மேலும் அறிய

இந்துக்களும் இப்தார் நோன்பும் - தொண்டியில் இதயங்களை இணைத்த இப்தார் நோன்பு நிகழ்ச்சி

இஸ்லாமியர்களின் நோன்பு திறக்கும் இஃப்தார் நிகழ்ச்சியை இந்து மக்கள் சார்பாக நடத்தப்பட்டு ஒற்றுமையுடன் கொண்டாடியது இப்பகுதியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது

ரமலான் மாதம் முழுவதும் நோன்பு நோற்பது இஸ்லாமியர்களின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்றாகும். இந்த ரமலான் மாதத்தில்தான் மக்களுக்கு நேர்வழி காட்டக்கூடிய திருக்குர்ஆன் அருளப்பட்டது. இதனை யொட்டி இஸ்லாமியர்கள் தங்களுடைய ஐம்பெரும் கடமைகளில் மூன்றாவது கடமையாக, ஆண்டுதோறும் ரமலான் நோன்பைக் கடைபிடித்து வருகின்றனர். இந்த ஆண்டுக்கான பிறை தமிழ்நாட்டில் தென்படாத நிலையில், ஏப்ரல் 3 ஆம்  முதல் நோன்பு கடைபிடிக்கப்படும் என தமிழக அரசின் தலைமை காஜி, சலாவுதீன் முகமது அயூப் ஏற்கெனவே தெரிவித்திருந்தார்.


இந்துக்களும் இப்தார் நோன்பும் - தொண்டியில் இதயங்களை இணைத்த இப்தார் நோன்பு நிகழ்ச்சி

இந்நிலையில் பிறை தெரிந்தது முதல் 30 நாட்களுக்கு நோன்பு நோற்று அதன் முடிவில் ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்த 30 நாட்களும் அதிகாலை 4.15 மணி முதல் மாலை 6 மணி வரை உணவு, தண்ணீர் உட்கொள்ளாமல் நோன்பிருந்து மாலையில், தொழுகையை முடித்து கொண்டு உணவை எடுத்துக் கொடுத்துக் கொள்வர்கள். நேற்று  25 ஆம் நாள் நோன்பு கடை பிடிக்கப்பட்டது. இந்து, முஸ்லிம் என்றாலே ஏதோ பகையாளிகள் போல சில ஊடகங்கள் உட்பட, சில அரசியல் கட்சிகளும் தொடர்ந்து பொய்யாகப் பரப்புரை செய்து வருகிறது. அதிலும் குறிப்பாக தற்போது தமிழகத்தில் சிறு பிரச்சினை என்றால் கூட அதற்கு மதச்சாயம் பூசி  மதம் பிடித்தவர்கள் சித்தரிக்கத் தொடங்கி விடுகிறார்கள். ஆனால்,  தொண்டியில் இந்து-முஸ்லிம் ஒற்றுமை  என்றால் இதுதான் என நெற்றிப் பொட்டில்  அடித்தார் போல், இந்து-முஸ்லிம்- கிறிஸ்தவர் என மும்மதத்தினரும் அருகருகே ஒன்றாக அமர்ந்து, இந்து தர்ம பரிபாலன சங்கத்தினர் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில்  இப்தார் நோன்பு திறந்திருக்கிறார்கள்.


இந்துக்களும் இப்தார் நோன்பும் - தொண்டியில் இதயங்களை இணைத்த இப்தார் நோன்பு நிகழ்ச்சி

கிராமப்புறங்களில் ஒருவரை கொஞ்சமும் தொடர்பில்லாத விசயத்தில் அவரை தொடர்பு படுத்தி பேசினால், எனக்கு அதில்  கொஞ்சங்கூட சம்பந்தமில்லை என்பதை, சிலேடையாக  'அமாவாசைக்கும் அப்துல் காதருக்கும் என்ன சம்மந்தம்' என்று இப்பவும் சொல்வதுண்டு.  ஆனால் இங்கு இப்தார் நோன்புக்கும்  இந்துக்களுக்கும் தொடர்பு உண்டு என்று நிரூபித்துள்ளனர், தொண்டி இந்து தர்ம பரிபாலன சங்கத்தினர். இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் தொண்டியில் இந்து தர்ம பரிபாலன சபை சார்பில் இதயங்களை இணைக்கும் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சி அப்பகுதி அனைத்து சமூக மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

இந்துக்களும் இப்தார் நோன்பும் - தொண்டியில் இதயங்களை இணைத்த இப்தார் நோன்பு நிகழ்ச்சி

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகாவில் தொண்டி அதிக அளவில் இஸ்லாமியர்கள் வாழ்ந்து வரும் பகுதியாக இருக்கிறது. தற்போது இஸ்லாமியர்களின் புனித ரமலான் மாதத்தில்  முஸ்லிம்களின் நோன்பு காலம் என்பதால் மாலை நோன்பு திறக்கும் இஃப்தார் நிகழ்ச்சி நடந்தது. இதில்,   இந்து, கிறிஸ்தவ மற்றும் இஸ்லாமியர் உள்ளிட்ட  அனைத்து மதத்தை சார்ந்த  மக்களும் கலந்துகொள்ள ஏதுவாக தொண்டி இந்து தரும பரிபாலன சபை இன்று ஏற்பாடுகள் செய்திருந்தது. இதில், நோன்பு கஞ்சி,மற்றும் பேரீச்சம்பழம் உள்ளிட்ட பண்டங்களை உண்டு  நோன்பை திறந்துள்ளனர்.

நிகழ்வில் இஸ்லாமிய மக்களுடன் பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள், காவல்துறை சார்ந்த அலுவலர்கள் அனைத்து சமூக மக்களும் கலந்து கொண்டனர். இஸ்லாமியர்களின் நோன்பு திறக்கும் இஃப்தார் நிகழ்ச்சியை இந்து மக்கள் சார்பாக நடத்தப்பட்டு  ஒற்றுமையுடன் கொண்டாடியது இப்பகுதியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. ஒன்றாக அமர்ந்து இப்தார் நோன்பு திறந்து ஒற்றுமையை காட்டியதைப் போல, அந்தந்த மதத்தின்   வழிபாட்டு உரிமையில் யாரும் அடுத்தவர் மனங்களை காயப்படுத்தாமல் கடந்து சென்றால், இந்தியாவில் நாள்தோறும் பண்டிகைதான்..!

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Kanimozhi Slams BJP: ''திருப்பரங்குன்றத்தை மற்றொரு அயோத்தியாவாக மாற்ற நினைக்கிறார்கள்''; பாஜகவை சாடிய கனிமொழி
''திருப்பரங்குன்றத்தை மற்றொரு அயோத்தியாவாக மாற்ற நினைக்கிறார்கள்''; பாஜகவை சாடிய கனிமொழி
Pookie முதல் Cease Fire வரை.. 2025 இல் 2K கிட்ஸ் கூகுளில் தேடிய அதிக அர்த்தங்கள் எது தெரியுமா?
Pookie முதல் Cease Fire வரை.. 2025 இல் 2K கிட்ஸ் கூகுளில் தேடிய அதிக அர்த்தங்கள் எது தெரியுமா?
SIR: திரும்ப வராத SIR படிவம்.. தமிழ்நாட்டில் 85 லட்சம் வாக்காளர்கள் நீக்கமா?
SIR: திரும்ப வராத SIR படிவம்.. தமிழ்நாட்டில் 85 லட்சம் வாக்காளர்கள் நீக்கமா?
DMK - Congress: மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் - என்னென்ன?
DMK - Congress: மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் - என்னென்ன?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Madurai Loganathan IPS Profile | ‘’WE ARE NOT ALLOWING’’ஒற்றை ஆளாக சம்பவம்! யார் இந்த லோகநாதன் IPS?
தமிழ்நாடு வரும் அமித்ஷா திருப்பரங்குன்றம் விவகாரம் கையிலெடுக்கும் பாஜக | Amitsha in Tamilnadu
ஆதவ் Vs ஜோஸ் சார்லஸ் கட்சி தொடங்கும் முன்னே சரிவு விஜய்யுடன் கூட்டணிக்கு END CARD | Aadhav Vs Joes Charles
Thiruparankundram Dheepam|”இன்னும் சில நிமிடங்களில் தீபம்”144 ரத்து போய் பாதுகாப்பு குடுங்க!-நீதிபதி
எகிறும் டாலர்.. சரியும் ரூபாய்.. என்ன பண்ண போறீங்க நிர்மலா? | Modi | Rupees VS Dollar

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Kanimozhi Slams BJP: ''திருப்பரங்குன்றத்தை மற்றொரு அயோத்தியாவாக மாற்ற நினைக்கிறார்கள்''; பாஜகவை சாடிய கனிமொழி
''திருப்பரங்குன்றத்தை மற்றொரு அயோத்தியாவாக மாற்ற நினைக்கிறார்கள்''; பாஜகவை சாடிய கனிமொழி
Pookie முதல் Cease Fire வரை.. 2025 இல் 2K கிட்ஸ் கூகுளில் தேடிய அதிக அர்த்தங்கள் எது தெரியுமா?
Pookie முதல் Cease Fire வரை.. 2025 இல் 2K கிட்ஸ் கூகுளில் தேடிய அதிக அர்த்தங்கள் எது தெரியுமா?
SIR: திரும்ப வராத SIR படிவம்.. தமிழ்நாட்டில் 85 லட்சம் வாக்காளர்கள் நீக்கமா?
SIR: திரும்ப வராத SIR படிவம்.. தமிழ்நாட்டில் 85 லட்சம் வாக்காளர்கள் நீக்கமா?
DMK - Congress: மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் - என்னென்ன?
DMK - Congress: மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் - என்னென்ன?
திருப்பரங்குன்றம் போராட்டம்: பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், எச்.ராஜா உட்பட 113 பேர் மீது வழக்கு!
திருப்பரங்குன்றம் போராட்டம்: பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், எச்.ராஜா உட்பட 113 பேர் மீது வழக்கு!
1 லட்சம் பெண்களுக்கு ரூ.10 லட்சம் கடன் - தமிழக அரசு அதிரடி !! விண்ணப்பிக்க குவிந்த பெண்கள்
1 லட்சம் பெண்களுக்கு ரூ.10 லட்சம் கடன் - தமிழக அரசு அதிரடி !! விண்ணப்பிக்க குவிந்த பெண்கள்
Magalir Urimai Thogai: 12-ந் தேதி முதல் விடுபட்ட பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை! இறுதிக்கட்ட பணியில் அரசு அதிகாரிகள் தீவிரம்!
Magalir Urimai Thogai: 12-ந் தேதி முதல் விடுபட்ட பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை! இறுதிக்கட்ட பணியில் அரசு அதிகாரிகள் தீவிரம்!
Jayalalitha: ஜெ... சும்மா பேர கேட்டாலே அதிருதுல்ல.. இரும்பு பெண்மணியின் பிளாஷ்பேக் இதோ
ஜெ... சும்மா பேர கேட்டாலே அதிருதுல்ல.. இரும்பு பெண்மணியின் பிளாஷ்பேக் இதோ
Embed widget