மேலும் அறிய

High Court Virtual Hearing: அதிகரிக்கும் கொரோனா; மீண்டும் நடைமுறைக்கு வரும் மெய்நிகர் விசாரணை - சென்னை உயர்நீதிமன்றம்

தமிழ்நாட்டில் கொரொனா பரவல் அதிகரித்து வருவதால் உயர்நீதிமன்றத்தில் கலப்பு முறையில்  வழக்குகள் விசாரிக்கப்படும் என சென்னை உயர்நீதிமன்றம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் கொரொனா பரவல் அதிகரித்து வருவதால் உயர்நீதிமன்றத்தில் கலப்பு முறையில்  வழக்குகள் விசாரிக்கப்படும் என சென்னை உயர்நீதிமன்றம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மெய்நிகர் விசாரணை:

”தமிழ்நாட்டில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதை மேற்கோள்காட்டி, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவுப்படி, நீதிமன்ற அரங்குகள் மற்றும் நீதிமன்ற வளாகங்களில் மக்கள் நடமாட்டத்தை குறைக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, கலப்பு முறையில் வழக்குகளை விசாரிக்கின்றனர்.  தினமும் (வெள்ளிக்கிழமை மட்டும் இல்லாமல், தற்போது நடைமுறையில் உள்ள வழக்கின் கோரிக்கை அடிப்படையில்) சென்னை முதன்மை இருக்கையிலும், மதுரை கிளையிலும், ஏப்ரல் 10, 2023 திங்கள் முதல் மறு உத்தரவு வரும் வரை இந்த நடைமுறை கடைப்பிடிக்கப்படும்.

பார் உறுப்பினர்கள் மற்றும் வழக்கு விசாரணையின் போது நீதிமன்ற அறையில் மக்கள் அதிகம் கூடுவதை தவிர்க்க மெய்நிகர்/கலப்பின விசாரணையின் வசதியை முடிந்தவரை பயன்படுத்திக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள். அனைத்து அதிகார வரம்புகளிலும் உள்ள வழக்குகளை மின்-தாக்கல் செய்வதற்கான வசதியை,(முன்ஜாமீன்களுக்கு மட்டுப்படுத்தாமல்), கட்டாயமாக்கப்பட்டுள்ளதை பயன்படுத்திக் கொள்ளுமாறு பார் உறுப்பினர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறது. இவ்விடயத்தில் மேற்படி ஏற்பாட்டை திறம்பட நடைமுறைப்படுத்துவதற்கு சம்மந்தப்பட்ட அனைவரும் ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்” என சென்னை உயர்நீதிமன்றம் தரப்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

நீதிமன்ற விசாரணை:

2020ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் கொரோனா தொற்று பரவத் தொடங்கியது. 2020 முதல் தற்போது வரை தமிழ்நாட்டில் 35 லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா முதல் அலை மற்றும் இரண்டாம் அலையின் போது கடுமையான ஊரடங்கு மட்டும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. அத்தியாவசிய தேவைகளை தவிர மக்கள் வெளியில் செல்ல கூட தடை விதிக்கப்பட்டது. அப்போது சென்னை உயர் நீதிமன்றம் வழக்குகள் நிலுவையில் இருக்கக்கூடாது என்பதற்காக மெய்நிகர் முறையில் விசாரணை நடத்தப்பட்டது. அனைத்து வழக்குகளும் இந்த முறையில் விசாரணை செய்யப்பட்டது. கொரோனா தொற்று கட்டுக்குள் வந்த நிலையில் மீண்டும் வழக்குகள் நீதிமன்ற அறையில் விசாரணை நடத்தப்பட்டது.

தற்போது தமிழ்நாட்டில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் முதல் மற்றும் இரண்டாம் அலையில் கடைப்பிடிக்கப்பட்டது போலவே தற்போதும் கலப்பு முறையில்  வழக்குகள் வரும் திங்கள் முதல் (ஏப்ரல் 10ஆம் தேதி) விசாரிக்கப்படும் என சென்னை உயர் நீதிமன்றம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவு மதுரை உயர்நீதிமன்ற கிளைக்கும் பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

பயணிகளுக்கு பணத்தை திருப்பி கொடுங்க.. இண்டிகோ நிறுவனத்திற்கு கெடு விதித்த மத்திய அரசு!
பயணிகளுக்கு பணத்தை திருப்பி கொடுங்க.. இண்டிகோ நிறுவனத்திற்கு கெடு விதித்த மத்திய அரசு!
TVK Nanjil Sampath: அடி சக்க.. தவெகவின் பரப்புரை செயலாளரானார் நாஞ்சில் சம்பத் - சரவெடி ஆரம்பமாயிடுச்சு டோய்.!
அடி சக்க.. தவெகவின் பரப்புரை செயலாளரானார் நாஞ்சில் சம்பத் - சரவெடி ஆரம்பமாயிடுச்சு டோய்.!
TN Weather: அப்பாடா... ஒரு வாரம் மழைக்கு ரெஸ்ட்.! வானிலை மையம் சொன்ன லேட்டஸ்ட் அப்டேட்
அப்பாடா... மழைக்கு ரெஸ்ட்.! அடுத்த ஒரு வாரம் வானிலை நிலவரம் என்ன தெரியுமா.?
December Rain: டிசம்பர் வந்தாச்சு.! அடுத்தடுத்து தமிழகத்தை நோக்கி வரும் பேராபத்து! அலறவிடும் டெல்டா வெதர்மேன்
டிசம்பர் வந்தாச்சு.! அடுத்தடுத்து தமிழகத்தை நோக்கி வரும் பேராபத்து! அலறவிடும் டெல்டா வெதர்மேன்
ABP Premium

வீடியோ

Durga Stalin |காஞ்சி கோயிலில் தங்கத்தேர்!பக்தி பரவசத்தில் துர்கா மெய்சிலிர்த்து வேண்டும் காட்சிகள்
Madurai Loganathan IPS Profile | ‘’WE ARE NOT ALLOWING’’ஒற்றை ஆளாக சம்பவம்! யார் இந்த லோகநாதன் IPS?
தமிழ்நாடு வரும் அமித்ஷா திருப்பரங்குன்றம் விவகாரம் கையிலெடுக்கும் பாஜக | Amitsha in Tamilnadu
ஆதவ் Vs ஜோஸ் சார்லஸ் கட்சி தொடங்கும் முன்னே சரிவு விஜய்யுடன் கூட்டணிக்கு END CARD | Aadhav Vs Joes Charles
Thiruparankundram Dheepam|”இன்னும் சில நிமிடங்களில் தீபம்”144 ரத்து போய் பாதுகாப்பு குடுங்க!-நீதிபதி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பயணிகளுக்கு பணத்தை திருப்பி கொடுங்க.. இண்டிகோ நிறுவனத்திற்கு கெடு விதித்த மத்திய அரசு!
பயணிகளுக்கு பணத்தை திருப்பி கொடுங்க.. இண்டிகோ நிறுவனத்திற்கு கெடு விதித்த மத்திய அரசு!
TVK Nanjil Sampath: அடி சக்க.. தவெகவின் பரப்புரை செயலாளரானார் நாஞ்சில் சம்பத் - சரவெடி ஆரம்பமாயிடுச்சு டோய்.!
அடி சக்க.. தவெகவின் பரப்புரை செயலாளரானார் நாஞ்சில் சம்பத் - சரவெடி ஆரம்பமாயிடுச்சு டோய்.!
TN Weather: அப்பாடா... ஒரு வாரம் மழைக்கு ரெஸ்ட்.! வானிலை மையம் சொன்ன லேட்டஸ்ட் அப்டேட்
அப்பாடா... மழைக்கு ரெஸ்ட்.! அடுத்த ஒரு வாரம் வானிலை நிலவரம் என்ன தெரியுமா.?
December Rain: டிசம்பர் வந்தாச்சு.! அடுத்தடுத்து தமிழகத்தை நோக்கி வரும் பேராபத்து! அலறவிடும் டெல்டா வெதர்மேன்
டிசம்பர் வந்தாச்சு.! அடுத்தடுத்து தமிழகத்தை நோக்கி வரும் பேராபத்து! அலறவிடும் டெல்டா வெதர்மேன்
’திமுக-வில் எடுக்கப்பட்ட ரகசிய சர்வே?’ எம்.எல்.ஏ தேர்வில் கவனம் செலுத்தும் தலைமை..!
’திமுக-வில் எடுக்கப்பட்ட ரகசிய சர்வே?’ எம்.எல்.ஏ தேர்வில் கவனம் செலுத்தும் தலைமை..!
Free Spiritual Tour: இராமேஸ்வரம் டூ காசிக்கு இலவசமாக ஆன்மிக சுற்றுலா.! பக்தர்களுக்கு சூப்பரான திட்டம்- அசத்தும் தமிழக அரசு
இராமேஸ்வரம் டூ காசிக்கு இலவசமாக ஆன்மிக சுற்றுலா.! பக்தர்களுக்கு சூப்பரான திட்டம்- அசத்தும் தமிழக அரசு
Lower Berths: இனி ரயிலில் லோயர்பெர்த் ஈசியா கிடைக்கும்.. ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு.. குஷியில் பெண்கள்
இனி ரயிலில் லோயர்பெர்த் ஈசியா கிடைக்கும்.. ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு.. குஷியில் பெண்கள்
Sabareesan: லண்டனில் அம்பேத்கர்–கலைஞர் ஆய்வுப் படிப்பு.! தமிழக மாணவர்களுக்கு அசத்தல் சான்ஸை ஏற்படுத்திய சபரீசன்
தமிழக மாணவர்களுக்கு வாரி வழங்கிய சபரீசன்.! லண்டனில் 3 மாதம் தங்கி படிக்க ஜாக்பாட்- அசத்தல் அறிவிப்பு
Embed widget