மேலும் அறிய

தொடரும் சோதனை... மாறி மாறி படையெடுக்கும் முன்னாள் அமைச்சர்கள்... விடாப்படியாக நிற்கும் போலீஸ்!

ஸ்டாலின் அவர் தந்தை கருணாநிதிக்கு ஒருபடி மேலே சென்று பழிவாங்கும் போக்கை கடைபிடிக்கிறார். அதிமுகவின் முன்னணி தலைவர்களை வழக்குகள் தொடர்ந்து அழித்து விடலாம் என இந்த அரசு தவறாக நினைத்துக் கொண்டிருக்கிறது.

அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மற்றும் விஜயபாஸ்கர் ஆகியோருக்கு சொந்தமான இடங்களில் இன்று காலை முதல் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். 

இந்நிலையில் முன்னதாக விஜயபாஸ்கர் வீட்டுக்கு சி.வி.சண்முகமும், எஸ்.பி.வேலுமணி வீட்டுக்கு ஜெயக்குமாரும் முன்னதாக வந்தனர். ஆனால் அவர்களை போலீஸ் தடுத்து நிறுத்தினர். போலீசாருடன் சி.வி.சண்முகம், ஜெயக்குமார் ஆகியோர் தனித்தனியாக வாக்குவாதம் செய்தனர். 

அப்போது பேசிய  சி.வி.சண்முகம், “இந்த சோதனை முழுக்க முழுக்க அரசியல் காழ்ப்புணர்ச்சியால் மேற்கொள்ளப்பட்ட பழிவாங்கும் நடவடிக்கை. ஏற்கெனவே 2 முறை சோதனை நடத்தி எந்த ஆவணமும் தாக்கல் செய்ய முடியாத நிலையில், இன்று புதிய வழக்குகள் மூலம் சோதனை என்ற பெயரில் இந்த அரசு எதிர்க்கட்சிகளை அடக்கி ஒடுக்கி அழிக்கலாம் என நினைக்கிறது.

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by ABP Nadu (@abpnadu)

ஆளத் தெரியாத முதலமைச்சராக இருக்கும் ஸ்டாலின் அவர் தந்தை கருணாநிதிக்கு ஒருபடி மேலே சென்று பழிவாங்கும் போக்கை கடைபிடிக்கிறார். அதிமுகவின் முன்னணி தலைவர்களை வழக்குகள் தொடர்ந்து அழித்து விடலாம் என இந்த அரசு தவறாக நினைத்துக் கொண்டிருக்கிறது.

மக்களுக்கு கொடுத்த பல்வேறு வாக்குறுதிகளை நிறைவேற்ற திறனில்லாத அரசாக திமுக அரசு உள்ளது. ஜெயலலிதாவின் அரசில் எடப்பாடி பழனிசாமியால் பல்வேறு ஏழை, எளிய பெண்கள், முதியவர்கள், குழந்தைகள், தாழ்த்தப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்ட பல்வேறு சலுகைகளை திமுக அரசு நிறுத்தியுள்ளது.

குறிப்பாக பெண்களுக்கு தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தை இந்த அரசு ரத்து செய்திருக்கிறது. இன்னும் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்க திராணியில்லை. அவர்களது அமைச்சர் உதயநிதியின் ரசிகர் மன்றத்துடன் தியேட்டர்களுக்கு சென்று டிக்கெட் விற்று கொண்டிருக்கிறார்.

விலைவாசி கடுமையாக உயர்ந்திருக்கிறது. சொத்து வரி 150 விழுக்காடு உயர்த்தப்பட்டுள்ளது. கொரோனாவிலிருந்து மீண்டு வந்த மக்களை மேலும் சோதிக்கும் வகையில் தமிழ்நாடு அரசு பல்வேறு மக்கள் விரோத நடவடிக்கைகளை மேற்கொள்கிறது.

பால் விலை, மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. மாதாமாதம் மின் கட்டணத்தை கணக்கெடுப்போம் என்று சொல்லிவிட்டு இரண்டு மடங்காக விலையை உயர்த்தியுள்ளனர். பேருந்து கட்டணம் உயர்வு என்ற மகிழ்ச்சியான செய்தியை சில நாள்களில் சொல்வார்கள்.

கோவையில் வேலுமணி மீது ஏன் வழக்கு போடுகிறார்கள்? கோவையில் ஒருங்கிணைந்த பேருந்த நிலையம் அமைக்க இடம் தேர்ந்தெடுக்கப்பட்டு எங்கள் ஆட்சியில் கிட்டதட்ட 70 கோடி ரூபாய்க்கு பணிகள் முடிவடைந்து விட்டன, ஆனால் ஆட்சி மாற்றத்தின் பிறகு வேறு இடத்துக்கு பேருந்து நிலையத்தை மாற்றப் போவதாக அறிவிக்கிறார்கள்.

நவீன முறையில் ஒரு குடும்பம் நாட்டை கொள்ளையடித்துக் கொண்டிருக்கிறது. ஜெயலலிதாவை ஆடம்பர திருமணம் நடத்தி வைத்தார் என்று சொன்னார்கள் ஆனால் இன்று மதுரையில் 2000 ஆடுகளை வெட்டி, 25 பணம் எண்ணும் மெஷின் கொண்டு பணம் எண்ணி மொய் வசூலிக்கிறார்கள்” எனத் தெரிவித்துள்ளார்.

அதேபோல் முன்னதாகப் பேசிய ஜெயக்குமார், ”முதலமைச்சர் காவல்துறையை தனது கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டு அதிமுகவை ஒழித்துக் கட்டும் நோக்கில் செயல்பட்டு வருகிறார். எதிர்க் கட்சிகள் செயல்படாமல் இருக்க காவல்துறையை ஏவல்துறையாக பயன்படுத்துகின்றனர். மின்சார கட்டண உயர்வை திசை திருப்பவே இந்த ரெய்டு நடத்தப்படுகிறது” என்றார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

PM Modi:அடுத்த 5 ஆண்டுகள் வறுமையை ஒழிக்க பாடுபடுவோம் - நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி பேச்சு!
அடுத்த 5 ஆண்டுகள் வறுமையை ஒழிக்க பாடுபடுவோம் - நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி பேச்சு!
TVK Vijay: திமுக வழியில் நடிகர் விஜய்! நீட் விவகாரத்தில் கொந்தளித்த தளபதி!
TVK Vijay: திமுக வழியில் நடிகர் விஜய்! நீட் விவகாரத்தில் கொந்தளித்த தளபதி!
அரசு வேலை வாங்கித் தருவதாக  ரூ. 5 லட்சம் மோசடி - போலி நிருபர் கைது
அரசு வேலை வாங்கித் தருவதாக  ரூ. 5 லட்சம் மோசடி - போலி நிருபர் கைது
Breaking News LIVE: கடந்த 10 ஆண்டுகளை விட, அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவின் வளர்ச்சி வேகமாக இருக்கும் - பிரதமர் மோடி
Breaking News LIVE: கடந்த 10 ஆண்டுகளை விட, அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவின் வளர்ச்சி வேகமாக இருக்கும் - பிரதமர் மோடி
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Hathras satsang : ஆன்மிக நிகழ்வில் சோகம்! அதிகரிக்கும் உயிரிழப்புகள்! நடந்தது என்ன?Anurag Thakur INDIA Alliance : Constitution-ல எத்தனை பக்கம் இருக்கு தெரியுமா? திகைத்து போன I.N.D.I.AVillupuram Kallasarayam | மீண்டும் கள்ளச்சாரயம்..பட்டப்பகலில் ஆசாமி அலப்பறை விழுப்புரத்தில் பரபரப்புBJP Cadre cheating | ”பணத்தை ஆட்டைய போட்டபாஜக நிர்வாகி!” கதறும் பெண்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
PM Modi:அடுத்த 5 ஆண்டுகள் வறுமையை ஒழிக்க பாடுபடுவோம் - நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி பேச்சு!
அடுத்த 5 ஆண்டுகள் வறுமையை ஒழிக்க பாடுபடுவோம் - நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி பேச்சு!
TVK Vijay: திமுக வழியில் நடிகர் விஜய்! நீட் விவகாரத்தில் கொந்தளித்த தளபதி!
TVK Vijay: திமுக வழியில் நடிகர் விஜய்! நீட் விவகாரத்தில் கொந்தளித்த தளபதி!
அரசு வேலை வாங்கித் தருவதாக  ரூ. 5 லட்சம் மோசடி - போலி நிருபர் கைது
அரசு வேலை வாங்கித் தருவதாக  ரூ. 5 லட்சம் மோசடி - போலி நிருபர் கைது
Breaking News LIVE: கடந்த 10 ஆண்டுகளை விட, அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவின் வளர்ச்சி வேகமாக இருக்கும் - பிரதமர் மோடி
Breaking News LIVE: கடந்த 10 ஆண்டுகளை விட, அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவின் வளர்ச்சி வேகமாக இருக்கும் - பிரதமர் மோடி
Vijay Speech: ஜாலியா படிங்க, ஸ்ட்ரெஸ் ஆகாதீங்க; கொட்டிக்கிடக்கும் வாய்ப்புகள்- விஜய் அட்வைஸ்!
ஜாலியா படிங்க, ஸ்ட்ரெஸ் ஆகாதீங்க; கொட்டிக்கிடக்கும் வாய்ப்புகள்- விஜய் அட்வைஸ்!
’என்னை மன்னித்து விடுங்கள் ஒரு மாதத்தில் திருப்பி தந்துவிடுகிறேன்’ - திருடனின் உருக்கமான கடிதம்
’என்னை மன்னித்து விடுங்கள் ஒரு மாதத்தில் திருப்பி தந்துவிடுகிறேன்’ - திருடனின் உருக்கமான கடிதம்
Group 1 Exam Hall Ticket: டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு; பெறுவது எப்படி?
Group 1 Exam Hall Ticket: டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு; பெறுவது எப்படி?
Gautam Gambhir: 1 ரன்னில் தோற்ற இந்தியா! இரவு முழுவதும் கதறி அழுத கவுதம் கம்பீர்!
Gautam Gambhir: 1 ரன்னில் தோற்ற இந்தியா! இரவு முழுவதும் கதறி அழுத கவுதம் கம்பீர்!
Embed widget