தமிழ்நாட்டில் இன்று 7 இடங்களில் சதமடித்த வெயில்..வானிலை அப்டேட்!
Weather Updates: தமிழ்நாட்டில் இன்று மீனம்பாக்கம் மற்றும் திருச்சி உள்ளிட்ட 7 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டிற்கு மேல் வெப்பநிலை பதிவாகியுள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் வெயிலானது வாட்டி வதைத்து வருகிறது. இந்நிலையில், இன்று கரூர் பரமத்தி, ஈரோடு, சேலம், திருத்தணி, தர்மபுரி, மதுரை விமான நிலையம், மீனம்பாக்கம் மற்றும் திருச்சி ஆகிய 8 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கு மேல் வெப்பநிலை பதிவாகியுள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், நாளைய வானிலை எப்படி இருக்கும் என்பது குறித்து பார்ப்போம்.
அடுத்த ஏழு தினங்களுக்கு வானிலை முன்னறிவிப்பு:
தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில் கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது.
இதனால் 30-04-2025 மாற்றும் 01-05-2025: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
02.05-2035 மற்றும் 08.01-2025, தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
04-05-3035 தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இரு மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
05-05-2025 மற்றும் 06-05-2025 தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
அதிகபட்ச வெப்பநிலை பற்றிய முன்னறிவிப்பு:
30-04-2025 பால் 63-05-2025 வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2-3 செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்க வாய்ப்பு உள்ளது.
04-01-2025 மற்றும் 05-05-2835 தமிழகம், தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2-3 செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.





















