மேலும் அறிய

TN rains: மழை மாவட்டமான மயிலாடுதுறை...மிதக்கும் சீர்காழி.. ஒரு நாளில் 43 செ.மீ.மழை பதிவு!

வரலாறு காணாத மழையால் மழை வெள்ளத்தில் மிதக்கும் சீர்காழி. 24 மணி நேரத்தில் 43 சென்டிமீட்டர் மழை பதிவாகியதால், பல பகுதிகள் வெள்ளக்காடாகியுள்ளன.

கடந்த 3 தினங்களாக தமிழகத்தின் பல பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் மழையின் கோரத்தாண்டவம், நேற்று காலை முதல், வடமாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் கொடித்தீர்த்து வருகிறது. இதில், அண்மைக்கால வரலாறுகாணாத அளவில் சீர்காழியில் மட்டும், 24 மணி நேரத்தில் 43 சென்டிமீட்டர் மழை பெய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

வடகிழக்கு பருவமழைக்காலத்தில், வங்கக்கடலில் சில தினங்களுக்கு முன் உருவான முதல் குறைந்த காற்றழுத்த நிலையானது வலுப்பெற்று, பகுதியாக மாறி, பிறகு தீவிர காற்றழுத்த பகுதியாக மாறி, தற்போது மழை கொட்டிக் கொண்டிருக்கிறது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, செங்கல்பட்ட ஆகிய மாவட்டங்களில் பெருமழையாக பெய்துக் கொண்டிருந்த இந்த காற்றழுத்தம், நேற்று முன்தினம் வலுவடைந்து சற்று நகர்ந்து, கடலூர், டெல்டா மாவட்டங்களை நேற்று காலைமுதல் மையம் கொண்டிருந்தது. 


TN rains: மழை மாவட்டமான மயிலாடுதுறை...மிதக்கும் சீர்காழி.. ஒரு நாளில் 43 செ.மீ.மழை பதிவு!

இதன் விளைவாக டெல்டா மாவட்டங்களில் பரவலாக கன மழை முதல் மிக கனமழை வரை பெய்து வந்தது. இதிலும், மயிலாடுதுறை மாவட்டத்தைப் பொறுத்தமட்டில், தற்போது மழை மாவட்டம் என்றழைக்கலாம் என்றளவில் மழை பெய்து தீர்த்து வருகிறது. மயிலாடுதுறையின் அனைத்து பகுதிகளிலும் பரவலாக மிக கனமழை பெய்தது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. செம்பனார்கோவிலில் 20 செ.மீ, கொள்ளிடத்தில் 19 செ.மீ, தரங்கம்பாடியில் 18செ.மீ., மணல்மேட்டில் 11 செ.மீ. மயிலாடுதுறையில் 16செ.மீ மழையும் பதிவானது. ஆனால், மாவட்டத்தில் சீர்காழியில் மட்டும் அண்மைக்காலத்தில் இதுவரை பதிவாகாத அளவுக்கு, நேற்று காலை 8 மணியிலிருந்து இரவு 10 மணி வரை மட்டும் வெறும் 14 மணி நேரத்தில் 30 செ.மீ. மழை பதிவானது. கடந்த 24 மணி நேர அளவில் பார்க்கும்போது, 43 செ.மீ மழை சீர்காழியில் மட்டும் பெய்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

சீர்காழியின் பல பகுதிகள் தற்போது வெள்ளநீரில் மிதக்கின்றன என்றால் மிகையில்லை. புதிதாக உருவான பல பகுதிகள் வெள்ளக்காடாக காட்சி அளிக்கின்றன. பல இடங்கள் ஏரிகளாகவும், அவற்றில் இருக்கும் வீடுகள், மிதக்கும் வீடுகள் போலவும் காட்சியளிக்கின்றன. மிக கனமழை எச்சரிக்கை விடப்பட்டதைத்தொடர்ந்து, பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியது.

வரலாறு காணாத மழை பதிவாகியதால், அரசு இயந்திரம் முதலில் திணறினாலும், தற்போது முழுவீச்சில் நிவாரணப் பணிகள் மற்றும் வெள்ளநீரை வெளியேற்றும் பணிகளிலும் ஈடுபட்டுள்ளது. ரெட் அலர்ட் எனும் மிக கனமழை பெய்யும் என சிவப்பு நிற எச்சரிக்கை விடப்பட்டதால், முன்னெச்சரிக்கை பணிகளை மாவட்ட ஆட்சியர் லலிதா உத்தரவில் பேரில் எடுக்கப்பட்டிருந்ததால், பெரும் அசம்பாவிதங்கள் தவிர்க்கப்பட்டன. இருப்பினும் வெள்ளத்தில் பலபகுதிகள் தவிப்பதால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதைக் காணமுடிகிறது. 

மாவட்டம் முழுவதும் பல வீடுகளில் தண்ணீர் புகுந்தும், சம்பா பயிர்கள் அனைத்தும் நீரில் மூழ்கியதால் விவசாயிகளும், பொதுமக்களும் வேதனை அடைந்துள்ளனர். பல இடங்களில் மரங்கள் முறிந்தும், மின் கம்பங்கள் சாய்ந்துள்ளதால் போக்குவரத்து மற்றும் மின்சாரம் தடைபட்டுள்ளது. 

மேலும் மழை பெய்யும் என்பதாலும் பல இடங்களில் வெள்ளநீர் தேங்கியிருப்பதாலும், பொதுமக்கள் பாதுகாப்பாக வீட்டிலேயே இருக்க வேண்டும் என்றும் யாரும் நீர்நிலைகளுக்கு குளிக்க செல்லக் கூடாது,  மின் கம்பங்களை தொடக்கூடாது, கொதிக்க வைத்த குடிநீரை அருந்த வேண்டும் என மாவட்ட ஆட்சியர் இரா.லலிதா பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.


TN rains: மழை மாவட்டமான மயிலாடுதுறை...மிதக்கும் சீர்காழி.. ஒரு நாளில் 43 செ.மீ.மழை பதிவு!

மயிலாடுதுறை மாவட்டத்தில், கடந்த அக்டோபர் மாதத்திலேயே குறிப்பிடத்தகுந்த அளவுக்கு மழை பதிவாகி இருந்த நிலையில், கடந்த ஒரு மாதத்தில் பெய்த மழையின் அளவை, கடந்த மூன்றுதினங்களில் மட்டுமே கிட்டத்தட்ட பெய்திருப்பதால், மயிலாடுதுறை மாவட்டத்தை, தற்போதைக்கு மழை மாவட்டம் என்று அழைத்தாலும் தவறில்லை. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அவசர கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளதால், பொதுமக்கள் தங்கள் குறைகளை 04364-222588 – 9487544588 என்ற எண்ணிலும் 8148917588 என்ற வாட்ஸ்அப் எண்ணிலும் புகார் தெரிவிக்கலாம் என மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் லலிதா தெரிவித்துள்ளார்.


TN rains: மழை மாவட்டமான மயிலாடுதுறை...மிதக்கும் சீர்காழி.. ஒரு நாளில் 43 செ.மீ.மழை பதிவு!

மேலும் மழை தொடர்பான பல செய்திகளை காண  :

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABP நாடு செய்திகளை உடனுக்குடன் பெற

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read More

தலைப்பு செய்திகள்

யூட்யூபர் மாரிதாஸ் கைது.? இது என்ன பாசிசமா, பாயாசமா.? ஆதவ் அர்ஜூனாவை போட்டுத்தாக்கிய அதிமுக
யூட்யூபர் மாரிதாஸ் கைது.? இது என்ன பாசிசமா, பாயாசமா.? ஆதவ் அர்ஜூனாவை போட்டுத்தாக்கிய அதிமுக
‘சபரிமலை அய்யப்பா சேவா சமாஜத்திற்கு தலைவரான தமிழர்’ யார் இந்த கராத்தே முருகன்..!
‘சபரிமலை அய்யப்பா சேவா சமாஜத்திற்கு தலைவரான தமிழர்’ யார் இந்த கராத்தே முருகன்..!
YouTuber Maridhas : யூடியூபர் மாரிதாஸ் அதிரடியாக கைது செய்த சென்னை போலீஸ்- இது தான் காரணமா.?
யூடியூபர் மாரிதாஸ் அதிரடியாக கைது செய்த சென்னை போலீஸ்- இது தான் காரணமா.?
அதிமுக என்ற மின்சார கம்பியில் கை வைக்க வேண்டாம் அது ஷாக்கடிக்கும் - அமைச்சருக்கு ஆர்.பி.உதயகுமார் எச்சரிக்கை !
அதிமுக என்ற மின்சார கம்பியில் கை வைக்க வேண்டாம் அது ஷாக்கடிக்கும் - அமைச்சருக்கு ஆர்.பி.உதயகுமார் எச்சரிக்கை !

வீடியோ

DMK On INDIA Alliance | துரோகம் செய்த காங்கிரஸ் திமுகவின் அதிரடி முடிவு பலவீனமான I.N.D.I.A கூட்டணி?
Annamalai New Party |
NEET Exam Student Suicide |
Illegal Relationship | மனைவி உயிரோடுதான் இருக்காங்க குழந்தையுடன் கணவன் தலைமறைவு போலீஸார் விசாரணை!
Annamalai Resignation | பாஜகவுக்கு Bye Bye! புதிய பாதையில் அண்ணாமலை.. வெளியான அறிக்கை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
INDIA Alliance Meeting : ’திமுக இல்லாத இண்டியா கூட்டம்’ கேள்வி எழுப்ப கட்சிகள் திட்டம் – கலக்கத்தில் காங்கிரஸ்..?
'இண்டியா கூட்டத்தை புறக்கணித்த காங்கிரஸ்’ நடக்கப்போவது என்ன?
அமைச்சர்களுக்கு தடை போட்ட CM விஜய்..! 5 தொகுதிகளுக்கு ஸ்பெஷல் கவனிப்பு - தேர்தல் பணிகள் தீவிரம்
அமைச்சர்களுக்கு தடை போட்ட CM விஜய்..! 5 தொகுதிகளுக்கு ஸ்பெஷல் கவனிப்பு - தேர்தல் பணிகள் தீவிரம்
Bose Venkat: விஜய் ஜெயிச்சாரு.. மொத்த மானத்தையும் வாங்கிய குடும்பம்.. போஸ் வெங்கட் வேதனை!
Bose Venkat: விஜய் ஜெயிச்சாரு.. மொத்த மானத்தையும் வாங்கிய குடும்பம்.. போஸ் வெங்கட் வேதனை!
Tamilnadu Round Up: மீண்டும் குறைந்த தங்கம் விலை, பதவிக்காக ஓடும் அதிமுகவினர்? திமுக சாடல் - தமிழ்நாட்டில் இதுவரை
மீண்டும் குறைந்த தங்கம் விலை, பதவிக்காக ஓடும் அதிமுகவினர்? திமுக சாடல் - தமிழ்நாட்டில் இதுவரை
Hyundai Creta: SUV-க்களின் கிங்கிற்கு சலுகைகளை வாரி வழங்கிய ஹுண்டாய் - இன்ஜின் & EV ரெண்டிற்கும் ஆஃபர்
SUV-க்களின் கிங்கிற்கு சலுகைகளை வாரி வழங்கிய ஹுண்டாய் - இன்ஜின் & EV ரெண்டிற்கும் ஆஃபர்
Kia UpComing SUV: ஹைப்ரிட், 7 சீட்டர், EV - முன்னணி ப்ராண்ட்களுக்கு போட்டியாக 4 புது எஸ்யுவிக்கள் - கியா கார்கள்
ஹைப்ரிட், 7 சீட்டர், EV - முன்னணி ப்ராண்ட்களுக்கு போட்டியாக 4 புது எஸ்யுவிக்கள் - கியா கார்கள்
Mayor Priya: மேயர் பிரியா டிஸ்மிஸ்? ரூல்ஸ மறந்துட்டிங்களா..! கலைக்கப்படும் சென்னை மாமன்றம்? கணக்கு எங்கே?
மேயர் பிரியா டிஸ்மிஸ்? ரூல்ஸ மறந்துட்டிங்களா..! கலைக்கப்படும் சென்னை மாமன்றம்? கணக்கு எங்கே?
TN Weather Update: 10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு, சென்னை? தமிழக வானிலை நிலவரம் என்ன?
10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு, சென்னை? தமிழக வானிலை நிலவரம் என்ன?
Embed widget