மேலும் அறிய

Minister Senthil Balaji: அமலாக்கத்துறையோ வருமானவரித்துறையோ.. கைப்பற்றப்படும் ஆவணங்களுக்கு விளக்கம் அளிக்கத் தயார் - அமைச்சர் செந்தில் பாலாஜி

Minister Senthil Balaji: அமலாக்கத்துறையோ அல்லது வருமானவரித்துறையோ அவர்கள் கைப்பற்றப்படும் ஆவணங்களுக்கு விளக்கம் அளிக்கத்தயார் என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். 

Minister Senthil Balaji: மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். அமலாக்கத்துறையோ அல்லது வருமானவரித்துறையோ அவர்கள் கைப்பற்றப்படும் ஆவணங்களுக்கு விளக்கம் அளிக்கத்தயார் எனவும், மேலும், இந்த சோதனைக்கு முழு ஒத்துழைப்பு அளிக்கத்தயார் என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.  தனது வீட்டில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்த வந்துள்ளனர் என்பதை அறிந்த அமைச்சர் செந்தில் பாலாஜி, தனது காலை நேர நடை பயிற்சியை பாதியிலேயே நிறுத்தி விட்டு, உடனே தனது வீட்டிற்கு திரும்பினார். அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் செந்தில் பாலாஜி, “ அமலாக்கத்துறையினர் எந்த நோக்கத்துடன் வந்துள்ளனர் எனத் தெரியவில்லை, பொறுத்திருந்தான் பார்க்க வேண்டும், எனக்கு இந்த சோதனை குறித்து எந்த முன் தகவலும் வரவில்லை. அமலாக்கத்துறையோ அல்லது வருமானவரித்துறையோ அவர்களுக்கு முழு ஒத்துழைப்பு வழங்க தயார். மேலும், கைப்பற்றப்படும் ஆவணங்களுக்கு விளக்கம் அளிக்கவும் தயார்” என கூறினார்.  

மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த 2011 முதல் 2016 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் ஆட்சியில் இருந்து அதிமுகவின் அமைச்சரவையில் போக்குவரத்துறை அமைச்சராக இருந்தார். அப்போது போக்குவரத்துறையில் வேலை வாங்கித் தருவதாக கூறி பணம் பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்ததையடுத்து இந்த சோதனை நடத்தப்படுவதாக கூறப்படுகிறது. ஏற்கனவே இதே புகாரின் பேரில் தான் வருமானவரித்துறையினர் சோதனை நடத்தினர் என கூறப்பட்ட நிலையில், அதில் கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் தற்போது அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். வருமானவரித்துறையினர் முதலில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரரான அசோக் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்திய நிலையில் தற்போது அமைச்சர் வீட்டிலேயே அமலாக்கத்துறையினர் சோதனை நடத்திவருகின்றனர். அதேபோல் அவரது சகோதரட் வீட்டிலும் சோதனை நடந்து வருகிறது. 

மேலும், கரூர் ராமேஸ்வரப்பட்டியில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த மாதம் 26 ஆம் தேதி கரூர் மாவட்டத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி சகோதரர் அசோக் குமார் மற்றும் அவரது நண்பர்கள் உறவினர்கள் என 25க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு பல்வேறு ஆவணங்கள் எடுத்துச் சென்றதாக கூறப்பட்டு வந்த நிலையில், இன்று அதாவது ஜூன் 13ஆம் தேதி அமலாக்கத் துறையினர் அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர். அதேபோல், கருர் ராமேஸ்வரப்பட்டியில் இருக்கும் அமைச்சர் செந்தில்பாலாஜி பெற்றோர் வீட்டிலும் சோதனை நடைபெற்று வருகிறது. 

இதற்கு முன்னர் வருமானவரித்துறையினர் சோதனை நடத்தும் போது முதலில் செந்தில் பாலாஜி ஆதரவாளர்கள் வருமான வரித்துறையினரை சோதனை செய்ய விடாமல் தடுத்தனர்,  வருமான வரித்துறையினருக்கு தமிழக போலீஸ் பாதுகாப்பு அளிக்கவில்லை என்ற குற்றச்சாட்டு முன் வைக்கப்பட்ட நிலையில் இந்த முறை மத்திய ரிசர்வ் போலீஸ் படை பாதுகாப்புடன் சோதனை நடைபெற்று வருகிறது.  

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
"பெரு நிறுவனங்களுக்கு நாமதான் முகவரி" பெருமிதத்துடன் முதல்வர் ஸ்டாலின் சொன்ன அந்த வார்த்தை!
Breaking News LIVE 28th Sep 2024: தமிழ்நாட்டில் மேலும் 2 நகரங்களில் மினி டைடல் பூங்கா : பணிகளைத் தொடங்கியது தமிழ்நாடு அரசு!
தமிழ்நாட்டில் மேலும் 2 நகரங்களில் மினி டைடல் பூங்கா : பணிகளைத் தொடங்கியது தமிழ்நாடு அரசு!
Salem Leopard: சேலம் மக்களை அச்சுறுத்தி வந்த சிறுத்தை உயிரிழப்பு
சேலம் மக்களை அச்சுறுத்தி வந்த சிறுத்தை உயிரிழப்பு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Thrissur ATM Robbery | ”நாங்க திருடாத AREA-ஏ இல்ல” கொள்ளையர்கள் பகீர் வாக்குமூலம்!Pawan Kalyan | TN Cabinet Shuffle | 2 சீனியர்கள் OUT.. ஜுனியர்கள் IN..! ஸ்டாலின் பக்கா ஸ்கெட்ச்Rahul Gandhi | கேள்வி கேட்டா அசிங்க படுத்துவீங்களா? நான்வருவேன் அப்போ தெரியும்! நாள் குறித்த ராகுல்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
"பெரு நிறுவனங்களுக்கு நாமதான் முகவரி" பெருமிதத்துடன் முதல்வர் ஸ்டாலின் சொன்ன அந்த வார்த்தை!
Breaking News LIVE 28th Sep 2024: தமிழ்நாட்டில் மேலும் 2 நகரங்களில் மினி டைடல் பூங்கா : பணிகளைத் தொடங்கியது தமிழ்நாடு அரசு!
தமிழ்நாட்டில் மேலும் 2 நகரங்களில் மினி டைடல் பூங்கா : பணிகளைத் தொடங்கியது தமிழ்நாடு அரசு!
Salem Leopard: சேலம் மக்களை அச்சுறுத்தி வந்த சிறுத்தை உயிரிழப்பு
சேலம் மக்களை அச்சுறுத்தி வந்த சிறுத்தை உயிரிழப்பு
போரில் திருப்பம்.. ஹிஸ்புல்லா தலைவரை ஸ்கெட்ச் போட்டு தூக்கிய இஸ்ரேல்!
போரில் திருப்பம்.. ஹிஸ்புல்லா தலைவரை ஸ்கெட்ச் போட்டு தூக்கிய இஸ்ரேல்!
TNPSC CTSE: இன்றே கடைசி; டிஎன்பிஎஸ்சி அரசு வேலை- விண்ணப்பித்து விட்டீர்களா? விவரம்!
TNPSC CTSE: இன்றே கடைசி; டிஎன்பிஎஸ்சி அரசு வேலை- விண்ணப்பித்து விட்டீர்களா? விவரம்!
ரூ.9 ஆயிரம் கோடியில் டாடா கார் ஆலை; 5 ஆயிரம் பேருக்கு வேலை- அடிக்கல் நாட்டிய முதல்வர்
ரூ.9 ஆயிரம் கோடியில் டாடா கார் ஆலை; 5 ஆயிரம் பேருக்கு வேலை- அடிக்கல் நாட்டிய முதல்வர்
Taxpayer and investor alert: முதலீட்டாளர்கள் கவனத்திற்கு..! அக்.1 முதல் மாறப்போகும் 10 விதிகள், கூடுதல் செலவா? வரவா?
Taxpayer and investor alert: முதலீட்டாளர்கள் கவனத்திற்கு..! அக்.1 முதல் மாறப்போகும் 10 விதிகள், கூடுதல் செலவா? வரவா?
Embed widget