மேலும் அறிய

ஒமிக்ரானை காரணம் காட்டி ஜல்லிக்கட்டுக்கு தடை கேட்கும் பீட்டா!

தற்போது வருகின்ற 2022 ஆம் ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்துவதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்றுவரும் நிலையில், ஒரு புறம் கொரோனா வைரஸின் மாறுபாடான ஒமிக்ரானும் மக்களின் வேகமாக பரவுகிறது.

ஒமிக்ரான் வைரஸ் பரவல் அதிகரித்துவருவதால் தமிழர்களின் பராம்பரிய விளையாட்டான ஜல்லிகட்டுப்போட்டிகளை நடத்துவதற்கு தடை விதிக்க வேண்டும் என தமிழக அரசிற்கு பீட்டா அமைப்பினர் கடிதம் எழுதியுள்ளனர்.

தமிழர்களின் பண்பாட்டையும், பாரம்பரியத்தையும் பறைசாற்றும் விழாவாக ஜல்லிக்கட்டு போட்டிகள் தொன்று தொட்டு நடைபெற்றுவருகிறது. அதிலும் பொங்கல் திருநாளன்று முதல் தொடங்கும் மதுரை அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டிகளுக்கு மவுசு அதிகமாக இருக்கும். ஆனால் காளைகளை இதில் துன்புறுத்துகின்றனர் என பீட்டா அமைப்பினர் தொடர்ந்த வழக்கின் பேரில் இப்போட்டிகள் நடத்துவதற்கு சட்டரீதியாக தடை விதிக்கப்பட்டது. இந்த சூழலில் தான் கடந்த 2017 ஆம் ஆண்டு இளைஞர்கள், ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள், பொதுமக்கள் இணைந்து நடத்திய போராட்டத்தின் விளைவாக ஜல்லிக்கட்டு போட்டிகள் மீண்டும் கோலாகலத்துடன் தொடங்கியது. ஆனால் கொரோனா தொற்றின் பரவல் அதிகரிப்பினால் போடப்பட்ட ஊரடங்கினால் கடந்த 2 ஆண்டுகளாக ஜல்லிக்கட்டுப்போட்டிகள் நடைபெறவில்லை.

  • ஒமிக்ரானை காரணம் காட்டி ஜல்லிக்கட்டுக்கு தடை கேட்கும் பீட்டா!

இந்நிலையில் தற்போது 2022 ஆம் ஆண்டு ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடத்துவதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்றுவரும் நிலையில், ஒரு புறம் கொரோனா வைரஸின் மாறுபாடான ஒமிக்ரானும் மக்களிடம் வேகமாக பரவுகிறது. இந்த சூழலில் தமிழர்களின் வீர விளையாட்டை நடத்தினால் நிச்சயம் மக்கள் அதிகமாகப்பாதிக்கப்படுவார்கள் என்பதால் இதற்குத் தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துவருகிறது. இந்நிலையில் தான், பொங்கல் பண்டிகையையொட்டி தமிழ்நாட்டில் நடத்தப்படும் ஜல்லிக்கட்டுப் போட்டிகளுக்குத் தடை விதிக்க வேண்டும் என பீட்டா அமைப்பின் தலைமைச் செயல் அதிகாரி மணிலால் வல்லியத்தே கடிதம் எழுதியுள்ளார். பெரும் போராட்டங்களுக்கு மத்தியில் கடந்த 2017 ஆம் ஆண்டு ஜல்லிக்கட்டுப்போட்டிக்கு அரசு அனுமதி வழங்கிய நாள் முதல் இதுவரை 69 பேர் உயிரிழந்துள்ளனர். இதோடு 4 ஆயிரத்து 696 பேர் காயம் அடைந்துள்ளனர். இந்நிலையில் கொரோனா தொற்று வேகமாக பரவிவரும் நிலையில், ஒருபுறம் ஓமிக்ரான் பாதிப்பும் மக்களை அச்சுறுத்தி வருகிறது. எனவே தற்போது மக்களுக்கு அத்தியாவசியமற்ற  ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்துவதற்கு அனுமதி வழங்கக்கூடாது என தமிழக அரசிற்கு பீட்டா அமைப்பினர் கோரிக்கைவிடுத்துள்ளனர்.

  • ஒமிக்ரானை காரணம் காட்டி ஜல்லிக்கட்டுக்கு தடை கேட்கும் பீட்டா!

மேலும் கொரோனா வைரஸ் மற்றும் ஒமிக்ரான் மிகவும் வேகமாகப் பரவுவதால் பொதுமக்களுக்குக் கடுமையான உடல் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும்.  ஜல்லிக்கட்டு விளையாட்டைப்பார்க்க மக்கள் ஆர்வத்துடன் அதிகம் கூடும் போது சொல்ல முடியாத அளவிற்கு பெரும் பாதிப்பை மக்கள் சந்திக்க நேரிடும். எனவே மக்களின் நலனைக்கருத்தில் கொண்டு உலகப்புகழ் பெற்ற தமிழர்களின் பராம்பரிய விளையாட்டிற்கு இந்தாண்டு அனுமதி தரக்கூடாது என தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியத்திடம் சுமார் 80 மருத்துவர்கள் வேண்டுகோள் விடுத்து கடிதம் எழுதியுள்ளனர். ஒரு வேளை ஜல்லிக்கட்டு போட்டிக்குத் தடை விதிக்கவில்லை எனில், மக்கள் அதிகம் கூடும் இடங்களில் நிச்சயம் ஒமிக்ரான் வேகமாக பரவும். எனவே மக்களின் நலன்களைக் கருத்தில் கொண்டு இதற்குத் தடை விதிப்பதோடு மருத்துவர்களின் பணிச்சுமையை குறைக்கவும் தமிழக அரசு உதவ வேண்டும் என்று மருத்துவர்கள் தரப்பில் இருந்து கூறப்பட்டுவருகிறது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

DMDK: திமுகவா? அதிமுகவா? பிரேமலதாவின் நிபந்தனை இதுதான் - தேமுதிக ஸ்கெட்ச்!
DMDK: திமுகவா? அதிமுகவா? பிரேமலதாவின் நிபந்தனை இதுதான் - தேமுதிக ஸ்கெட்ச்!
TVK Alliance Talks Team: வழிக்கு வந்த விஜய்; தவெக கூட்டணி பேச்சுவார்த்தைக் குழு அமைக்க முடிவு.? பலமாகும் செங்கோட்டையன்
வழிக்கு வந்த விஜய்; தவெக கூட்டணி பேச்சுவார்த்தைக் குழு அமைக்க முடிவு.? பலமாகும் செங்கோட்டையன்
"அந்தரத்தில் தொங்கிய சொகுசு பேருந்து! விக்கிரவாண்டியில் நள்ளிரவில் பயங்கர விபத்து - பயணிகள் அதிர்ஷ்டவசமாக மீட்பு!"
Tata EV Offer: ரூ.4 லட்சம் தள்ளுபடி.. Tata Curvv EV காரின் மைலேஜ், விலையும் இதுதான்!
Tata EV Offer: ரூ.4 லட்சம் தள்ளுபடி.. Tata Curvv EV காரின் மைலேஜ், விலையும் இதுதான்!
ABP Premium

வீடியோ

Bus Accident | தூங்கி வழிந்த ஓட்டுநர் ஆம்னி பஸ் கவிழ்ந்து விபத்து!அந்தரத்தில் தொங்கும் காட்சிகள்
Thiruparankundram Case | “சர்வே கல்லா? சமணர் தூணா?”திருப்பரங்குன்றம் தீபம் சர்ச்சை நீதிமன்றத்தில் காரசார விவாதம்
Edappadi Meet Adani ”தேர்தல் செலவு நான் பார்த்துக்கிறேன்”அதானியை சந்தித்த EPS! டீல் முடித்த அமித்ஷா
”கோவையை பிடிச்சே ஆகணும்” தூக்கியடிக்கும் செந்தில் பாலாஜி! 70 நிர்வாகிகள் ராஜினாமா
”10 நிமிஷம் பத்தாது” செங்கோட்டையன் அட்வைஸ்! விஜய்யின் அடுத்த மூவ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMDK: திமுகவா? அதிமுகவா? பிரேமலதாவின் நிபந்தனை இதுதான் - தேமுதிக ஸ்கெட்ச்!
DMDK: திமுகவா? அதிமுகவா? பிரேமலதாவின் நிபந்தனை இதுதான் - தேமுதிக ஸ்கெட்ச்!
TVK Alliance Talks Team: வழிக்கு வந்த விஜய்; தவெக கூட்டணி பேச்சுவார்த்தைக் குழு அமைக்க முடிவு.? பலமாகும் செங்கோட்டையன்
வழிக்கு வந்த விஜய்; தவெக கூட்டணி பேச்சுவார்த்தைக் குழு அமைக்க முடிவு.? பலமாகும் செங்கோட்டையன்
"அந்தரத்தில் தொங்கிய சொகுசு பேருந்து! விக்கிரவாண்டியில் நள்ளிரவில் பயங்கர விபத்து - பயணிகள் அதிர்ஷ்டவசமாக மீட்பு!"
Tata EV Offer: ரூ.4 லட்சம் தள்ளுபடி.. Tata Curvv EV காரின் மைலேஜ், விலையும் இதுதான்!
Tata EV Offer: ரூ.4 லட்சம் தள்ளுபடி.. Tata Curvv EV காரின் மைலேஜ், விலையும் இதுதான்!
CM MK Stalin: 2 நாட்கள் திருநெல்வேலியில்.. முக்கிய அறிவிப்பை வெளியிடும் முதலமைச்சர் ஸ்டாலின்!
CM MK Stalin: 2 நாட்கள் திருநெல்வேலியில்.. முக்கிய அறிவிப்பை வெளியிடும் முதலமைச்சர் ஸ்டாலின்!
India Squad: சூர்யகுமார் முதல் சாம்சன் வரை.. டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி இதுதான் - முக்கிய வீரருக்கு கல்தா!
India Squad: சூர்யகுமார் முதல் சாம்சன் வரை.. டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி இதுதான் - முக்கிய வீரருக்கு கல்தா!
SIR Chennai Spl. Camp: சென்னை மக்களே.! SIR-ல் பேர் விட்டுப்போச்சா.? கவலைய விடுங்க; இன்றும், நாளையும் சிறப்பு முகாம்
சென்னை மக்களே.! SIR-ல் பேர் விட்டுப்போச்சா.? கவலைய விடுங்க; இன்றும், நாளையும் சிறப்பு முகாம்
Imran Khan in Trouble: பாக். முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு தொடரும் கஷ்டகாலம்; ஊழல் வழக்கில் 17 ஆண்டுகள் சிறை
பாக். முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு தொடரும் கஷ்டகாலம்; ஊழல் வழக்கில் 17 ஆண்டுகள் சிறை
Embed widget