மேலும் அறிய

கண்ணீரில் 4 பிள்ளைகள்: தந்தையின் உடலை அடக்கம் செய்யச் சேர்ந்து உதவிய கிராம மக்கள்!

கள்ளக்குறிச்சி அருகே சங்கராபுரம் பகுதியில் தாய், தந்தையை இழந்த 4 பிள்ளைகள் தந்தையின் இறுதிச் சடங்கிற்குப் பணம் இன்றி தவித்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அருகே சங்கராபுரம் பகுதியில் தாய், தந்தையை இழந்த 4 பிள்ளைகள் தந்தையின் இறுதிச் சடங்கிற்குப் பணம் இன்றி தவித்த நிலையில் நெகிழ்ச்சியில் ஆழ்த்திய கிராம மக்கள்!

தந்தையின் இறுதிச் சடங்குகளை நடத்தக்கூடப் பணம் இன்றி தவித்த பிள்ளைகள்

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள பூட்டை கிராமத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளி கமலக்கண்ணன் (46) உடல்நலக் குறைவால் கடந்த நவம்பர் 14-ஆம் தேதி காலமானார். தாய், தந்தையை இழந்த அவரது நான்கு பிள்ளைகள், தந்தையின் இறுதிச் சடங்குகளை நடத்தக்கூடப் பணம் இன்றி தவித்த நெகிழ்ச்சியான சம்பவம் கிராம மக்களைத் தாங்களாகவே முன்வந்து உதவினர்.

கமலக்கண்ணனுக்கு வசந்தா (40) என்ற மனைவியும், லாவண்யா (24), ரீனா (21), ரிஷிகா (17) ஆகிய மூன்று மகள்களும், அபினேஷ் (13) என்ற மகனும் இருந்தனர். இவர்களில் மனைவி வசந்தா, ஏழு ஆண்டுகளுக்கு முன்பு உடல்நலம் பாதிக்கப்பட்டு இறந்துவிட்டார்.

வறுமை நிலைக்குத் தள்ளப்பட்ட குடும்பம்

அதன் பிறகு, கூலி வேலை செய்து வந்த கமலக்கண்ணன் தனது பிள்ளைகளை பள்ளி, கல்லூரியில் படிக்க வைத்து வந்துள்ளார். இந்த நிலையில், திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டதையடுத்து, அவரை கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காகக் கொண்டு சென்றனர். அங்கு அவருக்குச் சிறுநீரகம் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது. கடந்த நான்கு மாதங்களாக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உள்நோயாளியாகத் தீவிர சிகிச்சை பெற்று வந்த கமலக்கண்ணன் வருமானம் இல்லாததால், அவரது குடும்பம் பெரும் வறுமை நிலைக்குத் தள்ளப்பட்டது.

பாதியில் நின்றுபோன படிப்பு

பொறியியல் படித்து வந்த மகள் லாவண்யா கல்வி கட்டணம் செலுத்த முடியாமல் படிப்பைத் பாதியிலேயே நிறுத்தினார். அதேபோல், 8-ம் வகுப்பு படித்து வந்த ரீனா மற்றும் 10-ம் வகுப்பு படித்து வந்த ரிஷிகா ஆகியோரும் தங்கள் படிப்பை பாதியிலேயே நிறுத்தினார்கள். மகன் அபினேஷ் மட்டும் பூட்டையில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறார்.

தந்தையின் உடலை அடக்கம் செய்யப் பணம் இல்லாமல் பரிதவிப்பு

இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி கமலக்கண்ணன் கடந்த நவம்பர் 14-ஆம் தேதி காலமானார். அவரது உடல் சொந்த ஊருக்குக் கொண்டு வரப்பட்டபோது, தாய், தந்தையை இழந்த அவரது நான்கு குழந்தைகளும் தந்தையின் உடலை அடக்கம் செய்யப் பணம் இல்லாமல் பரிதவித்தனர்.  உறவினர்களும் ஏழ்மையான நிலையில் இருந்ததால் அவர்களாலும் உதவ முடியவில்லை.

கிராம மக்களின் நெகிழ்வான செயல் 

இதை நேரில் கண்ட கிராம மக்கள், அந்தக் குழந்தைகளின் நிலை கண்டு கலங்கிப் போனார்கள். மனிதாபிமானத்துடன் தாங்களாகவே முன்வந்து, வீடு வீடாகச் சென்று பணம் வசூலித்து, கமலக்கண்ணனின் உடலை முன்னின்று அடக்கம் செய்தனர். உடல்நலக்குறைவால் இறந்த தந்தையின் இறுதிச் சடங்குச் செலவுக்குப் பணம் இல்லாமல் குழந்தைகள் தவித்த நிலையில், கிராம மக்கள் தாங்களாகவே முன்வந்து உதவிய இந்தச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி அருகே சங்கராபுரம் பகுதியில் தாய், தந்தையை இழந்த 4 பிள்ளைகள் தந்தையின் இறுதிச் சடங்கிற்குப் பணம் இன்றி தவித்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Magalir Urimai Thogai: இது தொடக்கமே.. மகளிர் உரிமைத் தொகை மேலும் உயரும்; முதலமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
இது தொடக்கமே.. மகளிர் உரிமைத் தொகை மேலும் உயரும்; முதலமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
ADMK BJP: அதிமுக கூட்டணி.. அமித்ஷாவிற்கு தலைவலி - இதுதான் சங்கதி!
ADMK BJP: அதிமுக கூட்டணி.. அமித்ஷாவிற்கு தலைவலி - இதுதான் சங்கதி!
Chennai Metro Rail Work: சென்னை மெட்ரோ பணியில் கலக்கும்
சென்னை மெட்ரோ பணியில் கலக்கும் "மயில்"; எந்த மயில்னு யோசிக்கிறீங்களா.? இத படிங்க தெரியும்
PM Kisan 22nd Installment: பிரதம மந்திரி கிசான் நிதியின் 22-வது தவணை எப்போ வரும்.? அதுக்குள்ள விவசாயிகள் இத செஞ்சுடுங்க
பிரதம மந்திரி கிசான் நிதியின் 22-வது தவணை எப்போ வரும்.? அதுக்குள்ள விவசாயிகள் இத செஞ்சுடுங்க
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Magalir Urimai Thogai | ''மகளிருக்கு இன்னொரு CHANCE..!''கலைஞர் மகளிர் உரிமைத்தொகை
Rajinikanth 75th Birthday Celebration|’’ரஜினி என் குலசாமி!’’வீடு முழுக்க RAJINISMவியக்க வைத்த ரசிகர்
Tindivanam Bus Accident - டயர் வெடித்து விபத்து ஒருவர் பலி, 15 பேர் படுகாயம்; உதவிய விழுப்புரம் கலெக்டர்
Nainar Nagendran Meet EPS | டெல்லிக்கு அழைத்த அமித் ஷா; ஈபிஎஸ்-நயினார் திடீர் சந்திப்பு; அண்ணாமலை பலே ப்ளான்!
LAW & ORDER இனிமே இவர் கையில் தமிழகத்தின் புதிய பொறுப்பு DGPயார் இந்த அபய் குமார் சிங் IPS? | Abhay Kumar Singh | MK Stalin | TN New DGP

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Magalir Urimai Thogai: இது தொடக்கமே.. மகளிர் உரிமைத் தொகை மேலும் உயரும்; முதலமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
இது தொடக்கமே.. மகளிர் உரிமைத் தொகை மேலும் உயரும்; முதலமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
ADMK BJP: அதிமுக கூட்டணி.. அமித்ஷாவிற்கு தலைவலி - இதுதான் சங்கதி!
ADMK BJP: அதிமுக கூட்டணி.. அமித்ஷாவிற்கு தலைவலி - இதுதான் சங்கதி!
Chennai Metro Rail Work: சென்னை மெட்ரோ பணியில் கலக்கும்
சென்னை மெட்ரோ பணியில் கலக்கும் "மயில்"; எந்த மயில்னு யோசிக்கிறீங்களா.? இத படிங்க தெரியும்
PM Kisan 22nd Installment: பிரதம மந்திரி கிசான் நிதியின் 22-வது தவணை எப்போ வரும்.? அதுக்குள்ள விவசாயிகள் இத செஞ்சுடுங்க
பிரதம மந்திரி கிசான் நிதியின் 22-வது தவணை எப்போ வரும்.? அதுக்குள்ள விவசாயிகள் இத செஞ்சுடுங்க
Trump's C5 Plan.?: ஐரோப்பாவிற்கு G7; ஆசியாவிற்கு C5; ட்ரம்ப்பின் பலே பிளான்.? எந்தெந்த நாடுகள் தெரியுமா.?
ஐரோப்பாவிற்கு G7; ஆசியாவிற்கு C5; ட்ரம்ப்பின் பலே பிளான்.? எந்தெந்த நாடுகள் தெரியுமா.?
Gold Rate Dec.13th: அய்யய்யோ.! தங்கம் விலை ரூ.99,000-த்தை நெருங்கியது; ஒரே நாளில் ரூ.2560 உயர்வு - இன்று விலை என்ன.?
அய்யய்யோ.! தங்கம் விலை ரூ.99,000-த்தை நெருங்கியது; ஒரே நாளில் ரூ.2560 உயர்வு - இன்று விலை என்ன.?
Magalir Urimai Thogai: மகளிர் உரிமை தொகை ரூ. 1000 கிடைக்கவில்லையா.! மீண்டும் ஒரு வாய்ப்பு- எப்போ தெரியுமா.?
மகளிர் உரிமை தொகை ரூ. 1000 கிடைக்கவில்லையா.! மீண்டும் ஒரு வாய்ப்பு- எப்போ தெரியுமா.?
Hyundai Verna: ரூ.13 லட்சம்தான் ஆரம்பம்.. ஹுண்டாய் Verna காரை வாங்கலாமா? வேண்டாமா?
Hyundai Verna: ரூ.13 லட்சம்தான் ஆரம்பம்.. ஹுண்டாய் Verna காரை வாங்கலாமா? வேண்டாமா?
Embed widget