மேலும் அறிய

’’உள்ளாட்சி பிரதிநிதிகளை திமுகவினர் மிரட்டுகின்றனர்’’- அதிமுக எம்.எல்.ஏக்கள் ஆட்சியரிடம் புகார் மனு

’’ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் நம்பிக்கையில்லாத் தீர்மானம் அரசு அதிகாரிகளின் துணையோடு நிறைவேற்றுவோம் என்று மிரட்டியும் திமுகவில் சேர தொடர்ந்து மிரட்டி வருகின்றனர்’’

கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் பாலசுப்பிரமணியத்தை சந்தித்து அதிமுகவை சேர்ந்த புவனகிரி சட்டமன்ற உறுப்பினரும், மேற்கு மாவட்டக் கழகச் செயலாளருமான அருண்மொழிதேவன், சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினரும் கடலூர் கிழக்கு மாவட்ட செயலாளருமான பாண்டியன், மற்றும் அதிமுகவை சேர்ந்த ஒன்றியக் குழு சேர்மன்கள், மாவட்ட குழு சேர்மன் உள்ளிட்ட பலர் மனு ஒன்றை அளித்தனர். 
 

’’உள்ளாட்சி பிரதிநிதிகளை திமுகவினர் மிரட்டுகின்றனர்’’- அதிமுக எம்.எல்.ஏக்கள் ஆட்சியரிடம் புகார் மனு
 
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த புவனகிரி சட்டமன்ற உறுப்பினரும், மேற்கு மாவட்டக் கழகச் செயலாளருமான அருண்மொழிதேவன் கூறுகையில், திமுக ஆளுங்கட்சியாக வந்தவுடன் கடலூர் மாவட்டத்தில் திமுகவை சேர்ந்த நிர்வாகிகள் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் அத்து மீறி அதிகாரம் செலுத்தி அதிகாரிகளையும் மக்கள் பிரதிநிதிகளையும் மிரட்டி வருவதுடன் வளர்ச்சிப் பணிகளில் குறுக்கீடு செய்து வருகின்றனர். மேலும் ஊராட்சி ஒன்றிய தீர்மானம் மூலம் தேர்வு செய்யப்படும் பணிகளில் திமுக நிர்வாகிகள் எல்லா விஷயங்களிலும் தலையிட்டு அதிகாரிகளை மிரட்டி வருவதால் மக்கள் பணியினை தங்களால் சரிவர செய்ய முடியவில்லை, இது மட்டும் இன்றி அதிமுக ஒன்றிய குழு உறுப்பினர்களை பணத்தாசை காட்டி திமுகவில் சேர்க்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
 

’’உள்ளாட்சி பிரதிநிதிகளை திமுகவினர் மிரட்டுகின்றனர்’’- அதிமுக எம்.எல்.ஏக்கள் ஆட்சியரிடம் புகார் மனு
 
மேலும் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் நம்பிக்கையில்லாத் தீர்மானம் அரசு அதிகாரிகளின் துணையோடு நிறைவேற்றுவோம் என்று மிரட்டியும் திமுகவில் சேர தொடர்ந்து மிரட்டி வருகின்றனர் என்று சட்டமன்ற உறுப்பினர் அருண்மொழிதேவன் தெரிவித்தார். கடந்த சில நாட்களுக்கு முன் நல்லூர் ஒன்றியக்குழு தலைவர் மற்றும் துணைத்தலைவர் ஆகியோர் மீது குற்றச்சாட்டி கடந்த 27 ஆம் தேதி விருத்தாசலம் வருவாய் கோட்டாட்சியரை சந்தித்து, நம்பிக்கை வாக்கெடுப்பு கோரி திமுகவை சேர்ந்த ஒன்றிய கவுன்சிலர் A.M.P.முத்துகண்ணு, மற்றும் 13 ஒன்றியகுழு வார்டு உறுப்பினர்கள் மனு கொடுத்தனர்.

’’உள்ளாட்சி பிரதிநிதிகளை திமுகவினர் மிரட்டுகின்றனர்’’- அதிமுக எம்.எல்.ஏக்கள் ஆட்சியரிடம் புகார் மனு
 
இந்த நிலையில் அதிமுகவை சேர்ந்த ஒன்றிய கவுன்சிலர் ஆன வள்ளி சந்திரசேகர் மற்றும் அதிமுக கவுன்சிலர்கள் கடந்த டிசம்பர் 30 ஆம் தேதி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் காவல் கண்காணிப்பாளர் அவர்களை சந்தித்து மனு ஒன்றை அளித்தனர். அந்த மனுவில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த கோரி கோட்டாட்சியரிடம் அளிக்கப்பட்ட மனுவில், கோட்டாட்சியர் இடம் அளிக்கப்பட்ட நம்பிக்கை இல்லா தீர்மானத்திற்காக தன் பெயரில் கொடுக்கப்பட்ட லெட்டர் பேட் தனது லெட்டர் பேட் இல்லை எனவும் மற்றும் அதில் போடப்பட்டு இருக்கும் கையெழுத்தும் போலியானது என்றும், தனது பெயரை பயன்படுத்தி விருத்தாசலம் வருவாய் கோட்டாட்சியரிடம் கொடுத்துள்ள கடிதம் போலியானது அதிலும் தான் கையொப்பம் இடவில்லை என கூறி நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனு அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தலைப்பு செய்திகள்

Tamil Nadu Top 10 News : 'இன்றைய முக்கிய செய்திகள்’ இதை தெரிந்துகொண்டாலே போதும்..!
Tamil Nadu Top 10 News : 'இன்றைய முக்கிய செய்திகள்’ இதை தெரிந்துகொண்டாலே போதும்..!
Top 5 budget cars : ரூ.5 லட்சத்துக்குள் கார் வாங்கணுமா? சூப்பர் மைலேஜ் தரும் டாப் 5 பட்ஜெட் கார்கள் இதோ!
Top 5 budget cars : ரூ.5 லட்சத்துக்குள் கார் வாங்கணுமா? சூப்பர் மைலேஜ் தரும் டாப் 5 பட்ஜெட் கார்கள் இதோ!
பிரெஞ்சு நகரத்தில் டிராம் பயணம்: புதுச்சேரியில் பாரீஸ் பாணியில் களமிறங்கும் பேட்டரி டிராம்!
பிரெஞ்சு நகரத்தில் டிராம் பயணம்: புதுச்சேரியில் பாரீஸ் பாணியில் களமிறங்கும் பேட்டரி டிராம்!
ஒரே கிளிக்கில் வருமானச் சான்றிதழ் & பட்டா பெயர் மாற்றம்: புதுச்சேரி அரசின் புதிய ஆன்லைன் சேவை அசத்தல்...!
ஒரே கிளிக்கில் வருமானச் சான்றிதழ் & பட்டா பெயர் மாற்றம்: புதுச்சேரி அரசின் புதிய ஆன்லைன் சேவை அசத்தல்...!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
கர்நாடக வனத்துறை கொடூரம்: இதிலும் வாய்மூடி இருக்காதீங்க- தவெக அரசுக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்
கர்நாடக வனத்துறை கொடூரம்: இதிலும் வாய்மூடி இருக்காதீங்க- தவெக அரசுக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்
US Iran War China: பசிபிக் பிராந்தியத்தில் இருந்து வெளியேறிய அமெரிக்க விமானம் தாங்கி கப்பல்; உள்ளே நுழையுமா சீனா.?
பசிபிக் பிராந்தியத்தில் இருந்து வெளியேறிய அமெரிக்க விமானம் தாங்கி கப்பல்; உள்ளே நுழையுமா சீனா.?
TN Politics: ஆபாசமும், அருவருப்பும்.. தமிழக அரசியலில் அதிகரிக்கும் வன்மமும், வக்கிரமும்!
TN Politics: ஆபாசமும், அருவருப்பும்.. தமிழக அரசியலில் அதிகரிக்கும் வன்மமும், வக்கிரமும்!
நீட், ஜேஇஇ இருந்தாலும்.. நாடு முழுவதும் உயர்கல்வி சேர்க்கை மையப்படுத்தப்படவில்லை: ஜெகதீஷ் குமார்
நீட், ஜேஇஇ இருந்தாலும்.. நாடு முழுவதும் உயர்கல்வி சேர்க்கை மையப்படுத்தப்படவில்லை: ஜெகதீஷ் குமார்
Iran Vs Qatar: போர் விமானங்களை சுட்டு 3 ஈரானிய வீரர்கள் கைதா.? ஈரானின் குற்றச்சாட்டுக்கு கத்தாரின் பதில் என்ன.?
போர் விமானங்களை சுட்டு 3 ஈரானிய வீரர்கள் கைதா.? ஈரானின் குற்றச்சாட்டுக்கு கத்தாரின் பதில் என்ன.?
Udhayanidhi: ”மூளை இல்லாத கூட்டம், முன்ஜாமின் வாங்கனும்” - CM விஜயை கடுமையாக விமர்சித்து பேசிய உதயநிதி
”மூளை இல்லாத கூட்டம், முன்ஜாமின் வாங்கனும்” - CM விஜயை கடுமையாக விமர்சித்து பேசிய உதயநிதி
விவசாயிகளுக்கு ஆட்சியர் அதிரடி உத்தரவு: அனைத்து நிலங்களையும் உடனே பதிவு செய்யுங்கள்! பதிவு செய்தால் மட்டுமே அரசு சலுகைகள்....
விவசாயிகளுக்கு ஆட்சியர் அதிரடி உத்தரவு: அனைத்து நிலங்களையும் உடனே பதிவு செய்யுங்கள்! பதிவு செய்தால் மட்டுமே அரசு சலுகைகள்....
Air India: ஏர் இந்தியா விமான பயணி துப்பாக்கிச் சூடு - பணியார்கள் 2 பேர் காயம் - நடந்தது என்ன? எப்படி?
ஏர் இந்தியா விமான பயணி துப்பாக்கிச் சூடு - பணியார்கள் 2 பேர் காயம் - நடந்தது என்ன? எப்படி?
Embed widget