மேலும் அறிய

மேட்டூர் அணையின் நீர் வரத்து 796 கன அடியில் இருந்து 901 கன அடியாக அதிகரிப்பு

மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக வினாடிக்கு 500 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வந்த நிலையில் நிறுத்தப்பட்டு, குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 250 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு மற்றும் கர்நாடகா மாநிலங்களில் பருவமழை தொடங்கி உள்ளது. இதனால் கர்நாடகாவில் இருந்து மேட்டூர் அணைக்கு வரும் நீரானது அதிகரித்தும், குறைந்தும் காணப்பட்ட நிலையில் தற்போது மேட்டூர் அணையின் நீர் மட்டம் அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் அணைக்கு வினாடிக்கு 1,098 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்த நிலையில் நேற்றைய தினம் அணைக்கு வரும் நீரின் அளவு 796 கன அடியாக இருந்தது. இந்த நிலையில் இன்று காலை அணைக்கு வரும் நீரின் அளவு 901 கன அடியாக அதிகரித்துள்ளது. 

மேட்டூர் அணையின் நீர் வரத்து 796 கன அடியில் இருந்து 901 கன அடியாக அதிகரிப்பு

நீர்மட்டம்:

அணையின் நீர் மட்டம் 71.18 அடியாகவும், அணையின் நீர் இருப்பு 33.72 டி.எம்.சி ஆகவும் உள்ளது. குறுவை, சம்பா சாகுபடி பாசனத்திற்காக மேட்டூர் அணையிலிருந்து 90 வது ஆண்டாக ஜூன் 12 ஆம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. சேலம், கரூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் குறுவை, சம்பா சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. தற்போது குறுவை, சம்பா அறுவடைக்கு தயாராக உள்ள நிலையில் மேட்டூர் அணையில் இருந்து குறைந்த அளவு தண்ணீர் மட்டுமே திறக்கப்பட்டு வருகிறது.

இதன் மூலம் 12 டெல்டா மாவட்டங்களில் உள்ள 17 லட்சம் ஏக்கர் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக வினாடிக்கு 500 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வந்த நிலையில் நிறுத்தப்பட்டு, குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 250 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது. கர்நாடகாவில் இருந்து குறைந்த அளவு தண்ணீர் மட்டுமே திறக்கப்பட்டுள்ளதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் சரிந்து வருகிறது.

மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீரில் இருந்து அணை மின் நிலையம் மற்றும் சுரங்க மின் நிலையத்தின் வழியாக தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில் மின் உற்பத்தி தொடங்கியுள்ளது. அணையில் தண்ணீர் மிகவும் குறைவாக உள்ளதால் 16 கண் மதகுகள் மூடப்பட்டுள்ளது. கிழக்கு மற்றும் மேற்கு கால்வாய் பாசனத்திற்காக திறக்கப்பட்டிருந்த தண்ணீர் நிறுத்தப்பட்டுள்ளது. குடிநீர் தேவைக்காக மேட்டூர் அணையில் இருந்து 250 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

மேட்டூர் அணையின் நீர் வரத்து 796 கன அடியில் இருந்து 901 கன அடியாக அதிகரிப்பு

கர்நாடக அணைகள்:

கர்நாடக அணைகளை பொறுத்தவரை நேற்று கிருஷ்ணராஜ சாகர் அணையின் நீர்மட்டம் 96.82 அடியாகவும் அணையின் நீர் இருப்பு 20.41 டி.எம்.சி ஆகவும் உள்ளது. அணைக்கு வினாடிக்கு 1,139 கன அடி நீர் வந்து கொண்டு இருக்கும் நிலையில் அணையில் இருந்து வினாடிக்கு 875 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

கபினி அணையை பொறுத்தவரை அணையின் நீர்மட்டம் 54.56 அடியாக உள்ள நிலையில், அணையின் நீர் இருப்பு 13.50 டி.எம்.சி ஆகவும் உள்ளது, அணை வினாடிக்கு 180 கன அடி நீர் வந்து கொண்டு இருக்கும் நிலையில், அணையில் இருந்து வினாடிக்கு 300 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

கர்நாடக மாநிலத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலை பகுதியான கூர்க் பகுதியில் உருவாகும் காவிரி ஆறு குடகு, ஹாசன் , மைசூர், மாண்டியா, பெங்களூரு, ரூரல், ராம்ராஜ் நகர் ஆகிய மாவட்டங்கள் வழியாக தமிழ்நாட்டில் தருமபுரி, சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர் , திருச்சி, தஞ்சாவூர், மயிலாடுதுறை மாவட்டங்கள் வழியாக சென்று வங்க கடலில் கலக்கிறது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Annamalai on EPS :“ஈரோடு இடைத் தேர்தல் சீக்ரெட்” போட்டுடைத்த அண்ணாமலை – அதிர்ச்சியில் ஈபிஎஸ்..!
Annamalai on EPS :“ஈரோடு இடைத் தேர்தல் சீக்ரெட்” போட்டுடைத்த அண்ணாமலை – அதிர்ச்சியில் ஈபிஎஸ்..!
UK Elections: பிரிட்டன் தேர்தல் முடிவுகள்; மன்னிப்பு கேட்ட ரிஷி சுனக்! நன்றி தெரிவித்த மோடி!
UK Elections: பிரிட்டன் தேர்தல் முடிவுகள்; மன்னிப்பு கேட்ட ரிஷி சுனக்! நன்றி தெரிவித்த மோடி!
தூத்துக்குடியில் இளைஞரை கடத்தி கொடூர கொலை! தோண்டி எடுக்கப்பட்ட சடலம் - மக்கள் அதிர்ச்சி
தூத்துக்குடியில் இளைஞரை கடத்தி கொடூர கொலை! தோண்டி எடுக்கப்பட்ட சடலம் - மக்கள் அதிர்ச்சி
Veera Serial Today July 5th: காதலை சொன்ன மாறன்.. வீரா முடிவு என்ன? கண்மணிக்கு காத்திருந்த ஷாக் - வீரா சீரியல் அப்டேட்!
Veera Serial Today July 5th: காதலை சொன்ன மாறன்.. வீரா முடிவு என்ன? கண்மணிக்கு காத்திருந்த ஷாக் - வீரா சீரியல் அப்டேட்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Britain Election Results | ஆட்சியிழக்கும் ரிஷி சுனக்!வெற்றி விளிம்பில் ஸ்டார்மர்!Rahul Gandhi to Visit Hathras |எட்றா வண்டிய..!ஹத்ராஸுக்கு புறப்பட்ட ராகுல்..நேரில் ஆறுதல்Namakkal woman bus fall video | பேருந்தில் இருந்து தவறி விழுந்த பெண்! பதறவைக்கும் CCTV காட்சிTeam India Victory Parade | தோளில் உலகக் கோப்பை! இந்திய வீரர்களின் ENTRY! கட்டுக்கடங்காத கூட்டம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Annamalai on EPS :“ஈரோடு இடைத் தேர்தல் சீக்ரெட்” போட்டுடைத்த அண்ணாமலை – அதிர்ச்சியில் ஈபிஎஸ்..!
Annamalai on EPS :“ஈரோடு இடைத் தேர்தல் சீக்ரெட்” போட்டுடைத்த அண்ணாமலை – அதிர்ச்சியில் ஈபிஎஸ்..!
UK Elections: பிரிட்டன் தேர்தல் முடிவுகள்; மன்னிப்பு கேட்ட ரிஷி சுனக்! நன்றி தெரிவித்த மோடி!
UK Elections: பிரிட்டன் தேர்தல் முடிவுகள்; மன்னிப்பு கேட்ட ரிஷி சுனக்! நன்றி தெரிவித்த மோடி!
தூத்துக்குடியில் இளைஞரை கடத்தி கொடூர கொலை! தோண்டி எடுக்கப்பட்ட சடலம் - மக்கள் அதிர்ச்சி
தூத்துக்குடியில் இளைஞரை கடத்தி கொடூர கொலை! தோண்டி எடுக்கப்பட்ட சடலம் - மக்கள் அதிர்ச்சி
Veera Serial Today July 5th: காதலை சொன்ன மாறன்.. வீரா முடிவு என்ன? கண்மணிக்கு காத்திருந்த ஷாக் - வீரா சீரியல் அப்டேட்!
Veera Serial Today July 5th: காதலை சொன்ன மாறன்.. வீரா முடிவு என்ன? கண்மணிக்கு காத்திருந்த ஷாக் - வீரா சீரியல் அப்டேட்!
kanimozhi Supports Vijay : “விஜய்க்கு திமுக எம்.பி. கனிமொழி ஆதரவு” மாறுகிறதா தமிழக அரசியல் களம்..?
kanimozhi Supports Vijay : “விஜய்க்கு திமுக எம்.பி. கனிமொழி ஆதரவு” மாறுகிறதா தமிழக அரசியல் களம்..?
Trichy: பரபரப்பு! திருச்சியில் பிரபல ரவுடி மீது துப்பாக்கிச்சூடு - போலீஸ் சுட்டது ஏன்?
Trichy: பரபரப்பு! திருச்சியில் பிரபல ரவுடி மீது துப்பாக்கிச்சூடு - போலீஸ் சுட்டது ஏன்?
Tirunelveli mayor : “ராஜினாமா செய்த மேயர் சரவணன்” நெல்லையின் புதிய மேயர் யார்..? யாருக்கு ஜாக்பாட்..?
Tirunelveli mayor : “ராஜினாமா செய்த மேயர் சரவணன்” நெல்லையின் புதிய மேயர் யார்..? யாருக்கு ஜாக்பாட்..?
இந்திய வம்சாவளிகளை கவர்ந்து இங்கிலாந்து பிரதமரானார் கெய்ர் ஸ்டார்மர்! யார் இவர்?
இந்திய வம்சாவளிகளை கவர்ந்து இங்கிலாந்து பிரதமரானார் கெய்ர் ஸ்டார்மர்! யார் இவர்?
Embed widget