மேலும் அறிய

AIADMK: “கலங்கி போயிருந்தேன்; இரவு தூங்கல; எட்டப்பர்களின் முகத்திரை கிழிக்கப்பட்டு விட்டது” - தீர்ப்புக்கு பின் இபிஎஸ் சரவெடி பேச்சு

கடந்த 6,7 மாதங்களாக அதிமுக தொண்டர்கள் பட்ட வேதனை கொஞ்ச நஞ்சமல்ல. இனிமேல் அதிமுக 3, 4 ஆக போய்விட்டது என சொல்லாமல் ஒன்றாக இயங்குகிறது என ஊடகங்கள் சொல்ல வேண்டும்.

அதிமுக பொதுக்குழு வழக்கில் வழங்கப்பட்ட உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்து அக்கட்சியின் இடைக்காலப் பொதுச்செயலாளரான எடப்பாடி பழனிசாமி கருத்து தெரிவித்துள்ளார். 

அதிமுக பொதுக்குழு வழக்கில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு ஓ.பன்னீர்செல்வத்திற்கு எதிராக  வெளியாகியுள்ளது. கடந்தாண்டு ஜூலை 11 ஆம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமி இடைக்காலப் பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். இதனையடுத்து ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கட்சியை விட்டு நீக்கப்பட்டனர். 

இதனை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடங்கினார். இதில் முதலில் தனி நீதிபதி அளித்த தீர்ப்பு ஓ.பன்னீர்செல்வத்திற்கு ஆதரவாகவும், 2 நீதிபதிகள் அமர்வு எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாகவும் தீர்ப்பு அளித்தது. இதனை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் உச்சநீதிமன்றத்தை நாடினார். இந்த வழக்கில் இன்று வழங்கப்பட்ட தீர்ப்பில் ஜூலை 11 ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழு செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதன்மூலம் இடைக்காலப் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டது செல்லும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த தீர்ப்பால் அதிமுகவில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் நீக்கப்பட்டது செல்லும் என்பது உறுதியாகி இருக்கிறது. 

இந்நிலையில் உச்சநீதிமன்ற தீர்ப்பு குறித்து அதிமுக இடைக்காலப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கருத்து தெரிவித்துள்ளார். மதுரையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர் உரையாற்றினார். அப்போது தீர்ப்பு குறித்து பேசினார்.

அதில், “நல்ல தீர்ப்பு கிடைக்க வேண்டும் என அம்மா கோயிலில் வேண்டிக் கொண்டேன். சில நிமிடத்திலேயே அற்புதமான செய்தி வந்தது. திமுக ஒரு தீயசக்தி அதனை அழிக்கவே அதிமுகவை தொடங்கியதாக எம்ஜிஆர் சொன்னார். அதே வழியில் பல துன்பங்கள், இடர்பாடுகளை சகித்துக் கொண்டு தமிழகத்தில் தீய சக்தியை ஒடுக்கி ஜெயலலிதா சாதித்து காட்டினார். தனக்கு பின்னாலும் 100 ஆண்டுகள் ஆனாலும் அதிமுக இயங்கும் என சொன்னது இன்று நிரூபிக்கப்பட்டு விட்டது. 

சில எட்டப்பர்கள், அதிமுக அழிக்க நினைத்தவர்கள், முடக்க நினைத்தவர்கள், திமுக பி டீமாக இருந்தவர்கள் முகத்திரை இன்று கிழிக்கப்பட்டு விட்டது. கடந்த 6,7 மாதங்களாக அதிமுக தொண்டர்கள் பட்ட வேதனை கொஞ்ச நஞ்சமல்ல. இனிமேல் அதிமுக 3, 4 ஆக போய்விட்டது என சொல்லாமல் ஒன்றாக இயங்குகிறது என ஊடகங்கள் சொல்ல வேண்டும். இது குடும்ப கட்சி கிடையாது. தீர்ப்பு என்ன வருமோ என்று கலங்கி போயிருந்தேன். இரவில் தூங்காமல் இருந்துள்ளேன். தற்போது எட்டப்பர்களின் முகத்திரை கிழிக்கப்பட்டு விட்டது” எனவும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி,  “உயர்நீதிமன்றம் ஜூலை 11 ஆம் தேதி நடந்த பொதுக்குழு செல்லும் என தெரிவித்துள்ளது. தர்மம், நீதி, உண்மை இன்றைக்கு வென்றுள்ளது. அதிமுக தொண்டர்களுக்கு இந்த தீர்ப்பு மகிழ்ச்சியளிக்கும். நீதிமன்ற தீர்ப்போடு அவர்களின் கதையும் முடிந்து விட்டது. இனி எங்களுக்கும் அவர்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை. அதிமுகவை பற்றி பேச டிடிவி தினகரனுக்கு எந்த தகுதியும் இல்லை. ஒரு சிலப் பேரை தவிர மற்றவர்கள் அதிமுகவுக்கு வரலாம்” என தெரிவித்தார். மேலும், “டிடிவி தினகரன், ஓபிஎஸ் உடன் இருப்பவர்கள் எங்களிடம் வரத் தொடங்கி விட்டார்கள் எனவும் அவர் கூறினார். 

தலைப்பு செய்திகள்

டெக் பிரியர்களுக்கு செம்ம செய்தி: அசத்தலான அம்சங்களுடன் இந்தியாவில் விரைவில் அறிமுகமாகும் OnePlus Pad 4!
செம்ம செய்தி: அசத்தலான அம்சங்களுடன் இந்தியாவில் விரைவில் அறிமுகமாகும் OnePlus Pad 4!
திடீரென உயர்த்தப்பட்ட கட்டணம்! ஏர்டெல் யூசர்களுக்கு பேரதிர்ச்சி! உடனே இதைச் செக் பண்ணுங்க!
திடீரென உயர்த்தப்பட்ட கட்டணம்! ஏர்டெல் யூசர்களுக்கு பேரதிர்ச்சி! உடனே இதைச் செக் பண்ணுங்க!
வீடு வாங்கப் போறீங்களா? தமிழக அரசு வெளியிட்ட செம ஹேப்பி நியூஸ்! விலை உயர்வே கிடையாது!
வீடு வாங்கப் போறீங்களா? தமிழக அரசு வெளியிட்ட செம ஹேப்பி நியூஸ்! விலை உயர்வே கிடையாது! 
மனைவி தற்கொலைனு சொன்ன கணவன்... காஞ்சிபுரத்தில் அதிர்ச்சி! போலீஸ் தூக்கியதும் வெளிவந்த உண்மை!
மனைவி தற்கொலைனு சொன்ன கணவன்... காஞ்சிபுரத்தில் அதிர்ச்சி! போலீஸ் தூக்கியதும் வெளிவந்த உண்மை!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அரசு கஜானாவிற்கு 15,000 கோடி வந்தது உண்மையா? அந்தர் பல்டி அடித்த மரிய வில்சன் – இன்று சொன்னது என்ன?
அரசு கஜானாவிற்கு 15,000 கோடி வந்தது உண்மையா? அந்தர் பல்டி அடித்த மரிய வில்சன் – இன்று சொன்னது என்ன?
Vijay vs Udhayanidhi : சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
Marie Wilson: சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
Imran Khan News: இம்ரான் கான் இறந்துவிட்டாரா.?! உண்மை என்ன.? பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்ட முக்கிய அறிக்கை
இம்ரான் கான் இறந்துவிட்டாரா.?! உண்மை என்ன.? பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்ட முக்கிய அறிக்கை
Trump Great Escape: உணவு லாரியில் பதுங்கிச் சென்ற ட்ரம்ப்; ரகசியமாக விமானம் மாறியது ஏன்.? வெளியான பரபரப்பு தகவல்
உணவு லாரியில் பதுங்கிச் சென்ற ட்ரம்ப்; ரகசியமாக விமானம் மாறியது ஏன்.? வெளியான பரபரப்பு தகவல்
Honda Rebel 300 Vs RE Goan Classic 350: பாபர் பைக் பிரிவில் புதிய போட்டி.! என்ஃபீல்ட் கோவன் கிளாசிக் 350 உடன் மோதும் ஹோண்டா ரெபெல் 300
பாபர் பைக் பிரிவில் புதிய போட்டி.! என்ஃபீல்ட் கோவன் கிளாசிக் 350 உடன் மோதும் ஹோண்டா ரெபெல் 300
பெஸ்ட் மிட் சைஸ் SUV ஹூண்டாய் கிரெட்டா: மாதம் ரூ.16000 EMI-ல் சொந்தமாக்கலாம்- விவரம்!
பெஸ்ட் மிட் சைஸ் SUV ஹூண்டாய் கிரெட்டா: மாதம் ரூ.16000 EMI-ல் சொந்தமாக்கலாம்- விவரம்!
டாடா பஞ்ச் காருக்கு நேரடிப் போட்டி; அமோக விற்பனையில் ஹூண்டாய் எக்ஸ்டர்- விலை, மைலேஜ்!
டாடா பஞ்ச் காருக்கு நேரடிப் போட்டி; அமோக விற்பனையில் ஹூண்டாய் எக்ஸ்டர்- விலை, மைலேஜ்!
Embed widget