மேலும் அறிய

சாதிச் சான்றிதழ் வழங்கப்படாததால் தீக்குளித்த பழங்குடி கூலித் தொழிலாளி உயிரிழப்பு.. சம்பவ இடத்தில் நிகழ்ந்தது என்ன?

சாதிச் சான்றிதழ் வழங்கப்படாததால் தீக்குளித்த பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த வேல்முருகன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மகனுக்கு சாதிச் சான்றிதழ் வழங்கப்படாததால், சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில்  தீக்குளித்த பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த வேல்முருகன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  

இந்தியாவில் சாதியின் பெயரால் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் தகுந்த முன்னுரிமையும், வழங்க வேண்டும் என்பதற்காகவும் இட ஒதுக்கீட்டில் பயன் பெறவும் அரசியல் அமைப்புச் சட்டம் வழங்கக் கூடிய உரிமையை பெற முக்கிய ஆவணமாக சாதிச் சான்றிதழ் உள்ளது. 

அதேநேரத்தில் இந்திய அளவில் ஒரு மாதிரியான இட ஒதுக்கீடும் மாநில அளவில் அந்தந்த மாநிலங்களில் உள்ள மக்கள் தொகையின் அடிப்படையிலும் இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இந்தியா முழுவதும் உள்ள மலைவாழ் மக்கள் வாழ்ந்து வருகின்றனர். அதேபோல் தமிழகத்திலும் பழங்குடி மக்களாக, அனைத்து மாவட்டங்களிலும் நரிக்குறவர் சமூகத்தினர் வாழ்ந்து வருகின்றனர். 

இவர்களுக்காக அரசு வழங்கும் இட ஒதுக்கீட்டினை முழுமையாக இவர்கள் அனுபவிக்க முடியாமல் போகும் சூழல் இன்று வரை உள்ளது. மலைவாழ் மக்களும் பலமுறை அரசு அலுவலகங்களுக்குச் சென்று விண்ணப்பித்தாலும் சாதிச் சான்றிதழ் இன்று வரை பலருக்கு எட்டாக் கனியாகத்தான் உள்ளது. சாதிச் சான்றிதழ் வேண்டி விண்ணப்பித்த பழங்குடி சேர்ந்தவர், சான்றிதழ் கிடைக்காததால் செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை பகுதியைச் சேர்ந்தவர் வேல் முருகன்(49). பழங்குடி சமூகத்தினைச் சேர்ந்தவரான இவருக்கு ஒரு மகனும், இரண்டு மகள்களும் உள்ளனர். தனது மகனின் உயர் கல்விக்காக சாதிச் சான்றிதழ் வேண்டி பலமுறை விண்ணப்பித்தும் கிடைக்காததால், மன உளைச்சலுக்கு ஆளான வேல்முருகன் நேற்று மதியம் சென்னை உயர்நீதிமன்றம் வடக்கு வாசலிலின் முன்பு பெட்ரோல் ஊற்றி தீயை பற்றவைத்துக் கொண்டு நீதிமன்றத்திற்குள் நடந்து சென்றார். மேலும், கையில் அவர் வைத்திருந்த பெட்ரோலை மீண்டும் தன் மீது ஊற்றிக் கொண்டே இருந்தார். இதனால் யாரும் அவரிடம் நெருங்க முடியாத நிலை ஏற்பட்டது. அதன் பின்னர் அவர் மீது இருந்த தீயை  காவல் துறையினர் அணைத்தனர். அதன் பின்னர் வேல்முருகன், “நான் மலைகுறவன் சமூகத்தைச் சார்ந்தவன். எனது மகனுக்கு சாதிச் சான்றிதழ் வேண்டி பலமுறை விண்ணப்பித்தும் அரசு அலுவகத்திற்கு பலமுறை அலைந்து பார்த்து விட்டேன். ஆனால் கிடைக்கவில்லை. எனவே இந்த முடிவினை எடுத்தேன். இனியாவது உடனடியாக சாதிச் சான்றிதழ்கள் வழங்கப்படும் என நம்புகிறேன்” என சத்தமாக கத்தியுள்ளார். 

தீக்காயங்களுடன் இருந்த வேல்முருகனை காவல் துறையினர் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த வேல்முருகன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். சாதிச் சான்றிதழ் கிடைக்காததால் தீக்குளித்த சம்பவமே பெரும் பரப்பை ஏற்படுத்திய நிலையில், வேல்முருகனின் இறப்பு கவலையை ஏற்படுத்தியுள்ளது. 

பழங்குடி மக்கள் சாதிச் சான்றிதழ் வேண்டி பலமுறை விண்ணப்பித்தாலும் பல்வேறு அரசு அலுவலகர்கள் சான்றிதழ் வழங்குவதில் பெரும் அலட்சியப் போக்கினையே கடைபிடிக்கின்றனர். சான்றிதழுக்காக உயிரிழப்பு எனும் அவலநிலை என்றைக்கு மாறுமே என்பதற்கு அரசுத்தரப்புதான் பதில் சொல்லவேண்டும். 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Magalir Urimai Thogai: இது தொடக்கமே.. மகளிர் உரிமைத் தொகை மேலும் உயரும்; முதலமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
இது தொடக்கமே.. மகளிர் உரிமைத் தொகை மேலும் உயரும்; முதலமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
ADMK BJP: அதிமுக கூட்டணி.. அமித்ஷாவிற்கு தலைவலி - இதுதான் சங்கதி!
ADMK BJP: அதிமுக கூட்டணி.. அமித்ஷாவிற்கு தலைவலி - இதுதான் சங்கதி!
Chennai Metro Rail Work: சென்னை மெட்ரோ பணியில் கலக்கும்
சென்னை மெட்ரோ பணியில் கலக்கும் "மயில்"; எந்த மயில்னு யோசிக்கிறீங்களா.? இத படிங்க தெரியும்
PM Kisan 22nd Installment: பிரதம மந்திரி கிசான் நிதியின் 22-வது தவணை எப்போ வரும்.? அதுக்குள்ள விவசாயிகள் இத செஞ்சுடுங்க
பிரதம மந்திரி கிசான் நிதியின் 22-வது தவணை எப்போ வரும்.? அதுக்குள்ள விவசாயிகள் இத செஞ்சுடுங்க
ABP Premium

வீடியோ

Magalir Urimai Thogai | ''மகளிருக்கு இன்னொரு CHANCE..!''கலைஞர் மகளிர் உரிமைத்தொகை
Rajinikanth 75th Birthday Celebration|’’ரஜினி என் குலசாமி!’’வீடு முழுக்க RAJINISMவியக்க வைத்த ரசிகர்
Tindivanam Bus Accident - டயர் வெடித்து விபத்து ஒருவர் பலி, 15 பேர் படுகாயம்; உதவிய விழுப்புரம் கலெக்டர்
Nainar Nagendran Meet EPS | டெல்லிக்கு அழைத்த அமித் ஷா; ஈபிஎஸ்-நயினார் திடீர் சந்திப்பு; அண்ணாமலை பலே ப்ளான்!
LAW & ORDER இனிமே இவர் கையில் தமிழகத்தின் புதிய பொறுப்பு DGPயார் இந்த அபய் குமார் சிங் IPS? | Abhay Kumar Singh | MK Stalin | TN New DGP

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Magalir Urimai Thogai: இது தொடக்கமே.. மகளிர் உரிமைத் தொகை மேலும் உயரும்; முதலமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
இது தொடக்கமே.. மகளிர் உரிமைத் தொகை மேலும் உயரும்; முதலமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
ADMK BJP: அதிமுக கூட்டணி.. அமித்ஷாவிற்கு தலைவலி - இதுதான் சங்கதி!
ADMK BJP: அதிமுக கூட்டணி.. அமித்ஷாவிற்கு தலைவலி - இதுதான் சங்கதி!
Chennai Metro Rail Work: சென்னை மெட்ரோ பணியில் கலக்கும்
சென்னை மெட்ரோ பணியில் கலக்கும் "மயில்"; எந்த மயில்னு யோசிக்கிறீங்களா.? இத படிங்க தெரியும்
PM Kisan 22nd Installment: பிரதம மந்திரி கிசான் நிதியின் 22-வது தவணை எப்போ வரும்.? அதுக்குள்ள விவசாயிகள் இத செஞ்சுடுங்க
பிரதம மந்திரி கிசான் நிதியின் 22-வது தவணை எப்போ வரும்.? அதுக்குள்ள விவசாயிகள் இத செஞ்சுடுங்க
Trump's C5 Plan.?: ஐரோப்பாவிற்கு G7; ஆசியாவிற்கு C5; ட்ரம்ப்பின் பலே பிளான்.? எந்தெந்த நாடுகள் தெரியுமா.?
ஐரோப்பாவிற்கு G7; ஆசியாவிற்கு C5; ட்ரம்ப்பின் பலே பிளான்.? எந்தெந்த நாடுகள் தெரியுமா.?
Gold Rate Dec.13th: அய்யய்யோ.! தங்கம் விலை ரூ.99,000-த்தை நெருங்கியது; ஒரே நாளில் ரூ.2560 உயர்வு - இன்று விலை என்ன.?
அய்யய்யோ.! தங்கம் விலை ரூ.99,000-த்தை நெருங்கியது; ஒரே நாளில் ரூ.2560 உயர்வு - இன்று விலை என்ன.?
Magalir Urimai Thogai: மகளிர் உரிமை தொகை ரூ. 1000 கிடைக்கவில்லையா.! மீண்டும் ஒரு வாய்ப்பு- எப்போ தெரியுமா.?
மகளிர் உரிமை தொகை ரூ. 1000 கிடைக்கவில்லையா.! மீண்டும் ஒரு வாய்ப்பு- எப்போ தெரியுமா.?
Hyundai Verna: ரூ.13 லட்சம்தான் ஆரம்பம்.. ஹுண்டாய் Verna காரை வாங்கலாமா? வேண்டாமா?
Hyundai Verna: ரூ.13 லட்சம்தான் ஆரம்பம்.. ஹுண்டாய் Verna காரை வாங்கலாமா? வேண்டாமா?
Embed widget