மேலும் அறிய

Minister Rajakannappan: அதிகாலை 2 மணிக்கு புகார் தெரிவித்தால் காலைக்குள் நடவடிக்கை எடுக்கப்படும்... அமைச்சர் அதிரடி.

ஆவின் பாலகங்களில் ஆவின் பொருட்களைத் தவிர வேறு பொருட்களை விற்பனை செய்தால் உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

சேலம் இரும்பாலை சாலையில் சேலம் ஆவின் பால் பண்ணை இயங்கி வருகிறது. இங்கு பால்வளத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் ஆய்வு மேற்கொண்டனர். முன்னதாக, சேலம் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தில் ரூ.21 இலட்சம் மதிப்பில் பயனாளிகளுக்கு கறவை மாடு கடனுதவிகளும், ரூ.6.30 இலட்சம் மதிப்பில் கறவை மாடுகள் பராமரிப்பு கடனுதவிகளும், ரூ.27.13 இலட்சம் மதிப்பில் செயற்கைமுறை கருவூட்டல் உபகரணங்களும், ரூ.37.60 இலட்சம் மதிப்பில் தொகுப்பு பால் குளிர்விப்பான் மையம் என மொத்தம் ரூ.92.03 இலட்சம் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை பால்வளத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் வழங்கினார். பின்னர் அமைச்சர்கள் இருவரும் பால் பண்ணை முழுவதும் சென்று ஆய்வு மேற்கொண்டனர். பால்பண்ணைக்குள் புதிதாக பால் குளிரூட்டும் நிலையம் அமைக்கப்பட்டு வருவதை பார்வையிட்ட அமைச்சர்கள் பணிகள் விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இந்த ஆய்வின்போது சேலம் மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி, சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வகணபதி, சேலம் மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன் உள்ளிட்டர் உடன் இருந்தனர்.

Minister Rajakannappan: அதிகாலை 2 மணிக்கு புகார் தெரிவித்தால் காலைக்குள் நடவடிக்கை எடுக்கப்படும்... அமைச்சர் அதிரடி.

இதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த பால்வளத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன், புதிதாக சேலம் ஆவின் பால் பண்ணை வளாகத்தில் பால் பவுடர் உற்பத்தி நிலையம் மூன்று மாடியில் கட்டப்பட்டு வருகிறது. அதேபோன்று ஏழு லட்சம் லிட்டர் பால் குளிரூட்டும் நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த ஆட்சி அமைந்த பின் 24 புதிய திட்டங்கள் புதிதாக அறிவிப்பு வெளியிடப்பட்டு செயல்பட்டு வருகிறது. தேர்தலுக்கு முன்னதாக இவை அனைத்தும் முடிக்கப்படும். முதல்வர் இதனை திறந்து வைப்பார் என்றார். 

ஆவின் பாலகங்களில் ஆவின் பொருட்களைத் தவிர வேறு பொருட்களை விற்பனை செய்தால் உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும். ஆவின் பாலகங்களில் இடுப்புகள், பிஸ்கட் வகைகள், நெய், பால் என ஆவின் தயாரிக்கப்பட்ட பொருட்கள் மட்டுமே விற்பனைக்கு வைக்கப்பட வேண்டும். இதைத் தவிர வேறு பொருட்களை விற்பனை செய்பவர்கள் வேறு இடங்களை பார்த்துக் கொள்ள வேண்டும். இதே போல் ஆவின் பாலகங்களில் சுத்தமில்லாமல் இருந்தால் உடனடியாக தகவல் கொடுக்கும் வேண்டும். ஈரோட்டில் இரண்டு ஆவின் பாலகங்களில் சுத்தமில்லாமல் செயல்பட்டு வருவதாக புகார் தெரிவிக்கப்பட்டது. அதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டது. புகார் தெரிவிப்பவர்கள் பெயர் குறிப்பிடாமல் கூட அதிகாலை 2 மணிக்கு படித்து காலைக்குள் சரி செய்யப்படும் என்று உறுதியளித்தார். 

Minister Rajakannappan: அதிகாலை 2 மணிக்கு புகார் தெரிவித்தால் காலைக்குள் நடவடிக்கை எடுக்கப்படும்... அமைச்சர் அதிரடி.

கொள்முதல் விலை உயர்த்தப்படுமா என்ற கேள்விக்கு, ஆவின் மக்களுக்காக செயல்படும் நிறுவனம். முதல்வர் ஏழை எளிய மக்களுக்காக ஆவினை நடத்தி வருகிறார். இதில் உற்பத்தி செய்பவர்கள் மற்றும் நுகர்வோர் என இருவரும் சாதாரண மக்கள்தான். மத்திய அரசுக்கு ஒரு ரூபாய் செலுத்தினால் 29 பைசா மட்டுமே கொடுக்கின்றனர். ஆனாலும் முதல்வர் ஆவினருக்கு பணம் ஒதுக்கி வருகிறார் என்று கூறினார்.

புதிய திட்டங்களைப் பொறுத்தவரை எதுவும் இல்லை. மக்களுக்கு தடையில்லாமல் ஆவின் பால் சென்றடையும் வகையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. கூடுதலாக 24 நிறுவனங்கள் வர உள்ளது என்றார். 

ஆவின் கொள்முதல் செய்யும் பாலுக்கு மூன்று ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்பட்டு வருகிறது. ஒரு சில இடங்களில் 1.75 ரூபாய் முதல் மூன்று ரூபாய் வரை வழங்கப்பட உள்ளது என்று கூறினார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Chennai Rain: சீக்கிரமா வீட்டுக்கு போயிருங்க.! இந்த 6 மாவட்டங்களில் இரவு மழை இருக்கு.!
Chennai Rain: சீக்கிரமா வீட்டுக்கு போயிருங்க.! இந்த 6 மாவட்டங்களில் இரவு மழை இருக்கு.!
அச்சச்சோ.. தீக்குளித்த நபர்.. நாடாளுமன்றம் நோக்கி ஓடியதால் பரபரப்பு!
அச்சச்சோ.. தீக்குளித்த நபர்.. நாடாளுமன்றம் நோக்கி ஓடியதால் பரபரப்பு!
"வேதனையா இருக்கு" அண்ணா பல்கலை. மாணவி விவகாரம்.. கொதித்தெழுந்த விஜய்!
Chennai Rain: சென்னையா, கொடைக்கானலா.!  எங்கு பார்த்தாலும் மழைச்சாரலும் பனிமூட்டமுமான காட்சிகள்.!
சென்னையா, கொடைக்கானலா.! எங்கு பார்த்தாலும் மழைச்சாரலும் பனிமூட்டமுமான காட்சிகள்.!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

RN Ravi Delhi Visit: ”ஸ்டாலின் சொல்றத கேளுங்க!” RN.ரவிக்கு பறந்த ORDER! மோடியின் திடீர் முடிவு?Anna University Issue: அண்ணா பல்கலை. விவகாரம் குற்றவாளி குறித்து திடுக் தகவல்!  கைதானவர் யார்?Sri Ram Krishna Profile: தமிழனை அழைத்த TRUMP WHITE HOUSE-ல் முக்கிய பதவி! யார் ஸ்ரீராம் கிருஷ்ணன்?Anna University Student Sexual Assault |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chennai Rain: சீக்கிரமா வீட்டுக்கு போயிருங்க.! இந்த 6 மாவட்டங்களில் இரவு மழை இருக்கு.!
Chennai Rain: சீக்கிரமா வீட்டுக்கு போயிருங்க.! இந்த 6 மாவட்டங்களில் இரவு மழை இருக்கு.!
அச்சச்சோ.. தீக்குளித்த நபர்.. நாடாளுமன்றம் நோக்கி ஓடியதால் பரபரப்பு!
அச்சச்சோ.. தீக்குளித்த நபர்.. நாடாளுமன்றம் நோக்கி ஓடியதால் பரபரப்பு!
"வேதனையா இருக்கு" அண்ணா பல்கலை. மாணவி விவகாரம்.. கொதித்தெழுந்த விஜய்!
Chennai Rain: சென்னையா, கொடைக்கானலா.!  எங்கு பார்த்தாலும் மழைச்சாரலும் பனிமூட்டமுமான காட்சிகள்.!
சென்னையா, கொடைக்கானலா.! எங்கு பார்த்தாலும் மழைச்சாரலும் பனிமூட்டமுமான காட்சிகள்.!
விரைவில் கைதாகும் அதிஷி? பாஜகவின் மாஸ்டர் பிளான்.. கொளுத்திப்போட்ட கெஜ்ரிவால்!
விரைவில் கைதாகும் அதிஷி? பாஜகவின் மாஸ்டர் பிளான்.. கொளுத்திப்போட்ட கெஜ்ரிவால்!
Kazakhstan Plane Crash: அய்யய்யோ! தரையில் விழுந்து நொறுங்கிய விமானம் - 72 பேரின் கதி என்ன?
Kazakhstan Plane Crash: அய்யய்யோ! தரையில் விழுந்து நொறுங்கிய விமானம் - 72 பேரின் கதி என்ன?
மகளுக்காக என்ன வேணாலும் பண்ணுவார்! சாண்டா தாத்தாவாக மாறிய தோனி.. முத்தமிட்ட ஸிவா! 
மகளுக்காக என்ன வேணாலும் பண்ணுவார்! சாண்டா தாத்தாவாக மாறிய தோனி.. முத்தமிட்ட ஸிவா! 
’’அடியாள் சிவசங்கர்; இனவெறி திமுக’’ வன்னியர்களுக்கு எதிராக வன்மம்; பாமக கடும் தாக்கு- என்ன காரணம்?
’’அடியாள் சிவசங்கர்; இனவெறி திமுக’’ வன்னியர்களுக்கு எதிராக வன்மம்; பாமக கடும் தாக்கு- என்ன காரணம்?
Embed widget