மேலும் அறிய

கர்நாடகத்தில் இருந்து தமிழகம் வருபவர்களுக்கு எல்லையில் தடுப்பூசி - மறுப்பு தெரிவித்தால் திருப்பி அனுப்பப்படுகின்றனர்

’’கோவேக்சின் தடுப்பூசி மட்டுமே செலுத்துவேன் என இளைஞர் ஒருவர் தொடர்ந்து கூறி வந்ததால் அவரை கர்நாடகாவுக்கு அதிகாரிகள் திருப்பி அனுப்பினர்’’

கர்நாடக மாநிலம் பெங்களூருவிற்கு தென்னாப்பிரிக்காவில் இருந்து விமானம் மூலம் வந்த இருவருக்கு ஓமிக்ரான் வைரஸ் நோய்த்தொற்று கண்டறியப்பட்ட நிலையில் அவர்களும் அவர்களோடு தொடர்பில் இருந்தவர்களும் தொடர் கண்காணிப்பில் இருந்து வருகின்றனர். ஓமிக்ரான் வைரஸ் நோய் பரவலை தடுக்க கர்நாடக மாநில அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில் தமிழகத்திலும் ஒமிக்ரான் வைரஸ் நோய்த்தடுப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. கர்நாடக மாநிலத்தை ஒட்டியுள்ள கிருஷ்ணகிரி மாவட்டத்திலும் மாநில எல்லைப்பகுதிகளில் தீவிர கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் இருந்து தமிழகத்திற்கு வரும் முக்கிய தரைவழி பாதையான ஓசூர் ஜுஜுவாடி சோதனைச்சாவடி அருகே நேற்று முதல் வருவாய்த்துறை காவல்துறை, சுகாதாரத்துறை மற்றும் மாநகராட்சி உள்ளிட்ட அரசுத்துறை அதிகாரிகள் தீவிர வாகன சோதனை மற்றும் பயணிகளுக்கு பரிசோதனைகள் மேற்கொண்டு வருகின்றனர்.

கர்நாடகத்தில் இருந்து தமிழகம் வருபவர்களுக்கு எல்லையில் தடுப்பூசி - மறுப்பு தெரிவித்தால் திருப்பி அனுப்பப்படுகின்றனர்

அந்த வகையில் இன்று 2-வது நாளாக ஜுஜுவாடி பகுதியில் கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகத்திற்கு நுழையும் வாகனங்களை தடுத்து நிறுத்தி நோய்த்தடுப்பு கிருமிநாசினி மருந்துகள் தெளிக்கப்பட்டும், வாகனங்களில் பயணிக்கும் பொதுமக்களுக்கு வெப்பநிலை பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் வாகனங்களில் வருவோர் தடுப்பூசி போட்டு கொண்டார்களா என்பதை விசாரணை மேற்கொண்டு அவர்களிடம் கொரோனா தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றுகளையும் அதிகாரிகள் சரி பார்த்து வருகின்றனர்.

குஜராத்தில் ஒருவருக்கு ஒமிக்ரான் குஜராத்தில் ஒருவருக்கு ஒமிக்ரான் பாதிப்பு உறுதியாகியுள்ளது

கர்நாடகத்தில் இருந்து தமிழகம் வருபவர்களுக்கு எல்லையில் தடுப்பூசி - மறுப்பு தெரிவித்தால் திருப்பி அனுப்பப்படுகின்றனர்

கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்கள் அல்லது முதல் தவணை மட்டுமே செலுத்தி கொண்டவர்களுக்கு மாநில எல்லையில் தடுப்பூசி செலுத்தும் மையம் அமைக்கப்பட்டு அதில் ஒரு மருத்துவர், செவிலியர், சுகாதார பணியாளர்கள் அடங்கிய குழுவினர் கோவிஷில்டு கொரோனா தடுப்பு ஊசிகளை செலுத்தி வருகின்றனர். கர்நாடக மாநிலத்தில் இருந்து ஓசூர் நோக்கி தமிழகத்திற்குள் நுழைந்த ஒரு வாலிபர் இதுவரை எவ்வித தடுப்பூசியும் செலுத்தாததால் அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அவர் கோவேக்சின் தடுப்பூசி மட்டுமே செலுத்துவேன் என தொடர்ந்து கூறி வந்ததால் அவரை அதிகாரிகள் திரும்பவும் கர்நாடக மாநிலத்திற்கு அனுப்பி வைத்தனர். மேலும் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் தற்போது, 100 வெண்டிலேட்டர்கள் மற்றும் 13 ஆயிரம் லிட்டர் திரவ ஆக்சிஜன் மற்றும் கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரியில் நிமிடத்திற்கு 1,000 லிட்டர் ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் கருவியும் பொருத்தப்பட்டுள்ளது .கிருஷ்ணகிரி மருத்துவமனையில் தற்போது 100 படுக்கைகள் மட்டும் கொரோனா வார்டுக்கு ஒதுக்கப்பட்ட நிலையில் 20 பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வருகின்றனர்

பிரபல ரவுடி வெள்ளபள்ளம் வினோத் மற்றும் அவனது கூட்டாளிக்கு 7ஆண்டுகள் சிறை

 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Hathras Stampede: உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. முழு விவரம்!
உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. இறந்தவர்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய்!
Hathras Stampede: கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Hathras satsang : ஆன்மிக நிகழ்வில் சோகம்! அதிகரிக்கும் உயிரிழப்புகள்! நடந்தது என்ன?Anurag Thakur INDIA Alliance : Constitution-ல எத்தனை பக்கம் இருக்கு தெரியுமா? திகைத்து போன I.N.D.I.AVillupuram Kallasarayam | மீண்டும் கள்ளச்சாரயம்..பட்டப்பகலில் ஆசாமி அலப்பறை விழுப்புரத்தில் பரபரப்புBJP Cadre cheating | ”பணத்தை ஆட்டைய போட்டபாஜக நிர்வாகி!” கதறும் பெண்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Hathras Stampede: உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. முழு விவரம்!
உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. இறந்தவர்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய்!
Hathras Stampede: கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Sukran Peyarchi 2024: சுக்கிர பெயர்ச்சி!!! கடகத்தில் பெயர்ச்சியாகும் சுக்கிரன் !!!  சந்தோஷத்தில் திளைக்கும் ராசிகள் எவை?
Sukran Peyarchi 2024: சுக்கிர பெயர்ச்சி!!! கடகத்தில் பெயர்ச்சியாகும் சுக்கிரன் !!! சந்தோஷத்தில் திளைக்கும் ராசிகள் எவை?
PM Modi on Rahul: குழந்தைப் பேச்சு; சிறுபிள்ளைத்தனமான சேட்டை! ராகுல் பெயரை சொல்லாமல் கிண்டலடித்த மோடி!
PM Modi on Rahul: குழந்தைப் பேச்சு; சிறுபிள்ளைத்தனமான சேட்டை! ராகுல் பெயரை சொல்லாமல் கிண்டலடித்த மோடி!
Parliament Session: பேசத்தொடங்கிய மோடி:  எதிர்க்கட்சிகளின் அமளியால் ரணகளமான நாடாளுமன்றம் - நடந்தது என்ன?
Parliament Session: பேசத்தொடங்கிய மோடி:  எதிர்க்கட்சிகளின் அமளியால் ரணகளமான நாடாளுமன்றம் - நடந்தது என்ன?
Annamalai: விடுமுறை கேட்டு விண்ணப்பித்துள்ள அண்ணாமலை தலைவர் பதவியிலிருந்து மாற்றப்படுகிறாரா?
Annamalai: விடுமுறை கேட்டு விண்ணப்பித்துள்ள அண்ணாமலை தலைவர் பதவியிலிருந்து மாற்றப்படுகிறாரா?
Embed widget