மேலும் அறிய

"பசித்தால் எடுத்துக்கொள்.. பணம் வேண்டாம்" - பெருந்தொற்று கால சேவையில் விளம்பரம் தேடாத மனிதம்..

‘பசித்தால் எடுத்துக் கொள். பணம் வேண்டாம்’ என்ற வாசகங்களுடன், தள்ளுவண்டியில் உணவு பொட்டங்கலங்கள், வாழைப்பழம், தண்ணீர்பாட்டில்கள், பிஸ்கட்கள் ஆகியவை வைக்கப்பட்டுள்ளன.

’பசித்தால் எடுத்துக்கொள். பணம் வேண்டாம்’ என கோபிச்செட்டிப்பாளையம் பகுதியில் தள்ளுவண்டியில் உணவு பொட்டலங்களை வைத்து  ஏழை, எளிய மக்கள் பசியாற உதவிவரும் மனிதநேய செயல் பாராட்டைப்பெற்று வருகிறது.

கொரோனா இரண்டாவது அலை பரவல் காரணமாக தொற்று பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. இதனைத்தடுக்க இன்று முதல் 14 நாட்களுக்கு தமிழ்நாடு அரசு முழு ஊரடங்கு அமல்படுத்தியுள்ளது. ஊரடங்கு காரணமாக ஏழை, எளிய மக்கள் உணவு கிடைக்காமல் சிரமப்படக்கூடாது என்பதை கருத்தில் கொண்டு, பல்வேறு தரப்பினரும் உணவு உள்ளிட்டவற்றை வழங்கி வருகின்றனர். முதல் ஊரடங்கின் போது தன்னார்வலர்களின் உதவி பலரின் பசியாற்றுவதில் பெரும் பங்காற்றியது. அப்பணிகள் தற்போது இரண்டாம் ஊரடங்கிலும் தொடர்கிறது. அந்த வகையில் ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையம் பகுதியில் முகம்காட்ட விரும்பாத ஒரு நபர் 100-க்கும் மேற்பட்டோரின் பசியாற்றி வருகிறார்.

கோபிச்செட்டிபாளையம் பேருந்து நிலையத்திற்கு முன்பு கடந்த ஒரு வார காலமாக ஒரு தள்ளுவண்டி காணப்படுகிறது. தள்ளுவண்டியில் உணவு பொட்டங்கலங்கள், வாழைப்பழம், தண்ணீர்பாட்டில்கள், பிஸ்கட்கள் ஆகியவை வைக்கப்பட்டுள்ளன. மேலும் ‘பசித்தால் எடுத்துக் கொள். பணம் வேண்டாம்’ என்ற வாசகங்களுடன், உதவ நினைத்தால் தொடர்புகொள்ள ஒரு செல்ஃபோன் எண்ணும் இடம்பெற்றுள்ள பேனர் வைக்கப்பட்டுள்ளது. இதனைப் பார்த்து அப்பகுதியில் உள்ள ஏழை, எளிய மக்கள் மற்றும் கூலித்தொழிலாளர்கள் தாமக வந்து தமக்கு தேவையானவற்றை எடுத்துச் செல்கின்றனர். ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் தற்போது இரவு உணவும் வைக்கப்பட்டு வருகிறது. இதனைப் பார்த்து தனியார் தொண்டு நிறுவனங்கள் உதவ முன்வந்தனர். இதையடுத்து கச்சேரிமேடு பகுதியில் உள்ள கோபி தாலுக்கா அலுவலகம் முன்பும் ஒரு தள்ளுவண்டியில், இதேபோல உணவு பொட்டலங்கள், பழங்கள் வைக்கப்பட்டுள்ளன. இந்த இரண்டு தள்ளுவண்டிகளும் வாடகைக்கு எடுக்கப்பட்டு மூன்று வேளையும் உணவு பொட்டலங்கள் மற்றும் பழங்களை வைத்துச் செல்கின்றனர். அடையாளத்தை வெளிக்காட்டமல் விளம்பரம் இன்றி பலரின் பசியாற்ற உதவும் மனிதநேயச் செயல் பரவலாக பாராட்டைப் பெற்று வருகிறது.


இதுதொடர்பாக அந்த பேனரில் இருந்த எண்ணை தொடர்புகொண்டு பேசினோம். அப்போது பேசிய அவர், “நான் தனியார் பள்ளி முதல்வராக இருந்த நான், தற்போது ஒரு செல்ஃபோன் கடைவைத்து நடத்தி வருகிறேன். கடந்த ஒரு வார காலமாக தள்ளுவண்டியில் உணவு பொட்டலங்கள், தண்ணீர் பாட்டில்கள், பழம், பிஸ்கட் ஆகியவற்றை வைத்து வருகின்றனர். நாள் ஒன்றுக்கு ஒரு தள்ளுவண்டியில் நூறு வீதம் 200 உணவு பொட்டலங்கள் வைத்து வருகிறேன். உணவு வேண்டுவோர் அவற்றை வந்து எடுத்துக்கொள்ளலாம். கொரோனா அச்சம் மற்றும் ஊரடங்கு காரணமாக பலருக்கு உணவு கிடைப்பதில் சிக்கல் உள்ளது. பசியோடு யாரும் இருக்கக்கூடாது என்பதற்காக ஏழை, எளிய மக்கள் பசியாற என்னால் முடிந்த உதவிகளை செய்துவருகிறேன்” எனத் தெரிவித்தார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

CM Stalin: கலைஞர் மகளிர் உரிமைத்தொகை - இன்று முதல் யார் யாருக்கு கிடைக்கும்? - முழு விவரம் இதோ
CM Stalin: கலைஞர் மகளிர் உரிமைத்தொகை - இன்று முதல் யார் யாருக்கு கிடைக்கும்? - முழு விவரம் இதோ
Magalir urimai thogai: காலையிலேயே வங்கி கணக்கிற்கு வந்த ரூ.1000... குஷியில் துள்ளி குதிக்கும் குடும்பத்தலைவிகள்
காலையிலேயே வங்கி கணக்கிற்கு வந்த ரூ.1000... குஷியில் துள்ளி குதிக்கும் குடும்பத்தலைவிகள்
Bus Accident: மீண்டும் பேருந்து கவிழ்ந்து கோர விபத்து - 9 பேர் பலி, 29 பேரின் நிலை என்ன?
Bus Accident: மீண்டும் பேருந்து கவிழ்ந்து கோர விபத்து - 9 பேர் பலி, 29 பேரின் நிலை என்ன?
Tamilnadu Round Up: 17 லட்சம் பேருக்கு ரூ.1000, ரஜினி பிறந்தநாள், திருப்பரங்குன்றம் வழக்கு - தமிழ்நாட்டில் இதுவரை
Tamilnadu Round Up: 17 லட்சம் பேருக்கு ரூ.1000, ரஜினி பிறந்தநாள், திருப்பரங்குன்றம் வழக்கு - தமிழ்நாட்டில் இதுவரை
ABP Premium

வீடியோ

Tindivanam Bus Accident - டயர் வெடித்து விபத்து ஒருவர் பலி, 15 பேர் படுகாயம்; உதவிய விழுப்புரம் கலெக்டர்
Nainar Nagendran Meet EPS | டெல்லிக்கு அழைத்த அமித் ஷா; ஈபிஎஸ்-நயினார் திடீர் சந்திப்பு; அண்ணாமலை பலே ப்ளான்!
LAW & ORDER இனிமே இவர் கையில் தமிழகத்தின் புதிய பொறுப்பு DGPயார் இந்த அபய் குமார் சிங் IPS? | Abhay Kumar Singh | MK Stalin | TN New DGP
அன்று நீதிபதி மீது காலணி எறிந்த Lawyer இன்று செருப்பால் அடிவாங்கினார் நீதிமன்ற வாசலில் சம்பவம் | Rakesh Kishore | Supreme Court | BR Gavai
”எந்த ஷா வந்தாலென்ன? தமிழ்நாடு Out of Control தான்” ஸ்டாலின் பதிலடி! | MK Stalin On Amit Shah

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Stalin: கலைஞர் மகளிர் உரிமைத்தொகை - இன்று முதல் யார் யாருக்கு கிடைக்கும்? - முழு விவரம் இதோ
CM Stalin: கலைஞர் மகளிர் உரிமைத்தொகை - இன்று முதல் யார் யாருக்கு கிடைக்கும்? - முழு விவரம் இதோ
Magalir urimai thogai: காலையிலேயே வங்கி கணக்கிற்கு வந்த ரூ.1000... குஷியில் துள்ளி குதிக்கும் குடும்பத்தலைவிகள்
காலையிலேயே வங்கி கணக்கிற்கு வந்த ரூ.1000... குஷியில் துள்ளி குதிக்கும் குடும்பத்தலைவிகள்
Bus Accident: மீண்டும் பேருந்து கவிழ்ந்து கோர விபத்து - 9 பேர் பலி, 29 பேரின் நிலை என்ன?
Bus Accident: மீண்டும் பேருந்து கவிழ்ந்து கோர விபத்து - 9 பேர் பலி, 29 பேரின் நிலை என்ன?
Tamilnadu Round Up: 17 லட்சம் பேருக்கு ரூ.1000, ரஜினி பிறந்தநாள், திருப்பரங்குன்றம் வழக்கு - தமிழ்நாட்டில் இதுவரை
Tamilnadu Round Up: 17 லட்சம் பேருக்கு ரூ.1000, ரஜினி பிறந்தநாள், திருப்பரங்குன்றம் வழக்கு - தமிழ்நாட்டில் இதுவரை
Kia Hybrid: சூப்பர் கார்.. ஹைப்ரிட் எடிஷனில் விற்பனையில் இறக்கும் கியா - உள்ளூர் உற்பத்தி, லாஞ்ச் எப்போது?
Kia Hybrid: சூப்பர் கார்.. ஹைப்ரிட் எடிஷனில் விற்பனையில் இறக்கும் கியா - உள்ளூர் உற்பத்தி, லாஞ்ச் எப்போது?
Trump Modi: புதின் எண்ட்ரி.. கால் போட்ட ட்ரம்ப்.. முக்கிய விவகாரங்களை கையிலெடுத்த பிரதமர் மோடி
Trump Modi: புதின் எண்ட்ரி.. கால் போட்ட ட்ரம்ப்.. முக்கிய விவகாரங்களை கையிலெடுத்த பிரதமர் மோடி
Japan sunami alert: மீண்டும் அதிகாலையில் நில நடுக்கம்... மெகா சுனாமி அலர்ட்.? அலறி அடித்து ஓடும் மக்கள்
மீண்டும் அதிகாலையில் நில நடுக்கம்... மெகா சுனாமி அலர்ட்.? அலறி அடித்து ஓடும் மக்கள்
TVK Vijay ERD Meeting: ஈரோட்டில் தவெக மாநாடு நடைபெறுமா.? அறநிலையத்துறை வடிவில் வந்த சிக்கல்.? என்ன பிரச்னை.?
ஈரோட்டில் தவெக மாநாடு நடைபெறுமா.? அறநிலையத்துறை வடிவில் வந்த சிக்கல்.? என்ன பிரச்னை.?
Embed widget