மேலும் அறிய

“ஒருங்கிணைவோம்..ஒற்றுமை காப்போம்” - ஜெ. நினைவிடத்தில் எடப்பாடிக்கு அழைப்பு விடுத்தாரா ஓ.பி.எஸ்.?

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவு தினத்தையொட்டி சென்னை மெரினாவில் உள்ள அவரது நினைவிடத்தில் ஓ.பன்னீர் செல்வம் தனது ஆதரவாளர்களுடன் சென்று அஞ்சலி செலுத்தினார்.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவு தினத்தையொட்டி சென்னை மெரினாவில் உள்ள அவரது நினைவிடத்தில் ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் சென்று அஞ்சலி செலுத்தினார்.

ஜெயலலிதா நினைவுநாள்:

கடந்த 2016 ஆம் ஆண்டு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா டிசம்பர் 5ம் தேதி உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் மரணம் அடைந்தார். அவரது மறைவு செய்தி இந்திய அரசியல் வட்டாரத்தில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இன்றளவும் ஜெயலலிதா மரணம் நம்ப முடியாத ஒரு நிகழ்வாக தமிழக மக்களிடத்திலும் உள்ளது. அவரது மறைவுக்குப் பின் அதிமுக கட்சியில் நிகழ்ந்த ஏகப்பட்ட பிரச்சனைகள் தொண்டர்களிடையையும் மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தியிருந்தது. 

சமீபத்தில் கூட அதிமுக மீண்டும் ஓபிஎஸ், இபிஎஸ் என இரண்டு அணிகளாக பிரிந்தது. இதில் ஏராளமான தலைவர்கள் எடப்பாடி பழனிசாமி அணியில் இணைந்தனர். இதனால் ஓபிஎஸ் தரப்பினர் அதிர்ச்சியடைந்தனர். இதனிடையே ஜெயலலிதாவின் 6ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் முன்னாள் அமைச்சர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் ஆகியோர் கருப்பு சட்டை அணிந்து அமைதி ஊர்வலமாக சென்று, சென்னை மெரினாவில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by ABP Nadu (@abpnadu)

எடப்பாடி உறுதிமொழி:

பின்னர் அங்கு அமைக்கப்பட்டிருந்த மேடையில் அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். அப்போது மக்களை ஏமாற்ற விட மாட்டோம். பொம்மை முதலமைச்சரே உங்கள் போலி முகத்தை வெளிக்காட்டுவோம். குடும்ப ஆட்சியின் கொள்ளைக் கூட்டத்தை வீட்டுக்கு அனுப்புவோம்.நாம் கொண்ட கொள்கையில் லட்சியத்தோடு, வீறுநடை போடுவோம்; எதிரிகளை விரட்டியடிப்போம்; துரோகிகளை தூள் தூளாக்குவோம் என தெரிவித்தனர். 

எடப்பாடிக்கு அழைப்பு விடுத்தாரா ஓ.பி.எஸ்.?

இதனைத் தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் சென்னை மெரினாவில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார். பின்னர் மேடையில் அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். அப்போது ஜெயலலிதாவை மீண்டும் பொதுச்செயலாளர் ஆக்குவோம் என்றும், ஒற்றுமை காப்போம். ஒருங்கிணைவோம். திமுகவின் மக்கள் விரோத செயலை மக்களிடம் சொல்வோம். நாடாளுமன்ற தேர்தலுக்கு இப்போதே களப்பணிகள் தொடங்குவோம். சர்வாதிகார போக்குக்கு முடிவு கட்டுவோம் என உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். 

ஒற்றுமை காப்போம். ஒருங்கிணைவோம் என்பதன் மூலம் மீண்டும் எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு ஓ. பன்னீர்செல்வம் அழைப்பு விடுக்கிறாரா என்ற கேள்வி அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது. 

 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Assembly: 6 டிப்ளமோ படிப்புகள் அறிமுகம், அரசுக் கல்லூரிகளில் ஏஐ, எந்திரனியல் ஆய்வகம்- அமைச்சர் பொன்முடி அறிவிப்பு
TN Assembly: 6 டிப்ளமோ படிப்புகள் அறிமுகம், அரசுக் கல்லூரிகளில் ஏஐ, எந்திரனியல் ஆய்வகம்- அமைச்சர் பொன்முடி அறிவிப்பு
பிறப்புறுப்பில் மிளகாய் தூள் தடவி டார்ச்சர்! பொது இடத்தில் பழங்குடி பெண்ணுக்கு நேர்ந்த அநீதி!
பிறப்புறுப்பில் மிளகாய் தூள் தடவி டார்ச்சர்! பொது இடத்தில் பழங்குடி பெண்ணுக்கு நேர்ந்த அநீதி!
'இத்தனை நாளா எங்கய்யா இருந்தே'... ரூ.600 செலவில் தஞ்சை பள்ளி மாணவரின் அட்டகாச கண்டுபிடிப்பு கருவி
'இத்தனை நாளா எங்கய்யா இருந்தே'... ரூ.600 செலவில் தஞ்சை பள்ளி மாணவரின் அட்டகாச கண்டுபிடிப்பு கருவி
Breaking News LIVE: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்பு 59 ஆக அதிகரிப்பு
Breaking News LIVE: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்பு 59 ஆக அதிகரிப்பு
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

Accident News :  BIKE-ல் மோதிய பேருந்து..தூக்கி வீசப்பட்ட இளைஞர் பதற வைக்கும் CCTV காட்சிNEET Exam  : நீட் மறு தேர்வு..எழுத வராத மாணவர்கள்! நடந்தது என்ன?Amudha IAS Transfer? : இப்படி பண்ணிட்டிங்களே. அமுதா IAS Transfer? அப்செட்டில் ஸ்டாலின்!Trichy Surya |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Assembly: 6 டிப்ளமோ படிப்புகள் அறிமுகம், அரசுக் கல்லூரிகளில் ஏஐ, எந்திரனியல் ஆய்வகம்- அமைச்சர் பொன்முடி அறிவிப்பு
TN Assembly: 6 டிப்ளமோ படிப்புகள் அறிமுகம், அரசுக் கல்லூரிகளில் ஏஐ, எந்திரனியல் ஆய்வகம்- அமைச்சர் பொன்முடி அறிவிப்பு
பிறப்புறுப்பில் மிளகாய் தூள் தடவி டார்ச்சர்! பொது இடத்தில் பழங்குடி பெண்ணுக்கு நேர்ந்த அநீதி!
பிறப்புறுப்பில் மிளகாய் தூள் தடவி டார்ச்சர்! பொது இடத்தில் பழங்குடி பெண்ணுக்கு நேர்ந்த அநீதி!
'இத்தனை நாளா எங்கய்யா இருந்தே'... ரூ.600 செலவில் தஞ்சை பள்ளி மாணவரின் அட்டகாச கண்டுபிடிப்பு கருவி
'இத்தனை நாளா எங்கய்யா இருந்தே'... ரூ.600 செலவில் தஞ்சை பள்ளி மாணவரின் அட்டகாச கண்டுபிடிப்பு கருவி
Breaking News LIVE: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்பு 59 ஆக அதிகரிப்பு
Breaking News LIVE: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்பு 59 ஆக அதிகரிப்பு
Vijay: பிறந்தநாள் வாழ்த்து! சீமான், திருமா, அன்புமணிக்கு சிறப்பு நன்றி - வியூகம் வகுக்கும் விஜய்
Vijay: பிறந்தநாள் வாழ்த்து! சீமான், திருமா, அன்புமணிக்கு சிறப்பு நன்றி - வியூகம் வகுக்கும் விஜய்
TN Assembly: 'அகல்விளக்கு', 'திசைதோறும் திராவிடம்'- பள்ளிக் கல்வித்துறைக்கு 25 புது அறிவிப்புகள்!- என்னென்ன?
TN Assembly: 'அகல்விளக்கு', 'திசைதோறும் திராவிடம்'- பள்ளிக் கல்வித்துறைக்கு 25 புது அறிவிப்புகள்!- என்னென்ன?
Jayam Ravi: கோலிவுட்டில் அடுத்த விவாகரத்து? கணவர் ஜெயம் ரவி புகைப்படங்களை நீக்கிய மனைவி ஆர்த்தி!
Jayam Ravi: கோலிவுட்டில் அடுத்த விவாகரத்து? கணவர் ஜெயம் ரவி புகைப்படங்களை நீக்கிய மனைவி ஆர்த்தி!
TN RAIN: மக்களே! 7 மாவட்டங்களுக்கு 3 நாட்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை - வெளுக்கப் போகும் கனமழை!
TN RAIN: மக்களே! 7 மாவட்டங்களுக்கு 3 நாட்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை - வெளுக்கப் போகும் கனமழை!
Embed widget