மேலும் அறிய

Chennai Water logged: மழையால் ஸ்தம்பித்து போன சென்னை! மின்னல் வேகத்தில் பணியாற்றும் மாநகராட்சி!

சென்னையில் பெய்து வரும் மழையால் பெரும்பாலான இடங்களில் மழை நீர் அகற்றப்பட்டாலும், சில முக்கியமான இடங்களில் மழைநீர் தேங்கியுள்ளது.

தமிழ்நாட்டில் வட கிழக்கு பருவ மழை தீவிரமடைந்துள்ள நிலையில் பல்வேறு மாவட்டங்களில் மழை கொட்டி வருகிறது. குறிப்பாக வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வரும் 4 ஆம் தேதி புயுலாக வலுபெறக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையில் கனமழை:

இந்நிலையில் தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னை உள்ளிட்ட புறநகர் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. நேற்று முன் தினம் ஒரே நாளில் சென்னையில் பல இடங்களில் 100 மில்லிமீட்டர் கடந்து மழை பதிவானது ஒரே நாளில் அதிகளவு மழை பதிவானதால் மழை நீர் தேங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. சென்னையில் பெருவாரியான பகுதிகளில் மழை நீர் தேங்கி உள்ளது. மேற்கு மாம்பலம், கோடம்பாக்கம், வேளச்சேரி, மடிப்பாக்கம், வரதராஜபுரம், தேனாம்பேட்டை, பெரம்பூ, கொளத்தூர், கொரட்டூர், செங்குன்றம், பள்ளிக்கரணை ஆகிய பகுதிகளில் மழை நீர் புகுந்துள்ளது.

தாழ்வான பகுதிகளில் இருக்கும் வீடுகளில் மழைநீர் தேங்கியுள்ளதால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களை பத்திரமாக மீட்கும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். சாலைகளில் முட்டி அளவு தண்ணீர் தேங்கியுள்ளதால் அலுவலகம் செல்லும் மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். சாலையில் எங்கு பள்ளம் மேடு இருக்கிறது என தெரியாததால் தட்டு தடுமாறி வாகனத்தை இயக்கி வருகின்றனர். குறிப்பாக பள்ளி செல்லும் மாணவர்கள் மற்றும் முதியவர்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

அகற்றும் பணிகள் தீவிரம்:

தண்ணீர் தேங்கியுள்ள பகுதிகளில் மழைநீர் அகற்றும் பணியில் மாநகராட்சி தரப்பில் அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பேசிய மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன், “பல்வேறு இடங்களில் மழை அதிகமாக பதிவாகி இருந்தது, இருந்தாலும் பெரும்பாலான இடங்களில் மழைநீர் தேங்கவில்லை இருந்தாலும் கூட மேற்கு மாம்பழம் தியாகராய நகர், பெரம்பூர் உள்ளிட்ட பகுதிகளில் மழை நீர் தேங்கியுள்ளது. அதனை தற்பொழுது படிப்படியாக அகற்றி வருகிறோம் என்றார். மேலும், மழைநீர் வடிகால் பணி நடைபெற்றதால் தான் மற்ற இடங்களில் மழைநீர் தேங்காாமல் இருந்ததாக” தெரிவித்தார்.

மேலும், “ நிலவரத்தை கண்காணிக்க 15 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியாற்றி வருகின்றனர். தண்ணீர் வேகமாக வடிகிறது. 16,000 பணியாளர்கள், 491 மோட்டார்கள், கூடுதலாக 150 டிராக்டர்கள் போர்னர் மோட்ரோக்களும் களத்தில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. வெள்ளம் ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டால் நடவடிக்கை எடுக்க எங்களிடம் அனைத்து உபகரணங்களும் தயார் நிலையில் உள்ளது” என தெரிவித்துள்ளார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Dhoni wish to indian Team | தட்டி தூக்கிய இந்தியா தோனி கொடுத்த SURPRISE Virat & Rohit Retirement |இடியை இறக்கிய KING - HITMAN.. உச்சக்கட்ட சோகத்தில் ரசிகர்கள்Hardik Pandya | ZERO TO HERO அவசரப்பட்டு திட்டிட்டோம் கொண்டாடிய ஹர்திக் FANSDog Attack Boy | மகனை சுத்துப்போட்ட நாய்கள் நொடியில் காப்பாற்றிய  தந்தை பதற வைக்கும் வீடியோ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
Embed widget