மேலும் அறிய

இலங்கையில் விண்ணை முட்டும் விலைவாசி உயர்வு எதிரொலி - இதுவரை 16 பேர்  தமிழகத்தில்  தஞ்சம்

போர் முடிவுக்கு வந்தபின் 2012ல் மீண்டும்  இலங்கைக்கு புறப்படுச் சென்றதாகவும் தற்போது உணவு பஞ்சத்தால் பட்டினிசாவுக்கு அஞ்சி குழந்தைகளோடு மீண்டும் அகதிகளாக வந்துள்ளோம்

இலங்கையில் கடும் பொருளாதார வீழ்ச்சி காரணமாக உணவுப்பொருள்களின் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துள்ளது. அதைச் சமாளிக்க முடியாமல் இலங்கை மக்கள் கடல்வழியாக படகுகள் மூலம் அண்டை நாடான இந்தியாக்குள் அகதிகளாக நுழைந்து வருவதாகக் கூறப்படுகிறது. ராமேஸ்வரம் கடல் பகுதி இலங்கைக்கு அருகில் உள்ளது. எனவே இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக அங்குள்ள மக்கள் ராமேஸ்வரம் கடல்வழியாக தமிழகத்துக்குள் அகதிகளாக நுழைய தொடங்கியிருக்கின்றனர்.


இலங்கையில் விண்ணை முட்டும் விலைவாசி உயர்வு எதிரொலி -  இதுவரை 16 பேர்  தமிழகத்தில்  தஞ்சம்

யுத்தத்தால் உயிர் போய்விடும் என்ற அச்சத்தால் அகதிகளாய்  தமிழகத்தில்  தஞ்சம் அடைந்த    நிலையில், தற்போது பட்டினிச்சாவுக்கு அஞ்சி குழந்தைகளுடன்    நடுக்கடலில் சுமார் 30  மணி நேரம் உயிருக்கு போராடி    தஞ்சம் புகும் அவல  நிலை ஏற்பட்டுள்ளதாக இலங்கை வவுனியாவில் இருந்து  தனுஷ்கோடிக்கு அகதிகளாய் வந்தவர்கள் கண்ணீர் வடிக்கின்றனர். கடந்த 11 ஆம் தேதி ராமநாதபுரம் மாவட்டம், தேவிப்பட்டினம் அருகே உள்ள ஜமீன்தார் வலசை கடற்கரைப் பகுதியில் இலங்கைப் பதிவு எண் கொண்ட படகில் வந்த சிலர், தமிழக மீனவர்களைக் கண்டதும் படகை விட்டுவிட்டுத் தப்பி ஓடிவிட்டனர். அதேபோல், கடந்த 21 ஆம் தேதி நாகை மாவட்டம், கோடியக்கரை மீன்பிடித் துறைமுகத்திலிருந்து 2 கிலோமீட்டர் தொலைவில், காத்தான் ஓடை கடற்கரைப் பகுதியில் இலங்கையைச் சேர்ந்த கண்ணாடி இழைப் படகு கரை ஒதுங்கியது.


இலங்கையில் விண்ணை முட்டும் விலைவாசி உயர்வு எதிரொலி -  இதுவரை 16 பேர்  தமிழகத்தில்  தஞ்சம்

எனவே, இந்த படகுகளில் இலங்கையைச் சேர்ந்த நபர்கள் வந்திருக்கக்கூடும் என்ற கோணத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் மற்றும் கடலோர காவல்படை போலீஸார் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். இந்நிலையில் இலங்கையில் இருந்து ராமேஸ்வரம் கடல்வழியாக தமிழகத்துக்குள் அகதிகளாக நுழைபவர்களை கண்காணிக்கும் பணி மேலும் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. அதன்படி மண்டபத்தில் உள்ள இந்திய கடலோர காவல்படைக்கு சொந்தமான இரு அதிவேக ரோந்து கப்பல்கள் மற்றும் மூன்று ஹோவர் கிராஃப்ட் கப்பல்கள் ரோந்துப் பணியில் ஈடுபட்டு வருகின்றன. மேலும், ராமேஸ்வரத்தில் உள்ள இந்திய கடற்படை நிலையத்தில் இருந்தும் படகுகளில் கடற்படையினரும் கச்சத்தீவு வரையிலான இந்திய கடல் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழகத்திற்கு தஞ்சம் தேடி வந்த 16 பேர்


இலங்கையில் விண்ணை முட்டும் விலைவாசி உயர்வு எதிரொலி -  இதுவரை 16 பேர்  தமிழகத்தில்  தஞ்சம்

தப்பி வந்து  தமிழகத்தில் தஞ்சம் அடைந்துள்ளனர். மன்னாரில்   இருந்து நேற்று முன்தினம் புறப்பட்டு ஆறுபேர் நேற்று காலையும் நேற்று பகல் இரு படகுகளில் புறப்பட்ட மேலும் 10 பேரை  ஏற்றி வந்த  இலங்கை படகுகள் தனுஷ்கோடியில் படகுடனும் கரை சேர்ந்தனர். காலையில் வந்தவர்கள் ராமேஸ்வரம் அரிச்சல் முனையில் உள்ள 4வது  திடலில் தரை இறங்கி உள்ளனர். இலங்கையில் இருந்து இன்னும் நிறைய பேர் தமிழகம் வருவார்கள் என அங்கிருந்து தப்பி வந்தவர்கள் உருக்கமுடன் கூறியிருக்கிறார்கள்.

ஒரு கிலோ அரிசி 250 ரூபாய்


இலங்கையில் விண்ணை முட்டும் விலைவாசி உயர்வு எதிரொலி -  இதுவரை 16 பேர்  தமிழகத்தில்  தஞ்சம்

மேலும் அவர்களிடம் இது குறித்து காரணம் கேட்ட போது, இலங்கையில் நாளுக்கு நாள் உணவுப்பொருட்கள் உள்ளிட்ட அனைத்து அத்தியாவசிய பொருட்களின் விலையும் அதிகரித்து வருகிறது. ஒரு கிலோ அரிசி ரூ.250, பிஸ்கட் பாக்கெட் ஒன்று ரூ.230, ரொட்டி ஒரு பாக்கெட் 100 ரூபாய், பால், பருப்பு 300 ரூபாய் என அனைத்து பொருட்களின் விலையும் பலமடங்கு உயர்ந்து விட்டது. எனவே, தற்போது உயர்ந்து வரும் விலைவாசி உயர்வால் குழந்தைகளுக்கு எதுவும் வாங்கி கொடுக்க முடியாத நிலைதான் ஏற்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாகவே குழந்தைகளும், நாங்களும் சரியாக சாப்பிட முடியாமல் கஷ்டப்பட்டோம். இன்னும் அங்கு அதிகமானோர் உணவு பொருட்கள் வாங்க முடியாமல் கஷ்டத்தில் தவித்து வருகின்றனர். குறிப்பாக குழந்தைகளுக்கான 400 மில்லி பால் பாக்கெட் ஒன்று 800 ரூபாய், முட்டை 35 ரூபாய் என இதுவரை இல்லாத அளவிற்கு அனைத்து பொருட்களும் விலை உயர்ந்துவிட்டது. குறிப்பாக,  இலங்கையில் ராணுவத்திற்கும் விடுதலைப் புலிகளுக்கும் உச்சக்கட்ட போர் நடந்த சமயத்தில் கூட இதுபோன்று பொருட்களின் விலை உயர்வு ஏற்படவில்லை” என்று உருக்கமுடன் தெரிவித்தனர்.

இன்னும் பலர் அகதிகளாக வர வாய்ப்பு

எங்களைப் போல் இன்னும் நிறைய பேர் அகதிகளாக வர வாய்ப்புகள் உள்ளது. தலைமன்னாரில் இருந்து 2 படகோட்டிகள் எங்களை படகில் ஏற்றி நள்ளிரவு நேரத்தில் மணல்திட்டு பகுதியில் இறக்கி விட்டு, இந்தியாவில் இருந்து படகில் வந்து ஏற்றிச் செல்வார்கள் என கூறிவிட்டு திரும்பி சென்று விட்டனர் என உருக்கமுடன் தெரிவித்தனர். இந்த நிலையில்,  நேற்றுக் காலை வவுனியா பகுதியில் இருந்து ஒரு பைபர் படகில்   ஐந்து குழந்தைகள் இரண்டு பெண்கள் உட்பட இரண்டு குடும்பங்களைச்சேர்ந்த 10 பேர்   தனுஷ்கோடிக்கு புறப்பட்டுள்ளனர். இவர்களது படகின் இஞ்சின்  பழுது ஏற்பட்டதால் நடுக்கடலில் சுமார்  30 மணி நேரத்திற்கும் மேலாக  குழந்தைகளுடன்  தத்தளித்தளித்த நிலையில்  கடும் முயற்சிக்கு பின்பு  இஞ்சின்  சரிசெய்யப்பட்டு  நேற்று இரவு 10 மணியளவில் தனுஷ்கோடி அரிச்சல்முனை கடல்பகுதிக்கு வந்து சேர்ந்தவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். 


இலங்கையில் விண்ணை முட்டும் விலைவாசி உயர்வு எதிரொலி -  இதுவரை 16 பேர்  தமிழகத்தில்  தஞ்சம்

மேலும், அவர்கள் கூறுகையில், இதே போல் தற்போது  இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான  பொருளாதார வீழ்ச்சி காரணமாக உணவு மற்றம். அத்தயாவசிய பொருட்களான குழந்தைகளுக்கு பால், மற்றும் பால்பவுடர்  அரிசி, பருப்பு, கோதுமை   மண்ணெய், டீசல்,பெட்ரோல் உள்ளிட்ட பொருட்களான கடும்   தட்டுபாடு ஏற்பட்டுள்ளது. மேலும் உயிர் வாழ முடியாமல் பட்டினிச்சாவு ஏற்படும் என்ற அச்சத்தால் தாங்கள் குழந்தைகளுடன் தனூஷ்கோடிக்கு வந்ததாகவும், இலங்கையில் நடந்த  உள்நாட்டு யுத்தகாலங்களில்  உறவுகளையும் உடமைகளையும் இழந்து உயிர்பிழைத்தால் போதும் என 90களில்  தமிழகத்திற்கு அகதிகளாய் வந்தோம்.

பட்டினி சாவுக்கு அஞ்சி மீண்டும் வந்துள்ளோம்

பின்னாளில் போர் முடிவுக்கு வந்தபின் 2012ல் மீண்டும்  இலங்கைக்கு புறப்படுச் சென்றதாகவும் தற்போது உணவு பஞ்சத்தால் பட்டினிசாவுக்கு அஞ்சி குழந்தைகளோடு மீண்டும் அகதிகளாக வந்துள்ளதாகவும், தமிழர்கள் வசிக்கும் பகுதிகளில் பல ஆயிரக்கணக்கானோர் தமிழகத்தில் தஞ்சம் அடைய உள்ளதாகவும் எரிபொருள் தட்டுபாட்டால் வரமுடியாமல் அவதியுற்று வருவதாகவும் போலீசார் விசாரனையில் தெரிவித்துள்ளனர்.  இதனை தொடர்ந்து, மேலும், பலபேர் இலங்கையிலிருந்து தனுஷ்கோடிப்பகுதிக்கு  அகதிகளாக வரக்கூடும் என்பதால் சர்வ தேச கடல் எல்லை பகுதியில் கண்காணிப்பை தீவிர படுத்தவும், பாதுகாப்பை  அதிகரிக்கவும்  நடவடிக்கை எடுக்கவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"வாழ்த்துக்கள் அண்ணா" துணை முதலமைச்சர் உதயநிதியை பாராட்டி தள்ளிய அதானியின் மகன்!
இளைஞர்களே! ஒரு அற்புதமான வாய்ப்பு:அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க
இளைஞர்களே! ஒரு அற்புதமான வாய்ப்பு:அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க
"மோடியை ஆட்சியில் இருந்து இறக்கும் வரை.. சாக மாட்டேன்" மயங்கி விழுந்த கார்கே.. கூட்டத்தில் பரபரப்பு
"தரம் ரொம்ப முக்கியம்" தொழில்துறையினருக்கு மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் வேண்டுகோள்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Genjee KS Masthan | ஓரம் கட்டப்பட்ட செஞ்சி மஸ்தான்.. பொன்முடி காரணமா? ஸ்டாலினின் ட்விஸ்ட் மூவ்Udhayanidhi Stalin Journey |  பாஜகவை அலறவிட்ட கலைஞர் பேரன்MLA.,அமைச்சர் to துணை முதல்வர்Salem Rajendran Profile | அடிமட்ட தொண்டர் to அமைச்சர்!சேலத்தின் செல்லப்பிள்ளை!யார் இந்த ராஜேந்திரன்?Thirumavalavan supports Vijay | ’’விஜய்-ஐ லேசா நினைக்காதீங்க’’  திருமா கொடுத்த WARNING

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"வாழ்த்துக்கள் அண்ணா" துணை முதலமைச்சர் உதயநிதியை பாராட்டி தள்ளிய அதானியின் மகன்!
இளைஞர்களே! ஒரு அற்புதமான வாய்ப்பு:அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க
இளைஞர்களே! ஒரு அற்புதமான வாய்ப்பு:அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க
"மோடியை ஆட்சியில் இருந்து இறக்கும் வரை.. சாக மாட்டேன்" மயங்கி விழுந்த கார்கே.. கூட்டத்தில் பரபரப்பு
"தரம் ரொம்ப முக்கியம்" தொழில்துறையினருக்கு மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் வேண்டுகோள்!
தமிழ்நாட்டின் புதிய அமைச்சர்கள்.. யார்? யாருக்கு எந்த துறை? முதல்வரின் மாஸ்டர் ஸ்ட்ரோக்!
தமிழ்நாட்டின் புதிய அமைச்சர்கள்.. யார்? யாருக்கு எந்த துறை? முதல்வரின் மாஸ்டர் ஸ்ட்ரோக்!
ஆளுநர் மாளிகையில் புதிய அமைச்சர்கள் பதவியேற்பு.. மொத்தமாக மாறிய அமைச்சரவை!
ஆளுநர் மாளிகையில் புதிய அமைச்சர்கள் பதவியேற்பு.. மொத்தமாக மாறிய அமைச்சரவை!
Devara Box Office : விஜயின் The Goat படத்துக்கு சவால் விடும் தேவரா.. இரண்டு நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
விஜயின் The Goat படத்துக்கு சவால் விடும் தேவரா.. இரண்டு நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
விமர்சனங்கள் வரத்தான் செய்யும்; பணிகளால்தான் எதிர்கொள்ள முடியும் - உதயநிதி ஸ்டாலின்
விமர்சனங்கள் வரத்தான் செய்யும்; பணிகளால்தான் எதிர்கொள்ள முடியும் - உதயநிதி ஸ்டாலின்
Embed widget