மேலும் அறிய

மருத்துவ முதுநிலை மாணவர் சேர்க்கையை நடத்தும் ஒன்றிய அரசு.. கேள்வியெழுப்பும் கி.வீரமணி

முதுநிலை மருத்துவ மாணவர் சேர்க்கையை கையில் எடுத்துள்ள ஒன்றிய அரசு அடுத்ததாக எம்.பி.பி.எஸ் மாணவர் சேர்கையிலும் கைவைக்கும்- கி.வீரமணி எச்சரிக்கை

மருத்துவக் கல்வியில் முதுநிலைக் கல்விக்கான இடங்களை ஒன்றிய அரசே நிரப்பும் என்பது அரசமைப்புச் சட்டத்துக்கு விரோதமானது- மாநில அரசின் உரிமைகளைப் புறக்கணிப்பதாகும். முதுகலையில் கை வைக்கும் ஒன்றிய அரசு அடுத்து இளநிலை (எம்.பி.பி.எஸ்.) படிப்பிலும் கை வைக்கும். சட்டம், நீதிமன்ற தீர்ப்புகளுக்கு விரோதமாக செயல்படும் ஒன்றிய அரசின் இம்முடிவை எதிர்த்து ஒன்றுபட்டு அனைத்துக் கட்சிகளும், அமைப்புகளும் முறியடிப்போம் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார்.

ஒன்றிய அரசாக பா.ஜ.க. பதவியேற்ற 2014 முதல் இன்று வரை, மாநிலங்களுக்கு நமது இந்திய  அரசமைப்புச் சட்டம் அளித்துள்ள அதிகாரங்களை நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமும் பறிக்கும் நிகழ்வுகளே பெரிதும் திட்டமிட்டு நடைபெற்று வருவதாக குற்றம்சாட்டியுள்ள கி.வீரமணி, 


ஆர்.எஸ்.எஸ். என்ற பா.ஜ.க.வின் வழிகாட்டி மூல  அமைப்பின் கொள்கை டில்லி மட்டுமே ஆட்சி செய்கிற ஒற்றை ஆட்சியாக (Unitary Rule) மட்டுமே நடைபெற வேண்டுமென்பதேயாகும்!

அந்த வரிசையில் டில்லியில் ஒன்றிய அரசாக இருந்த காங்கிரஸ் அரசு கல்வியை மாநிலப் பட்டியலிலிருந்து ஒத்திசைவுப் பட்டியலுக்கு நெருக்கடி காலத்தில் மாநிலங்களின் ஒப்புதலோ, விவாதமோ இன்றி மாற்றியது. அதனை மீண்டும் மாநிலப் பட்டியலுக்கே கொண்டு வர வேண்டுமென்ற குரல் நாடெங்கும் இப்போது ஓங்கிக் கேட்கும் நிலையில், 2014 முதல் பதவியேற்று அதிகாரத்திலுள்ள பிரதமர் மோடி தலைமையிலான அரசு கல்வியை ஒத்திசைவுப் பட்டியலிருந்து (Concurrent List) ஒன்றிய அரசுப் பட்டியலுக்கே (Union List) - மாற்றி விட்ட ஆக்கிரமிப்பை நாளும் திட்டமிட்டே நடத்தி வருகிறது!

நாடு முழுவதும் மருத்துவக் கல்விக்கு ஒரே தேர்வு என்ற சட்டத்தை - மருத்துவக் கவுன்சிலைக் கலைத்து தேசிய மருத்துவ ஆணையம் என்ற ஒன்றை உருவாக்கி ‘நீட்’ தேர்வை நடத்தத் துவங்கியது; 

மருத்துவக் கல்லூரிகளை மாநில அரசுகள் அமைக்கின்றன; ஆண்டுதோறும் தங்களது பட்ஜெட்டில் நிதி ஒதுக்கி செலவழிக்கின்றன. மருத்துவ அடிக்கட்டுமான வளர்ச்சிக்கு இது இன்றியமையாதது என்பதால், இப்போது திடீரென “ஒட்டகம் கூடாரத்திற்குள் நுழைந்ததோடு, கூடாரம் முழுதும் தனக்கே” என்று அறிவிப்பதுபோல, மருத்துவக் கல்வியில் மேற்பட்ட படிப்புக்கான மாணவர் சேர்க்கையை 100 சதவிகிதம் நாங்கள்தான் செய்வோம் என்று ஒன்றிய அரசின் சுகாதாரத் துறை கூறுவது - அரசமைப்புச் சட்ட விதிகளுக்கு எதிரான சட்ட விரோதம்!

அதிர்ச்சிக்குரிய வரைவு அறிக்கை
வரைவு (Draft) என்பதன் மூலம் இந்த அதிர்ச்சிக்குரிய அறிவிப்பு வந்துள்ளது. தமிழ்நாடு முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் உடனே இதற்கு எதிர்ப்பு தெரிவித்து - மாநிலங்களின் உரிமையைப் பறிக்கும் இந்த வரைவு யோசனையைக் கைவிட்டு முந்தைய ஏற்பாடே தொடர வேண்டும் என்று ஒன்றிய அரசின் துறைக்கு உடனடியாக கால தாமதம் செய்யாமல் கடிதம் எழுதியுள்ளார். நமது தி.மு.க. எம்.பி.க்களும், தமிழ்நாட்டு மருத்துவ அமைப்புகளும்கூட இந்த விபரீத யோசனைக்குத் தங்களது எதிர்ப்பினைத் தெரிவித்துள்ளனர்

மாநிலத்துக்கு மாநிலம் இடஒதுக்கீட்டின் அளவு மாறவில்லையா?

இடஒதுக்கீட்டுப்படி நடக்க வேண்டியது மருத்துவக் கல்வி சேர்க்கை. மாநிலத்திற்கு மாநிலம் இடஒதுக்கீடு மாறுபடும் நிலையிலும், மருத்துவம், மாநிலத்தின் நேரடியான நிர்வாகத்தின் கீழ் இயங்கி வருவதால், அந்தக் கல்வியில் மேற்பட்டப் படிப்பு (P.G.) மாணவர் சேர்க்கையை ஒன்றிய அரசாகிய நாங்களே செய்வோம் என்று கூறுவது எவ்வகையிலும் ஏற்கத்தக்கது அல்ல - அல்லவே அல்ல!

அடுத்து எம்.பி. பி.எஸ்.ஸிலும் கை வைப்பார்கள்

முதலில் P.G.யில் ஆரம்பித்து, அடுத்து M.B.B.S.லும் நாங்களேதான் சேர்ப்போம், டில்லியில்தான் எல்லாக் குவியலும் என்பது அரசமைப்புச் சட்டத்தின் மூன்று பட்டியல்களைப் பிரித்துள்ள ஏழாவது அட்டவணை அத்தனையும் பறித்து, ஒற்றை ஆட்சியாக மாற்றி மாநிலங்களையே இல்லாமற் செய்யும் முயற்சியின் முனைப்பு இது என்பதல்லாமல் வேறு என்ன?. ஏற்கெனவே உச்சநீதிமன்றம் அளித்துள்ள மாநிலஉரிமைகளுக்கான தீர்ப்புகளுக்கேகூட இந்த புதிய வரைவு ஏற்பாடு (Draft Proposal) முரண்பாடே! எனவே அரசமைப்புச் சட்டத்திற்கும், உச்சநீதிமன்ற தீர்ப்புகளுக்கும், மாநிலங்களின் உரிமை அதிகாரங்களுக்கும், எதிரான இத்தகைய சமூக அநீதிகள், சட்டப்புறம்புகளை ஒன்றிய அரசு கைவிட அனைத்து மாநிலங்களும் ஒன்றுபட்டு குரல் எழுப்ப வேண்டியது அவசரம், அவசியம் என கி.வீரமணி தெரிவித்துள்ளார். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Udhayanidhi Stalin: துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
Breaking News LIVE 28th Sep 2024: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:-  திருமாவளவன்
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:- திருமாவளவன்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

CSK Bowling Coach : KKR-க்கு தாவிய BRAVO CSK-க்கு வரும் மல்லிங்கா? SKETCH போடும் தோனிTN Cabinet Shuffle : ”PTR நீங்களே வாங்க!” மீண்டும் நிதித்துறை அமைச்சர்? ஸ்டாலின் பக்கா ஸ்கெட்ச்!Thrissur ATM Robbery | ”நாங்க திருடாத AREA-ஏ இல்ல” கொள்ளையர்கள் பகீர் வாக்குமூலம்!Pawan Kalyan |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi Stalin: துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
Breaking News LIVE 28th Sep 2024: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:-  திருமாவளவன்
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:- திருமாவளவன்
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
Second Moon: பூமிக்கு 2-வது நிலா! நிலாவுக்கு புது நண்பன்.. ஆச்சர்யமூட்டும் நாளைய வானியல் நிகழ்வு
பூமிக்கு 2-வது நிலா! நிலாவுக்கு புது நண்பன்.. ஆச்சர்யமூட்டும் நாளைய வானியல் நிகழ்வு
என்னது மிரட்டி பணம் பறிச்சாங்களா? மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு!
என்னது மிரட்டி பணம் பறிச்சாங்களா? மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு!
Embed widget