மேலும் அறிய

Erode Palani Rail: 20 ஆண்டுகால கனவு.. ஈரோடு - பழனி இடையே புதிய ரயில் பாதை.. எப்போது தொடங்குகிறது பணிகள்?

ஈரோடு - பழனி இடையேயான புதிய ரயில் பாதையை அமைக்க 50 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. ஈரோட்டில் இருந்து சென்னிமலை, காங்கேயம், பெருந்துறை, தாராபுரம், தொப்பம்பட்டி வழியாக பழநியை வந்தடையும் வகையில் அமைக்க ரயில் பாதை முடிவு செய்யப்பட்டது. 

New Railway line: 20 ஆண்டுகளுக்கு மேல் தாமதிக்கப்பட்டு வந்த ஈரோடு - பழனி இடையேயான புதிய ரயில் பாதையை அமைக்க 50 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இதை தவிர, மகாபலிபுரம் வழியாக சென்னை - கடலூர் இடையேயான புதிய ரயில் பாதையை அமைக்க 52.1 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. அதேபோல், அருப்புக்கோட்டை வழியாக மதுரை - தூத்துக்குடி இடையேயான புதிய ரயில் பாதைக்கு 55.2 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. 

வருகிறது புதிய ரயில் பாதைகள் - New Railway Projects

புதிய ரயில் பாதைகளை அமைக்கவும், ஒரு வழி ரயில் பாதையை இரு வழி ரயில் பாதையாக மாற்றவும் போதுமான நிதி ஒதுக்கப்படவில்லை என மத்திய பாஜக அரசு மீது தமிழக அரசு தொடர் குற்றச்சாட்டு சுமத்தி வருகிறது. தங்களின் ஊர்களில் புதிய ரயில் பாதைகளை அமைக்க ரயில்வே நிதி ஒதுக்குவதில்லை என பொது மக்களும் புகார் கூறி வருகின்றனர். 

இந்த நிலையில், கடந்த நிதியாண்டை விட 2025-26 நிதியாண்டில் தமிழ்நாட்டுக்கு இந்தியன் ரயில்வே அதிக நிதி ஒதுக்கியுள்ளது. தமிழ்நாட்டுக்கு இந்தாண்டு மொத்தமாக 6,626 கோடி ரூபாய் ரயில்வே நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதிலிருந்து 612.8 கோடி ரூபாய் 8 புதிய ரயில் பாதைகளை அமைக்க பயன்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈரோடு, பழனி ரயில் பாதை - Erode Palani New Railway line

குறிப்பாக, 20 ஆண்டுகளுக்கு மேல் தாமதமாகி வந்த ஈரோடு - பழனி இடையேயான புதிய ரயில் பாதையை அமைக்க 50 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த ரயில் பாதையை கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகர் வரை நீட்டிக்க திட்டமிடப்பட்டது. ஆனால், இறுதியாக, ஈரோட்டில் இருந்து சென்னிமலை, காங்கேயம், பெருந்துறை, தாராபுரம், தொப்பம்பட்டி வழியாக பழநியை வந்தடையும் வகையில் அமைக்க ரயில் பாதை முடிவு செய்யப்பட்டது. 

இதை தவிர, ஆந்திரப் பிரதேசம் மாநிலம் நகரியில் இருந்து திண்டிவனம் வரையிலான புதிய ரயில் பாதை திட்டத்திற்கு 95% நிலம் ஏற்கனவே கையகப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு, ரூ. 347 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் ராணிப்பேட்டை, வேலூர், திருவள்ளூர், திருவண்ணாமலை மற்றும் விழுப்புரம் மாவட்டங்கள் மற்றும் ஆந்திரப் பிரதேசத்தில் சித்தூர் மாவட்டம் முழுவதும் இணைக்கும் வகையில் இந்த ரயில் பாதை திட்டமிடப்பட்டுள்ளது. அடுத்த மூன்று ஆண்டுகளுக்குள், இந்த திட்டம் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

RTI மூலம் கிடைத்த தகவல்கள்:

காட்பாடியில் இருந்து விழுப்புரம் (160 கி.மீ) வரையிலான ரயில் பாதைக்கு ரூ. 200 கோடியும், சேலம் - கரூர் - திண்டுக்கல் (160 கி.மீ) மற்றும் ஈரோடு - கரூர் (65 கி.மீ) ரயில் பாதைகளுக்கு தலா ரூ.100 கோடியும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

நிதி பற்றாக்குறையால் கடந்த ஆண்டு நிலம் கையகப்படுத்தும் தொடங்கப்படாமல் இருந்த மதுரை - தூத்துக்குடி (அருப்புக்கோட்டை வழியாக) ரயில் பாதை திட்டத்திற்கு (143.5 கி.மீ) ரூ. 55.2 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. மகாபலிபுரம் வழியாக சென்னை - கடலூர் இடையேயான புதிய ரயில் பாதையை அமைக்க 52.1 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

எந்த ரயில் திட்டத்திற்கு எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டது என்பது தொடர்பான விவரங்களை தகவல் அறியும் உரிமை சட்டத்தின் (RTI) கீழ் பெற்றுள்ளார் சமூக ஆர்வலர் தயானந்த் கிருஷ்ணன். இதுகுறித்து அவர் பேசுகையில், "உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்கான பட்ஜெட்டை அதிகரிப்பது ரயில்வேயின் வரவேற்கத்தக்க நடவடிக்கையாகும். பல ஆண்டுகளாக, தமிழ்நாட்டில் புதிய பாதைத் திட்டங்கள் தொடங்கத் தவறிவிட்டன.

பழனி - ஈரோடு மற்றும் சென்னை-கடலூர் போன்ற வழித்தடங்களுக்கு இப்போது நிதி ஒதுக்கப்பட்டுள்ளதால், தமிழ்நாடு அரசு நிலம் கையகப்படுத்தும் பணியைத் தொடங்கலாம். இருப்பினும், வரும் ஆண்டுகளில் ரயில்வே அதிக நிதியை ஒதுக்க வேண்டும்" என்றார்.

 

About the author சுதர்சன்

Rookie Journalist. Writes on National, International, Politics, Human rights and Judiciary. Covered 2019 General Election, Apex Court Ayodhya judgement, 2021 Five state election, Pegasus etc.  
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

UGC: இனி கல்லூரிகளிலும் மும்மொழிக் கொள்கை; யுஜிசி உத்தரவு- தமிழ்நாட்டில் எப்படி?
UGC: இனி கல்லூரிகளிலும் மும்மொழிக் கொள்கை; யுஜிசி உத்தரவு- தமிழ்நாட்டில் எப்படி?
பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு குஷி; இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது- வெளியான முக்கிய அறிவிப்பு- யார் யாருக்கெல்லாம்?
பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு குஷி; இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது- வெளியான முக்கிய அறிவிப்பு- யார் யாருக்கெல்லாம்?
IND vs SA 1st T20:டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா.. மேட்ச்சை ஜெயிக்குமா இந்தியா? பேட்டிங் செய்யும் சூர்யா பாய்ஸ்
IND vs SA 1st T20:டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா.. மேட்ச்சை ஜெயிக்குமா இந்தியா? பேட்டிங் செய்யும் சூர்யா பாய்ஸ்
சாதனை படைத்த வந்தாரா! அனந்த் அம்பானிக்கு கிடைத்த பெருமை! விலங்கு நலனுக்காக உலகளாவிய அங்கீகாரம்..
சாதனை படைத்த வந்தாரா! அனந்த் அம்பானிக்கு கிடைத்த பெருமை! விலங்கு நலனுக்காக உலகளாவிய அங்கீகாரம்..
ABP Premium

வீடியோ

Kanchi Ekambareswarar Temple Kumbabishekam | காஞ்சி ஏகாம்பரநாதர் கோயில்மகா கும்பாபிஷேக விழா!
KN NEHRU ED | ’’உடனே FIR போடுங்க!’’நெருக்கும் அமலாக்கத்துறைசிக்கலில் K.N.நேரு?
பல்லத்தில் கவிழ்ந்த கார் ஒரே குடும்பத்தில் மூவர் பலிபதற வைக்கும் காட்சி | Villupuram Accident News
“என் கல்யாணம் நின்னுருச்சு” இது தான் காரணம்? ஸ்மிருதி மந்தனா பகீர் பதிவு | Palash Muchchal Smriti Mandhana Marriage Called Off
Sabareesan Meet Rahul | DEAL-ஐ முடித்த சபரீசன்! OK சொன்ன ராகுல்.. பிரவீன் சக்ரவர்த்தி அதிர்ச்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
UGC: இனி கல்லூரிகளிலும் மும்மொழிக் கொள்கை; யுஜிசி உத்தரவு- தமிழ்நாட்டில் எப்படி?
UGC: இனி கல்லூரிகளிலும் மும்மொழிக் கொள்கை; யுஜிசி உத்தரவு- தமிழ்நாட்டில் எப்படி?
பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு குஷி; இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது- வெளியான முக்கிய அறிவிப்பு- யார் யாருக்கெல்லாம்?
பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு குஷி; இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது- வெளியான முக்கிய அறிவிப்பு- யார் யாருக்கெல்லாம்?
IND vs SA 1st T20:டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா.. மேட்ச்சை ஜெயிக்குமா இந்தியா? பேட்டிங் செய்யும் சூர்யா பாய்ஸ்
IND vs SA 1st T20:டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா.. மேட்ச்சை ஜெயிக்குமா இந்தியா? பேட்டிங் செய்யும் சூர்யா பாய்ஸ்
சாதனை படைத்த வந்தாரா! அனந்த் அம்பானிக்கு கிடைத்த பெருமை! விலங்கு நலனுக்காக உலகளாவிய அங்கீகாரம்..
சாதனை படைத்த வந்தாரா! அனந்த் அம்பானிக்கு கிடைத்த பெருமை! விலங்கு நலனுக்காக உலகளாவிய அங்கீகாரம்..
கொந்தளித்த விவசாயிகள்.. பரபரப்பில் மயிலாடுதுறை..
கொந்தளித்த விவசாயிகள்.. பரபரப்பில் மயிலாடுதுறை..
TVK VIJAY: முதல்வர் பதவிக்கு ஆசைப்பட்ட புஸ்ஸி ஆனந்த்.! புதுச்சேரியில் திடீர் டென்சன் ஆன விஜய்- நடந்தது என்ன.?
முதல்வர் பதவிக்கு ஆசைப்பட்ட புஸ்ஸி ஆனந்த்.! புதுச்சேரியில் திடீர் டென்சன் ஆன விஜய்- நடந்தது என்ன.?
எஸ்பிபி-க்கு ஏற்பட்ட உடல்நலக்குறைவால் உதயமான ஜாம்பவான் பாடகர் - யாரு தெரியுமா? எப்படி?
எஸ்பிபி-க்கு ஏற்பட்ட உடல்நலக்குறைவால் உதயமான ஜாம்பவான் பாடகர் - யாரு தெரியுமா? எப்படி?
புதுச்சேரியிலும் தவெக கொடி பறக்கும் .! ரங்கசாமியை விட்டு விட்டு பாஜகவை விளாசிய விஜய்
புதுச்சேரியிலும் தவெக கொடி பறக்கும் .! ரங்கசாமியை விட்டு விட்டு பாஜகவை விளாசிய விஜய்
Embed widget