சிக்கல் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவர் மற்றும் செவிலியர்களிடம் மட்டுமே ஆலோசனை கேட்க வேண்டும். தாய்ப்பால் கொடுப்பதன் காரணமாக குழந்தைகளுக்கு ஏகப்பட்ட நன்மையும் அதேபோல் தாய்மார்களுக்கும் ஏகப்பட்ட நன்மைகளும் உள்ளது என்பதை புரிந்து கொள்ள வேண்டும். செயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட உணவுகளை எக்காரணத்தைக் கொண்டும் குழந்தைகளுக்கு கொடுக்கக் கூடாது. முதியோர்கள் தயவு கூர்ந்து இந்த கருத்துக்களை உங்கள் வீட்டில் உள்ள இளம் தாய்மார்களுக்கு கொண்டு செல்ல வேண்டும். ஆறு மாதங்களுக்கு தாய்ப்பால் மட்டுமே கொடுக்க வேண்டும் என்பதில் அனைவரும் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும். இதன் மூலம் எதிர்காலத்தில் நல்ல ஆரோக்கியமான குழந்தைகளை உருவாக்கிட முடியும் என்பதை அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் பிரபு சங்கர், முன்னதாக கர்ப்பினி தாய்மார்களுக்கு பச்சிளம் குழந்தைகள் மற்றும் இளம் குழந்தைகளுக்கு உணவு ஊட்டும் முறை மற்றும் விளையாட்டு மூலம் கற்றல் புத்தகங்களை  வழங்கினார். மேலும் தாய்ப்பால் அவசியம் குறித்து விழிப்புணர்வு உறுதிமொழி எடுக்கப்பட்ட பின்னர் அது குறித்த விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார்கள்.


குழந்தைக்கு 6 மாதம் வரை தாய்ப்பால் மட்டுமே கொடுக்க வேண்டும் - கரூர் ஆட்சியர் பிரபு சங்கர்

தொடர்ந்து அப்பகுதியில் உள்ள அங்கன்வாடி மையத்தை ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சித்தலைவர் குழந்தைகளின் வயசு அதற்கேற்ற உயரம் மற்றும் எடை உள்ளதா என்பதை ஆய்வு மேற்கொண்டு எடை குறைவாக உள்ள குழந்தைகளுக்கு சத்தான உணவுகளை வழங்க ஆலோசனைகள் வழங்கினார். நிகழ்ச்சியில் ஒருங்கிணைந்த குழந்தைகள் திட்ட அலுவலர் நாகலட்சுமி, குளித்தலை வருவாய் கோட்டாட்சியர் புஷ்பாதேவி, ஒன்றிய கவுன்சிலர் லீலாவதி, ஊராட்சி மன்ற தலைவர் வசந்தி, கிருஷ்ணராயபுரம் வட்டாட்சியர் முருகன், கர்ப்பிணி தாய்மார்கள், அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் அரசுஅலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Vikravandi By-election: விக்கிரவாண்டிக்கு வீடியோ போதும்; நேரில் வேண்டாம்: முதல்வரிடம் அமைச்சர்கள் வைத்த வேண்டுகோள்! காரணம் என்ன?
Vikravandi By-election: விக்கிரவாண்டிக்கு வீடியோ போதும்; நேரில் வேண்டாம்: முதல்வரிடம் அமைச்சர்கள் வைத்த வேண்டுகோள்! காரணம் என்ன?
Britain Election 2024: இங்கிலாந்து தேர்தலில் அடித்து நொறுக்கும் எதிர்க்கட்சி - ரிஷி சுனக்கின் பிரதமர் பதவி காலி..!
Britain Election 2024: இங்கிலாந்து தேர்தலில் அடித்து நொறுக்கும் எதிர்க்கட்சி - ரிஷி சுனக்கின் பிரதமர் பதவி காலி..!
Breaking News LIVE, June 5: முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீட்டில் ரெய்டு
Breaking News LIVE, June 5: முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீட்டில் ரெய்டு
நாட்டுக்கோழி பண்ணை வைக்க ஆர்வமா? அரசு தரும் மானியம் பற்றி தெரியுமா ? நீங்கள் செய்ய வேண்டியது இதுதான்..
நாட்டுக்கோழி பண்ணை வைக்க ஆர்வமா? அரசு தரும் மானியம் பற்றி தெரியுமா ? நீங்கள் செய்ய வேண்டியது இதுதான்..
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Rahul Gandhi to Visit Hathras |எட்றா வண்டிய..!ஹத்ராஸுக்கு புறப்பட்ட ராகுல்..நேரில் ஆறுதல்Namakkal woman bus fall video | பேருந்தில் இருந்து தவறி விழுந்த பெண்! பதறவைக்கும் CCTV காட்சிTeam India Victory Parade | தோளில் உலகக் கோப்பை! இந்திய வீரர்களின் ENTRY! கட்டுக்கடங்காத கூட்டம்Subramanian Swamy | ”சோனியா, ராகுலுடன் டீல்! கொலை வழக்கு பயமா மோடி?” பற்றவைத்த சுப்ரமணியன் சுவாமி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Vikravandi By-election: விக்கிரவாண்டிக்கு வீடியோ போதும்; நேரில் வேண்டாம்: முதல்வரிடம் அமைச்சர்கள் வைத்த வேண்டுகோள்! காரணம் என்ன?
Vikravandi By-election: விக்கிரவாண்டிக்கு வீடியோ போதும்; நேரில் வேண்டாம்: முதல்வரிடம் அமைச்சர்கள் வைத்த வேண்டுகோள்! காரணம் என்ன?
Britain Election 2024: இங்கிலாந்து தேர்தலில் அடித்து நொறுக்கும் எதிர்க்கட்சி - ரிஷி சுனக்கின் பிரதமர் பதவி காலி..!
Britain Election 2024: இங்கிலாந்து தேர்தலில் அடித்து நொறுக்கும் எதிர்க்கட்சி - ரிஷி சுனக்கின் பிரதமர் பதவி காலி..!
Breaking News LIVE, June 5: முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீட்டில் ரெய்டு
Breaking News LIVE, June 5: முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீட்டில் ரெய்டு
நாட்டுக்கோழி பண்ணை வைக்க ஆர்வமா? அரசு தரும் மானியம் பற்றி தெரியுமா ? நீங்கள் செய்ய வேண்டியது இதுதான்..
நாட்டுக்கோழி பண்ணை வைக்க ஆர்வமா? அரசு தரும் மானியம் பற்றி தெரியுமா ? நீங்கள் செய்ய வேண்டியது இதுதான்..
நாங்குநேரி: லாரி மீது பைக் மோதி விபத்து: தூக்கிவீசப்பட்ட காதல் ஜோடி சம்பவ இடத்திலேயே பலி
நாங்குநேரி: லாரி மீது பைக் மோதி விபத்து: தூக்கிவீசப்பட்ட காதல் ஜோடி சம்பவ இடத்திலேயே பலி
Elon Musk: மறுபடியும் போச்சா! இந்திய முதலீட்டை நிறுத்தி வைத்த எலான் மஸ்கின் டெஸ்லா, காரணம் என்ன?
Elon Musk: மறுபடியும் போச்சா! இந்திய முதலீட்டை நிறுத்தி வைத்த எலான் மஸ்கின் டெஸ்லா, காரணம் என்ன?
Vikravandi By-Election: விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் - திமுக வேட்பாளருக்கு ஆதரவாக ஸ்டாலின் வாக்கு சேகரிப்பு
Vikravandi By-Election: விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் - திமுக வேட்பாளருக்கு ஆதரவாக ஸ்டாலின் வாக்கு சேகரிப்பு
Coolie Shooting starts: கூலி பராக்! அடுத்த ஆட்டத்துக்கு தயாரான தலைவர்... இன்று முதல் படப்பிடிப்பு ஆரம்பம்!
Coolie Shooting starts: கூலி பராக்! அடுத்த ஆட்டத்துக்கு தயாரான தலைவர்... இன்று முதல் படப்பிடிப்பு ஆரம்பம்!
Embed widget