மேலும் அறிய

தூத்துக்குடி : கர்நாடகாவில் இருந்து கடத்திவரப்பட்ட மது பாட்டில்கள் பறிமுதல்

கர்நாடகாவில் இருந்து கடத்தி வரப்படும் மதுப்பாட்டில்கள்- குரும்பூரில் 22 இலட்சம் மதிப்பிலான மாட்டு தீவனத்துக்குள் மறைத்து கொண்டு வரப்பட்ட சரக்குகள் பறிமுதல் செய்யப்பட்டது.

பெங்களூருவில் இருந்து நண்பர்களுக்காக ரயிலில் மதுபாட்டில்களை பதுக்கி கொண்டுவந்த கோவில்பட்டியை சேர்ந்த 3 பேர் கைது செய்யட்டதுடன், 37 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
 
கர்நாடாக மாநிலம் பெங்களூருவில் வேலைக்காக சென்றவர்கள் நண்பர்களுக்காக மைசூர-தூத்துக்குடி செல்லும் விரைவு ரெயிலில் மதுபாட்டில்களை பதுக்கி கொண்டு வந்த கோவில்பட்டியை சேர்ந்த மாரிச்செல்வம், மணிகண்டன், பேச்சிமுத்து ஆகிய 3 பேரை ரெயில்வே போலீசார் பிடித்து கோவில்பட்டி மது விலக்கு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். மதுபாட்டில்கள் கடத்தி வரப்படுவதாக தெரிந்து ரயில்வே போலீசார் சோதனை செய்தபோது 3 பேரும் சிக்கியுள்ளனர். 3 பேரையும் கைது செய்த மதுவிலக்கு போலீசார் 7 ஆயிரம் மதிப்புள்ள 37 மதுபாட்டில்களை பறிமுதல் செய்துள்ளனர்

தூத்துக்குடி : கர்நாடகாவில் இருந்து கடத்திவரப்பட்ட மது பாட்டில்கள் பறிமுதல்
 
கொரோனா ஊரடங்கு காரணமாக தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படவில்லை. ஆனால் வெளி மாநிலங்களில் இருந்து மது பாட்டில்கள் கடத்தப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனை போலீசார் தடுத்து வருகின்றனர். இந்நிலையில் ரெயில் மூலமாக மது பாட்டிகள் கடத்தப்படுவதாக வந்த தகவலை தொடர்ந்து தமிழகம் முழுவதும் ரெயில் நிலையங்களில் வெளிமாநிலங்களில் இருந்து பயணிகளிடம் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
 
இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ரெயில்வே நிலையத்தில் இன்று மைசூர் - தூத்துக்குடி ரெயிலில் வந்த பயணிகளிடம் ரெயில்வே இரும்பாதை போலீசார் மற்றும் ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் சோதனை நடத்தினர். அப்போது கோவில்பட்டி பாரதி நகரைச் சேர்ந்த மாரிச்செல்வம், வீரவாஞ்சி நகரைச் சேர்ந்த மணிகண்டன், கடலையூரைச் சேர்ந்த பேச்சிமுத்து3 பேரின் பைகளை சோதனை செய்தபோது அதில் 7 ஆயிர ரூபாய் மதிப்புள்ள 37 மது பாட்டில்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையெடுத்து போலீசார் 3 பேர் மற்றும பறிமுதல் செய்யப்பட்ட மதுபாட்டில்கள் ஆகியவற்றை கோவில்பட்டி மது விலக்கு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர். 3 பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் பெங்களூருவில் வேலைக்காக சென்றுவிட்டு ஊருக்கு கிளம்பியபோது, கோவில்பட்டியில் உள்ள நண்பர்கள் 3 பேரை தொடர்பு கொண்டு தமிழகத்தில் டாஸ்மாக் திறக்கவில்லை, மது கிடைப்பதில் சிரமமாக உள்ளது. எனவே மது வாங்கி வரும் படி கூறியதாகவும், இதையடுத்து நண்பர்களுக்காக மது வாங்கி வந்ததாகவும் கைது செய்யப்பட்ட 3 பேரும் தெரிவித்துள்ளனர். 
 

தூத்துக்குடி : கர்நாடகாவில் இருந்து கடத்திவரப்பட்ட மது பாட்டில்கள் பறிமுதல்
 
தூத்துக்குடி மாவட்டம் குரும்பூரில்  கடந்த சில தினங்களுக்கு முன், கர்நாடகாவில் இருந்து மாட்டுத்தீவனம் ஏற்றி வந்த லாரியில் மாட்டுத் தீவனத்துக்கிடையே மறைத்து வைத்து கொண்டுவரப்பட்ட 22 இலட்சம் மதிப்பிலான மதுபாட்டில்கள் காவல்துறையால் பறிமுதல் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. தூத்துக்குடி மாவட்டத்தில் மது குடிக்காததால் சானிடசைரை குடித்து திருச்செந்தூரில் ஆட்டோ ஓட்டுநர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது டாஸ்மாக் சரக்குகள் கிடைப்பதாகவும் குறைந்தவிலை மது தற்போது ரூ 650 முதல் விற்கப்படுவதாகவும் மதுப்பிரியர்கள் தெரிவிக்கின்றனர்.
 
 
 

தலைப்பு செய்திகள்

5000+ தனியார் துறை வேலைகள்... ஆகஸ்ட் 21-ல் நடக்கும் மெகா வேலைவாய்ப்பு முகாம்!
5000+ தனியார் துறை வேலைகள்... ஆகஸ்ட் 21-ல் நடக்கும் மெகா வேலைவாய்ப்பு முகாம்!
விக்கிரவாண்டி மக்களுக்காக அடித்துக் கொண்ட அரசியல் கட்சிகள்.. கலவரப்பூமியான சட்டசபை!
விக்கிரவாண்டி மக்களுக்காக அடித்துக் கொண்ட அரசியல் கட்சிகள்.. கலவரப்பூமியான சட்டசபை!
பாரம்பரிய வீடுகளின் நடுமுற்றம்: இயற்கை காற்றோட்டமும் அறிவியல் ரகசியமும்!
பாரம்பரிய வீடுகளின் நடுமுற்றம்: இயற்கை காற்றோட்டமும் அறிவியல் ரகசியமும்!
சிவகங்கை வேலைவாய்ப்பு முகாம்: ஆகஸ்ட் 21 - இளைஞர்களுக்கு அரிய வாய்ப்பு!
சிவகங்கை வேலைவாய்ப்பு முகாம்: ஆகஸ்ட் 21 - இளைஞர்களுக்கு அரிய வாய்ப்பு!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
JCD Prabhakar: முழு அதிகாரத்தில் அடித்து ஆடும் சபாநாயகர்..! அப்செட்டில் அமைச்சர்கள், கொந்தளிக்கும் TVKவினர்
முழு அதிகாரத்தில் அடித்து ஆடும் சபாநாயகர்..! அப்செட்டில் அமைச்சர்கள், கொந்தளிக்கும் TVKவினர்
தலித் மாணவர்களை குறிவைக்கும் தவெக அரசு? கட்டணம் செலுத்தப்போவது எப்போது? அன்பில் கேள்வி
தலித் மாணவர்களை குறிவைக்கும் தவெக அரசு? கட்டணம் செலுத்தப்போவது எப்போது? அன்பில் கேள்வி
New Audi Q3: அசத்தல் லுக்கில் அதிரடி காட்ட வரும் ஆடி Q3 SUV- டிசைன், விலை, வசதிகள் விவரம்!
New Audi Q3: அசத்தல் லுக்கில் அதிரடி காட்ட வரும் ஆடி Q3 SUV- டிசைன், விலை, வசதிகள் விவரம்!
குப்பை அல்ல... வருமானம்! கைகளில் உருவாகும் தன்னம்பிக்கைப் பொருட்கள்... தூய்மை பணியாளர்களின் அட்டகாச முயற்சி
குப்பை அல்ல... வருமானம்! கைகளில் உருவாகும் தன்னம்பிக்கைப் பொருட்கள்... தூய்மை பணியாளர்களின் அட்டகாச முயற்சி
தவெகவின் சொல்லுக்கும் செயலுக்கும் தொடர்பு இல்லை; கோ-ஆப்டெக்ஸ் கடைகளை மூடுவதா? அன்புமணி காட்டம்
தவெகவின் சொல்லுக்கும் செயலுக்கும் தொடர்பு இல்லை; கோ-ஆப்டெக்ஸ் கடைகளை மூடுவதா? அன்புமணி காட்டம்
Free Health Insurance: : 1 பைசா செலவு இல்லை.! ரூ.5 லட்சம் இலவச மருத்துவக் காப்பீடு வாங்குவது எப்படி? ஆவணங்கள் என்னென்ன தேவை- லிஸ்ட் இதோ
1 பைசா செலவு இல்லை.! ரூ.5 லட்சம் இலவச மருத்துவக் காப்பீடு வாங்குவது எப்படி? ஆவணங்கள் என்னென்ன தேவை- லிஸ்ட் இதோ
18 Years of Kohli: விராட் கோலி எனும் பேரரசன்.. நாட்டிற்காக18 ஆண்டுகளை நிறைவு செய்த நம்பர் 18!
18 Years of Kohli: விராட் கோலி எனும் பேரரசன்.. நாட்டிற்காக18 ஆண்டுகளை நிறைவு செய்த நம்பர் 18!
TVK VCK Alliance: இனி விஜய்கூடதான் டிராவல்.. ஆட்சியில் உக்காந்து 3 மாசம் முடிஞ்சு சொன்ன திருமா - என்ன காரணம்?
TVK VCK Alliance: இனி விஜய்கூடதான் டிராவல்.. ஆட்சியில் உக்காந்து 3 மாசம் முடிஞ்சு சொன்ன திருமா - என்ன காரணம்?
Embed widget