ஆட்டமா போட்றீங்க? மாவட்டச் செயலாளர்கள் அதிகாரத்தை குறைக்கப்போகும் மு.க.ஸ்டாலின் - ப்ளான் இதுதான்
திமுக-வின் தோல்வியைத் தொடர்ந்து மாவட்டச் செயலாளர்கள் எண்ணிக்கையை 100 ஆக உயர்த்த மு.க.ஸ்டாலின் திட்டமிட்டுள்ளார்.

சட்டமன்ற தேர்தல் முடிவுகளால் திமுக மிக கடுமையான பாதிப்பைச் சந்தித்துள்ளது. மிக எளிதாக வெற்றி பெறுவோம் என்று எதிர்பார்க்கப்பட்ட இந்த சட்டமன்ற தேர்தலில் படுதோல்வி அடைந்துள்ளனர். குறிப்பாக, கட்சியின் தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் படுதோல்வி அடைந்தார்.
தோல்விக்கு காரணம் என்ன?
திமுக-வின் இந்த தோல்விக்கு இன்ஸ்டாகிராம், விஜய் மீதான கவர்ச்சி என்று பல்வேறு காரணங்களை திமுக வெளியில் கூறினாலும் உண்மையில் அவர்கள் தோல்விக்கு கட்சியின் மேல்மட்டத்தில் உள்ள முக்கிய தலைவர்களும், மாவட்டச் செயலாளர்கள் பலரும் சரியாக பணியாற்றாததே முக்கிய காரணமாக கருதப்படுகிறது.
இந்த முறை வேட்பாளர்கள் நியமனத்தில் மூத்த தலைவர்கள், பல மாவட்டச் செயலாளர்கள் வேட்பாளர்களுக்கு சரியான ஒத்துழைப்பு அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது. தேர்தல் முடிந்த பிறகு இதுதொடர்பான குற்றச்சாட்டை திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு வேட்பாளர்கள் பலரும் முறையிட்டுள்ளனர்.
குவிந்த புகார்கள்:
தங்களுக்கு கீழ் பல தொகுதிகள் இருக்கும் அதிகாரத்தில் பல மாவட்டச் செயலாளர்கள் அலட்சியமாகவும் அதிகாரப்போக்கிலும் பல ஆண்டுகளாக செயல்படுவதாக தலைமைக்கு தொடர் புகார்கள் குவிந்து வருகிறது. இதனால், கட்சியின் மாவட்ட ரீதியாக இரண்டாம் கட்ட நிர்வாகிகள், கீழ்மட்ட தொண்டர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.
மாவட்டச் செயலாளர்கள் எண்ணிக்கை அதிகரிக்க திட்டம்:
தேர்தல் தோல்விக்கு இதுவும் முக்கிய காரணமாக கருதப்படுவதால் மாவட்டச் செயலாளர்களின் அதிகாரத்தை குறைக்கும் வகையில், ஒரு மாவட்டச் செயலாளருக்கு அதிகபட்சம் அவரது கட்டுப்பாட்டில் 3 மாவட்டங்களே இருக்கும் வகையில் திமுக தலைமை முடிவு செய்துள்ளது.
இதன் காரணமாக, தற்போது 78 ஆக இருக்கும் திமுக மாவட்டச் செயலாளர்கள் எண்ணிக்கை 100 ஆக உயர்த்த வாய்ப்பு உள்ளது. இதன்மூலம், அதிகாரத்தில் ஆட்டம் போடும் மாவட்டச் செயலாளர்கள் சிலரின் அதிகாரப்போக்கை கட்டுப்படுத்துவதுடன், நீண்ட நாட்களாக பணியாற்றி வாய்ப்பிற்காக காத்திருப்பவர்களுக்கு வாய்ப்பு அளிக்கவும் தலைமை முடிவு செய்துள்ளது. இதனால், அவர்கள் திறம்பட பணியாற்றுவார்கள் என்றும் கட்சித் தலைமை நம்பிக்கையுடன் உள்ளது.
புதியவர்களுக்கு வாய்ப்பு:
இதன்மூலமாக சரியாக பணியாற்றதவர்களின் அதிகாரம் குறைக்கப்படுவதுடன், கட்சியில் நீண்ட நாட்களாக வாய்ப்பு எதிர்பார்த்து காத்திருப்பவர்களுக்கு வாய்ப்பு அளித்து அவர்களையும் திறம்பட பணியாற்ற வைக்கலாம் என்று கட்சி கருதுகிறது.
இதற்கான ஆரம்பகட்ட பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து, விரைவில் திமுக-வில் இந்த மாவட்டச் செயலாளர்கள் எண்ணிக்கையை அதிகரித்து புதிய மாவட்டச் செயலாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என்று கூறப்படுகிறது. புதிய மாவட்டச் செயலாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள நிலையில், தகுதியானவர்கள் யார்? யார்? என்பதை பட்டியல் எடுக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.
Before You Go
C Vijayabaskar: திமுக போகும் விஜயபாஸ்கர்? கட்சியில் முக்கிய பொறுப்பு ஸ்டாலின் கணக்கு என்ன?
ட்ரெண்டிங் செய்திகள்





















