மேலும் அறிய

’’உள்ளாட்சி பிரதிநிதிகளை திமுகவினர் மிரட்டுகின்றனர்’’- அதிமுக எம்.எல்.ஏக்கள் ஆட்சியரிடம் புகார் மனு

’’ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் நம்பிக்கையில்லாத் தீர்மானம் அரசு அதிகாரிகளின் துணையோடு நிறைவேற்றுவோம் என்று மிரட்டியும் திமுகவில் சேர தொடர்ந்து மிரட்டி வருகின்றனர்’’

கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் பாலசுப்பிரமணியத்தை சந்தித்து அதிமுகவை சேர்ந்த புவனகிரி சட்டமன்ற உறுப்பினரும், மேற்கு மாவட்டக் கழகச் செயலாளருமான அருண்மொழிதேவன், சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினரும் கடலூர் கிழக்கு மாவட்ட செயலாளருமான பாண்டியன், மற்றும் அதிமுகவை சேர்ந்த ஒன்றியக் குழு சேர்மன்கள், மாவட்ட குழு சேர்மன் உள்ளிட்ட பலர் மனு ஒன்றை அளித்தனர். 
 

’’உள்ளாட்சி பிரதிநிதிகளை திமுகவினர் மிரட்டுகின்றனர்’’- அதிமுக எம்.எல்.ஏக்கள் ஆட்சியரிடம் புகார் மனு
 
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த புவனகிரி சட்டமன்ற உறுப்பினரும், மேற்கு மாவட்டக் கழகச் செயலாளருமான அருண்மொழிதேவன் கூறுகையில், திமுக ஆளுங்கட்சியாக வந்தவுடன் கடலூர் மாவட்டத்தில் திமுகவை சேர்ந்த நிர்வாகிகள் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் அத்து மீறி அதிகாரம் செலுத்தி அதிகாரிகளையும் மக்கள் பிரதிநிதிகளையும் மிரட்டி வருவதுடன் வளர்ச்சிப் பணிகளில் குறுக்கீடு செய்து வருகின்றனர். மேலும் ஊராட்சி ஒன்றிய தீர்மானம் மூலம் தேர்வு செய்யப்படும் பணிகளில் திமுக நிர்வாகிகள் எல்லா விஷயங்களிலும் தலையிட்டு அதிகாரிகளை மிரட்டி வருவதால் மக்கள் பணியினை தங்களால் சரிவர செய்ய முடியவில்லை, இது மட்டும் இன்றி அதிமுக ஒன்றிய குழு உறுப்பினர்களை பணத்தாசை காட்டி திமுகவில் சேர்க்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
 

’’உள்ளாட்சி பிரதிநிதிகளை திமுகவினர் மிரட்டுகின்றனர்’’- அதிமுக எம்.எல்.ஏக்கள் ஆட்சியரிடம் புகார் மனு
 
மேலும் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் நம்பிக்கையில்லாத் தீர்மானம் அரசு அதிகாரிகளின் துணையோடு நிறைவேற்றுவோம் என்று மிரட்டியும் திமுகவில் சேர தொடர்ந்து மிரட்டி வருகின்றனர் என்று சட்டமன்ற உறுப்பினர் அருண்மொழிதேவன் தெரிவித்தார். கடந்த சில நாட்களுக்கு முன் நல்லூர் ஒன்றியக்குழு தலைவர் மற்றும் துணைத்தலைவர் ஆகியோர் மீது குற்றச்சாட்டி கடந்த 27 ஆம் தேதி விருத்தாசலம் வருவாய் கோட்டாட்சியரை சந்தித்து, நம்பிக்கை வாக்கெடுப்பு கோரி திமுகவை சேர்ந்த ஒன்றிய கவுன்சிலர் A.M.P.முத்துகண்ணு, மற்றும் 13 ஒன்றியகுழு வார்டு உறுப்பினர்கள் மனு கொடுத்தனர்.

’’உள்ளாட்சி பிரதிநிதிகளை திமுகவினர் மிரட்டுகின்றனர்’’- அதிமுக எம்.எல்.ஏக்கள் ஆட்சியரிடம் புகார் மனு
 
இந்த நிலையில் அதிமுகவை சேர்ந்த ஒன்றிய கவுன்சிலர் ஆன வள்ளி சந்திரசேகர் மற்றும் அதிமுக கவுன்சிலர்கள் கடந்த டிசம்பர் 30 ஆம் தேதி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் காவல் கண்காணிப்பாளர் அவர்களை சந்தித்து மனு ஒன்றை அளித்தனர். அந்த மனுவில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த கோரி கோட்டாட்சியரிடம் அளிக்கப்பட்ட மனுவில், கோட்டாட்சியர் இடம் அளிக்கப்பட்ட நம்பிக்கை இல்லா தீர்மானத்திற்காக தன் பெயரில் கொடுக்கப்பட்ட லெட்டர் பேட் தனது லெட்டர் பேட் இல்லை எனவும் மற்றும் அதில் போடப்பட்டு இருக்கும் கையெழுத்தும் போலியானது என்றும், தனது பெயரை பயன்படுத்தி விருத்தாசலம் வருவாய் கோட்டாட்சியரிடம் கொடுத்துள்ள கடிதம் போலியானது அதிலும் தான் கையொப்பம் இடவில்லை என கூறி நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனு அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Seeman: “தம்பி விஜய் ஏன் என்னை மாதிரி பேச வேண்டும்.. அவருக்கு இன்னும் ஒரு படம் இருக்கு” - கொந்தளித்த சீமான்!
“தம்பி விஜய் ஏன் என்னை மாதிரி பேச வேண்டும்.. அவருக்கு இன்னும் ஒரு படம் இருக்கு” - கொந்தளித்த சீமான்!
Breaking News LIVE: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்
Breaking News LIVE: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்
Kalki 2898 AD 2: பாராட்டுக்களைப் பெறும் முதல் பாகம்... பிரபாஸின் கல்கி 2 ஆம் பாகம் எப்போது தெரியுமா?
Kalki 2898 AD 2: பாராட்டுக்களைப் பெறும் முதல் பாகம்... பிரபாஸின் கல்கி 2 ஆம் பாகம் எப்போது தெரியுமா?
Vijay - Seeman:
Vijay - Seeman: "மாணவ - மாணவியரை ஊக்கப்படுத்திய விஜய்” - நெகிழ்ந்து போன சீமான்.. என்ன சொன்னார் தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Nellai Drunkard | ’’கார்ல கள்ளச்சாராயம் இருக்கு’’  வடிவேலு பாணியில் ரகளை!  மதுபிரியர் அட்ராசிட்டிAnnamalai on Sengol | ”செங்கோலை எடுக்கணுமா? திமுக என்ன சொல்லப்போகுது?”I.N.D.I.A-ஐ விளாசும் பாஜகவினர்Vijay Banner | சிறுவன் மீது சரிந்த விஜய் பேனர் பரபரப்பு CCTV காட்சிEB Office Alcohol | அலுவலகத்தில் மது அருந்திய மின்சார வாரிய ஊழியர்கள்!’’ஏய்..டம்ளர் எடுத்துட்டு வா’’

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Seeman: “தம்பி விஜய் ஏன் என்னை மாதிரி பேச வேண்டும்.. அவருக்கு இன்னும் ஒரு படம் இருக்கு” - கொந்தளித்த சீமான்!
“தம்பி விஜய் ஏன் என்னை மாதிரி பேச வேண்டும்.. அவருக்கு இன்னும் ஒரு படம் இருக்கு” - கொந்தளித்த சீமான்!
Breaking News LIVE: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்
Breaking News LIVE: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்
Kalki 2898 AD 2: பாராட்டுக்களைப் பெறும் முதல் பாகம்... பிரபாஸின் கல்கி 2 ஆம் பாகம் எப்போது தெரியுமா?
Kalki 2898 AD 2: பாராட்டுக்களைப் பெறும் முதல் பாகம்... பிரபாஸின் கல்கி 2 ஆம் பாகம் எப்போது தெரியுமா?
Vijay - Seeman:
Vijay - Seeman: "மாணவ - மாணவியரை ஊக்கப்படுத்திய விஜய்” - நெகிழ்ந்து போன சீமான்.. என்ன சொன்னார் தெரியுமா?
Vijay Honours Students: மாணவர்கள் என்ன படிக்கலாம்?- எப்படி துறை தேர்வு செய்யலாம்?- கேரியர் குறித்து விஜய் கொடுத்த டிப்ஸ்
Vijay Honours Students: மாணவர்கள் என்ன படிக்கலாம்?- எப்படி துறை தேர்வு செய்யலாம்?- கேரியர் குறித்து விஜய் கொடுத்த டிப்ஸ்
Thalapathy Vijay:
"எனக்கு பயமா இருக்கு” - போதைப்பொருள் பயன்பாடு குறித்து மாணவர்களுக்கு விஜய் அட்வைஸ்
Kalki 2898AD : முதல் நாளிலே 150 கோடிக்கு மேல் வசூல் செய்த கல்கி 2898 AD!
Kalki 2898AD : முதல் நாளிலே 150 கோடிக்கு மேல் வசூல் செய்த கல்கி 2898 AD!
தமிழ்நாட்டுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு; பிளஸ் 2 அடிப்படையில் சேர்க்கை- தமிழக அரசு தனித்தீர்மானம்
தமிழ்நாட்டுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு; பிளஸ் 2 அடிப்படையில் சேர்க்கை- தமிழக அரசு தனித்தீர்மானம்
Embed widget