மேலும் அறிய

CM Vijay: கரூர் என்றால் எங்களுக்கு பயமா?.. ஓடி ஒளிந்தது நீங்க தான்.. தவெகவை விமர்சித்த திமுக!

கரூ­ரில் ஒவ்­வொரு உயி­ரா­கப் போய்க் கொண்டு இருந்­த­போது பயந்து அங்­கி­ருந்து ஓடி வந்­த­வர்­தான் விஜய். கரூ­ரில் இருக்­கா­மல் திருச்­சிக்கு ஓடி      வந்­தார். அவ­ரைச் சுற்றி இருக்­கும் அனை­வ­ரும் செல்­போனை அணைத்து வைத்து விட்­டார்­கள்.

கரூருக்கு முதலமைச்சர் விஜய் செல்வதால் திமுக பயப்படுவதாக சொன்ன தவெக அமைச்சர் நிர்மல் குமாரை முரசொலி நாளிதழ் கடுமையாக சாடியுள்ளது. 

இதுதொடர்பாக தலையங்கத்தில் வெளியான கட்டுரையில், “கரூ­ருக்கு முத­ல­மைச்­சர் விஜய் செல்­கி­றார் என்­ற­தும் திமுக பயப்­ப­டு­கிறது. கரூர் மக்­களை முத­ல­மைச்­சர் விஜய் சந்­திப்­ப­தைப் பார்த்து திமுக பயப்­ப­டு­கி­றது” என்று அமைச்­சர் நிர்­மல்­கு­மார் புலம்பி இருக்­கிறார். எந்த நிர்­மல் குமார்? கரூர் சம்­ப­வத்­தில் போலீஸ் தேடி­ய­போது தலை­ம­றை­வாக இருந்­தாரே அந்த நிர்­மல்­கு­மார். இப்­போது அமைச்­சர் ஆன­தும் ஏதோ தைரி­ய­சா­லி­யைப் போல போக்­குக் காட்­டு­கி­றார்.

கரூ­ரில் ஒவ்­வொரு உயி­ரா­கப் போய்க் கொண்டு இருந்­த­போது பயந்து அங்­கி­ருந்து ஓடி வந்­த­வர்­தான் விஜய். கரூ­ரில் இருக்­கா­மல் திருச்­சிக்கு ஓடி      வந்­தார். அவ­ரைச் சுற்றி இருக்­கும் அனை­வ­ரும் செல்­போனை அணைத்து வைத்து விட்­டார்­கள். திருச்சி விமான நிலை­யத்­தில் சூழ்ந்து கத்­திய அனைத்து ஊட­கங்­க­ளை­யும் பார்க்­கா­மல் சென்­னைக்கு ஓடி வந்து விட்­டார் விஜய். சென்னை விமான நிலை­யத்­தி­லும் ஊட­கங்­கள் குரல்                   எழுப்­பி­னார்கள். அவர்­க­ளைப் பார்க்­கா­மல் பயந்து போய் தனது வீட்­டுக்கு வந்து பதுங்­கிக் கொண்­டார் விஜய். அதன்­பி­றகு அவ­ரைப் பல நாட்­கள் பொது­வெளி­யில் காண­வில்லை. வெளியே வர­வில்லை. தனது சுற்­றுப் பய­ணங்­க­ளையே ரத்து செய்து விட்­டார் விஜய்.

41 உயிர்­கள் பலி­யான குடும்­பத்­தைப் பார்க்க விஜய் அதோ வரு­கிறார், இதோ வரு­கி­றார், அன்று வரப் போகி­றார், இன்று வரப்­போ­கி­றார் என்று        ஊட­கங்­கள் செய்தி போட்டு விஜய்யை உசுப்­பி­விட்­டார்­களே தவிர, அவர் வரவே இல்லை. 41 உயிர்­க­ளைப் பலி கொடுத்த குடும்­பத்­தி­னரை சென்­னைக்கு வரவழைத்­துப் பார்த்த அசிங்­கத்­தை­யும் விஜய்யே செய்­தார்.

27.9.2025 அன்று நடந்த கொடூ­ர­மான சம்­ப­வத்­துக்கு பொறுப்­பேற்க வேண்­டி­ய­வர்­க­ளாக மூன்று பேர் மீது அப்­போது கரூர் நகர காவல் நிலை­யத்­தில் வழக்­குப் பதி­வா­னது. தவெகவின் கரூர் மேற்கு மாவட்­டச் செய­லா­ளர் மதி­ய­ழ­கன், கட்சி பொதுச்­செ­ய­லா­ளர் புஸ்சி ஆனந்த், கட்சி நிர்­வாகி நிர்­மல்­கு­மார் என்று குறிப்­பி­டப்­பட்­டது. விஜய் பெயர்

அப்­போது சேர்க்­கப்­ப­ட­வில்லை.  பழி­வாங்­கும் நட­வ­டிக்கை என்று அப்­போதே சொல்லி இருப்­பார்­கள். இருந்­தா­லும், விஜய்க்கு பயம். அத­னால்­தான் உடனே சி.பி.ஐ. விசா­ரணை கேட்டு நீதி­மன்­றத்தை நாடி­னார்­கள்.  போலீஸை வைத்­துச் செய்து விட்­டார்­கள் என்று இன்று குற்­றம் சாட்­டுகி­றார்­களே. ஆனால் அன்­றைய தினம் விஜய் என்ன பேசி­னார்?. நான் இங்கு எப்­படி வந்­தேன் என்றே தெரி­ய­வில்லை. இதற்­காக காவல்துறை­யி­ன­ருக்கு நன்றி கூறுகி­றேன்” என்­று­தான் பேசி­னார். 

 விஜய் அங்கு மதி­யம் 12 மணிக்­குப் பேசு­வார் என்று தவெக சார்­பில் அறி­விக்­கப்­பட்­ட­தால் அவ­ரைப் பார்க்க காலை முதலே ஏரா­ள­மா­னோர் குவிந்­து விட்­ட­னர். பல மணி­நே­ரம் தண்­ணீர் குடிக்­கா­மல், உணவு அருந்­தா­மல் காத்­தி­ருந்த அந்­தப் பெருங்­கூட்­டம் களைப்­பால் துவண்டு போயி­ருந்த நிலை­யில் இரவு 7 மணிக்­குத்­தான் விஜய் வந்­தார். எனவே விஜய்­யும் அவ­ரது கட்­சிக்­கா­ரர்­க­ளும் சொல்­வது முழுப்­பொய் என்­பதை பழைய நாளி­தழ்­களே சொல்லும்.

அத­னால்­தான் முன் ஜாமின் கேட்டு  ஆனந்த், சென்னை உயர்­நீ­தி­மன்ற மது­ரைக் கிளை­யில் மனு போட்­டார். ஜாமின் கிடைக்­குமோ கிடைக்­காதோ என்ற பயத்­தில் தலை­ம­றைவானார். இதே­போல் முன் ஜாமின் மனு போட்­ட­வர்­தான் இன்­றைய ஆகாச சூரர் நிர்­மல்­கு­மார். அவ­ரும் எங்கோ பதுங்கினார்.நிகழ்ச்சி ஒருங்­கி­ணைப்­பா­ளர்­கள் அவர்­கள்­தான் எனும் போது, அவர்­கள் தானே நடந்த சம்­ப­வத்­துக்­குப் பொறுப்­பேற்க வேண்­டும் என்று சொல்லி  ஆனந்த், நிர்­மல்­கு­மார் ஆகி­யோ­ரின் முன் ஜாமின் மனுவை சென்னை உயர்­நீ­தி­மன்ற மது­ரைக் கிளை ரத்து செய்­ததை நிர்­மல்­கு­மார் மறந்து விட்­டாரா? தலை­ம­றை­வாக இருந்த நேரத்­தில் நடந்­ததை அறி­ய­வில்­லையா?

Also Read: விஜயை அதிர்ச்சியில் ஆழ்த்திய வீடியோ.. மருத்துவமனைக்கு ஓடோடி செல்ல காரணம் இதுவா?

அர­சி­யல் கட்­சி­க­ளின் கூட்­டங்­களை முறைப்­ப­டுத்த வேண்­டும் என்று சென்னை உயர்­நீ­தி­மன்­றத்­தில் தாக்­க­லான வழக்­கில் தீர்ப்­ப­ளித்த நீதிபதி செந்தில்­கு­மார்,  விஜய்க்கு தலை­மைப் பண்பு இல்லை என்று சொன்­னதை யாரும் மறந்­தி­ருக்க முடி­யாது.

 கரூர் சம்­ப­வத்­தில் பெண்­கள், குழந்­தை­கள், பலி­யான நிலை­யில் அக்­கட்­சித் தொண்­டர்­களை, ரசி­கர்­களை பொறுப்­பற்ற முறை­யில் கைவிட்டு ஓடிய தவெக தலை­வர் விஜய் உள்­ளிட்ட நிர்­வா­கி­க­ளுக்­குத் தலை­மைப் பண்பு இல்லை. அவர்­கள் சம்­ப­வத்­துக்­குப் பொறுப்­பேற்­க­வும் இல்லை. தவெக தனது பொறுப்­பைத் தட்­டிக் கழிக்க முடி­யாது. கரூர் விபத்து மனி­த­ரால் உரு­வாக்­கப்­பட்ட பேர­ழிவு என்று கடு­மை­யான சொற்­க­ளால் குறிப்­பிட்­டார் நீதிபதி செந்­தில்­கு­மார். விஜய் பயந்து போய் ஓடிப்­போ­னார் என்­பதை சென்னை உயர்­நீ­தி­மன்­றமே சொன்­னது. ‘விஜய் சென்ற பிரச்­சார வாக­னத்தை ஏன் பறி­மு­தல் செய்­ய­வில்லை?’ என்­றும் நீதிபதி கேட்­டார்.

ஆனந்­தும், நிர்­மல்­கு­மா­ரும் தலை­ம­றை­வா­கிய நிலை­யில் தவெக கரூர் மாவட்­டச் செய­லா­ளர் மதி­ய­ழ­கனை காவல்துறை அன்று கைது செய்­தது. உடனே,  இலங்கை, நேபா­ளத்தை போல புரட்சி வெடிக்­கும்  என்று லாட்­டரி மாதிரி பத­வி­க­ளைப் பெற்று வரும் ஆதவ் அர்­ஜூன் பதிவு போட்­டார். இதுவும் நீதி­ப­தி­க­ளால் கண்­டிக்­கப்­பட்­டது. ‘இவர்­கள் என்ன சட்­டத்­துக்கு அப்­பாற்­பட்­ட­வர்­களா?’ என்று கேட்­டது உயர்­நீ­தி­ மன்­றம். இதன் மீது சட்­ட­பூர்­வ­மான நட­வ­டிக்கை எடுக்க அர­சுக்கு உத்­த­ர­விட்­டார் நீதி­பதி. அதன்­பி­றகு ஆதவ் அர்­ஜூ­னா­வும் தலை­ம­றைவு ஆனார். இது பயத்­தி­னால் தானே?” என சரமாரியாக முரசொலி விமர்சித்துள்ளது. 

Advertisement

தலைப்பு செய்திகள்

" வயது வித்தியாசம் பிடிக்கல " திருமணத்தை நிறுத்த சொன்ன 21 வயது பெண் !! இறுதியில் நடந்த கொடூரம்
விழுப்புரத்தை உலுக்கும் போதை கும்பலுக்கு செக்!
விழுப்புரத்தை உலுக்கும் போதை கும்பலுக்கு செக்! "Drug Free TN" செயலியுடன் அதிரடி வேட்டைக்கு தயாராகும் மாவட்ட நிர்வாகம்!
வேகத்தடைகளில் புதிய மாற்றம்... ஆக்கிரமிப்புகள் அதிரடி அகற்றம்! வாகன ஓட்டிகளுக்கு குட் நியூஸ் சொன்ன விழுப்புரம் கலெக்டர்!
வேகத்தடைகளில் புதிய மாற்றம்... ஆக்கிரமிப்புகள் அதிரடி அகற்றம்! வாகன ஓட்டிகளுக்கு குட் நியூஸ் சொன்ன விழுப்புரம் கலெக்டர்!
IAS Transfer: ஐஏஎஸ் அதிகாரிகளை அதிரடியாக மாற்றிய தவெக அரசு.. ராதாகிருஷ்ணன், சுப்ரியா சாஹுவும் ட்ரான்ஸ்பர் - முழு லிஸ்ட் இதோ
IAS Transfer: ஐஏஎஸ் அதிகாரிகளை அதிரடியாக மாற்றிய தவெக அரசு.. ராதாகிருஷ்ணன், சுப்ரியா சாஹுவும் ட்ரான்ஸ்பர் - முழு லிஸ்ட் இதோ
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

G Pay மூலம் லஞ்சம் வாங்கிய தவெக ஊராட்சி தலைவர் கட்சியிலிருந்து அதிரடி நீக்கம்!
விசாரணை கைதி மரணம் ”அடிச்சே கொன்னுட்டாங்க” பகீர் கிளப்பும் குடும்பத்தினர்
மீண்டும் கொத்தடிமை முறை துப்புரவு பணியாளர்களுக்கு அநீதி சேலத்தில் அரங்கேறிய அவலம்
’’கேரளா காருக்கு NO ENTRY அரசு பஸ் போகலாம்’’ அத்துமீறிய TRAFFIC POLICE?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IAS Transfer: ஐஏஎஸ் அதிகாரிகளை அதிரடியாக மாற்றிய தவெக அரசு.. ராதாகிருஷ்ணன், சுப்ரியா சாஹுவும் ட்ரான்ஸ்பர் - முழு லிஸ்ட் இதோ
IAS Transfer: ஐஏஎஸ் அதிகாரிகளை அதிரடியாக மாற்றிய தவெக அரசு.. ராதாகிருஷ்ணன், சுப்ரியா சாஹுவும் ட்ரான்ஸ்பர் - முழு லிஸ்ட் இதோ
ஆட்டம் போட முயற்சித்த அமைச்சர்கள்... தூக்கி வீச ரெடியான விஜய்! அமைச்சரவையில் விரைவில் மாற்றம்?
ஆட்டம் போட முயற்சித்த அமைச்சர்கள்... தூக்கி வீச ரெடியான விஜய்! அமைச்சரவையில் விரைவில் மாற்றம்?
US Russia Sanctions Bill: 500 இல்ல, வெறும் 100 தான்.! ரஷ்ய எண்ணெய் கொள்முதல் கட்டணங்களை மாற்றும் அமெரிக்கா; இந்தியாவுக்கு நிம்மதி
500 இல்ல, வெறும் 100 தான்.! ரஷ்ய எண்ணெய் கொள்முதல் கட்டணங்களை மாற்றும் அமெரிக்கா; இந்தியாவுக்கு நிம்மதி
6ம் வகுப்பு முதல் செயற்கை நுண்ணறிவு கல்வி- இந்தியாவின் முதல் AI பல்கலைக்கழகம்- கலக்கும் கர்நாடகா
6ம் வகுப்பு முதல் செயற்கை நுண்ணறிவு கல்வி- இந்தியாவின் முதல் AI பல்கலைக்கழகம்- கலக்கும் கர்நாடகா
ஒரே சார்ஜில் 427 கிலோமீட்டர் மைலேஜ்.. வரப்போது Volkswagen ID Cross மின்சார கார் - விலை எவ்ளோ?
ஒரே சார்ஜில் 427 கிலோமீட்டர் மைலேஜ்.. வரப்போது Volkswagen ID Cross மின்சார கார் - விலை எவ்ளோ?
குடும்பத்தை காப்பாற்ற டாக்சி ஓட்டும் பிஎச்டி பட்டதாரி; பேராசிரியர் ஊதியம் போதாத அவலம்!
குடும்பத்தை காப்பாற்ற டாக்சி ஓட்டும் பிஎச்டி பட்டதாரி; பேராசிரியர் ஊதியம் போதாத அவலம்!
Maruti Suzuki Dzire on EMI: நடுத்தர வர்க்கத்தின் நம்பகமான கார்.! மாருதி சுசூகி டிசையரின் ஆன்-ரோடு விலை, முன்பணம், EMI எவ்வளவு.?
நடுத்தர வர்க்கத்தின் நம்பகமான கார்.! மாருதி சுசூகி டிசையரின் ஆன்-ரோடு விலை, முன்பணம், EMI எவ்வளவு.?
ADMK: செங்கோட்டையனைச் சந்தித்த லீமாரோஸ்.. ஆடிப்போன அதிமுக! கட்டுப்படுத்துவாரா எடப்பாடி பழனிசாமி?
ADMK: செங்கோட்டையனைச் சந்தித்த லீமாரோஸ்.. ஆடிப்போன அதிமுக! கட்டுப்படுத்துவாரா எடப்பாடி பழனிசாமி?
Embed widget