மேலும் அறிய

முன்னாள் டிஜிபி மீதான பாலியல் தொல்லை வழக்கு ; தீர்ப்பு தேதியை அறிவித்த நீதிபதி

பெண் எஸ்பிக்கு முன்னாள் சிறப்பு டி.ஜி.பி. பாலியல் தொல்லை அளித்ததாக தொடரப்பட்ட வழக்கில் 16-ந் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்று நீதிபதி அறிவித்துள்ளார்.

விழுப்புரம்: பெண் எஸ் பிக்கு அதிகாரிக்கு முன்னாள் சிறப்பு டி.ஜி.பி. பாலியல் தொல்லை அளித்ததாக தொடரப்பட்ட வழக்கில் அரசு மற்றும் குற்றம் சாட்டப்பட்டவர்களின் தரப்பு வழக்கறிஞர்கள் தங்கள் வாதங்களை எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்ததையடுத்து இவ்வழக்கில் வருகின்ற 16-ந் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்று நீதிபதி அறிவித்துள்ளார்.

தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கடந்த 2021-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 21-ந் தேதி டெல்டா மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தார். அப்போது பாதுகாப்பு ஏற்பாடுகளை கண்காணிக்கும் பணியில் அப்போதைய சட்டம்-ஒழுங்கு சிறப்பு டி.ஜி.பி ராஜேஸ் தாஸ் நியமிக்கப்பட்டு பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது  பாதுகாப்பு ஆலோசனை என்ற பெயரில் பெண் எஸ்பியிடம் முன்னாள் சிறப்பு டிஜிபி காரில் அழைத்து கொண்டு சென்றபோது, பெண் எஸ்பியிடம் பாலியல் தொல்லை அளித்ததாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து  பாதிக்கப்பட்ட  பெண் எஸ்பி தன்னிடம் அத்துமீறிய சிறப்பு டி.ஜி.பி. மீது  ஒழுங்கு நடவடிக்கை எடுத்து சட்டப்பூர்வநடவடிக்கை எடுக்க வேண்டும் என்று  ஐ.பி.எஸ். அதிகாரி, தமிழக அரசின் உள்துறை செயலாளர் மற்றும் அப்போதைய போலீஸ் டி.ஜி.பி. திரிபாதி ஆகியோரிடம் புகார் அளித்தார்.

இந்த புகாரின்பேரில் சிறப்பு டி.ஜி.பி. பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இந்த புகார் தொடர்பாக சிறப்பு டி.ஜி.பி. மற்றும் அவரது உத்தரவின்படி பெண் ஐ.பி.எஸ். அதிகாரியை மிரட்டி கார் சாவியை பறித்த செங்கல்பட்டு மாவட்ட முன்னாள் எஸ்பி  ஆகியோர் மீது 4 பிரிவுகளின் கீழ் விழுப்புரம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இவ்வழக்கு விசாரணை விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தன. இவ்வழக்கில் அரசு தரப்பில் சாட்சிகளாக சேர்க்கப்பட்ட 68 சாட்சிகளின் விசாரணை கடந்த ஏப்ரல் மாதம் 13-ந் தேதியன்று நிறைவடைந்ததால் இவ்வழக்கு இறுதிக்கட்டத்தை எட்டியது. அதுபோல் இவ்வழக்கில் குற்றச்சாட்டுகள் தொடர்பாக அரசு தரப்பு சாட்சிகள் அளித்துள்ள சாட்சியங்கள் குறித்தும், அந்த குற்றச்சாட்டுகள் அரசு தரப்பில் எந்த வகையில் நிரூபணம் செய்யப்பட்டுள்ளது என்பது குறித்தும் அரசு தரப்பின் வாதம் கடந்த வாரம் முடிவடைந்தது.

அதுபோல் முன்னாள் சிறப்பு டி.ஜி.பி., செங்கல்பட்டு மாவட்ட முன்னாள் எஸ்பி  தரப்பு வழக்கறிஞர்கள்  தங்கள் தரப்பு வாதங்களை முன்வைத்தனர். இந்த வாதங்கள் முடிந்த நிலையில் அதன் விவரங்களை இரு தரப்பு வழக்கறிஞர்களும் எழுத்துப்பூர்வமாக சமர்பிக்கும்படி நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில் இன்று இவ்வழக்கு விசாரனைக்கு வந்தபோது  முன்னாள் சிறப்பு டி.ஜி.பி. ஆஜரானார். செங்கல்பட்டு மாவட்ட முன்னாள் எஸ்பி ஆஜராகவில்லை. அவர் ஆஜர் ஆகாததற்கான காரணம் குறித்து மனுதாக்கல் செய்யப்பட்டது. அம்மனுவை நீதிபதி ஏற்றுக்கொண்டார். அதனை தொடர்ந்து, அரசு தரப்பு வழக்கறிஞர் வைத்தியநாதன், ரவிச்சந்திரன் ஆகியோர் நேரில் ஆஜராகி தங்கள் தரப்பில் முன்வைக்கப்பட்ட வாதங்களை 61 பக்கங்கள் கொண்ட வாதுரையாக நீதிபதி புஷ்பராணி முன்னிலையில் எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்தனர்.

அதன் பிறகு முன்னாள் சிறப்பு டி.ஜி.பி. தரப்பில் வழக்கறிஞர் ரவீந்திரனும், செங்கல்பட்டு மாவட்ட முன்னாள் எஸ்பி தரப்பில் வழக்கறிஞர் ஹேமராஜனும் நேரில் ஆஜராகி தங்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்ட வாதங்களை தாக்கல் செய்தனர். இதனையடுத்து இவ்வழக்கை விசாரித்த தலைமை குற்றவியல் நீதிபதி புஷ்பராணி, வருகிற 16-ந் தேதி (வெள்ளிக்கிழமை) இவ்வழக்கில் தீர்ப்பு வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.
கடந்த 2 வருடமாக மிகவும் விறுவிறுப்பாகவும், பரபரப்பாகவும் நடந்து வந்த இவ்வழக்கில் இன்னும் 4 நாட்களில் தீர்ப்பு வெளியாக உள்ளது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
470
Active
29033
Recovered
165
Deaths
Last Updated: Sat 19 July, 2025 at 10:52 am | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

மக்களே.. தமிழ்நாட்டில் குழந்தை பிறப்பு விகிதம் தொடர் சரிவு - 5 ஆண்டுகளில் இந்தளவு சறுக்கலா?
மக்களே.. தமிழ்நாட்டில் குழந்தை பிறப்பு விகிதம் தொடர் சரிவு - 5 ஆண்டுகளில் இந்தளவு சறுக்கலா?
Nainar Nagendran: ”ஓபிஎஸ் சொல்றது எல்லாமே.. ஸ்டாலினை சந்தித்தது எப்படி?” நயினார் நாகேந்திரன் பதிலடி
Nainar Nagendran: ”ஓபிஎஸ் சொல்றது எல்லாமே.. ஸ்டாலினை சந்தித்தது எப்படி?” நயினார் நாகேந்திரன் பதிலடி
US Immigration: அடுத்த ஆப்பை கூர்படுத்தும் அமெரிக்கா - க்ரீன் கார்டா வாங்குறீங்க, போட்டேன் பாரு புது ரூல்ஸ்
US Immigration: அடுத்த ஆப்பை கூர்படுத்தும் அமெரிக்கா - க்ரீன் கார்டா வாங்குறீங்க, போட்டேன் பாரு புது ரூல்ஸ்
Coolie : டைம் டிராவல் செய்யும் ரஜினி?.. கூலி படத்தில் ரஜினி - கமல் நட்பு.. இதை கவனிச்சீங்களா?
Coolie : டைம் டிராவல் செய்யும் ரஜினி?.. கூலி படத்தில் ரஜினி - கமல் நட்பு.. இதை கவனிச்சீங்களா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

மிரட்டினாரா அருண் ஜெட்லி! உளறிய ராகுல் காந்தி? கோபமான மகன்
திமுகவில் கோஷ்டி பூசல்! மாநகராட்சி கூட்டத்தில் மோதல்! KN நேரு Vs அன்பில்! | Anbil Mahesh Vs KN Nehru
”பாமக தலைவர் அன்புமணி தான்”தேர்தல் ஆணையம் அதிரடி!கதறும் ராமதாஸ் ஆதரவாளர்கள்! | Anbumani Vs Ramadoss
பாலியல் குற்றச்சாட்டு வாய் திறந்த விஜய் சேதுபதி சைபர் க்ரைமில் புகார் | Vijay Sethupathi Sexual Harassment
DMK MLA Vs Thanga Tamilselvan | ’’ஏன்டா..டேய் ராஸ்கல் ‘’திமுக MLA vs தங்கதமிழ்ச்செல்வன் கடும் மோதல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மக்களே.. தமிழ்நாட்டில் குழந்தை பிறப்பு விகிதம் தொடர் சரிவு - 5 ஆண்டுகளில் இந்தளவு சறுக்கலா?
மக்களே.. தமிழ்நாட்டில் குழந்தை பிறப்பு விகிதம் தொடர் சரிவு - 5 ஆண்டுகளில் இந்தளவு சறுக்கலா?
Nainar Nagendran: ”ஓபிஎஸ் சொல்றது எல்லாமே.. ஸ்டாலினை சந்தித்தது எப்படி?” நயினார் நாகேந்திரன் பதிலடி
Nainar Nagendran: ”ஓபிஎஸ் சொல்றது எல்லாமே.. ஸ்டாலினை சந்தித்தது எப்படி?” நயினார் நாகேந்திரன் பதிலடி
US Immigration: அடுத்த ஆப்பை கூர்படுத்தும் அமெரிக்கா - க்ரீன் கார்டா வாங்குறீங்க, போட்டேன் பாரு புது ரூல்ஸ்
US Immigration: அடுத்த ஆப்பை கூர்படுத்தும் அமெரிக்கா - க்ரீன் கார்டா வாங்குறீங்க, போட்டேன் பாரு புது ரூல்ஸ்
Coolie : டைம் டிராவல் செய்யும் ரஜினி?.. கூலி படத்தில் ரஜினி - கமல் நட்பு.. இதை கவனிச்சீங்களா?
Coolie : டைம் டிராவல் செய்யும் ரஜினி?.. கூலி படத்தில் ரஜினி - கமல் நட்பு.. இதை கவனிச்சீங்களா?
Aadi Perukku 2025: இன்று ஆடிப்பெருக்கு.. களைகட்டிய தமிழ்நாடு.. காவிரி கரையில் திரண்ட பக்தர்கள்..!
Aadi Perukku 2025: இன்று ஆடிப்பெருக்கு.. களைகட்டிய தமிழ்நாடு.. காவிரி கரையில் திரண்ட பக்தர்கள்..!
Tamilnadu Roundup: களைகட்டிய ஆடிப்பெருக்கு கொண்டாட்டம்.. நாளை வின்ஃபாஸ்ட் தொழிற்சாலை தொடக்கம் - தமிழகத்தில் இதுவரை
Tamilnadu Roundup: களைகட்டிய ஆடிப்பெருக்கு கொண்டாட்டம்.. நாளை வின்ஃபாஸ்ட் தொழிற்சாலை தொடக்கம் - தமிழகத்தில் இதுவரை
TN weather Report: வீக் எண்ட் போச்சா? 16 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை, சென்னை வானிலை நிலவரம் என்ன?
TN weather Report: வீக் எண்ட் போச்சா? 16 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை, சென்னை வானிலை நிலவரம் என்ன?
IND vs ENG: இன்னும் 9 விக்கெட்டுதான்.. கடைசி டெஸ்டில் வெல்லுமா இந்தியா? அசத்துமா இந்திய பவுலிங்..?
IND vs ENG: இன்னும் 9 விக்கெட்டுதான்.. கடைசி டெஸ்டில் வெல்லுமா இந்தியா? அசத்துமா இந்திய பவுலிங்..?
Embed widget