மேலும் அறிய

போலியான அறிக்கை.. வருமான வரியை ரீஃபண்ட் செய்வதில் முறைகேடு.. 18 இடங்களில் ரெய்டு!

தமிழ்நாட்டில் போலியாக வரிக் கழிவுகள் காட்டப்படுவதன் வாயிலாக, செலுத்திய வரியை மோசடியாகத் திரும்பப் பெறும் நபர்களின் வருமானவரி அறிக்கைகள் குறித்து விசாரணை நடத்தப்பட்டது.

திருச்சி, கோயம்புத்தூர், சேலம், மதுரை, சென்னை, வேலூர், ஈரோடு, திருவண்ணாமலை, விழுப்புரம், தேனி, சிவகங்கை, புதுக்கோட்டை, விருதுநகர், திருநெல்வேலி உள்ளிட்ட 18 இடங்களில் வருமான வரித்துறை சோதனை மேற்கொண்டது.

போலியான வருமான அறிக்கை:

வருமான வரிச் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் போலியாக வரிக் கழிவுகள் காட்டப்படுவதன் வாயிலாக,  செலுத்திய வரியை மோசடியாகத் திரும்பப் பெறும் நபர்களின் வருமானவரி அறிக்கைகள் குறித்து விசாரணை நடத்தப்பட்டது.

தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள வருமான வரி நிபுணர்கள் மற்றும் இடைத்தரகர்கள் வரி செலுத்தும் ஆயிரக்கணக்கான மோசடியான நபர்களுக்கு வருமான வரி திரும்பப் பெறும் கோரிக்கைகளைத் தாக்கல் செய்வதற்கு உதவியதாகவும், அவர்களுக்கு உடந்தையாக இருந்ததாகவும் தெரியவந்துள்ளதை அடுத்து, நேற்று இது தொடர்பான விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

18 இடங்களில் உள்ள வருமான வரி அலுவலக வளாகங்களில் இது குறித்த விசாரணைகள் நடைபெற்றது. மேலும் வருமான வரி அதிகாரிகள் வருமான வரி அறிக்கைகளில் தாக்கல் செய்யப்பட்டுள்ள விவரங்களைச் சரிபார்த்து, ஆதாரங்களைச் சேகரித்திருந்தனர்.

அதிரடி காட்டிய வருமான வரித்துறை:

இத்தகைய நபர்கள், 80-ஜிஜிசி பிரிவின் கீழ் அரசியல் கட்சிகளுக்கு வழங்கிய நன்கொடைகள், 80-டி பிரிவின் கீழ் மருத்துவக் காப்பீட்டுத் தொகையை திருப்பிச் செலுத்துதல், 80-சி பிரிவின் கீழ் கல்விக் கட்டணம், 10(13 ஏ) - பிரிவின் கீழ் வீட்டு வாடகைப் படி மற்றும் இதர பிரிவுகளின் கீழ் போலியான வரி விலக்கு கோரிக்கைகளை முன்வைத்து, ஆயிரக்கணக்கான வரி செலுத்தும் நபர்களுக்குத் தவறான வருமான வரிக் கணக்குகளை தாக்கல் செய்ய உதவியிருப்பது தெரிய வந்துள்ளது.

இதன் விளைவாக, கோடிக்கணக்கான ரூபாயை திரும்பப் பெற்று, அரசிற்கு நிதி இழப்பை ஏற்படுத்தியுள்ளனர். டெல்லி, ஜார்க்கண்ட், தமிழ்நாடு, ஜம்மு-காஷ்மீர், அசாம் மற்றும் பீகார் மாநிலங்கள் முழுவதும் அரசு நிறுவனங்களின் பணியாளர்கள், பாதுகாப்புப் படைகளில் பணியாற்றி வரும் அல்லது ஓய்வு பெற்ற பணியாளர்கள் உட்பட ஆயிரக்கணக்கான வரி செலுத்துவோர்களை இடைத்தரகர்கள் வாட்ஸ்அப், டெலிகிராம் போன்ற செயலிகள் வாயிலாக குழுக்கள் அமைத்தும், வாய்மொழி வாயிலாகவும் ஏமாற்றியுள்ளதாகத் தெரியவந்துள்ளது.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள இத்தகைய முகவர்களைப் பொறுத்தவரை, மோசடியான வருமான வரிக் கணக்குகளை தாக்கல் செய்வதற்காக அவர்களால் குறிப்பிட்ட மின்னஞ்சல் ஐடிகள் உருவாக்கப்பட்டிருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது.

இந்த மின்னஞ்சல் முகவரியிலிருந்து, பல ஆயிரக் கணக்கான வருமான வரிக் கணக்குகள் தாக்கல் செய்யப்பட்டு, பல கோடி ரூபாய் அளவில் போலியான முறையில் வரியைத் திரும்பப் பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த சோதனை நடவடிக்கைகளின் போது குற்றஞ்சாட்டுவதற்கான ஆதாரங்கள் கண்டுபிடிக்கப்பட்டு அவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும், அனைத்து வருமான வரி வளாகங்களிலும் இது தொடர்பான  விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

SIR: திரும்ப வராத SIR படிவம்.. தமிழ்நாட்டில் 85 லட்சம் வாக்காளர்கள் நீக்கமா?
SIR: திரும்ப வராத SIR படிவம்.. தமிழ்நாட்டில் 85 லட்சம் வாக்காளர்கள் நீக்கமா?
DMK - Congress: மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் - என்னென்ன?
DMK - Congress: மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் - என்னென்ன?
திருப்பரங்குன்றம் போராட்டம்: பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், எச்.ராஜா உட்பட 113 பேர் மீது வழக்கு!
திருப்பரங்குன்றம் போராட்டம்: பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், எச்.ராஜா உட்பட 113 பேர் மீது வழக்கு!
1 லட்சம் பெண்களுக்கு ரூ.10 லட்சம் கடன் - தமிழக அரசு அதிரடி !! விண்ணப்பிக்க குவிந்த பெண்கள்
1 லட்சம் பெண்களுக்கு ரூ.10 லட்சம் கடன் - தமிழக அரசு அதிரடி !! விண்ணப்பிக்க குவிந்த பெண்கள்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Thiruparankundram Dheepam|”இன்னும் சில நிமிடங்களில் தீபம்”144 ரத்து போய் பாதுகாப்பு குடுங்க!-நீதிபதி
எகிறும் டாலர்.. சரியும் ரூபாய்.. என்ன பண்ண போறீங்க நிர்மலா? | Modi | Rupees VS Dollar
எச்சில் இலை முதல் திருப்பரங்குன்றம் வரை!சர்ச்சைகளும்.. பரபரப்பும்..யார் இந்த நீதிபதி GR சுவாமிநாதன்? | GR Swaminathan
டிட்வா கதை ஓவர்?மழை நிற்குமா? தொடருமா?வானிலை நிலவரம் என்ன? | Ditwah Cyclone TN Rain
திருப்பரங்குன்றம் தீப பதட்டம் தீபத்தூணில் ஏற்றப்படாத தீபம் நடந்தது என்ன? முழு விவரம் | Madurai | Dheepam 2025 Thiruparankundram Issue |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
SIR: திரும்ப வராத SIR படிவம்.. தமிழ்நாட்டில் 85 லட்சம் வாக்காளர்கள் நீக்கமா?
SIR: திரும்ப வராத SIR படிவம்.. தமிழ்நாட்டில் 85 லட்சம் வாக்காளர்கள் நீக்கமா?
DMK - Congress: மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் - என்னென்ன?
DMK - Congress: மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் - என்னென்ன?
திருப்பரங்குன்றம் போராட்டம்: பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், எச்.ராஜா உட்பட 113 பேர் மீது வழக்கு!
திருப்பரங்குன்றம் போராட்டம்: பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், எச்.ராஜா உட்பட 113 பேர் மீது வழக்கு!
1 லட்சம் பெண்களுக்கு ரூ.10 லட்சம் கடன் - தமிழக அரசு அதிரடி !! விண்ணப்பிக்க குவிந்த பெண்கள்
1 லட்சம் பெண்களுக்கு ரூ.10 லட்சம் கடன் - தமிழக அரசு அதிரடி !! விண்ணப்பிக்க குவிந்த பெண்கள்
Magalir Urimai Thogai: 12-ந் தேதி முதல் விடுபட்ட பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை! இறுதிக்கட்ட பணியில் அரசு அதிகாரிகள் தீவிரம்!
Magalir Urimai Thogai: 12-ந் தேதி முதல் விடுபட்ட பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை! இறுதிக்கட்ட பணியில் அரசு அதிகாரிகள் தீவிரம்!
Jayalalitha: ஜெ... சும்மா பேர கேட்டாலே அதிருதுல்ல.. இரும்பு பெண்மணியின் பிளாஷ்பேக் இதோ
ஜெ... சும்மா பேர கேட்டாலே அதிருதுல்ல.. இரும்பு பெண்மணியின் பிளாஷ்பேக் இதோ
திருப்பரங்குன்றம் தீபத்தூண் சர்ச்சை: மலைக்கு அனுமதிக்காத காவல்துறை.. பாஜகவினர் போராட்டம், கைது!
திருப்பரங்குன்றம் தீபத்தூண் சர்ச்சை: மலைக்கு அனுமதிக்காத காவல்துறை.. பாஜகவினர் போராட்டம், கைது!
Maruti Suzuki Discount: 2.15 லட்சம் ரூபாய் வரை தள்ளுபடி.. Fronx முதல் Baleno வரை - மாருதி சுசுகியின் சலுகை எப்படி?
Maruti Suzuki Discount: 2.15 லட்சம் ரூபாய் வரை தள்ளுபடி.. Fronx முதல் Baleno வரை - மாருதி சுசுகியின் சலுகை எப்படி?
Embed widget