மேலும் அறிய

"பசித்தால் எடுத்துக்கொள்.. பணம் வேண்டாம்" - பெருந்தொற்று கால சேவையில் விளம்பரம் தேடாத மனிதம்..

‘பசித்தால் எடுத்துக் கொள். பணம் வேண்டாம்’ என்ற வாசகங்களுடன், தள்ளுவண்டியில் உணவு பொட்டங்கலங்கள், வாழைப்பழம், தண்ணீர்பாட்டில்கள், பிஸ்கட்கள் ஆகியவை வைக்கப்பட்டுள்ளன.

’பசித்தால் எடுத்துக்கொள். பணம் வேண்டாம்’ என கோபிச்செட்டிப்பாளையம் பகுதியில் தள்ளுவண்டியில் உணவு பொட்டலங்களை வைத்து  ஏழை, எளிய மக்கள் பசியாற உதவிவரும் மனிதநேய செயல் பாராட்டைப்பெற்று வருகிறது.

கொரோனா இரண்டாவது அலை பரவல் காரணமாக தொற்று பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. இதனைத்தடுக்க இன்று முதல் 14 நாட்களுக்கு தமிழ்நாடு அரசு முழு ஊரடங்கு அமல்படுத்தியுள்ளது. ஊரடங்கு காரணமாக ஏழை, எளிய மக்கள் உணவு கிடைக்காமல் சிரமப்படக்கூடாது என்பதை கருத்தில் கொண்டு, பல்வேறு தரப்பினரும் உணவு உள்ளிட்டவற்றை வழங்கி வருகின்றனர். முதல் ஊரடங்கின் போது தன்னார்வலர்களின் உதவி பலரின் பசியாற்றுவதில் பெரும் பங்காற்றியது. அப்பணிகள் தற்போது இரண்டாம் ஊரடங்கிலும் தொடர்கிறது. அந்த வகையில் ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையம் பகுதியில் முகம்காட்ட விரும்பாத ஒரு நபர் 100-க்கும் மேற்பட்டோரின் பசியாற்றி வருகிறார்.

கோபிச்செட்டிபாளையம் பேருந்து நிலையத்திற்கு முன்பு கடந்த ஒரு வார காலமாக ஒரு தள்ளுவண்டி காணப்படுகிறது. தள்ளுவண்டியில் உணவு பொட்டங்கலங்கள், வாழைப்பழம், தண்ணீர்பாட்டில்கள், பிஸ்கட்கள் ஆகியவை வைக்கப்பட்டுள்ளன. மேலும் ‘பசித்தால் எடுத்துக் கொள். பணம் வேண்டாம்’ என்ற வாசகங்களுடன், உதவ நினைத்தால் தொடர்புகொள்ள ஒரு செல்ஃபோன் எண்ணும் இடம்பெற்றுள்ள பேனர் வைக்கப்பட்டுள்ளது. இதனைப் பார்த்து அப்பகுதியில் உள்ள ஏழை, எளிய மக்கள் மற்றும் கூலித்தொழிலாளர்கள் தாமக வந்து தமக்கு தேவையானவற்றை எடுத்துச் செல்கின்றனர். ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் தற்போது இரவு உணவும் வைக்கப்பட்டு வருகிறது. இதனைப் பார்த்து தனியார் தொண்டு நிறுவனங்கள் உதவ முன்வந்தனர். இதையடுத்து கச்சேரிமேடு பகுதியில் உள்ள கோபி தாலுக்கா அலுவலகம் முன்பும் ஒரு தள்ளுவண்டியில், இதேபோல உணவு பொட்டலங்கள், பழங்கள் வைக்கப்பட்டுள்ளன. இந்த இரண்டு தள்ளுவண்டிகளும் வாடகைக்கு எடுக்கப்பட்டு மூன்று வேளையும் உணவு பொட்டலங்கள் மற்றும் பழங்களை வைத்துச் செல்கின்றனர். அடையாளத்தை வெளிக்காட்டமல் விளம்பரம் இன்றி பலரின் பசியாற்ற உதவும் மனிதநேயச் செயல் பரவலாக பாராட்டைப் பெற்று வருகிறது.


இதுதொடர்பாக அந்த பேனரில் இருந்த எண்ணை தொடர்புகொண்டு பேசினோம். அப்போது பேசிய அவர், “நான் தனியார் பள்ளி முதல்வராக இருந்த நான், தற்போது ஒரு செல்ஃபோன் கடைவைத்து நடத்தி வருகிறேன். கடந்த ஒரு வார காலமாக தள்ளுவண்டியில் உணவு பொட்டலங்கள், தண்ணீர் பாட்டில்கள், பழம், பிஸ்கட் ஆகியவற்றை வைத்து வருகின்றனர். நாள் ஒன்றுக்கு ஒரு தள்ளுவண்டியில் நூறு வீதம் 200 உணவு பொட்டலங்கள் வைத்து வருகிறேன். உணவு வேண்டுவோர் அவற்றை வந்து எடுத்துக்கொள்ளலாம். கொரோனா அச்சம் மற்றும் ஊரடங்கு காரணமாக பலருக்கு உணவு கிடைப்பதில் சிக்கல் உள்ளது. பசியோடு யாரும் இருக்கக்கூடாது என்பதற்காக ஏழை, எளிய மக்கள் பசியாற என்னால் முடிந்த உதவிகளை செய்துவருகிறேன்” எனத் தெரிவித்தார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

சென்னை காவல் ஆணையர் அலுவலகத்துக்கு பறந்த புகார்! நடிகர் விஜய்க்கு சிக்கல்?
சென்னை காவல் ஆணையர் அலுவலகத்துக்கு பறந்த புகார்! நடிகர் விஜய்க்கு சிக்கல்?
Thirukkadaiyur Temple: எமன் உயிரை எடுத்த சிவன்; திருக்கடையூர் கோயில் ஐதீக நிகழ்வு
எமன் உயிரை எடுத்த சிவன்; திருக்கடையூர் கோயில் ஐதீக நிகழ்வு
Breaking Tamil LIVE: தாளவாடியில் சூறைக்காற்றுடன் மழை - மக்கள் மகிழ்ச்சி
Breaking Tamil LIVE: தாளவாடியில் சூறைக்காற்றுடன் மழை - மக்கள் மகிழ்ச்சி
Guru Peyarchi 2024: குரு பெயர்ச்சி! குரு தோஷம் நீங்க கட்டாயம் செல்ல வேண்டிய கோயில்கள்! முழு விவரம்
Guru Peyarchi 2024: குரு பெயர்ச்சி! குரு தோஷம் நீங்க கட்டாயம் செல்ல வேண்டிய கோயில்கள்! முழு விவரம்
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Vijay Antony Vs Blue Sattai |தாக்கி பேசிய ப்ளூ சட்டை விஜய் ஆண்டனியின் பதிலடி FIRE விடும் நெட்டிசன்ஸ்Lok Sabha Election 2024 | சர்வே ரிப்போர்ட்... அதிர்ச்சியில் திமுக!Revanth Reddy on Udhayanidhi | ”உதயநிதியை தண்டிக்கனும்”காங்கிரஸ் முதல்வர் போர்க்கொடி- ரேவந்த் ரெட்டிTN Polling percentage issue | மாயமான வாக்குகள்? வாக்கு சதவீதத்தில் குளறுபடி! அதிர்ச்சியில் மக்கள்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
சென்னை காவல் ஆணையர் அலுவலகத்துக்கு பறந்த புகார்! நடிகர் விஜய்க்கு சிக்கல்?
சென்னை காவல் ஆணையர் அலுவலகத்துக்கு பறந்த புகார்! நடிகர் விஜய்க்கு சிக்கல்?
Thirukkadaiyur Temple: எமன் உயிரை எடுத்த சிவன்; திருக்கடையூர் கோயில் ஐதீக நிகழ்வு
எமன் உயிரை எடுத்த சிவன்; திருக்கடையூர் கோயில் ஐதீக நிகழ்வு
Breaking Tamil LIVE: தாளவாடியில் சூறைக்காற்றுடன் மழை - மக்கள் மகிழ்ச்சி
Breaking Tamil LIVE: தாளவாடியில் சூறைக்காற்றுடன் மழை - மக்கள் மகிழ்ச்சி
Guru Peyarchi 2024: குரு பெயர்ச்சி! குரு தோஷம் நீங்க கட்டாயம் செல்ல வேண்டிய கோயில்கள்! முழு விவரம்
Guru Peyarchi 2024: குரு பெயர்ச்சி! குரு தோஷம் நீங்க கட்டாயம் செல்ல வேண்டிய கோயில்கள்! முழு விவரம்
Ethirneechal Serial: மும்மரமாக நடக்கும் திருமண ஏற்பாடு.. உறுதியாக இருக்கும் ஜனனி.. எதிர்நீச்சலில் இன்று!
Ethirneechal Serial: மும்மரமாக நடக்கும் திருமண ஏற்பாடு.. உறுதியாக இருக்கும் ஜனனி.. எதிர்நீச்சலில் இன்று!
ஜஃப்லாங் பார்டரில் இந்திய சுற்றுலாப் பயணிகள் மீது கல் வீச்சு.. தாக்கிய வங்கதேச பயணிகள்? ஏன்?
ஜஃப்லாங் பார்டரில் இந்திய சுற்றுலாப் பயணிகள் மீது கல் வீச்சு.. தாக்கிய வங்கதேச பயணிகள்? ஏன்?
LSG vs CSK: பிசிசிஐ கண்ணில் சிக்கிய கே.எல்.ராகுல் - ருதுராஜ்.. தலா ரூ.12 லட்சம் அபராதம் விதிப்பு.. என்ன காரணம்?
பிசிசிஐ கண்ணில் சிக்கிய கே.எல்.ராகுல் - ருதுராஜ்.. தலா ரூ.12 லட்சம் அபராதம் விதிப்பு.. என்ன காரணம்?
Lok Sabha Election 2024: 69.46 சதவீத வாக்குப்பதிவு.. தமிழ்நாட்டில் எந்த தொகுதியில் எத்தனை சதவீதம்?
69.46 சதவீத வாக்குப்பதிவு.. தமிழ்நாட்டில் எந்த தொகுதியில் எத்தனை சதவீதம்?
Embed widget