மேலும் அறிய

கரூர்: தங்கையின் தோழியை பைக்கில் ஏற்றிச்சென்ற நண்பன்! வாண்ட்டடாக உதவிக்கு வந்த நபர் கொலை!

கரூர் அருகே  தங்கையின் தோழியை இளைஞர் பைக்கில் அழைத்து சென்ற தகராறு பேருந்து நிறுத்தத்தில் நடந்த தகராறை வேடிக்கை பார்த்த பட்டதாரி இளைஞர் உயிரிழப்பு 3 பேர் கைது.

கரூர் மாவட்டம், சின்னதாராபுரம் அருகே உள்ள நஞ்சைகாளிகுறிச்சியை சேர்ந்த ஆண்டியப்பன் மகன் மணிகண்டன் (19). இவர் கூலி வேலை செய்து வருகிறார். இவரது தங்கையும் ராஜபுரத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணும் தோழிகள். இந்த நிலையில் நஞ்சைகாளிக்குறிச்சியில் கடந்த வாரம் திருவிழா நடந்துள்ளது.  இந்த திருவிழாவிற்கு ராஜபுரத்தை சேர்த்த மணிகண்டன் தங்கையின் தோழி வந்துள்ளார். திருவிழா முடிந்ததும் அந்த பெண்ணை மணிகண்டன் தனது இருசக்கர வாகனத்தில் ராஜபுரத்தில் கொண்டு விட்டுள்ளார். அப்போது அங்கிருந்த ரவி என்பவரது மகன் மதன் (26), செந்தில்குமார் மகன் அபிஷேக் ( 19), கோவிந்தராஜ் மகன் தமிழரசன் ( 19) ஆகிய மூவரும் மணிகண்டனை எங்கள் ஊர் பெண்ணை எப்படி கூட்டிக் கொண்டு வரலாம் என எச்சரித்துள்ளனர். 

 


கரூர்: தங்கையின் தோழியை பைக்கில் ஏற்றிச்சென்ற நண்பன்! வாண்ட்டடாக உதவிக்கு வந்த நபர் கொலை!

 

பதிலுக்கு மணிகண்டனும் எச்சரித்துவிட்டு தனது வீட்டிற்கு வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை மீண்டும் ராஜபுரத்தைச் சேர்ந்த மதன் தனது செல்போனில் தொடர்புகொண்டு மணிகண்டனிடம் மீண்டும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனையடுத்து மணிகண்டன் தனது நண்பன் சின்னதாராபுரம் தன்னாசியப்பன் கோவில் தெருவைச் சேர்ந்த பாலமுருகன் மகன் சூர்யாவிடம் (19) நடந்த விவரத்தை கூறியுள்ளார். 


கரூர்: தங்கையின் தோழியை பைக்கில் ஏற்றிச்சென்ற நண்பன்! வாண்ட்டடாக உதவிக்கு வந்த நபர் கொலை!

 

இதனையடுத்து சூர்யா தனது செல்போனில் ராஜபுரத்தை சேர்ந்த நபர்களிடம் பேசியுள்ளார். இதில் வாக்குவாதம் ஏற்படுகிறது. இதனையடுத்து மீண்டும் நேற்று முன்தினம் இரவு சூர்யா தனது செல்போனில் தொடர்பு கொண்டு ராஜபுரத்தை சேர்ந்த நபர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனையடுத்து ராஜபுரத்தை சேர்ந்த மூன்று பேரும் இருசக்கர வாகனத்தில் உருட்டுக்கட்டையுடன் சின்னதாரபுரத்தை நோக்கி வந்தனர். சின்னதாராபுரம் பங்களா பஸ் நிறுத்தத்தில் இருந்த சூரியாவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு உருட்டுக்கட்டையால் அடித்துள்ளனர். அடி தாங்க முடியாமல் சூர்யா துடித்துள்ளார். 

 

 


கரூர்: தங்கையின் தோழியை பைக்கில் ஏற்றிச்சென்ற நண்பன்! வாண்ட்டடாக உதவிக்கு வந்த நபர் கொலை!

பக்கத்திலிருந்த அதே பகுதியை சேர்ந்த கருப்புசாமி மகன் அரவிந்த் (28) சம்பவத்தை தடுத்துள்ளார். அரவிந்த் முதுகலை இன்ஜினியரிங்  படித்துள்ளார். இந்த சமயத்தில் சூர்யா ஓடி ஒளிந்து உள்ளார். மதன், அபிஷேக், தமிழரசன் ஆகிய 3 பேரும் அரவிந்தை சரமாரியாக தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். வலியால் துடித்த அரவிந்தை அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் மீட்டு அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மேல் சிகிச்சைக்காக கரூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்று பார்த்த போது ஏற்கனவே இறந்ததாக டாக்டர்கள் கூறியுள்ளனர். 

 

இது போல் சிகிச்சைக்காக சூர்யாவையும் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.  அரவிந்த் உடலை போலீசார் கைப்பற்றி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து சின்னதாராபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து குற்றவாளிகள் 3 பேரையும் வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் சின்ன தாராபுரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

தலைப்பு செய்திகள்

மாறுகிறதா பரந்தூர் விமான நிலையம்? காஞ்சிபுரம், செங்கல்பட்டில் புதிய இடம் தேடும் தமிழக அரசு!
மாறுகிறதா பரந்தூர் விமான நிலையம்? காஞ்சிபுரம், செங்கல்பட்டில் புதிய இடம் தேடும் தமிழக அரசு!
கர்நாடகாவில் 3 தமிழர்கள் சுட்டுக்கொலை: சிபிஐ விசாரணை கோர தமிழக அரசுக்கு அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
கர்நாடகாவில் 3 தமிழர்கள் சுட்டுக்கொலை: சிபிஐ விசாரணை கோர தமிழக அரசுக்கு அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
Temple Trustee : 3,769 கோயில்களுக்கு அறங்காவலர்கள் நியமிக்க போறாங்க.! தகுதி என்ன.? விண்ணப்பம் செய்வது எப்படி.?
3,769 கோயில்களுக்கு அறங்காவலர்கள் நியமிக்க போறாங்க.! தகுதி என்ன.? விண்ணப்பம் செய்வது எப்படி.?
சும்மா சொல்லல.. 3 துறைகளில் ஊழல்.. எடுத்து விட்டால் அவ்வளவுதான்.. திமுகவுக்கு விஜய் வார்னிங்
சும்மா சொல்லல.. 3 துறைகளில் ஊழல்.. எடுத்து விட்டால் அவ்வளவுதான்.. திமுகவுக்கு விஜய் வார்னிங்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: ”எல்லாம் கொடுக்கிறேன், லஞ்சம் மட்டும் வாங்காதீங்க” MLA-க்களுக்கு கார் அறிவித்து CM விஜய் கோரிக்கை
”எல்லாம் கொடுக்கிறேன், லஞ்சம் மட்டும் வாங்காதீங்க” MLA-க்களுக்கு கார் அறிவித்து CM விஜய் கோரிக்கை
Aavin Milk Price: ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்தி அறிவித்த CM விஜய் - ஒரு லிட்டருக்கு எவ்வளவு தெரியுமா?
ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்தி அறிவித்த CM விஜய் - ஒரு லிட்டருக்கு எவ்வளவு தெரியுமா?
நடுத்தர SUV போர்; டாடா சியரா வருகையால் கியா செல்டோஸ்-க்கு கடும் போட்டி!- யாருக்கு முதலிடம்?
நடுத்தர SUV போர்; டாடா சியரா வருகையால் கியா செல்டோஸ்-க்கு கடும் போட்டி!- யாருக்கு முதலிடம்?
சிபிஐ, சிபிஎம் என்ன தடை செய்யப்பட்ட அமைப்புகளா? - வட்டாட்சியர் செயலுக்கு அன்புமணி ராமதாஸ் கொந்தளிப்பு!
சிபிஐ, சிபிஎம் என்ன தடை செய்யப்பட்ட அமைப்புகளா? - வட்டாட்சியர் செயலுக்கு அன்புமணி ராமதாஸ் கொந்தளிப்பு!
CM Joseph Vijay: பெரம்பூரில் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை.. 7 புதிய செவிலியர் கல்லூரிகள்.. அறிவிப்புகளை அள்ளி வீசிய முதலமைச்சர்!
CM Joseph Vijay: பெரம்பூரில் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை.. 7 புதிய செவிலியர் கல்லூரிகள்.. அறிவிப்புகளை அள்ளி வீசிய முதலமைச்சர்!
Free Health Insurance: அடி தூள்.! இலவசமாக ரூ.25 லட்சத்திற்கு மருத்துவ காப்பீடு- விண்ணப்பிப்பது எப்படி? தேவையான ஆவணங்கள் என்ன?
அடி தூள்.! இலவசமாக ரூ.25 லட்சத்திற்கு மருத்துவ காப்பீடு- விண்ணப்பிப்பது எப்படி? தேவையான ஆவணங்கள் என்ன?
Thirumavalavan: மரண பயத்தை காட்டிய தொண்டர்கள்.. நொந்துபோன திருமாவளவன்.. வீடியோ மூலம் விளக்கம்!
Thirumavalavan: மரண பயத்தை காட்டிய தொண்டர்கள்.. நொந்துபோன திருமாவளவன்.. வீடியோ மூலம் விளக்கம்!
பறக்கும் ரயில் மெட்ரோ ரயிலாக மாறுது.! பீச், வேளச்சேரி, பரங்கிமலையில் புதிய திட்டம்- என்ன தெரியுமா.?
பறக்கும் ரயில் மெட்ரோ ரயிலாக மாறுது.! பீச், வேளச்சேரி, பரங்கிமலையில் புதிய திட்டம்- என்ன தெரியுமா.?
Embed widget