மேலும் அறிய

TN rains: மழை மாவட்டமான மயிலாடுதுறை...மிதக்கும் சீர்காழி.. ஒரு நாளில் 43 செ.மீ.மழை பதிவு!

வரலாறு காணாத மழையால் மழை வெள்ளத்தில் மிதக்கும் சீர்காழி. 24 மணி நேரத்தில் 43 சென்டிமீட்டர் மழை பதிவாகியதால், பல பகுதிகள் வெள்ளக்காடாகியுள்ளன.

கடந்த 3 தினங்களாக தமிழகத்தின் பல பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் மழையின் கோரத்தாண்டவம், நேற்று காலை முதல், வடமாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் கொடித்தீர்த்து வருகிறது. இதில், அண்மைக்கால வரலாறுகாணாத அளவில் சீர்காழியில் மட்டும், 24 மணி நேரத்தில் 43 சென்டிமீட்டர் மழை பெய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

வடகிழக்கு பருவமழைக்காலத்தில், வங்கக்கடலில் சில தினங்களுக்கு முன் உருவான முதல் குறைந்த காற்றழுத்த நிலையானது வலுப்பெற்று, பகுதியாக மாறி, பிறகு தீவிர காற்றழுத்த பகுதியாக மாறி, தற்போது மழை கொட்டிக் கொண்டிருக்கிறது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, செங்கல்பட்ட ஆகிய மாவட்டங்களில் பெருமழையாக பெய்துக் கொண்டிருந்த இந்த காற்றழுத்தம், நேற்று முன்தினம் வலுவடைந்து சற்று நகர்ந்து, கடலூர், டெல்டா மாவட்டங்களை நேற்று காலைமுதல் மையம் கொண்டிருந்தது. 


TN rains: மழை மாவட்டமான மயிலாடுதுறை...மிதக்கும் சீர்காழி.. ஒரு நாளில் 43 செ.மீ.மழை பதிவு!

இதன் விளைவாக டெல்டா மாவட்டங்களில் பரவலாக கன மழை முதல் மிக கனமழை வரை பெய்து வந்தது. இதிலும், மயிலாடுதுறை மாவட்டத்தைப் பொறுத்தமட்டில், தற்போது மழை மாவட்டம் என்றழைக்கலாம் என்றளவில் மழை பெய்து தீர்த்து வருகிறது. மயிலாடுதுறையின் அனைத்து பகுதிகளிலும் பரவலாக மிக கனமழை பெய்தது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. செம்பனார்கோவிலில் 20 செ.மீ, கொள்ளிடத்தில் 19 செ.மீ, தரங்கம்பாடியில் 18செ.மீ., மணல்மேட்டில் 11 செ.மீ. மயிலாடுதுறையில் 16செ.மீ மழையும் பதிவானது. ஆனால், மாவட்டத்தில் சீர்காழியில் மட்டும் அண்மைக்காலத்தில் இதுவரை பதிவாகாத அளவுக்கு, நேற்று காலை 8 மணியிலிருந்து இரவு 10 மணி வரை மட்டும் வெறும் 14 மணி நேரத்தில் 30 செ.மீ. மழை பதிவானது. கடந்த 24 மணி நேர அளவில் பார்க்கும்போது, 43 செ.மீ மழை சீர்காழியில் மட்டும் பெய்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

சீர்காழியின் பல பகுதிகள் தற்போது வெள்ளநீரில் மிதக்கின்றன என்றால் மிகையில்லை. புதிதாக உருவான பல பகுதிகள் வெள்ளக்காடாக காட்சி அளிக்கின்றன. பல இடங்கள் ஏரிகளாகவும், அவற்றில் இருக்கும் வீடுகள், மிதக்கும் வீடுகள் போலவும் காட்சியளிக்கின்றன. மிக கனமழை எச்சரிக்கை விடப்பட்டதைத்தொடர்ந்து, பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியது.

வரலாறு காணாத மழை பதிவாகியதால், அரசு இயந்திரம் முதலில் திணறினாலும், தற்போது முழுவீச்சில் நிவாரணப் பணிகள் மற்றும் வெள்ளநீரை வெளியேற்றும் பணிகளிலும் ஈடுபட்டுள்ளது. ரெட் அலர்ட் எனும் மிக கனமழை பெய்யும் என சிவப்பு நிற எச்சரிக்கை விடப்பட்டதால், முன்னெச்சரிக்கை பணிகளை மாவட்ட ஆட்சியர் லலிதா உத்தரவில் பேரில் எடுக்கப்பட்டிருந்ததால், பெரும் அசம்பாவிதங்கள் தவிர்க்கப்பட்டன. இருப்பினும் வெள்ளத்தில் பலபகுதிகள் தவிப்பதால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதைக் காணமுடிகிறது. 

மாவட்டம் முழுவதும் பல வீடுகளில் தண்ணீர் புகுந்தும், சம்பா பயிர்கள் அனைத்தும் நீரில் மூழ்கியதால் விவசாயிகளும், பொதுமக்களும் வேதனை அடைந்துள்ளனர். பல இடங்களில் மரங்கள் முறிந்தும், மின் கம்பங்கள் சாய்ந்துள்ளதால் போக்குவரத்து மற்றும் மின்சாரம் தடைபட்டுள்ளது. 

மேலும் மழை பெய்யும் என்பதாலும் பல இடங்களில் வெள்ளநீர் தேங்கியிருப்பதாலும், பொதுமக்கள் பாதுகாப்பாக வீட்டிலேயே இருக்க வேண்டும் என்றும் யாரும் நீர்நிலைகளுக்கு குளிக்க செல்லக் கூடாது,  மின் கம்பங்களை தொடக்கூடாது, கொதிக்க வைத்த குடிநீரை அருந்த வேண்டும் என மாவட்ட ஆட்சியர் இரா.லலிதா பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.


TN rains: மழை மாவட்டமான மயிலாடுதுறை...மிதக்கும் சீர்காழி.. ஒரு நாளில் 43 செ.மீ.மழை பதிவு!

மயிலாடுதுறை மாவட்டத்தில், கடந்த அக்டோபர் மாதத்திலேயே குறிப்பிடத்தகுந்த அளவுக்கு மழை பதிவாகி இருந்த நிலையில், கடந்த ஒரு மாதத்தில் பெய்த மழையின் அளவை, கடந்த மூன்றுதினங்களில் மட்டுமே கிட்டத்தட்ட பெய்திருப்பதால், மயிலாடுதுறை மாவட்டத்தை, தற்போதைக்கு மழை மாவட்டம் என்று அழைத்தாலும் தவறில்லை. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அவசர கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளதால், பொதுமக்கள் தங்கள் குறைகளை 04364-222588 – 9487544588 என்ற எண்ணிலும் 8148917588 என்ற வாட்ஸ்அப் எண்ணிலும் புகார் தெரிவிக்கலாம் என மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் லலிதா தெரிவித்துள்ளார்.


TN rains: மழை மாவட்டமான மயிலாடுதுறை...மிதக்கும் சீர்காழி.. ஒரு நாளில் 43 செ.மீ.மழை பதிவு!

மேலும் மழை தொடர்பான பல செய்திகளை காண  :

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABP நாடு செய்திகளை உடனுக்குடன் பெற

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IND vs SA Final: கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்:  காரணம் என்ன தெரியுமா?
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்: காரணம் என்ன தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Bussy Anand Angry |கறார் காட்டிய புஸ்ஸி ஆனந்த்..முகம்சுழித்த தவெக நிர்வாகிகள்!Nellai Drunkard | ’’கார்ல கள்ளச்சாராயம் இருக்கு’’  வடிவேலு பாணியில் ரகளை!  மதுபிரியர் அட்ராசிட்டிAnnamalai on Sengol | ”செங்கோலை எடுக்கணுமா? திமுக என்ன சொல்லப்போகுது?”I.N.D.I.A-ஐ விளாசும் பாஜகவினர்Vijay Banner | சிறுவன் மீது சரிந்த விஜய் பேனர் பரபரப்பு CCTV காட்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND vs SA Final: கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்:  காரணம் என்ன தெரியுமா?
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்: காரணம் என்ன தெரியுமா?
Breaking News LIVE: ஐரோப்பிய கவுன்சிலின் தலைவராக தேர்வான அன்டோனியோவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
Breaking News LIVE: ஐரோப்பிய கவுன்சிலின் தலைவராக தேர்வான அன்டோனியோவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
வரலாற்று சாதனை படைத்த இந்திய வீராங்கனைகள்.. அசத்திய ஸ்மிரிதி மந்தனா - ஷபாலி வர்மா!
வரலாற்று சாதனை படைத்த இந்திய வீராங்கனைகள்.. அசத்திய ஸ்மிரிதி மந்தனா - ஷபாலி வர்மா!
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
Embed widget