மேலும் அறிய

கரூர் : "மாவட்ட ஆட்சித் தலைவர் என்னும் நான்" : பின்தங்கிய கிராமத்தைச் சேர்ந்த மாணவியின் லட்சியம்..!

எங்க ஊர்ல இருந்து கரூருக்குச் சென்று வருவதையே சாதனையாக நினைக்கும் கிராமத்தைச் சேர்ந்தவள் நான். ஒருநாள் என் பெயரை இந்த நாடே உச்சரிக்கும் நிலை வரும்.

கரூர் மாவட்டம், கடவூர் ஒன்றியத்தில் உள்ள வ.வேப்பங்குடி பகுதியைச் சேர்ந்தவர் கனகவள்ளி. இவர், அருகில் உள்ள காணியாளம்பட்டியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 11-ஆம் வகுப்புப் படித்து வருகிறார். படிப்பில் சிறப்பாக விளங்கும் மாணவியான இவர் கட்டுரை, கவிதை, பேச்சு என்று தனித்திறமை சார்ந்த விஷயங்களிலும் சிறந்து விளங்குகிறார். கொரோனா ஊரடங்குக் காலத்தில் பல்வேறு அமைப்புகள் ஆன்லைன் மூலம் நடத்திய 5 போட்டிகளில் கலந்துகொண்டு, பரிசுகள் வாங்கியிருக்கிறார். 


கரூர் :

இதுகுறித்து மாணவி கனகவல்லி கூறியபோது :- 

எங்க பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நட்டு, இயற்கை சார்ந்த ஆர்வத்தையும் ஏற்படுத்திக்கொண்டுள்ளேன். எனது எல்லா முயற்சிகளையும் பள்ளியின் தலைமை ஆசிரியரும், ஆசிரியர்களும் தட்டிக்கொடுத்து ஊக்கப்படுத்துறாங்க. நான் "வருங்காலத்தில் ஆட்சியராக வர வேண்டும்" என்ற லட்சியத்தை மனதில் விதையா விதைத்திருக்கேன். அதுக்கு, இதுபோன்ற எனது தனித்திறமைகளுக்கு கிடைக்கும் அங்கீகாரங்கள் உரமாக அமையும். எங்க ஊர்ல இருந்து கரூருக்குச் சென்று வருவதையே சாதனையாக நினைக்கும் மக்கள் நிறைந்த பின்தங்கிய கிராமத்தைச் சேர்ந்தவள் நான். ஒருநாள் என் பெயரை இந்த நாடே உச்சரிக்கும் நிலை வரும். அப்போது, எனது பின் தங்கிய ஊரும் முன்னே தெரியும் என்றார்.


கரூர் :

எதையாவது பண்ணி, இந்தச் சமூகத்துல முன்னுக்கு வந்துர முடியாதாங்கிற ஏக்கத்துல எல்லா விசயத்தையும் கத்துக்கிட்டு இருக்கிறேன். அப்படித்தான், பள்ளி அளவுல நடக்கும் பேச்சு, கட்டுரை, ஓவியப் போட்டிகளில் கலந்துக்குவேன். பரிசுகள் வாங்குவேன். இந்த நிலையிலதான், கொரோனா வந்து பள்ளிக்கு விடுமுறை விட்டாங்க. தொடர் ஊரடங்கு போட்டாங்க. இந்தச் சூழலில், பல்வேறு அமைப்புகள் ஆன்லைன் மூலமாக நடத்திய போட்டிகள்ல ஆர்வமா கலந்துகிட்டேன். என்கிட்ட செல் இல்லை. ஆனா, எங்க ஊரைச் சேர்ந்த அண்ணன்கள் சிலர் என்னோட ஆர்வத்தைப் பார்த்து, போட்டிகள் குறித்த அறிவிப்பை சொல்வாங்க. அவங்க ஆண்ட்ராய்டு மொபைலைக் கொடுத்து, போட்டிகள்ல கலந்துக்க உதவினாங்க. 


கரூர் :

எங்கப்பா கூலி வேலை பார்க்கிறார். எங்கம்மா ஒரு மாற்றுத்திறனாளி. எங்க கிராமம் ரொம்பவும் பின்தங்கிய கிராமம். சாப்பாட்டுக்கே பலநேரம் கஷ்டப்படுற சூழல். அதனால், நல்லா படிச்சு நல்ல நிலைமைக்கு வரணும்னு தொடர்ந்து நல்லா படிச்சுக்கிட்டு வர்றேன். எங்க குடும்பத்துல அதிகம் படிச்சது நான்தான். இன்னும் கல்லூரி படிப்பு, மேல் படிப்பு படிச்சு நல்ல நிலைமைக்கு வரணும்னு தினமும் மனதில் வைராக்கியத்தை வளர்த்துக்கிட்டு வர்றேன். வெறும் படிப்போட நிக்காம விளையாட்டு, தனித்திறமை போட்டிகள்னு பல விஷயங்களிலும் ஈடுபாடு எனக்கு.


கரூர் :

சமீபத்தில், ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி கரூர் மாவட்டம், கடவூர் ஒன்றியத்துக்குட்பட்ட அரசு மேல்நிலைப் பள்ளி காணியாளம்பட்டி குறுவள மையத்துக்கு உட்பட்ட பள்ளிகளுக்கிடையேயான 9 - 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நடந்த கட்டுரைப் போட்டியில், கனகவள்ளி முதல் பரிசு பெற்றார். அவருக்கு 30,000 மதிப்புள்ள டேப்லெட் பரிசாக வழங்கப்பட்டுள்ளது.


கரூர் :

பசுமைக்குடி என்ற இயற்கை ஆர்வலர்கள் நிறைந்த அமைப்பு, கொரோனாவுக்கு எதிராக, பாசிட்டிவிட்டியை அதிகரிக்கவைக்கும் வகையில, மாநில அளவிலான கட்டுரைப் போட்டியை ஆன்லைன் மூலமாக நடத்தினாங்க. அதில் கலந்துகொண்ட எனக்கு முதல் பரிசு கிடைத்தது. கரூர் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில், மாவட்ட கல்வி அலுவலர் கையால பரிசு வாங்கினேன். அதேபோல், கரூர் திருக்குறள் பேரவை நடத்திய மாவட்ட அளவிலான கட்டுரைப் போட்டியில கலந்துகொண்டு பரிசு வாங்கினேன். வெள்ளி நாணயமும், சான்றிதழும் கொடுத்தாங்க. இறுதியாக, கும்பகோணம் நிமிர்வு மாற்று ஊடக மையம் நடத்திய அம்பேத்கர் குறித்த கவிதைப் போட்டியில கலந்துகொண்ட எனக்கு, அம்பேத்கர் விருது கொடுத்தாங்க. 


கரூர் :

கரூர் மாவட்டத்தில் பின்தங்கிய பகுதியை சேர்ந்த அரசு பள்ளி மாணவியின் லட்சியக் கனவை பல்வேறு சமூக அமைப்பினர் பாராட்டையும், வாழ்த்தையும் தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது. விரைவில் "மாவட்ட ஆட்சித் தலைவர் கனகவள்ளி என்னும் நான்" என்ற பெயரை உச்சரிக்க வேண்டும் என்பதே அனைவரின் ஆசையாகவும் உள்ளது

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Kerala Election Results: கேரளாவில் காலூன்றிய பாஜக.. திருவனந்தபுரம் மாநகராட்சியை கைப்பற்றி சாதனை!
Kerala Election Results: கேரளாவில் காலூன்றிய பாஜக.. திருவனந்தபுரம் மாநகராட்சியை கைப்பற்றி சாதனை!
ஜெயலலிதாவின் வலதுகரம் டிடிவி தினகரன்.! அதிமுகவினரை ஒரே டுவிட்டில் வெறுப்பேற்றிய அண்ணாமலை
ஜெயலலிதாவின் வலதுகரம் டிடிவி தினகரன்.! அதிமுகவினரை ஒரே டுவிட்டில் வெறுப்பேற்றிய அண்ணாமலை
Rajini Vijay: ரஜினிக்கு வாழ்த்து தெரிவிக்காத விஜய்.. என்ன காரணம்? அடித்துக் கொள்ளும் ரசிகர்கள்!
Rajini Vijay: ரஜினிக்கு வாழ்த்து தெரிவிக்காத விஜய்.. என்ன காரணம்? அடித்துக் கொள்ளும் ரசிகர்கள்!
Savukku shankar: வீட்டிற்குள் ஒளிந்து கொண்ட சவுக்கு சங்கர்.! கடப்பாரையோடு உள்ளே செல்லும் போலீஸ்- வெளியான ஷாக் வீடியோ
வீட்டிற்குள் ஒளிந்து கொண்ட சவுக்கு சங்கர்.! கடப்பாரையோடு உள்ளே செல்லும் போலீஸ்- வெளியான ஷாக் வீடியோ
ABP Premium

வீடியோ

Kaliyammal Joins TVK | காளியம்மாளுக்கு மகளிரணி? டிக் அடித்த விஜய்! குஷியில் தவெகவினர்! | NTK | Vijay
Minister CV Ganesan Controversial Speech ”ஏய்யா எதுக்கு இப்ப கத்துற?”அமைச்சர் கணேசன் சர்ச்சை பேச்சு
Magalir Urimai Thogai | ''மகளிருக்கு இன்னொரு CHANCE..!''கலைஞர் மகளிர் உரிமைத்தொகை
Rajinikanth 75th Birthday Celebration|’’ரஜினி என் குலசாமி!’’வீடு முழுக்க RAJINISMவியக்க வைத்த ரசிகர்
Tindivanam Bus Accident - டயர் வெடித்து விபத்து ஒருவர் பலி, 15 பேர் படுகாயம்; உதவிய விழுப்புரம் கலெக்டர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Kerala Election Results: கேரளாவில் காலூன்றிய பாஜக.. திருவனந்தபுரம் மாநகராட்சியை கைப்பற்றி சாதனை!
Kerala Election Results: கேரளாவில் காலூன்றிய பாஜக.. திருவனந்தபுரம் மாநகராட்சியை கைப்பற்றி சாதனை!
ஜெயலலிதாவின் வலதுகரம் டிடிவி தினகரன்.! அதிமுகவினரை ஒரே டுவிட்டில் வெறுப்பேற்றிய அண்ணாமலை
ஜெயலலிதாவின் வலதுகரம் டிடிவி தினகரன்.! அதிமுகவினரை ஒரே டுவிட்டில் வெறுப்பேற்றிய அண்ணாமலை
Rajini Vijay: ரஜினிக்கு வாழ்த்து தெரிவிக்காத விஜய்.. என்ன காரணம்? அடித்துக் கொள்ளும் ரசிகர்கள்!
Rajini Vijay: ரஜினிக்கு வாழ்த்து தெரிவிக்காத விஜய்.. என்ன காரணம்? அடித்துக் கொள்ளும் ரசிகர்கள்!
Savukku shankar: வீட்டிற்குள் ஒளிந்து கொண்ட சவுக்கு சங்கர்.! கடப்பாரையோடு உள்ளே செல்லும் போலீஸ்- வெளியான ஷாக் வீடியோ
வீட்டிற்குள் ஒளிந்து கொண்ட சவுக்கு சங்கர்.! கடப்பாரையோடு உள்ளே செல்லும் போலீஸ்- வெளியான ஷாக் வீடியோ
வட மாநிலங்களில் இருந்து பெண்கள் ஏன் தமிழகத்திற்கு ஓடோடி வருகிறார்கள்..? அமைச்சர் கோவி.செழியன் விளக்கம்..
வட மாநிலங்களில் இருந்து பெண்கள் ஏன் தமிழகத்திற்கு ஓடோடி வருகிறார்கள்..? அமைச்சர் கோவி.செழியன் விளக்கம்..
’’தெருவுக்கு வந்து போராடும் அரசு ஊழியர்கள்’’ முனிவர் - விஷப்பாம்பு கதை சொன்ன அன்புமணி!
’’தெருவுக்கு வந்து போராடும் அரசு ஊழியர்கள்’’ முனிவர் - விஷப்பாம்பு கதை சொன்ன அன்புமணி!
Student Scholarship: மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை.! வெளியான சூப்பர் வாய்ப்பு- விண்ணப்பிக்க கடைசி தேதி அறிவிப்பு
மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை.! வெளியான சூப்பர் வாய்ப்பு- விண்ணப்பிக்க கடைசி தேதி அறிவிப்பு
சர்க்கரை நோயாளிகளும் ரத்த தானம் செய்யலாம்.. ஆனா இவங்களுக்கெல்லாம் நோ- மருத்துவர் ஃபரூக் அப்துல்லா விளக்கம்
சர்க்கரை நோயாளிகளும் ரத்த தானம் செய்யலாம்.. ஆனா இவங்களுக்கெல்லாம் நோ- மருத்துவர் ஃபரூக் அப்துல்லா விளக்கம்
Embed widget