மேலும் அறிய

நேரில் ஆஜராகிறார் ரஜினி? தூத்துக்குடி துப்பாக்கி சூடு விசாரணை ஆணையக் குழு பேட்டி!

தூத்துக்குடி துப்பாக்கி சூடு குறித்த ஒரு நபர் ஆணையத்தின் 28வது கட்ட விசாரணை கடந்த 5-ந்தேதி தொடங்கி கடற்கரை சாலையில் உள்ள  அலுவலகத்தில் இன்று நிறைவு பெற்றது.

தூத்துக்குடி துப்பாக்கி சூடு குறித்த ஒரு நபர் ஆணையத்தின் 28வது கட்ட விசாரணை கடந்த 5-ந்தேதி கடற்கரை சாலையில் உள்ள  ஒரு நபர் முகாம் அலுவலகத்தில் தொடங்கி இன்று(15-ந்தேதி) நிறைவு பெற்றது. இந்த விசாரணையில் தூத்துக்குடி துப்பாக்கி சூடு அன்று பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.

நேரில் ஆஜராகிறார் ரஜினி? தூத்துக்குடி துப்பாக்கி சூடு விசாரணை ஆணையக் குழு பேட்டி!
இதுகுறித்து ஆணைய வழக்கறிஞர் அருள் வடிவேல் சேகர் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறுகையில், 28-வது கட்ட விசாரணைக்கு ஆஜராகி விளக்கம் அளிப்பதற்காக துப்பாக்கிச்சூடு அன்று பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள் 102 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டது. இதில் 95 பேர் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளனர். மொத்தமாக 28 கட்ட விசாரணையையும் சேர்த்து இதுவரை 1153 பேருக்கு ஆணையம் தரப்பிலிருந்து சம்மன் அனுப்பப்பட்டதில் 813 பேர் சாட்சியம் அளித்துள்ளனர். இதில் 718 பேர் மனுதாரர் தரப்பு சாட்சியம். 94 பேர் காவல்துறை சார்பில் சாட்சியம் அளித்தவர்கள். ஒருவரை ஆணையம் தரப்பிலிருந்து சம்மன் அனுப்பி விசாரித்து உள்ளோம்.

நேரில் ஆஜராகிறார் ரஜினி? தூத்துக்குடி துப்பாக்கி சூடு விசாரணை ஆணையக் குழு பேட்டி!
இதுவரை மொத்தம் 1150 ஆவணங்கள் குறியீடு செய்யப்பட்டுள்ளது. இதில், 1127 ஆவணங்கள் மனுதாரர் தரப்பிலிருந்தும், காவல்துறையில் சார்பில் 23 ஆவணங்களும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
 
துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து இன்னமும் 300 நபர்களிடம் விசாரணை நடத்தப்படலாம் என எதிர்பார்க்கிறோம்.  விசாரணைக்கு ரஜினி நேரில் ஆஜராவது குறித்து பின்னர் முடிவு செய்யப்படும். துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து விளக்கம் கேட்டு முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு சம்மன் அனுப்பப்படுமா என கேள்வி எழுப்பியதற்கு, ஆணையம் தரப்பிலிருந்து விளக்கம் தேவைப்படும் நபர்களுக்கு மட்டுமே சம்மன் அனுப்பப்படும். எனவே முன்னாள் முதல்வருக்கு சம்மன் அனுப்புவது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து தமிழக அரசிடம் ஒரு நபர் ஆணையம் தாக்கல் செய்த இடைக்கால அறிக்கையை முதல்வர் மு.க.ஸ்டாலின் முழுமையாக ஏற்றுக் கொண்டுள்ளார். அதற்கு ஆணையம் தரப்பிலிருந்து நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம். இடைக்கால அறிக்கையில் பரிந்துரைத்த கோரிக்கைகளை அவர் ஏற்று அதன்படி பாதிக்கப்பட்டவர்களுக்கு தகுதியின் அடிப்படையில் வேலையும், நிவாரணத்தையும் வழங்கியுள்ளார். 

நேரில் ஆஜராகிறார் ரஜினி? தூத்துக்குடி துப்பாக்கி சூடு விசாரணை ஆணையக் குழு பேட்டி!
 
ஆணையம் தரப்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் பரத்வாஜ் என்பவர் சிறைக்கு சென்ற பிறகே இறந்தார் என்பது தெரிய வந்தது. எனவே பரத்வாஜின் குடும்பத்தினருக்கு மட்டும் 2 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கி முதல்வர் உத்தரவிட்டுள்ளார். ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் விசாரணையை முடிக்க கால தாமதம் ஏற்பட்டு வருகிறது. இல்லையெனில் இதற்குள் விசாரணை முழுமையாக நடைபெற்று முழு அறிக்கையும் அரசிடம் தாக்கல் செய்யப்பட்டிருக்கும். துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக ஆணையத்தின் முன்பு ஆஜராகும் காவலர்கள் இழப்பீடு கேட்டு அபிடவிட் தாக்கல் செய்துள்ளனர். அதில் தகுதியானவர்களின் மனுக்கள் பரிசீலிக்கப்பட்டு அரசுக்கு பரிந்துரை செய்யப்படும். இதுவரை 95 பேர் அவர்கள் தரப்பிலிருந்து இழப்பீடு கேட்டு உள்ளனர். அவர்கள் தாக்கல் செய்த மனுக்களில் கூறப்பட்டுள்ள தகவலின் உண்மைத்தன்மை அடிப்படையில் தகுதியானவர்களுக்கு ஆணையம் தரப்பிலிருந்து பாகுபாடின்றி நிவாரணங்கள் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். அடுத்தடுத்த கட்ட விசாரணைக்கு ஸ்டெர்லைட் குடியிருப்பில் தங்கியிருந்தவர்கள், துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்களை உடற்கூறாய்வு செய்த மருத்துவர்கள், தடய அறிவியல் காவலர்கள் மற்றும் அன்றைய தினம் பணியிலிருந்த காவல் கண்காணிப்பாளர், தென் மண்டல காவல்துறை தலைவர் உள்ளிட்ட உயரதிகாரிகள் விசாரணைக்கு அழைக்கப்படுவர். ஒரு நபர் ஆணையத்தின் அடுத்தகட்ட விசாரணை ஆகஸ்ட் 23ஆம் தேதி தொடங்கி ஒரு வார காலம் நடைபெற உள்ளது.  இந்த விசாரணையில்  வழக்கறிஞர் ஹென்றி திபேன் மற்றும் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி தேவசகாயம் ஆகியோருக்கு சம்மன் அனுப்பப்பட்டு விசாரணைக்காக அழைக்கப்படுவர் என்றார். நடிகர் ரஜினிகாந்த் நேரில் ஆஜராவது குறித்து பின்னர் முடிவு செய்யப்பட்டும் என்றும் அவர் தெரிவித்தார். 
 
 

தலைப்பு செய்திகள்

புதுச்சேரி காவல்துறையினர் குண்டர்கள் போல் நடந்து கொள்கிறார்கள் - CJP செளரவ் தாஸ் குற்றச்சாட்டு
புதுச்சேரி காவல்துறையினர் குண்டர்கள் போல் நடந்து கொள்கிறார்கள் - CJP செளரவ் தாஸ் குற்றச்சாட்டு
சிவகங்கை பெண்களுக்கு முக்கிய செய்தி... உங்கள் தோழிகளுக்கு இந்த செய்தி முக்கியமாக இருக்கலாம் !
சிவகங்கை பெண்களுக்கு முக்கிய செய்தி... உங்கள் தோழிகளுக்கு இந்த செய்தி முக்கியமாக இருக்கலாம் !
திரையில் மட்டுமல்ல... அரசியலிலும் அடுத்த ரவுண்ட்? - புதுச்சேரி தனுஷ் ரசிகர்களின் திடீர் மூவ்!
திரையில் மட்டுமல்ல... அரசியலிலும் அடுத்த ரவுண்ட்? - புதுச்சேரி தனுஷ் ரசிகர்களின் திடீர் மூவ்!
புதுச்சேரி மக்களுக்கு குட் நியூஸ்! நெரிசல் நேரங்களில் லாரிகளுக்குத் தடை! - எப்போது தெரியுமா?
புதுச்சேரி மக்களுக்கு குட் நியூஸ்! நெரிசல் நேரங்களில் லாரிகளுக்குத் தடை! - எப்போது தெரியுமா?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Vettri Investment Conclave: தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
Senthil Balaji: அவுட் ஆஃப் ரேஞ்சில் செந்தில் பாலாஜி? ”திமுகவை நம்பி இனி பயனில்லை” டெல்லிக்கு சகோதரர்கள் தூது
அவுட் ஆஃப் ரேஞ்சில் செந்தில் பாலாஜி? ”திமுகவை நம்பி இனி பயனில்லை” டெல்லிக்கு சகோதரர்கள் தூது
RB Udhayakumar: ”மோசடி செய்த CM விஜய்” மதுபானங்களால் கஜானாவை நிரப்புவது ஏன்? ஆர்.பி. உதயகுமார் கேள்வி
”மோசடி செய்த CM விஜய்” மதுபானங்களால் கஜானாவை நிரப்புவது ஏன்? ஆர்.பி. உதயகுமார் கேள்வி
TVK Govt: அடித்து ஆடும் தவெக அரசு - 95 நாட்கள், 97 ஒப்பந்தங்கள், ரூ.67ஆயிரத்து 452 கோடி முதலீடு - இன்று ஒப்பந்தம்
அடித்து ஆடும் தவெக அரசு - 95 நாட்கள், 97 ஒப்பந்தங்கள், ரூ.67ஆயிரத்து 452 கோடி முதலீடு - இன்று ஒப்பந்தம்
TVK Vijay: பொறாமையில் பொங்கும் Ex.அதிமுகவினர்.. முக்கிய பதவியை சிங்கைக்கு வழங்கும் CM விஜய்? என்ன தெரியுமா?
பொறாமையில் பொங்கும் Ex.அதிமுகவினர்.. முக்கிய பதவியை சிங்கைக்கு வழங்கும் CM விஜய்? என்ன தெரியுமா?
Maruti SUV: ரூ.6 லட்சத்திற்கே புதிய எஸ்யுவி..! டர்போ & CNG எடிஷன் - அம்சங்கள், வசதிகள்.. மாருதியின் லாஞ்ச் எப்போ?
ரூ.6 லட்சத்திற்கே புதிய எஸ்யுவி..! டர்போ & CNG எடிஷன் - அம்சங்கள், வசதிகள்.. மாருதியின் லாஞ்ச் எப்போ?
JOB ALERT : இன்டர்வியூக்கு வந்தாலே போதும்.! கொட்டிக்கிடக்கும் 10,000 காலிப்பணியிடம்- இளைஞர்களுக்கு ஜாக்பாட் அறிவிப்பு
இன்டர்வியூக்கு வந்தாலே போதும்.! கொட்டிக்கிடக்கும் 10,000 காலிப்பணியிடம்- இளைஞர்களுக்கு ஜாக்பாட் அறிவிப்பு
TNEB: 200 யூனிட் இலவச மின்சாரம் இல்லையா?.. தமிழக அரசு பரபரப்பு விளக்கம்.. வசமாக மாட்டிய நடிகை!
TNEB: 200 யூனிட் இலவச மின்சாரம் இல்லையா?.. தமிழக அரசு பரபரப்பு விளக்கம்.. வசமாக மாட்டிய நடிகை!
Embed widget