மேலும் அறிய

கள்ளக்குறிச்சி கலவரம் : ட்விட்டர், வாட்ஸ் அப்பில் வெளியான பதிவுகள் மூலம் சைபர்கிரைம் போலீசார் விசாரணை தொடங்கினர்

கள்ளக்குறிச்சி கலவரம் : டுவிட்டர், வாட்ஸ் அப்பில் வெளியான பதிவுகள் மூலம் சைபர்கிரைம் போலீசார் விசாரணை தொடங்கினர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள கனியாமூர் தனியார் பள்ளி மாணவி ஸ்ரீமதி மர்மமான முறையில் இறந்தார். இந்த விவகாரம் வெளியே வந்த 14-ந் தேதி முதலே சமூக வலைதளங்களில் பல்வேறு தரப்பினரால் பகிரப்பட்டு வந்தது. இதில், டுவிட்டரில் #ஸ்ரீமதிக்கு நீதி வேண்டும், #justiceforsrimathi #todaysrimathiwhoistmrw என்று பல்வேறு ஹேஷ்டக் உருவாக்கப்பட்டு பகிரப்பட்டது. 3 நாட்களாக வெளியான பதிவுகளில் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தும் தகவல்கள் வெளியானது. அதேபோல் சில சினிமா படங்களை குறிப்பிட்டு அதுபோன்ற தண்டனை விதிக்க வேண்டும் என்று பதிவுகள் வெளியாகி வந்தது.

கள்ளக்குறிச்சி கலவரம் : ட்விட்டர், வாட்ஸ் அப்பில் வெளியான பதிவுகள் மூலம் சைபர்கிரைம் போலீசார் விசாரணை தொடங்கினர்

Kallakurichi | கலவரத்துக்கு ஸ்ரீமதி அம்மாதான் பொறுப்பு..சக்தி பள்ளி செயலாளர் சாந்தி பரபரப்பு பேட்டி

இவ்வாறு சமூக வலைதளத்தில் இருந்த குமுறல்கள் நேற்று முன்தினம் பூதாகரமாக வெடித்து, பிரச்சினைக்கு உரிய பள்ளியே தீக்கிரையாகின. மாணவர்கள் சமூகம் தான் போராட்டக்களத்தில் உள்ளது என்று மென்மையாக கையாண்டு விடலாம் என்று போலீசார் எண்ணி இருந்தனர். ஆனால் விளைவு, போராட்டக்களம் போர்க்களமாக மாறிவிட்டது. இதனால் காவல்துறை உயர் அதிகாரிகள் முதல் 55 போலீசார் படுகாயமடைந்தனர். இதன்பின்னர் தான், சமூக வலைதளங்கள், வாட்ஸ் அப் குழுக்கள் மூலமாக பல்வேறு தரப்பினரும் ஒருங்கிணைந்து இந்த கலவரத்தை அரங்கேற்றி இருப்பது போலீசாருக்கு தெரியவந்தது.

Kallakurichi: school issue Do not participate protests if they say they are protesting without permission Police warning

அதோடு, வாட்ஸ்-அப் குழுக்கள் பற்றிய விசாரணையின் மூலம் தமிழகத்தில் பல்வேறு பகுதியில் இருந்தும் கலவரத்தில் பங்கெடுத்து இருப்பது போலீசாருக்கு தெரியவந்துள்ளது. அதாவது, கள்ளக்குறிச்சி மாவட்டம் மட்டுமின்றி சென்னை, விழுப்புரம், கடலூர், சேலம், திருவண்ணாமலை, தென்மாவட்டங்களான மதுரை, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் போராட்டத்தில் பங்கெடுத்து இருப்பது தெரியவந்துள்ளது. கடந்த 3 நாட்களாக விவாதிக்கப்பட்ட சமூக வலைதள பதிவுகளை உளவுத்துறையினர் சரியாக கண்காணித்து செயல்பட்டு இருந்தால், இந்த வன்முறையை பெரியளவில் இல்லாமல் தடுத்து இருக்க முடியும் என்கிற கருத்துகளையும் சிலர் முன்வைத்து வருகிறார்கள்.

இதுஒருபுறம் இருக்க தற்போது சமூக வலைதள பதிவுகள் மூலமாகவும், கைது நடவடிக்கையில் போலீசார் இறங்கி இருக்கிறார்கள். இதனால் அடுத்த சில நாட்களில் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளிலும் இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்கள் கைதாவார்கள் என்று காவல்துறை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், சைபர்கிரைம் போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். இதுசம்பந்தமாக நாமக்கல், கரூர், பெரம்பலூர் உள்ளிட்ட இடங்களில் சமூகவலைதளங்களில் தகவலை பரப்பியதாக சிலரை போலீசார் பிடித்து விசாரணை செய்து வருகின்றனர்.

Kallakurichi Issue : ”புள்ளைய கண்ணுல காட்டுங்க” கள்ளக்குறிச்சியில் கைதானவர்களின் பெற்றோர் கதறல்


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

ADMK alliance: ஜன.23ஆம் தேதியை டிக் செய்த மோடி.! அதிமுக கூட்டணியில் யார் யார்.? வெளியாகப்போகும் முக்கிய அறிவிப்பு
ஜன.23ஆம் தேதியை டிக் செய்த மோடி.! அதிமுக கூட்டணியில் யார் யார்.? வெளியாகப்போகும் முக்கிய அறிவிப்பு
பணி நிரந்தரம் கோரும் ஆசிரியர்களின் முடியைப் பிடித்திழுத்து கைது செய்வதுதான் பரிசா? அன்புமணி கேள்வி!
பணி நிரந்தரம் கோரும் ஆசிரியர்களின் முடியைப் பிடித்திழுத்து கைது செய்வதுதான் பரிசா? அன்புமணி கேள்வி!
ரயில் மோதி 231 பேர் உயிரிழப்பு... அதிர்ச்சி தகவல்...
ரயில் மோதி 231 பேர் உயிரிழப்பு... அதிர்ச்சி தகவல்...
Jana Nayagan: முதல் படம் நாளைய தீர்ப்பு.. கடைசி படத்திற்கு நாளை தீர்ப்பு..! ஜனநாயகன் ரிலீஸ் ஆகுமா?
Jana Nayagan: முதல் படம் நாளைய தீர்ப்பு.. கடைசி படத்திற்கு நாளை தீர்ப்பு..! ஜனநாயகன் ரிலீஸ் ஆகுமா?
ABP Premium

வீடியோ

Blinkit Delivery boy saves Girl |BLINKIT ORDER-ல் எலிமருந்து! ஹீரோவாக மாறிய DELIVERY BOY
Saaniya Chandhok | அர்ஜுன் டெண்டுல்கருக்கு டும்..டும்..!BUSINESS MAGNATE-ன் பேத்தியார் இந்த சானியா?
ஜனநாயகன் புது ரிலீஸ் தேதி அதிரடி காட்டும் விஜய் ரசிகர்களுக்கு GOOD NEWS | Jana Nayagan New Release Date
Girish Chodankar On DMK Alliance | பிரவீன் விஜய்யுடன் சந்திப்புராகுல் கொடுத்த ஐடியாவா?
Congress Aslam Basha | மிரட்டல்.. கட்டப்பஞ்சாயத்து..காங்கிரஸ் நிர்வாகி வீடியோ வைரல்!அலறவிடும் பாஷா!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ADMK alliance: ஜன.23ஆம் தேதியை டிக் செய்த மோடி.! அதிமுக கூட்டணியில் யார் யார்.? வெளியாகப்போகும் முக்கிய அறிவிப்பு
ஜன.23ஆம் தேதியை டிக் செய்த மோடி.! அதிமுக கூட்டணியில் யார் யார்.? வெளியாகப்போகும் முக்கிய அறிவிப்பு
பணி நிரந்தரம் கோரும் ஆசிரியர்களின் முடியைப் பிடித்திழுத்து கைது செய்வதுதான் பரிசா? அன்புமணி கேள்வி!
பணி நிரந்தரம் கோரும் ஆசிரியர்களின் முடியைப் பிடித்திழுத்து கைது செய்வதுதான் பரிசா? அன்புமணி கேள்வி!
ரயில் மோதி 231 பேர் உயிரிழப்பு... அதிர்ச்சி தகவல்...
ரயில் மோதி 231 பேர் உயிரிழப்பு... அதிர்ச்சி தகவல்...
Jana Nayagan: முதல் படம் நாளைய தீர்ப்பு.. கடைசி படத்திற்கு நாளை தீர்ப்பு..! ஜனநாயகன் ரிலீஸ் ஆகுமா?
Jana Nayagan: முதல் படம் நாளைய தீர்ப்பு.. கடைசி படத்திற்கு நாளை தீர்ப்பு..! ஜனநாயகன் ரிலீஸ் ஆகுமா?
பரீட்சா பே சர்ச்சா 2026: மோடியுடன் உரையாட இத்தனை கோடி பேர் பதிவா? மாணவர்களுக்கு காத்திருக்கும் ஆச்சரியம்!
பரீட்சா பே சர்ச்சா 2026: மோடியுடன் உரையாட இத்தனை கோடி பேர் பதிவா? மாணவர்களுக்கு காத்திருக்கும் ஆச்சரியம்!
Pongal Special Buses: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்புப் பேருந்துகள்; நூற்றுக்கணக்கில் பல்வேறு ஊர்களுக்கு இயக்கம்
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்புப் பேருந்துகள்; நூற்றுக்கணக்கில் பல்வேறு ஊர்களுக்கு இயக்கம்
மத்திய அரசின் அடக்குமுறை: அமைச்சர் ஐ. பெரியசாமி கடும் எச்சரிக்கை! உரிமை பறிப்புக்கு எதிராக கொந்தளிப்பு
மத்திய அரசின் அடக்குமுறை: அமைச்சர் ஐ. பெரியசாமி கடும் எச்சரிக்கை! உரிமை பறிப்புக்கு எதிராக கொந்தளிப்பு
Pongal 2026 Nalla Neram: மக்களே... பொங்கல் எந்த நேரத்தில் வைக்க வேண்டும்? இதுதான் டைம் பாருங்க!
Pongal 2026 Nalla Neram: மக்களே... பொங்கல் எந்த நேரத்தில் வைக்க வேண்டும்? இதுதான் டைம் பாருங்க!
Embed widget