மேலும் அறிய

ABP நாடு IMPACT: இறந்த தாயின் உடல் 5 நாட்களுக்கு பின் மகனிடம் ஒப்படைப்பு

ABP நாடு செய்தி எதிரொலியாக கடந்த 5 நாட்களாக இறந்த தாயின் உடலை வாங்க முடியாமல் தவித்து வந்த மகனிடம், அவரது தாயின் உடல் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் அடுத்த பாலுசெட்டி சத்திரம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட விநாயகபுரம் பகுதியைச் சார்ந்தவர் வசந்தா. கடந்த மார்ச் மாதம் 8ஆம் தேதி இவர் மீது அரசு பேருந்து மோதியதில் படுகாயமடைந்து காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். பிறகு அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு கொண்டு செல்லப்பட்டார். செங்கல்பட்டில் இருந்து மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு ஒரு மாத காலம் தீவிர சிகிச்சையில் இருந்தார்.


ABP நாடு IMPACT: இறந்த தாயின் உடல் 5 நாட்களுக்கு பின் மகனிடம் ஒப்படைப்பு

தற்போது கொரோனா நோய் தொற்று அதிகம் பரவி வருவதால் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் போதிய படுக்கை வசதி இல்லாத காரணத்தைக் காட்டி அங்கிருந்து வசந்தாவை வீட்டிற்கு டிசார்ஜ் செய்ததாக கூறப்படுகிறது. வீட்டிற்கு வந்த வசந்தா ஓரிரு நாட்களில் உடல் மேலும் நலிவுற்று கடந்த 1ஆம் தேதி மதியம் 3 மணிக்கு காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் மீண்டும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சில மணிநேரங்களிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.


ABP நாடு IMPACT: இறந்த தாயின் உடல் 5 நாட்களுக்கு பின் மகனிடம் ஒப்படைப்பு

வசந்தாவின் உடலை பிரேத பரிசோதனை செய்து மகனிடம் உரிய முறையில் ஒப்படைக்க மருத்துவமனை நிர்வாகமும் காவல்துறையும் கடந்த 5 நாட்களாக அலைக்கழித்துக் கொண்டிருக்கிறது. காவல்துறை சார்பாக மருத்துவமனையில் இருந்து முறையாக எந்த ஒரு தகவலும் வரவில்லை என கூறுகிறார்கள். அதேசமயம், மருத்துவமனை நிர்வாகம் சார்பாக உரிய முறையில் தகவலை ஏற்கனவே அனுப்பிவிட்டதாக கூறுகிறார்கள். வசந்தாவின் மகன் இரவு பகலாக மருத்துவமனை பிணவறையில் வாயிலிலேயே செய்வதறியாமல் தவித்துக் கொண்டிருக்கிறார்.

இதுபற்றி அவர் கூறுகையில், ‛‛காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் கடந்த 1ஆம் தேதி எனது தாய் உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் மதியம் 3 மணிக்கு அனுமதித்தேன். நான் அனுமதித்த சில மணி நேரங்களிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். என் தாயின் உடலை பிரேத பரிசோதனை செய்து என்னிடம் ஒப்படைக்க காவல்துறையும் மருத்துவமனை நிர்வாகமும் என்னை மிகவும் அலைக்கழித்து வருகிறார்கள். காவல்துறையினர் என் தாய் விபத்தில்தான் உயிரிழந்தார் என்பதற்கான சான்றிதழை மருத்துவமனையிலிருந்து பெற்று வருமாறு கூறுகின்றனர்.


ABP நாடு IMPACT: இறந்த தாயின் உடல் 5 நாட்களுக்கு பின் மகனிடம் ஒப்படைப்பு

அதேசமயம் மருத்துவமனை நிர்வாகத்திடம் கேட்கும்பொழுது வசந்தா உயிரிழந்தது தொடர்பாக அனைத்து ஆவணங்களும் காவல்துறையிடம் ஏற்கனவே வழங்கப்பட்டுவிட்டது எனக் கூறுகிறார்கள். மருத்துவமனை நிர்வாகம் கூறும் தகவலை காவல்துறையிடம் கூறினால் என்னை கடும் சொற்களால் திட்டுகிறார்கள். கடந்த 5 நாட்களாக எனது தாயின் உடலை பிரேத பரிசோதனை செய்யாமல் பிணவறையில் தற்போது வரை வைத்திருக்கிறார்கள்’’ என்று கதறி அழுதார்.  

கடந்த 5 நாட்களாக இறந்த தாயின் உடலை வாங்க முடியாமல் அரசு மருத்துவமனை வளாகத்தில் செய்வதறியாமல் இளைஞர் தவித்துவருவது குறித்து ABP நாடு நேற்று பிரத்யேக செய்தி வெளியிட்டது. இந்த செய்தி சமூக வலைதளங்களில் அதிக அளவில் பகிரப்பட்டது. இதைத் தொடர்ந்து சம்மந்தப்பட் உயர்அதிகாரிகளின் கவனத்திற்கு சென்றடைந்தது. அதன் காரணமாக கடந்த 5 நாட்களுக்கு பின் சம்மந்தப்பட்ட இளைஞரின் தாய் சடலம், அவரிடம் முறைப்படி ஒப்படைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்த அந்த இளைஞர் ABP நாடு இணையதளத்திற்கு தனது நன்றியை தெரிவித்துக் கொண்டார்.  

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Income Tax Alert: மக்களே உஷார்..! உங்களது இந்த 5 பரிவர்த்தனைகள் வருமான வரித்துறையால் கண்காணிக்கபப்டும்..!
மக்களே உஷார்..! உங்களது இந்த 5 பரிவர்த்தனைகள் வருமான வரித்துறையால் கண்காணிக்கபப்டும்..!
Dubai Flood Reason : வெள்ளக்காடாய் மாறிய துபாய் - பாலைவன பூமியில் ஒரேநாளில் பேய்மழை பொழியக் காரணம் என்ன?
வெள்ளக்காடாய் மாறிய துபாய் - பாலைவன பூமியில் ஒரேநாளில் பேய்மழை பொழியக் காரணம் என்ன?
Breaking Tamil LIVE: ரயிலில் ரூ. 4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட விவகாரம் - உயர்நீதிமன்றம் அதிரடி
ரயிலில் ரூ. 4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட விவகாரம் - உயர்நீதிமன்றம் அதிரடி
IPL Records : ஐபிஎல் வரலாற்றில் வெற்றிகரமாக சேஸ் செய்யப்பட்ட அதிகபட்ச இலக்குகள்!
IPL Records : ஐபிஎல் வரலாற்றில் வெற்றிகரமாக சேஸ் செய்யப்பட்ட அதிகபட்ச இலக்குகள்!
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Satyabrata sahoo : ’’தேர்தல் விதிகளை மீறினால்..’’ சத்யபிரதா சாகு எச்சரிக்கை!Nainar Nagendran : நயினார் தகுதி நீக்கம்? இன்று பரபரப்பு விசாரணை! நெல்லையில் தேர்தல் நடக்குமா?Ram Navami  : ராம நவமி கொண்டாட்டம்..அயோத்திக்கு வந்த பால ராமர்! ஆச்சர்யத்தில் மக்கள்Mansoor Ali Khan Hospitalized : ICU- வில் மன்சூர் அலிகான்..திடீர் உடல்நலக்குறைவு!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Income Tax Alert: மக்களே உஷார்..! உங்களது இந்த 5 பரிவர்த்தனைகள் வருமான வரித்துறையால் கண்காணிக்கபப்டும்..!
மக்களே உஷார்..! உங்களது இந்த 5 பரிவர்த்தனைகள் வருமான வரித்துறையால் கண்காணிக்கபப்டும்..!
Dubai Flood Reason : வெள்ளக்காடாய் மாறிய துபாய் - பாலைவன பூமியில் ஒரேநாளில் பேய்மழை பொழியக் காரணம் என்ன?
வெள்ளக்காடாய் மாறிய துபாய் - பாலைவன பூமியில் ஒரேநாளில் பேய்மழை பொழியக் காரணம் என்ன?
Breaking Tamil LIVE: ரயிலில் ரூ. 4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட விவகாரம் - உயர்நீதிமன்றம் அதிரடி
ரயிலில் ரூ. 4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட விவகாரம் - உயர்நீதிமன்றம் அதிரடி
IPL Records : ஐபிஎல் வரலாற்றில் வெற்றிகரமாக சேஸ் செய்யப்பட்ட அதிகபட்ச இலக்குகள்!
IPL Records : ஐபிஎல் வரலாற்றில் வெற்றிகரமாக சேஸ் செய்யப்பட்ட அதிகபட்ச இலக்குகள்!
Watch Video : துபாய் கனமழை, வெள்ளம்.. 2-வது நாளாக சென்னையில் இருந்து செல்லும் 12 விமானங்கள் ரத்து!
Watch Video : துபாய் கனமழை, வெள்ளம்.. 2-வது நாளாக சென்னையில் இருந்து செல்லும் 12 விமானங்கள் ரத்து!
VVPAT: இவிஎம்முடன் விவிபாட் முறையைக் கட்டாயமாக்கக் கோரி மனு- உயர் நீதிமன்றம் மறுப்பு
VVPAT: இவிஎம்முடன் விவிபாட் முறையைக் கட்டாயமாக்கக் கோரி மனு- உயர் நீதிமன்றம் மறுப்பு
Lok Sabha Election 2024: நாளை வாக்குப்பதிவு: களத்தில் 8 மத்திய அமைச்சர்கள், 3 முன்னாள் சி.எம்., முன்னாள் ஆளுநர்
நாளை வாக்குப்பதிவு: களத்தில் 8 மத்திய அமைச்சர்கள், 3 முன்னாள் சி.எம்., முன்னாள் ஆளுநர்
Latest Gold Silver Rate: சற்று நிம்மதியில் மக்கள்.. குறையும் தங்கம் விலை.. சவரனுக்கு ரூ.280 குறைவு..
சற்று நிம்மதியில் மக்கள்.. குறையும் தங்கம் விலை.. சவரனுக்கு ரூ.280 குறைவு..
Embed widget