மேலும் அறிய

ஊட்டியில் ஆளுநர் தலைமையில் தொடங்கிய துணை வேந்தர்கள் மாநாடு - தமிழக அரசின் பிரதிநிதிகள் புறக்கணிப்பு

தமிழ்நாடு அரசின் பிரதிநிதிகள் இல்லாமல் துணை வேந்தர்கள் மாநாட்டினை ஆளுநர் நடத்தி வருவதற்கு, பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

உதகை ஆளுநர் மாளிகையில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி தலைமையில் பல்கலைக் கழக துணைவேந்தர்கள் மாநாடு துவங்கி நடைபெற்று வருகிறது. நீலகிரி மாவட்டம் உதகை உள்ள ஆளுநர் மாளிகையான ராஜ்பவன் மாளிகையில் பல்கலைக் கழக துணைவேந்தர்கள் மாநாடு துவங்கி நடைபெற்று வருகிறது. தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமையில், இந்த மாநாடு 2 நாட்கள் நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் வளர்ந்து வரும் புதிய உலக ஒழுங்கில் இந்தியாவின் பங்கு, 2047க்குள் இந்தியா உலக தலைவராக இருக்க வேண்டும் உள்ளிட்ட யோசனைகள் மற்றும் செயல் திட்டங்கள் குறித்து இம்மாநாட்டில் விவாதிக்கப்பட உள்ளது. பல்கலைக்கழக துணைவேந்தர்கள் மாநாட்டினை தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என் ரவி துவக்கி வைத்தார்.

இந்த மாநாட்டில் பல்கலைக்கழக மானியக் குழுவின் தலைவர் பேராசிரியர் எம்.ஜெகதேஷ் குமார் மற்றும் ஜோஹோ கார்ப்பரேஷன் முதன்மை செயல் அதிகாரி ஸ்ரீதர் வேம்பு ஆகியோர் சிறப்புரை ஆற்றுகின்றனர். தமிழகத்தில் உள்ள அனைத்து மாநிலப் பல்கலைக்கழகங்கள், மத்தியப் பல்கலைக்கழகங்கள் மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் தங்கள் பேராசிரியர்கள் மற்றும் இணைப் பேராசிரியர்களுடன் மாநாட்டில் பங்கேற்கின்றனர். இந்த மாநாட்டில் தமிழ்நாடு அரசின் சார்பில் பிரதிநிதிகள் யாரும் பங்கேற்கவில்லை. 

அதேசமயம் தமிழ்நாடு அரசின் பிரதிநிதிகள் இல்லாமல் துணை வேந்தர்கள் மாநாட்டினை ஆளுநர் நடத்தி வருவதற்கு, பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். ஆளுநர் தலைமையில் துணைவேந்தர்கள் மாநாடு நடைபெறும் சூழலில், தமிழ்நாடு சட்டமன்றத்தில் பல்கலைக்கழக துணைவேந்தரை மாநில அரசே நியமிக்கும் மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த மசோதாவை தாக்கல் செய்த போது பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், “மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசால், பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களை நியமிக்க முடியாமல் இருப்பது ஒட்டுமொத்த மக்களாட்சி தத்துவத்திற்கே எதிரானது. அரசை மதிக்காமல் ஆளுநர் செயல்படும் போக்கு தற்போது தலைதூக்கி இருக்கிறது” என அவர் தெரிவித்தார்.

துணைவேந்தர்களை அரசே நியமிக்கலாம்: பேரவையில் தாக்கல் ஆனது சட்டமசோதா

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IPL 2025 Schedule: ஐபிஎல் போட்டி அட்டவணை ரிலீஸ்! முதல் போட்டி யாருக்கு? சிஎஸ்கே-விற்கு முதல் போட்டி யாருடன்?
IPL 2025 Schedule: ஐபிஎல் போட்டி அட்டவணை ரிலீஸ்! முதல் போட்டி யாருக்கு? சிஎஸ்கே-விற்கு முதல் போட்டி யாருடன்?
"அதிகாரத் திமிர்! தமிழ்நாட்டுல இருந்து ஒரு ரூபாய் கூட தரமாட்டோம்" கொதித்தெழுந்த சீமான்
WhatsApp: வாட்ஸ் அப்பில் சாட் தீம் மாற்றுவது எப்படி? வெளியான புதிய அப்டேட்!
WhatsApp: வாட்ஸ் அப்பில் சாட் தீம் மாற்றுவது எப்படி? வெளியான புதிய அப்டேட்!
மயிலாடுதுறை இரட்டைக்கொலை வழக்கு - மேலும் ஒருவர் கைது..!
மயிலாடுதுறை இரட்டைக்கொலை வழக்கு - மேலும் ஒருவர் கைது..!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”தமிழகத்திற்கு நிதி கிடையாது” தர்மேந்திர பிரதான் பேசியது என்ன? தமிழில் முழு வீடியோNamakkal Transgender Issue : ’’திருநங்கைகளை ஒதுக்காதீங்க’’மக்களுக்கு கலெக்டர் ADVICE | CollectorNainar Nagendran Join ADMK : அதிமுகவில் மீண்டும் நயினார்?பாஜகவில் வெடித்த கலகம்!அ.மலை பக்கா ஸ்கெட்ச்Mayiladuthurai Murder | சாராய விற்ற கும்பல் தட்டிக்கேட்ட இளைஞர்கள் படுகொலை செய்த சம்பவம் | Crime

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IPL 2025 Schedule: ஐபிஎல் போட்டி அட்டவணை ரிலீஸ்! முதல் போட்டி யாருக்கு? சிஎஸ்கே-விற்கு முதல் போட்டி யாருடன்?
IPL 2025 Schedule: ஐபிஎல் போட்டி அட்டவணை ரிலீஸ்! முதல் போட்டி யாருக்கு? சிஎஸ்கே-விற்கு முதல் போட்டி யாருடன்?
"அதிகாரத் திமிர்! தமிழ்நாட்டுல இருந்து ஒரு ரூபாய் கூட தரமாட்டோம்" கொதித்தெழுந்த சீமான்
WhatsApp: வாட்ஸ் அப்பில் சாட் தீம் மாற்றுவது எப்படி? வெளியான புதிய அப்டேட்!
WhatsApp: வாட்ஸ் அப்பில் சாட் தீம் மாற்றுவது எப்படி? வெளியான புதிய அப்டேட்!
மயிலாடுதுறை இரட்டைக்கொலை வழக்கு - மேலும் ஒருவர் கைது..!
மயிலாடுதுறை இரட்டைக்கொலை வழக்கு - மேலும் ஒருவர் கைது..!
Anbumani: மும்மொழிக் கொள்கை; 80 ஆண்டுப் போரில் வெல்வது தமிழ்நாடுதான்- அன்புமணி ஆவேசம்!
Anbumani: மும்மொழிக் கொள்கை; 80 ஆண்டுப் போரில் வெல்வது தமிழ்நாடுதான்- அன்புமணி ஆவேசம்!
திருமாவளவன் காலில் விழுந்தால் என்ன தப்பு? ஜாதி முத்திரையை குத்தாதீங்க? கூல் சுரேஷ் ஆவேசம்
திருமாவளவன் காலில் விழுந்தால் என்ன தப்பு? ஜாதி முத்திரையை குத்தாதீங்க? கூல் சுரேஷ் ஆவேசம்
குறைவான பேலன்ஸ் வைத்திருந்தால் கூடுதல் அபராதம்.. புதிய FASTag விதிகள் நாளை முதல் அமல்!
குறைவான பேலன்ஸ் வைத்திருந்தால் கூடுதல் அபராதம்.. புதிய FASTag விதிகள் நாளை முதல் அமல்!
பரீட்சைக்கு லேட் ஆச்சி; மகாராஷ்டிராவை வாட்டும் ட்ராஃபிக்! மாணவர் எடுத்த அதிரடி முடிவு! நீங்களே பாருங்க!
பரீட்சைக்கு லேட் ஆச்சி; மகாராஷ்டிராவை வாட்டும் ட்ராஃபிக்! மாணவர் எடுத்த அதிரடி முடிவு! நீங்களே பாருங்க!
Embed widget

We use cookies to improve your experience, analyze traffic, and personalize content. By clicking "Allow All Cookies", you agree to our use of cookies.