மேலும் அறிய

Erode East By Election 2023: ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ்தான் போட்டியிடும்- கே.எஸ். அழகிரி

ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ்தான் போட்டியிடும் என காங்கிரஸ் மாநில தலைவர் கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார்.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ்தான் போட்டியிடும் என காங்கிரஸ் மாநில தலைவர் கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார். 

ஈரோடு கிழக்கு தொகுதியில், காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வென்ற திருமகன் ஈவேரா, மாரடைப்பு காரணமாக காலமானதால், அந்தத்தொகுதிக்கு தற்போது தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் அறிவிப்பு:

காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வென்ற திருமகன் ஈவேரா, மாரடைப்பு காரணமாக காலமானதால், அந்தத்தொகுதிக்கு தற்போது தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி மாதம் 27-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. அதற்கான வேட்பு மனுத் தாக்கல் வரும் 31-ம் தேதி தொடங்கி, அடுத்த மாதம் 7-ம் தேதி வரை நடைபெறுகிறது. பிப்ரவரி 27-ம் தேதி வாக்குப்பதிவும், மார்ச் மாதம் 2-ம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 

இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் மாநில தலைவர் கே.எஸ். அழகிரி,

”காங்கிரஸ்தான் போட்டியிடும்”

ஈரோடு எங்கள் தொகுதி, நாங்கள் நின்ற தொகுதி, வென்ற தொகுதி , ஆகையால் இடைத்தேர்தலில் காங்கிரஸ்தான் போட்டியிடும் என்று அழகிரி தெரிவித்தார். இது குறித்து தோழமை கட்சிகளான திமுக, விசிக, மதிமுக உள்ளிட்ட கட்சிகளிடம் ஆதரவு தருமாறு கேட்க இருக்கிறோம். இன்று மாலை, இவர்களை சந்தித்து பேச இருக்கிறோம் எனவும் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் அழகிரி தெரிவித்தார்.

ஆளும் கட்சியாக இருக்கும் திமுக, இந்த தொகுதியில் போட்டியிடப்போவது யார் என்பது குறித்து தீவிர ஆலோசனை செய்து வருகிறது. ஏற்கனவே இந்த தொகுதியில் காங்கிரஸ் போட்டியிட்டு வெற்றி பெற்றதால், இடைதேர்தலிலும்  காங்கிரஸ் போட்டியிட அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

இந்தச்சூழலில், திருமகனின் தந்தையும் தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னணி தலைவர்களில் ஒருவருமான ஈவிகேஎஸ் இளங்கோவனே, அந்தத்தொகுதியில் போட்டியிட முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த இடைத்தேர்தலை பொறுத்தமட்டில், மறைந்த திருமகனின் தந்தை ஈவிகேஎஸ் இளங்கோவனோ அல்லது திருமகனின் மனைவி பூர்ணிமாவோ போட்டியிடுவதாக இருந்தால், காங்கிரஸ் கட்சிக்கு அந்தத் தொகுதியை  ஒதுக்குவது என்றும் அவர்கள் போட்டியிடவில்லை என்றால், திமுக-வே நேரடியாக களமிறங்கலாம் என்றும் திமுக தலைமையகம் தீர்மானித்திருந்தது.

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by ABP Nadu (@abpnadu)

அதற்கேற்ப ஈரோடு திமுக-வினரும் தேர்தல் பணிக்கான ஆயத்தப்பணிகளில் ஈடுபட்டிருந்தனர். தமிழக காங்கிரஸும் ஈவிகேஸ் இளங்கோவன் போட்டியிட வேண்டும் என அழுத்தம் கொடுத்து வந்ததாகத் தெரிகிறது.

இந்நிலையில், இன்று மாலையோ அல்லது ஒரு சில நாட்களிலோ உறுதியான தகவல்கள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் காண
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

IPL 2025 RCB vs RR: சொந்த மண் சோகத்திற்கு முடிவு கட்டிய குருணல், ஹேசில்வுட்! த்ரில் போட்டியில் ஆர்சிபி அபார வெற்றி!
IPL 2025 RCB vs RR: சொந்த மண் சோகத்திற்கு முடிவு கட்டிய குருணல், ஹேசில்வுட்! த்ரில் போட்டியில் ஆர்சிபி அபார வெற்றி!
Sindhu River: சிந்து நதிநீர் ஏன் பாகிஸ்தானுக்கு இவ்வளவு முக்கியம்? அடிமடியிலே கை வைத்த இந்தியா!
Sindhu River: சிந்து நதிநீர் ஏன் பாகிஸ்தானுக்கு இவ்வளவு முக்கியம்? அடிமடியிலே கை வைத்த இந்தியா!
52 ஆண்டுகளுக்கு பிறகும் தீரா காதல்;  மனைவிக்கு பிஎம்டபிள்யூ கார் பரிசளித்த இயக்குநர் எஸ் ஏ சந்திரசேகர்!
52 ஆண்டுகளுக்கு பிறகும் தீரா காதல்; மனைவிக்கு பிஎம்டபிள்யூ கார் பரிசளித்த இயக்குநர் எஸ் ஏ சந்திரசேகர்!
IPL 2025 RCB vs RR: கதறவிட்ட கோலி.. சிதறவிட்ட படிக்கல்! ஆர்சிபியின் 206 ரன்கள் டார்கெட்டை எட்டுமா ராஜஸ்தான்?
IPL 2025 RCB vs RR: கதறவிட்ட கோலி.. சிதறவிட்ட படிக்கல்! ஆர்சிபியின் 206 ரன்கள் டார்கெட்டை எட்டுமா ராஜஸ்தான்?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Kashmir Terror Attack | பாகிஸ்தான் தூதரகத்தில் கேக் வெட்டி கொண்டாட்டம்? | Pakistan Embassy  | PM ModiSengottaiyan vs EPS: அடங்க மறுக்கும் செங்கோட்டையன்! கலக்கத்தில் எடப்பாடி! சீனுக்கு வந்த அமித்ஷா!Sengottaiyan: ”EPS இல்லனா அதிமுக இல்ல” செங்கோட்டையன் 360 டிகிரி பல்டி! நள்ளிரவில் முடிந்த DEAL!Annamalai BJP: மத்திய அமைச்சராகும் அண்ணாமலை? கறார் காட்டிய எடப்பாடி! சீனுக்கு வந்த சந்திரபாபுநாயுடு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IPL 2025 RCB vs RR: சொந்த மண் சோகத்திற்கு முடிவு கட்டிய குருணல், ஹேசில்வுட்! த்ரில் போட்டியில் ஆர்சிபி அபார வெற்றி!
IPL 2025 RCB vs RR: சொந்த மண் சோகத்திற்கு முடிவு கட்டிய குருணல், ஹேசில்வுட்! த்ரில் போட்டியில் ஆர்சிபி அபார வெற்றி!
Sindhu River: சிந்து நதிநீர் ஏன் பாகிஸ்தானுக்கு இவ்வளவு முக்கியம்? அடிமடியிலே கை வைத்த இந்தியா!
Sindhu River: சிந்து நதிநீர் ஏன் பாகிஸ்தானுக்கு இவ்வளவு முக்கியம்? அடிமடியிலே கை வைத்த இந்தியா!
52 ஆண்டுகளுக்கு பிறகும் தீரா காதல்;  மனைவிக்கு பிஎம்டபிள்யூ கார் பரிசளித்த இயக்குநர் எஸ் ஏ சந்திரசேகர்!
52 ஆண்டுகளுக்கு பிறகும் தீரா காதல்; மனைவிக்கு பிஎம்டபிள்யூ கார் பரிசளித்த இயக்குநர் எஸ் ஏ சந்திரசேகர்!
IPL 2025 RCB vs RR: கதறவிட்ட கோலி.. சிதறவிட்ட படிக்கல்! ஆர்சிபியின் 206 ரன்கள் டார்கெட்டை எட்டுமா ராஜஸ்தான்?
IPL 2025 RCB vs RR: கதறவிட்ட கோலி.. சிதறவிட்ட படிக்கல்! ஆர்சிபியின் 206 ரன்கள் டார்கெட்டை எட்டுமா ராஜஸ்தான்?
தமிழகத்தில் 200 பாகிஸ்தானியர்கள்.. வந்தது அலர்ட்.. களத்தில் இறங்கிய போலீஸ்
தமிழகத்தில் 200 பாகிஸ்தானியர்கள்.. வந்தது அலர்ட்.. களத்தில் இறங்கிய போலீஸ்
EPS Vs Sengottaiyan: இரவில் முடிந்த டீல்.. காலையில் இபிஎஸ் துதி.. அந்தர் பல்டி அடித்த செங்கோட்டையன்.. பின்னணி என்ன.?
இரவில் முடிந்த டீல்.. காலையில் இபிஎஸ் துதி.. அந்தர் பல்டி அடித்த செங்கோட்டையன்.. பின்னணி என்ன.?
Pahalgam Attack: கொந்தளிப்பில் இந்தியா; பாகிஸ்தான் தூதரகத்தில் கேக் வெட்டி கொண்டாட்டமா?
Pahalgam Attack: கொந்தளிப்பில் இந்தியா; பாகிஸ்தான் தூதரகத்தில் கேக் வெட்டி கொண்டாட்டமா?
Palanivel Thiaga Rajan : ‘PTR-க்கு கூடுதல் அதிகாரம், கூடுதல் துறை’ விரைவில் அறிவிக்கிறார் முதல்வர்..!
‘PTR-க்கு கூடுதல் அதிகாரம், கூடுதல் துறை’ விரைவில் அறிவிக்கிறார் முதல்வர்..!
Embed widget