மேலும் அறிய

TN Weather Update: மீண்டும் அதிகரிக்கும் வெயில்.. 5 மாவட்டங்களில் 100 டிகிரி பாரன்ஹீட் வெப்பம்.. இன்று எப்படி இருக்கும்?

தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 5 மாவட்டங்களில் 100 டிகிரி பாரன்ஹீட் கடந்து வெப்பநிலை பதிவாகியுள்ளது.

தமிழ்நாட்டில் தென் மேற்கு பருவ மழை, மேற்கு திசை காற்று வேறுபாடு காரணமாக ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. இருப்பினும் பல மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதிகபட்ச வெப்பநிலை என்பது 39  முதல் 40   டிகிரி செல்சியஸ் ஒட்டியே இருக்கிறது. வெயிலின் தாக்கத்தால் மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

அதிகபட்ச வெப்பநிலை:

கடந்த 24 மணி நேரத்தில் தமிழ்நாட்டில், மதுரையில் 39.2 டிகிரி செல்சியஸ் மழை பதிவாகியுள்ளது. அதனை தொடர்ந்து நாகையில் – 38 டிகிரி செல்சியஸ், திருச்சியில் – 38.1 டிகிரி செல்சியஸ், பரங்கிபேட்டை – 38.4 டிகிரி செல்சியஸ், தூத்துக்குடி – 37.7 டிகிரி செல்சியஸ், தஞ்சாவூர் – 39 டிகிரி செல்சியஸ், ஈரோடு – 36.6, கரூர் பரமத்தி – 37.5, வேலூர் – 35.9 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:

அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை  பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 36-37 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27-28 டிகிரி செல்சியஸை ஒட்டியே இருக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் சென்னையில் நுங்கம்பாக்கத்தில் 35.5 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும், மீனம்பாக்கத்தில் 35.6 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும் பதுவாகியுள்ளது. தமிழ்நாட்டில் நேற்று 5 மாவட்டங்களில் 100 டிகிரி பாரன்ஹீட் கடந்து வெப்பநிலை பதிவானது.

அதிகரிக்கும் வெயிலின் தாக்கம்:

ஜூன் மாதம் முதல் வாரத்தில் எப்போதும் இல்லாத அளவு வெயிலின் தாக்கம் உச்சத்தில் இருந்தது. அதிகபட்ச வெப்பநிலை என்பது சுமார் 43 டிகிரி வரை இருந்தது. அதன்பின் ஜூன் 8 ஆம் தேதி அதாவது இரண்டாவது வாரத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கவே தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் நல்ல மழை பெய்தது. இதனால் பூமியின் உஷ்னம் சற்று தணிந்து காணப்பட்டது. ஆனால் தற்போது மீண்டும் வெயிலின் தாக்கம் சற்று அதிகரித்துள்ளது.

இதனால் பகல் நேரங்களில் வெளியில் செல்லும் மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.  வெளியில் செல்லும் போது நல்ல நீர்ச்சத்து நிறைந்த பழங்கள் அல்லது நீராகாரம் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இல்லையெனில் உடலில் நீர்ச்சத்து குறையும் அபாயம் ஏற்படும் என்றும் குறிப்பாக குழந்தைகள், முதியவர்கள் வெளியில் செல்வ வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். 

மேலும் மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக,  ஜூலை 1 ஆம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில்  ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும் என வானிலை மையம் அறிவித்துள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Seeman: “தம்பி விஜய் ஏன் என்னை மாதிரி பேச வேண்டும்.. அவருக்கு இன்னும் ஒரு படம் இருக்கு” - கொந்தளித்த சீமான்!
“தம்பி விஜய் ஏன் என்னை மாதிரி பேச வேண்டும்.. அவருக்கு இன்னும் ஒரு படம் இருக்கு” - கொந்தளித்த சீமான்!
Breaking News LIVE: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்
Breaking News LIVE: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்
Kalki 2898 AD 2: பாராட்டுக்களைப் பெறும் முதல் பாகம்... பிரபாஸின் கல்கி 2 ஆம் பாகம் எப்போது தெரியுமா?
Kalki 2898 AD 2: பாராட்டுக்களைப் பெறும் முதல் பாகம்... பிரபாஸின் கல்கி 2 ஆம் பாகம் எப்போது தெரியுமா?
Vijay - Seeman:
Vijay - Seeman: "மாணவ - மாணவியரை ஊக்கப்படுத்திய விஜய்” - நெகிழ்ந்து போன சீமான்.. என்ன சொன்னார் தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Nellai Drunkard | ’’கார்ல கள்ளச்சாராயம் இருக்கு’’  வடிவேலு பாணியில் ரகளை!  மதுபிரியர் அட்ராசிட்டிAnnamalai on Sengol | ”செங்கோலை எடுக்கணுமா? திமுக என்ன சொல்லப்போகுது?”I.N.D.I.A-ஐ விளாசும் பாஜகவினர்Vijay Banner | சிறுவன் மீது சரிந்த விஜய் பேனர் பரபரப்பு CCTV காட்சிEB Office Alcohol | அலுவலகத்தில் மது அருந்திய மின்சார வாரிய ஊழியர்கள்!’’ஏய்..டம்ளர் எடுத்துட்டு வா’’

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Seeman: “தம்பி விஜய் ஏன் என்னை மாதிரி பேச வேண்டும்.. அவருக்கு இன்னும் ஒரு படம் இருக்கு” - கொந்தளித்த சீமான்!
“தம்பி விஜய் ஏன் என்னை மாதிரி பேச வேண்டும்.. அவருக்கு இன்னும் ஒரு படம் இருக்கு” - கொந்தளித்த சீமான்!
Breaking News LIVE: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்
Breaking News LIVE: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்
Kalki 2898 AD 2: பாராட்டுக்களைப் பெறும் முதல் பாகம்... பிரபாஸின் கல்கி 2 ஆம் பாகம் எப்போது தெரியுமா?
Kalki 2898 AD 2: பாராட்டுக்களைப் பெறும் முதல் பாகம்... பிரபாஸின் கல்கி 2 ஆம் பாகம் எப்போது தெரியுமா?
Vijay - Seeman:
Vijay - Seeman: "மாணவ - மாணவியரை ஊக்கப்படுத்திய விஜய்” - நெகிழ்ந்து போன சீமான்.. என்ன சொன்னார் தெரியுமா?
Vijay Honours Students: மாணவர்கள் என்ன படிக்கலாம்?- எப்படி துறை தேர்வு செய்யலாம்?- கேரியர் குறித்து விஜய் கொடுத்த டிப்ஸ்
Vijay Honours Students: மாணவர்கள் என்ன படிக்கலாம்?- எப்படி துறை தேர்வு செய்யலாம்?- கேரியர் குறித்து விஜய் கொடுத்த டிப்ஸ்
Thalapathy Vijay:
"எனக்கு பயமா இருக்கு” - போதைப்பொருள் பயன்பாடு குறித்து மாணவர்களுக்கு விஜய் அட்வைஸ்
Kalki 2898AD : முதல் நாளிலே 150 கோடிக்கு மேல் வசூல் செய்த கல்கி 2898 AD!
Kalki 2898AD : முதல் நாளிலே 150 கோடிக்கு மேல் வசூல் செய்த கல்கி 2898 AD!
தமிழ்நாட்டுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு; பிளஸ் 2 அடிப்படையில் சேர்க்கை- தமிழக அரசு தனித்தீர்மானம்
தமிழ்நாட்டுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு; பிளஸ் 2 அடிப்படையில் சேர்க்கை- தமிழக அரசு தனித்தீர்மானம்
Embed widget