மேலும் அறிய

கள்ளக்காதலால் மனைவிக்கு மனக்கொடுமையை ஏற்படுத்தும் கணவனுக்கு சிறைத்தண்டனை - சென்னை உயர்நீதிமன்றம்

கள்ளக்காதலால் குடும்பத்தில் கடுமையான சண்டை ஏற்பட்டு மனைவிக்கு மனக்கொடுமையை ஏற்படுத்தினால், கணவன் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

2011ம் ஆண்டு கள்ளக்காதல் வழக்கின் விசாரணை ஒன்றில் கணவனுக்கு திருவண்ணாமலை நீதிமன்றம் 2 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்திருந்தது. இந்த வழக்கின் மேல்முறையீடு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை நீதிபதி பரதசக்கரவர்த்தி விசாரித்தார்.

அப்போது, வழக்கின் விசாரணையை கேட்ட நீதிபதி திருமணத்திற்கு மீறிய உறவு ( கள்ளக்காதல்) திருமணமான தம்பதியினரிடையே கடுமையான குடும்பச் சண்டையை ஏற்படுத்தினால், இந்திய தண்டனைச் சட்டம் ஐ.பி.சி. 498ன் ஏ பிரிவின்கீழ் மனைவிக்கு மனக்கொடுமையை ஏற்படுத்திய குற்றத்திற்காக அவர் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்று நீதிபதி தெரிவித்தார்.


கள்ளக்காதலால் மனைவிக்கு மனக்கொடுமையை ஏற்படுத்தும் கணவனுக்கு சிறைத்தண்டனை - சென்னை உயர்நீதிமன்றம்

மேலும், நீதிபதி தனது தீர்ப்பில் ஒட்டுமொத்தமாக அனைத்து காரணிகளையும் கருத்தில் கொண்டு, கடுமையான மன அதிர்ச்சியை ஏற்படுத்திய மற்றும் மனைவியின் மன ஆரோக்கியத்தை பாதித்த திருமணத்திற்கு புறம்பான உறவின் குற்றம் சாட்டப்பட்டவரின் நடவடிக்கை ஐ.பி.சி. 498 ஏ பிரிவின் கீழ் நிச்சயமாக அவருககு கொடுமையாக இருக்கும் என நம்புவதாக நீதிபதி உத்தரவிட்டிருந்தார். இருப்பினும், இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள ஜெரோன் பாண்டி என்ற நக்கீரனுக்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனையை 6 மாதமாக குறைத்தார்.  

கடந்த 2016ம் ஆண்டு உச்சநீதிமன்றத்தில் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த கே.வி.பிரகாஷ்பாபு என்பவர் தொடர்புடைய வழக்கில் தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், திருமணத்திற்கு புறம்பான உறவு மனைவியை மனக்கொடுமைக்கு  ஆளாக்குவதாக அமையாது என்று கூறி உத்தரவிட்டிருந்தார். மேலும், தீர்ப்பை முழுமையாக படிக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார். மேலும், அந்த தீர்ப்பில் ஒருவர் கூடுதல் தாம்பத்ய உறவில் ஈடுபட்டிருப்பதாலும், மனைவியின் மனதில் சில சந்தேகங்கள் இருப்பதாலும், பிரிவின் கீழ் தற்கொலைக்குத் தூண்டுதல் என்ற குற்றத்தை  ஈர்ப்பதை மனக்கொடுமையாக கருத முடியாது என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.


கள்ளக்காதலால் மனைவிக்கு மனக்கொடுமையை ஏற்படுத்தும் கணவனுக்கு சிறைத்தண்டனை - சென்னை உயர்நீதிமன்றம்

மேலும், உச்சநீதிமன்றத்தின் அந்த தீர்ப்பில் மனக்கொடுமை பற்றிய கருத்து, சம்பந்தப்பட்டவர்களின் சமூக அடுக்கு, அவர்களின் தனிப்பட்ட கருத்து, அவர்களின் சகிப்புத்தன்மை மற்றும் உணர்திறன் அளவைப் பொறுத்தது என்று கூறியிருந்தது. அதை பொதுமைப்படுத்துவது கடினம் என்றும் கூறியிருந்தது.

மேலும் படிக்க : TN Urban Local body elections 2022: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிட்ட அதிமுக !

மேலும் படிக்க : மேட்டூர் அணையின் நீர்வரத்து 846 கன அடியில் இருந்து 895 கன அடியாக அதிகரிப்பு.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடிபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IND vs SA Final: கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்:  காரணம் என்ன தெரியுமா?
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்: காரணம் என்ன தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Bussy Anand Angry |கறார் காட்டிய புஸ்ஸி ஆனந்த்..முகம்சுழித்த தவெக நிர்வாகிகள்!Nellai Drunkard | ’’கார்ல கள்ளச்சாராயம் இருக்கு’’  வடிவேலு பாணியில் ரகளை!  மதுபிரியர் அட்ராசிட்டிAnnamalai on Sengol | ”செங்கோலை எடுக்கணுமா? திமுக என்ன சொல்லப்போகுது?”I.N.D.I.A-ஐ விளாசும் பாஜகவினர்Vijay Banner | சிறுவன் மீது சரிந்த விஜய் பேனர் பரபரப்பு CCTV காட்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND vs SA Final: கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்:  காரணம் என்ன தெரியுமா?
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்: காரணம் என்ன தெரியுமா?
Breaking News LIVE: ஹேமந்த் சோரனுக்கு ஜாமீன் - ராகுல் வரவேற்பு
Breaking News LIVE: ஹேமந்த் சோரனுக்கு ஜாமீன் - ராகுல் வரவேற்பு
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
வரலாற்று சாதனை படைத்த இந்திய வீராங்கனைகள்.. அசத்திய ஸ்மிரிதி மந்தனா - ஷபாலி வர்மா!
வரலாற்று சாதனை படைத்த இந்திய வீராங்கனைகள்.. அசத்திய ஸ்மிரிதி மந்தனா - ஷபாலி வர்மா!
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
Embed widget