மேலும் அறிய

சாட்சிகள் பொய் சொன்னாலும் சாட்சியம் பொய் சொல்லாது.. கோகுல்ராஜ் வழக்கு தீர்ப்பு குறித்து வழக்கறிஞர் மோகன்..

Gokulraj Honour Killing: சாட்சிகள் பொய் சொன்னாலும் சாட்சியம் பொய் சொல்லாது என கோகுல்ராஜ் வழக்கு தீர்ப்புக்குப் பின்னர் அரசு வழக்கறிஞர் ப.பா. மோகன் செய்தியாளர் சந்திப்பில் கூறியுள்ளார்.

Gokulraj Honour Killing: 'சாட்சிகள் பொய் சொன்னாலும் சாட்சியம் பொய் சொல்லாது' என கோகுல்ராஜ் வழக்கு தீர்ப்புக்குப் பின்னர் அரசு வழக்கறிஞர் ப.பா. மோகன் செய்தியாளர் சந்திப்பில் கூறியுள்ளார்.  

கோகுல்ராஜ் ஆணவக் கொலை(Gokulraj Honour Killing) மேல்முறையீட்டு வழக்கில் உயர்நீதிமன்றம் இன்று அதாவது ஜூன் மாதம் 2ஆம் தேதி தீர்ப்பு வழங்கியுள்ளது. உயர் நீதிமன்ற நீதிபதிகள் எம்.எஸ். ரமேஷ், ஆனந்த் வெங்கடேஷ் ஆகியோர் தீர்ப்பை வழங்கியுள்ளனர். இந்த மேல்முறையீட்டு வழக்கில் யுவராஜ் உட்பட 10 பேருக்கான ஆயுள் தண்டனையை சென்னை உயர்நீதிமன்றம் உறுதி செய்தது. யுவராஜ் வாழ்நாள் முழுவதும் சிறையில் இருக்க வேண்டும் எனவும் நீதிபதிகள் தீர்ப்பில் கூறியுள்ளனர். அதேபோல் இந்த வழக்கில் மதுரை சிறப்பு நீதிமன்றம் 5 பேரை விடுவித்ததில் நாங்கள் செல்ல விரும்பவில்லை என கூறினர். 

அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த இந்த வழக்கின் அரசு வழக்கறிஞர் பவானி ப. மோகன் பேசியதாவது, ”உயர்நீதிமன்றம் வழங்கியுள்ள இந்த தீர்ப்பு வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பு. இந்த தீர்ப்பினை நான் வரவேற்கிறேன். கோகுல்ராஜ் வழக்கினைப் பொறுத்தவரையில், முதலில் இந்த வழக்கினை விசாரித்த காவல் அதிகாரி டி.எஸ்.பி விஷ்ணுப்ரியா தனது உள்ளுணர்வின் அடிப்படையில் கோகுல்ராஜ் தற்கொலை செய்துகொண்டார் என குறிப்பிட்டிருந்தார். அதன் பின்னர் கோகுல்ராஜின் உடலை கூறு ஆய்வு செய்ய வேண்டும் என மூத்த வழக்கறிஞர் சங்கர சுப்பு தான் கோரிக்கை வைத்தார். இதனை நீதிமன்றம் ஏற்ற பின்னர் தான் வழக்கின் போக்கு முற்றிலுமாக மாறியது. இதனால், கோகுல்ராஜின் உடலை ராமச்சந்திரா மருத்துவமனை மருத்துவர் சம்பத் கூறாய்வு செய்த பின்னர் அளித்த அறிக்கையில்தான் கோகுல்ராஜ் மிகவும் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது”.

அதன் பின்னர், ”இந்த வழக்கில் நேரடி சாட்சியங்கள் பிறழ் சாட்சியமாக மாறிவிட்ட பின்னரும் கூட, விஞ்ஞானம் வளர்ந்த இந்த காலத்தில், சிசிடிவி கேமாராவில் கோகுல்ராஜ் மற்றும் சுவாதி திருச்செங்கோடு கோவிலுக்குச் சென்றது தெளிவாக இருக்கிறது. இந்த சிசிடிவி கேமரா 217வது சான்று ஆவணமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. இந்த ஆவணத்தினை அறிவியல் ரீதியாக ஆய்வு செய்த பின்னர்தான் நீதிமன்றம் தீர்ப்பு அளிக்க உதவியாக இருந்தது”. 

”இந்த வழக்கின் குற்றவாளிகளான யுவராஜ் உட்பட 8 முதல் 12 பேர் சிசிடிவி கேமரா பதிவில் இருப்பது தெளிவாகத் தெரிந்தது. குற்றவாளிகள் தங்களது மொபைல் போன்களை அணைத்து வைத்து விட்டு வேறு மொபைல்களை பயன்படுத்தினர். அதேபோல், வாகனங்களையும் மாற்றி பயன்படுத்தி வந்தனர். தொலைக்காட்சி விவாதத்தில் கலந்து கொண்ட யுவராஜ்தான் கோகுல்ராஜ் மற்றும் சுவாதியின் செல்போனை பறித்ததை ஒப்புக்கொண்டார். ஆனால் நீதிமன்றத்தில் மறுத்தார், தொடக்கத்தில் கோகுல்ராஜுடன் இருப்பது தான் தான் என்பதை ஒப்புக்கொண்டு விசாரணையில் மிகவும் முக்கிய சாட்சியமாக பார்க்கப்பட்ட சுவாதி, அதன் பின்னர் பிறழ் சாட்சியமாக மாறினார். இவர்களைக் குறிப்பிடும் வகையில்,  சாட்சிகள் பொய் சொன்னாலும் சாட்சியம் பொய் சொல்லாது” என குறிப்பிட்டு பேசினார். 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Udhayanidhi Vs EPS: பாஜகவா, RSS-ஆ.? எதில் இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.? - சரமாரியாக போட்டுத் தாக்கிய உதயநிதி
பாஜகவா, RSS-ஆ.? எதில் இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.? - சரமாரியாக போட்டுத் தாக்கிய உதயநிதி
Virat Kohli: “நான் 2-3 வருடங்களாக...“ தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ODI தொடரை வென்ற பின் கோலி கூறியது என்ன.?
“நான் 2-3 வருடங்களாக...“ தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ODI தொடரை வென்ற பின் கோலி கூறியது என்ன.?
Indigo Flight Issue Update: இன்டிகோ பிரச்னையால் எகிறிய விமான கட்டணங்கள்; கட்டண உச்சவரம்பு நிர்ணயம் - மத்திய அரசு அதிரடி
இன்டிகோ பிரச்னையால் எகிறிய விமான கட்டணங்கள்; கட்டண உச்சவரம்பு நிர்ணயம் - மத்திய அரசு அதிரடி
IND vs SA 3rd ODI: மிரட்டி விட்ட ரோகித், கோலி.. சிதறவிட்ட ஜெய்ஸ்வால். தொடரை வென்ற இந்தியா!
IND vs SA 3rd ODI: மிரட்டி விட்ட ரோகித், கோலி.. சிதறவிட்ட ஜெய்ஸ்வால். தொடரை வென்ற இந்தியா!
ABP Premium

வீடியோ

Durga Stalin |காஞ்சி கோயிலில் தங்கத்தேர்!பக்தி பரவசத்தில் துர்கா மெய்சிலிர்த்து வேண்டும் காட்சிகள்
Madurai Loganathan IPS Profile | ‘’WE ARE NOT ALLOWING’’ஒற்றை ஆளாக சம்பவம்! யார் இந்த லோகநாதன் IPS?
தமிழ்நாடு வரும் அமித்ஷா திருப்பரங்குன்றம் விவகாரம் கையிலெடுக்கும் பாஜக | Amitsha in Tamilnadu
ஆதவ் Vs ஜோஸ் சார்லஸ் கட்சி தொடங்கும் முன்னே சரிவு விஜய்யுடன் கூட்டணிக்கு END CARD | Aadhav Vs Joes Charles
Thiruparankundram Dheepam|”இன்னும் சில நிமிடங்களில் தீபம்”144 ரத்து போய் பாதுகாப்பு குடுங்க!-நீதிபதி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi Vs EPS: பாஜகவா, RSS-ஆ.? எதில் இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.? - சரமாரியாக போட்டுத் தாக்கிய உதயநிதி
பாஜகவா, RSS-ஆ.? எதில் இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.? - சரமாரியாக போட்டுத் தாக்கிய உதயநிதி
Virat Kohli: “நான் 2-3 வருடங்களாக...“ தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ODI தொடரை வென்ற பின் கோலி கூறியது என்ன.?
“நான் 2-3 வருடங்களாக...“ தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ODI தொடரை வென்ற பின் கோலி கூறியது என்ன.?
Indigo Flight Issue Update: இன்டிகோ பிரச்னையால் எகிறிய விமான கட்டணங்கள்; கட்டண உச்சவரம்பு நிர்ணயம் - மத்திய அரசு அதிரடி
இன்டிகோ பிரச்னையால் எகிறிய விமான கட்டணங்கள்; கட்டண உச்சவரம்பு நிர்ணயம் - மத்திய அரசு அதிரடி
IND vs SA 3rd ODI: மிரட்டி விட்ட ரோகித், கோலி.. சிதறவிட்ட ஜெய்ஸ்வால். தொடரை வென்ற இந்தியா!
IND vs SA 3rd ODI: மிரட்டி விட்ட ரோகித், கோலி.. சிதறவிட்ட ஜெய்ஸ்வால். தொடரை வென்ற இந்தியா!
Kanchipuram Traffic Alert: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் கும்பாபிஷேகம்: போக்குவரத்து மாற்றம்! முக்கிய அறிவிப்பு!
Kanchipuram Traffic Alert: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் கும்பாபிஷேகம்: போக்குவரத்து மாற்றம்! முக்கிய அறிவிப்பு!
Sabareesan : ’பிரவீன் சக்ரவர்த்தி கனவில் நெருப்பை அள்ளிக் கொட்டிய சபரீசன்’ ராகுல், கார்கேவுடன் நேரடியாக பேச்சு..!
’பிரவீன் சக்ரவர்த்தி கனவில் நெருப்பை அள்ளிக் கொட்டிய சபரீசன்’ ராகுல், கார்கேவுடன் நேரடியாக பேச்சு..!
Rohit Jaiswal: ஜெய்ஸ்வால் செஞ்சுரி.. ரோகித் சர்மா 20 ஆயிரம் ரன்கள்..விளாசிய சின்னவரும், பெரியவரும்!
Rohit Jaiswal: ஜெய்ஸ்வால் செஞ்சுரி.. ரோகித் சர்மா 20 ஆயிரம் ரன்கள்..விளாசிய சின்னவரும், பெரியவரும்!
Trump Gets Peace Prize: அப்பாடா.! புலம்புனதுக்கு ஒருவழியா ஏதோ ஒரு விருது கிடைச்சுடுச்சு; FIFA அமைதி விருதை பெற்ற ட்ரம்ப்
அப்பாடா.! புலம்புனதுக்கு ஒருவழியா ஏதோ ஒரு விருது கிடைச்சுடுச்சு; FIFA அமைதி விருதை பெற்ற ட்ரம்ப்
Embed widget