மேலும் அறிய

டெல்லி முதல் தமிழ்நாடு வரை.. இந்தியாவை உலுக்கிய கள்ளச்சாராயம் மரணங்கள்..

India Illicit Liquor Deaths : கள்ளச்சாராயத்தால் இந்தியா முழுவதும், அதிக உயிரிழப்புகள் பதிவான சம்பவங்கள் குறித்து பார்க்கலாம்

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சம்பவத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 50 ஆக உயர்ந்துள்ளது. ஏற்கனவே 42 பேர் இந்த கள்ளச்சாராயத்தினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த நிலையில், சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 5 பேர் இன்று அதிகாலை உயிரிழந்ததால், உயிரிழப்பு எண்ணிக்கை 50 ஆக அதிகரித்தது. 

 

எங்கெங்கு எவ்வளவு உயிரிழப்பு பதிவு..? 


கடந்த 3 நாட்களில் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயத்தால் தொடர்ந்து மரணங்கள் நிகழ்ந்த வண்ணம் உள்ளன. 3 பேர் என ஆரம்பித்த உயிரிழப்பு தற்போது வரை 50 ஐ தொட்டுள்ளது. மேலும், இந்த கள்ளச்சாராயத்தால் பாதிக்கப்பட்டவர்கள் நிலைமை மோசமாகி வருவதால், உயிரிழப்பு அதிகரிக்குமோ என்ற அச்சம் நிலவி வருகிறது. 

இதுவரை கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் அதிகபட்சமாக 28 பேரும், சேலம் அரசு மருத்துவமனையில் 15 பேரும் உயிரிழந்துள்ளனர். இதுபோக, விழுப்புரம் அரசு மருத்துவமனையில் 4 பேரும், புதுச்சேரியில் 3 பேரும் என மொத்தமாக 50 பேரை காவு வாங்கியுள்ளது இந்த கள்ளச்சாராயம். இந்தியாவில் இதற்கு முன்பு நடந்தேறிய கொடூர கள்ளச்சாராயம் உயிரிழப்புகள் குறித்து பார்ப்போம்.

கர்நாடகா முதல் டெல்லி வரை


1981 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 6ஆம் தேதி கர்நாடக மாநிலம் பெங்களூரில், கள்ளச்சாராயம் குடித்ததில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 345 ஆக உள்ளது. இதுவே இந்தியா வரலாற்றில் பதிவான அதிகபட்ச கள்ளச்சாராய உயிரிழப்பாகும்.

தொடர்ந்து 1982 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதி கேரளா வைப்பின் பகுதியில் கலாச்சாராயத்தால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 72.

தலைநகர் டெல்லியில் 1991 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 5ஆம் தேதி சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 199 ஆக இருந்தது.

ஒடிசா மாநிலம் கட்டாக் பகுதியில் 1992 ஆம் ஆண்டு மே மாதம் நடைபெற்ற, கள்ளச்சாராய உயிரிழப்பு எண்ணிக்கை 200 தொட்டது.

அதன் தொடர்ந்து கள்ளச்சாராய மரணங்கள் சில ஆண்டுகள் அதிகமாக நடைபெறாமல் இருந்த நிலையில், கர்நாடகா மற்றும் தமிழ்நாடு எல்லையில் அமைந்துள்ள ஆனேகல் என்ற பகுதியில் நடந்த கலாச்சார உயிரிழப்பின் எண்ணிக்கை 180 தொட்டது.

2009 ஆம் ஆண்டு ஜூலை மாதம் ஏழாம் தேதி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் கள்ளச்சாராய உயிரிழப்பு 136 ஆக இருந்தது.

மேற்கு வங்கத்தில் 2011 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 13ஆம் தேதி நடைபெற்ற கலாச்சார உயிரெழுப்பின் எண்ணிக்கை 167 ஆக இருந்தது.

உத்திரபிரதேசத்தில் 2013 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 19ஆம் தேதி நடைபெற்ற கலாச்சாராய உயிரிழப்பின் எண்ணிக்கை 40 ஆக இருந்தது. 

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் 2015 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 20ஆம் தேதி நடைபெற்ற கள்ளச்சாராய உயிரிழப்பு எண்ணிக்கை 102 ஆக இருந்தது.

2019 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 21ஆம் தேதி அசாம் மாநிலத்தில் கள்ளச்சார உயிரிழப்பு எண்ணிக்கை 156 ஆக இருந்தது.

2020 ஜூலை 29ஆம் தேதி பஞ்சாப் அமிர்தசரஸ் பகுதியில் கள்ளச்சாராய உயிரிழப்பு எண்ணிக்கை 121 ஆக இருந்தது.

2022 ஜூலை 25ஆம் தேதி குஜராத் மாநிலத்தில் நடந்த கள்ளச்சாராய உயிரிழப்பு எண்ணிக்கை 42 தொட்டது.

பீகார் மாநிலம் சரண் பகுதியில் 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 14ஆம் தேதி நடைபெற்ற கள்ளச்சாராயம் உயிரிழப்பு எண்ணிக்கை 73 ஆக இருந்தது.

2023 ஆம் ஆண்டு மே மாதம் 13ஆம் தேதி தமிழ்நாட்டில் மரக்காணம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய பகுதிகளில் நடந்த கலாச்சாராய உயிரிழப்பு எண்ணிக்கை 28 ஆக இருந்தது.

இந்தநிலையில் கள்ளக்குறிச்சியில் ஜூன் 19ஆம் தேதி நடைபெற்ற கள்ளச்சாராய உயிரிழப்பு எண்ணிக்கை 50 நெருங்கி வருகிறது

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

சினிமாவை மிஞ்சிய நிஜம்: கட்டுக்கட்டாக பணம்; கன்டெய்னர் லாரியில் சென்ற கொள்ளையர்கள்- சுட்டுப்பிடித்த போலீஸ்!
சினிமாவை மிஞ்சிய நிஜம்: கட்டுக்கட்டாக பணம்; கன்டெய்னர் லாரியில் சென்ற கொள்ளையர்கள்- சுட்டுப்பிடித்த போலீஸ்!
MK Stalin Meets PM Modi: பிரதமர் மோடி - முதலமைச்சர் சந்திப்பில் நடந்தது என்ன? மு.க.ஸ்டாலின் வைத்த கோரிக்கைகள் இதுதான்!
MK Stalin Meets PM Modi: பிரதமர் மோடி - முதலமைச்சர் சந்திப்பில் நடந்தது என்ன? மு.க.ஸ்டாலின் வைத்த கோரிக்கைகள் இதுதான்!
KKR Mentor Bravo: ட்விஸ்ட்! கொல்கத்தா அணிக்கு ஆலோசகராக ப்ராவோ நியமனம் - பேரதிர்ச்சியில் சி.எஸ்.கே. ரசிகர்கள்
KKR Mentor Bravo: ட்விஸ்ட்! கொல்கத்தா அணிக்கு ஆலோசகராக ப்ராவோ நியமனம் - பேரதிர்ச்சியில் சி.எஸ்.கே. ரசிகர்கள்
TVK Vijay : “தமிழ்நாட்டின் 2வது பெரிய சக்தி விஜய்” திருமாவளவன் கருத்தால் பரபரப்பு..!
“தமிழ்நாட்டின் 2வது பெரிய சக்தி விஜய்” திருமாவளவன் கருத்தால் பரபரப்பு..!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Thiruchendur temple : முருகனை பார்க்க ஆயிரமா? கொந்தளிக்கும் பக்தர்கள்!திருச்செந்தூரில் நடப்பது என்ன?Rowdy John : ”கேட்ட இழுத்து மூடு டா” நீதிமன்றத்துக்குள் புகுந்த போலீஸ்! தட்டி தூக்கப்பட்ட ரவுடி!Thirumavalavan on Aadhav Arjuna : ”நான் பேசியது தவறு தான்”ஒப்புக்கொண்ட ஆதவ் அர்ஜுனா! - திருமாவளவன்Hindu Temple Attack : அமெரிக்காவில் எதிரொலிக்கும் go back Hindu! நடந்தது என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
சினிமாவை மிஞ்சிய நிஜம்: கட்டுக்கட்டாக பணம்; கன்டெய்னர் லாரியில் சென்ற கொள்ளையர்கள்- சுட்டுப்பிடித்த போலீஸ்!
சினிமாவை மிஞ்சிய நிஜம்: கட்டுக்கட்டாக பணம்; கன்டெய்னர் லாரியில் சென்ற கொள்ளையர்கள்- சுட்டுப்பிடித்த போலீஸ்!
MK Stalin Meets PM Modi: பிரதமர் மோடி - முதலமைச்சர் சந்திப்பில் நடந்தது என்ன? மு.க.ஸ்டாலின் வைத்த கோரிக்கைகள் இதுதான்!
MK Stalin Meets PM Modi: பிரதமர் மோடி - முதலமைச்சர் சந்திப்பில் நடந்தது என்ன? மு.க.ஸ்டாலின் வைத்த கோரிக்கைகள் இதுதான்!
KKR Mentor Bravo: ட்விஸ்ட்! கொல்கத்தா அணிக்கு ஆலோசகராக ப்ராவோ நியமனம் - பேரதிர்ச்சியில் சி.எஸ்.கே. ரசிகர்கள்
KKR Mentor Bravo: ட்விஸ்ட்! கொல்கத்தா அணிக்கு ஆலோசகராக ப்ராவோ நியமனம் - பேரதிர்ச்சியில் சி.எஸ்.கே. ரசிகர்கள்
TVK Vijay : “தமிழ்நாட்டின் 2வது பெரிய சக்தி விஜய்” திருமாவளவன் கருத்தால் பரபரப்பு..!
“தமிழ்நாட்டின் 2வது பெரிய சக்தி விஜய்” திருமாவளவன் கருத்தால் பரபரப்பு..!
Aadhav Arjuna :  “ஆதவிற்கு உள்நோக்கமா?” திருமாவிடம் அர்ஜூனா கொடுத்த பரபரப்பு விளக்கம் இதுதான்..!
“ஆதவிற்கு உள்நோக்கமா?” திருமாவிடம் அர்ஜூனா கொடுத்த விளக்கம் இதுதான்..!
மசாஜ் சென்டர் சோதனை - ஜன்னல் வழியாக தப்ப முயன்ற பெண்கள்: சென்னையில் பரபரப்பு
மசாஜ் சென்டர் சோதனை - ஜன்னல் வழியாக தப்ப முயன்ற பெண்கள்: சென்னையில் பரபரப்பு
Nitin Gadkari: பிரதமர் ஆக ஆசையா? மோடிகிட்ட கேளுங்க? மத்திய அமைச்சர் நிதின் கட்கரி நச் பதில்
Nitin Gadkari: பிரதமர் ஆக ஆசையா? மோடிகிட்ட கேளுங்க? மத்திய அமைச்சர் நிதின் கட்கரி நச் பதில்
Breaking News LIVE 27th Sep 2024: இன்றுடன் முடிவடைகிறது காலாண்டுத் தேர்வு! நாளை முதல் தொடங்குது விடுமுறை!
Breaking News LIVE 27th Sep 2024: இன்றுடன் முடிவடைகிறது காலாண்டுத் தேர்வு! நாளை முதல் தொடங்குது விடுமுறை!
Embed widget