![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
துணைவேந்தர்களை அரசே நியமிக்கலாம்: பேரவையில் தாக்கல் ஆனது சட்டமசோதா
உதகையில் ஆளுநர் ரவி தலைமையில் துணைவேந்தர்கள் மாநாடு நடக்கும் நிலையில் மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.
![துணைவேந்தர்களை அரசே நியமிக்கலாம்: பேரவையில் தாக்கல் ஆனது சட்டமசோதா The bill to appoint vice chancellor to the state was tabled துணைவேந்தர்களை அரசே நியமிக்கலாம்: பேரவையில் தாக்கல் ஆனது சட்டமசோதா](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/04/14/292bbfb5b56f646683d45dd83c265460_original.jpeg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
பல்கலைக்கழக துணைவேந்தர்களை மாநில அரசே நியமிக்கும் சட்டமசோதா சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. புதிய மசோதாவை உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தாக்கல் செய்தார். இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக, அதிமுக வெளிநடப்பு செய்தது. துணைவேந்தரை மாநில அரசே நியமிக்க அதிகாரமளிக்கும் மசோதாவை ஆரம்ப நிலையிலேயே எதிர்ப்பதாக அதிமுக அறிவித்துள்ளது.
இதனைத்தொடர்ந்து, தாக்கல் செய்து நிறைவேற்றப்பட்ட மசோதா மீது உரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மாநில அரசை மதிக்காமல் ஆளுநர் செயல்படும் போக்கு தலைதூக்கி இருப்பதாகவும், துணை வேந்தர்கள் நியமனத்தில் மாநில அரசை ஆளுநர் மதிக்காமல் செயல்படுவது மக்கள் ஆட்சிக்கு விரோதமானது என்றும், துணை வேந்தரை நியமிக்கும் அதிகாரத்தை ஆளுநருக்கு அளிக்கக்கூடாது என பூஞ்சி ஆணையம் பரிந்துரைத்துள்ளதாகவும் கூறினார்.
உதகையில் ஆளுநர் ரவி தலைமையில் துணைவேந்தர்கள் மாநாடு நடக்கும் நிலையில் மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா மாநிலங்களிலும் துணைவேந்தரை நியமிக்கும் அதிகாரம் மாநில அரசிடம் உள்ளது. குஜராத் உள்ளிட்ட மாநிலங்களை பின்பற்றி தமிழ்நாட்டிலும் துணை வேந்தர்களை அரசே நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது இந்த மசோதா மீதான விவாதம் நடைபெற்று வருகிறது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)