IPL 2026: ப்ளே ஆஃப்-க்கு செல்லப்போவது யார்? மல்லுகட்டும் 7 அணிகள்! ரன்ரேட்தான் பாஸ்!
ஐபிஎல் தொடரில் ப்ளே ஆஃப் சுற்றுக்குச் செல்ல 7 அணிகள் மிகவும் தீவிரமாக மல்லுகட்டி வருகின்றனர்.

ஐபிஎல் கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. நேற்று நடந்து முடிந்த போட்டிகளுடன் முன்னாள் சாம்பியனான மும்பை இந்தியன்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி முதல் அணிகளாக தொடரை விட்டு வெளியேறியுள்ளது.
இறுதிக்கட்டத்தை எட்டிய ஐபிஎல்:
ப்ளே ஆஃப் வாய்ப்பை எந்த அணியும் இதுவரை உறுதி செய்யாத நிலையில், ஒவ்வொரு அணியும் தங்களது ப்ளே ஆஃப் வாய்ப்பை உறுதி செய்ய முனைப்பு காட்டி வருகின்றனர். நேற்றைய போட்டிகளின் முடிவின்படி, ஆர்சிபி அணி புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. சன்ரைசர்ஸ் ஹைதரபாத் 2வது இடத்திலும், குஜராத் 3வது இடத்திலும் உள்ளனர். இவர்கள் 3 பேருமே 11 போட்டிகளில் ஆடி 7 வெற்றி 4 தோல்வியுடன் 14 புள்ளிகளுடன் உள்ளனர். ரன்ரேட் அடிப்படையில் ஆர்சிபி முதலிடத்தில் உள்ளது.
ப்ளே ஆஃப் சுற்றுக்கு மல்லுகட்டு:
இந்த 3 அணிகளுக்கும் இன்னும் 3 போட்டிகள் எஞ்சியுள்ளது. இதில் 1 போட்டியில் வெற்றி பெற்றால் புள்ளிப்பட்டியலில் 16 புள்ளிகளைப் பெற்று வெற்றி பெற்று ப்ளே ஆஃப் வாய்ப்பை உறுதி செய்வார்கள். அதேசமயம், 4வது இடத்தில் உள்ள பஞ்சாப் அணி 13 புள்ளிகளுடன் உள்ளது. ஆனால், அவர்கள் கைவசம் இன்னும் 4 போட்டிகள் உள்ளது. அவர்கள் இன்னும் 2 போட்டிகளில் வெற்றி பெற்றால் ப்ளே ஆஃப் வாய்ப்பு உறுதியாகும். ஒரு போட்டியில் வெற்றி பெற்றாலும் 15 புள்ளிகளுடன் ப்ளே ஆஃப் வாய்ப்பு உறுதியாகும்.
ஐபிஎல் தொடரைப் பொறுத்தமட்டில் எப்போதும் 4வது இடத்திற்கு மிகப்பெரிய மல்லுகட்டு ஒவ்வொரு அணிகளுக்கும் இடையே நடக்கும். எந்த அணியும் ப்ளே ஆஃப் வாய்ப்பை உறுதி செய்யாததால் புள்ளிப் பட்டியலில் எந்த மாற்றமும் நடக்கலாம் என்று கருதப்படுகிறது.
முடிவை மாற்றும் ஒவ்வொரு போட்டி முடிவும்:
தற்போதைய புள்ளிப்பட்டியலில் 5வது இடத்தில் உள்ள சென்னை மற்றும் 6வது இடத்தில் உள்ள ராஜஸ்தான் அணிகள் டாப் 4க்குள் வருவதற்கு மிகவும் முனைப்புடன் உள்ளனர். அவர்களும் தங்களுக்கான எஞ்சிய 3 போட்டிகளில் வெற்றி பெற்றால் ப்ளே ஆஃப்-க்கு எந்த சிரமுமின்றி செல்லலாம். புள்ளிப்பட்டியலில் 7வது இடத்தில் உள்ள கொல்கத்தா அணியும் எஞ்சிய 4 போட்டிகளில் வெற்றி பெற்றால் தங்களது ப்ளே ஆஃப் வாய்ப்பை உறுதி செய்யும் சூழல் உள்ளது. டெல்லி அணி மட்டுமே வெற்றி பெற்றாலும் மற்ற அணிகளின் முடிவிற்காக காத்திருக்கும் சூழல் உண்டாகும்.
எந்த அணியும் இதுவரை ப்ளே ஆஃப் வாய்ப்பை உறுதி செய்யாத சூழலில் இனி வரும் ஒவ்வொரு போட்டியின் முடிவுகளும் மற்ற அணியின் ப்ளே ஆஃப் வாய்ப்பையும் முடிவு செய்யும் என்றே கூறலாம். எலிமினேட்டர் சுற்றில் ஆடுவதை தவிர்ப்பதற்காக முதல் 2 இடத்தைப் பிடிக்க ஒவ்வொரு அணியும் ஆர்வம் காட்டும். இதனால், இனி வரும் போட்டிகள் ஒவ்வொன்றும் மிகவும் விறுவிறுப்பாக நடைபெறும் என்று கருதப்படுகிறது.
தீர்மானிக்கும் ரன்ரேட்:
டெல்லி அணிக்கு வாய்ப்புகள் மிகவும் குறைவாக இருக்கும் சூழலில் ஆர்சிபி, சன்ரைசர்ஸ், குஜராத், பஞ்சாப், சென்னை, ராஜஸ்தான், கொல்கத்தா ஆகிய 7 அணிகளும் தங்களது ப்ளே ஆஃப் வாய்ப்பிற்கு மிகப்பெரிய அளவில் மல்லுகட்ட உள்ளனர். குறிப்பாக, 4வது இடத்தைப் பிடிப்பதற்கான போட்டி மிகவும் வலுவாக இருக்கும் என்று கருதப்படுகிறது. இதனால், இந்த தொடரில் ரன் ரேட் மிகவும் முக்கியமான ஒன்றாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
"MI-ஐ அன்பாலோ செய்தாரா ஹர்திக்? பிளே-ஆஃப் கனவு கலைந்த நிலையில் வைரலாகும் தகவல்கள்.. நடந்தது என்ன?
Before You Go
DMK On INDIA Alliance | துரோகம் செய்த காங்கிரஸ் திமுகவின் அதிரடி முடிவு பலவீனமான I.N.D.I.A கூட்டணி?
ட்ரெண்டிங் செய்திகள்





















