![metaverse](https://cdn.abplive.com/imagebank/metaverse-top.png)
Jayalalithaa Death Case: ஜெயலலிதா மரண விவகாரம்: அடுத்து விசாரணை வளையத்திற்குள் யார்?- ஆலோசனை செய்யும் ஆணையம்
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஆறுமுகசாமி ஆணையம் விசாரணை நடத்த அமைக்கப்பட்டது.
![Jayalalithaa Death Case: ஜெயலலிதா மரண விவகாரம்: அடுத்து விசாரணை வளையத்திற்குள் யார்?- ஆலோசனை செய்யும் ஆணையம் Jayalalithaa death case arumugasamy commission resumes inquiry, arumugasamy consultation with Sasikala Apollo hospital lawyers Jayalalithaa Death Case: ஜெயலலிதா மரண விவகாரம்: அடுத்து விசாரணை வளையத்திற்குள் யார்?- ஆலோசனை செய்யும் ஆணையம்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/02/16/18523250a3fd996999af8b06ff8d6154_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா 2016ஆம் ஆண்டு டிசம்பர் 5ஆம் தேதி இயற்கை எய்தினார். அவருடைய மரணத்தில் சில சந்தேகங்கள் இருப்பதாக சில கேள்வி எழுப்பியதை தொடர்ந்து இது தொடர்பாக விசாரிக்க ஒரு ஆணையம் அமைக்கப்பட்டது. இது ஒய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் 2017ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் அமைக்கப்பட்டது. இந்த ஆணையம் அப்பல்லோ மருத்துவமனை மருத்துவர்கள், சசிகலா மற்றும் அவருடைய உறவினர்கள் உள்பட பலரையும் விசாரித்தது. எனினும் தற்போது வரை இந்த ஆணையம் விசாரணையை முடிக்கவில்லை. இந்த ஆணையத்தின் பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டு கொண்டு வந்தது.
இந்நிலையில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக அடுத்து யாரை விசாரிக்கலாம் என்று ஆறுமுகசாமி ஆணையம் ஆலோசனை நடத்தி வருகிறது.
முன்னதாக அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் உச்சநீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்திருந்தது. அதில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக ஆறுமுகசாமி ஆணையம் விசாரணை நடத்த தடை விதிக்க வேண்டும் என்று கூறியிருந்தது. அந்த வழக்கில், ஆறுமுகசாமி ஆணையம் விசாரணை நடத்துவதற்கு உச்சநீதிமன்றம் 2 ஆண்டுகள் இடைக்கால தடை விதித்தது. இதையடுத்து மருத்துவ குழு அமைத்து விசாரணையை நடத்த எய்ம்ஸ் இயக்குனரகத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
அதன்படி எய்ம்ஸ் மருத்துவர் நிகில் டாண்டன் தலைமையில் மருத்துவர்கள் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தச் சூழலில் அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து சசிகலா தரப்பு, அப்போலோ மருத்துவமனை நிர்வாகத்திடம் நீதிபதி ஆறுமுகசாமி இன்று ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். இதில் காணொலி வாயிலாக எய்ம்ஸ் மருத்துவர்கள் குழு பங்கேற்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
மேலும் படிக்க: ஆம்புலன்ஸ் வர் முடியாததால் நோய் பாதித்த இளைஞரை 3 கி.மீ தூரத்திற்கு கட்டிலில் தூக்கி சென்ற அவலம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![metaverse](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)