மேலும் அறிய

Anna Centenary Library | நூலகங்கள் அனைத்தும் சீரமைக்கப்படும் - அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி..

அறிஞர் அண்ணா நூற்றாண்டு நினைவு  நூலகம் மட்டுமல்ல, தமிழகத்தில் திமுக ஆட்சியில் உருவாக்கப்பட்ட அனைத்து நூலகங்களும் கூடிய விரைவில் சீரமைக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

சென்னையில் உள்ள அறிஞர் அண்ணா நூற்றாண்டு நினைவு  நூலகத்தில் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் நேற்று ஆய்வு மேற்கொண்டார். இதுகுறித்து, அவர் தனது முகநூலில் , "முதலமைச்சர்  ஆணைக்கிணங்க, தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் என்ற முறையில், சென்னையில் உள்ள அறிஞர் அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகத்தை ஆய்வு செய்தேன். கடந்த பத்தாண்டு காலமாக அதிமுக அரசு எல்லா நூலகங்களையும் சீரழித்தது போலவே, தலைவர் கலைஞர் அவர்கள் உருவாக்கிய ஆசியாவின் மிகப்பெரிய நூலகமான இந்த நூலகத்தையும் முழுமையாக சீரழித்துள்ளது. இனி, அதுபற்றி பேசிப் பயனில்லை.

அறிஞர் அண்ணா நூற்றாண்டு நினைவு  நூலகம் மட்டுமல்ல, தமிழகத்தில் திமுக ஆட்சியில் உருவாக்கப்பட்ட அனைத்து நூலகங்களும் கூடிய விரைவில் சீரமைக்கப்பட்டு, அடுத்த தலைமுறை இளைஞர்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும்" என்று பதிவிட்டார். 


Anna Centenary Library | நூலகங்கள் அனைத்தும் சீரமைக்கப்படும் - அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி..

தமிழ்நாட்டில்,  கன்னிமாரா பொது நூலகம், அண்ணா நூற்றாண்டு நூலகம், 32 மாவட்ட மைய நூலகங்கள், 1926 கிளை நூலகங்கள், 14 நடமாடும் நூலகங்கள்,1915 ஊர்ப்புற நூலகங்கள், 745 பகுதி நேர நூலகங்கள் என மொத்தம் 4634 நூலகங்கள் செயல்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், " கோவிட்19 காலத்தில் பள்ளி மாணவர்களுக்கான ஆன்லைன் வகுப்பு, கல்விக்கட்டணம், 12-ஆம் வகுப்பு தேர்வு நடத்துவது ஆகியவை குறித்து வரும் திங்கட்கிழமை ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் - கழக தலைவர் அவர்களின் ஆணைக்கிணங்க, தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் என்ற முறையில்,...

Posted by Anbil Mahesh Poyyamozhi on Saturday, May 8, 2021

முன்னதாக 9, 10 மற்றும் 11-ஆம் வகுப்பு மாணாக்கர்கள் அனைவரும், முழு ஆண்டுத் தேர்வுகள் மற்றும் பொதுத் தேர்வுகள் ஏதுமின்றி தேர்ச்சி பெற்றதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடந்த பிப்ரவரி மாதம் அறிவித்தார். மேலும், மாணவர்களுக்கான மதிப்பெண் மதிப்பீட்டு நெறிமுறைகள் அரசினால் விரிவாக வெளியிடப்படும் என்றும் தெரிவித்தார். 

கொரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக கடந்தண்டும் 10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து செய்யப்பட்டு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. மேலும், மாணவர்களுக்கான மதிப்பெண் மதிப்பீடு காலாண்டு மற்றும் அரையாண்டில் அந்தந்த மாணவர்கள் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் 80 சதவீத மதிப்பெண்களும், மாணவர்களின் வருகைப்பதிவின் அடிப்படையில் 20 சதவீத மதிப்பெண்களும்  வழங்கப்பட்டது. ஆனால், இந்த கல்வியாண்டில் கொரோனா ஊரடங்கு காரணமாக, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலாண்டு தேர்வையும், அரையாண்டு தேர்வையும் முந்தைய அரசு ரத்து செய்தது. இதன் காரணமாக, எதன் அடிப்படையில் மாணவர்களுக்கான மதிப்பெண் மதிப்பீடு வழங்கப்படும்  என்ற கேள்வியும் தற்போது எழுந்துள்ளது.


Anna Centenary Library | நூலகங்கள் அனைத்தும் சீரமைக்கப்படும் - அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி..

 

இதுவரை, 10-ஆம் வகுப்பு மதிப்பெண் மதிப்பீட்டு நெறிமுறைகள் தொடர்பான  எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. இதனால், 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் ஐடிஐ மற்றும் பாலிடெக்னிக் கல்லூரிகளில் சேர்வதற்கான மதிப்பெண் பட்டியல் இல்லாமல் தவித்து வருகின்றனர். இந்நிலையில், தமிழகத்தில் கோவிட் 19 பரவலை கட்டுப்படுத்துவதற்காக நாளை முதல் 24-ஆம் தேதி வரை  முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பள்ளி மாணவர்களின் கல்வி நலன் காக்கும் வகையில் தமிழக அரசு தெளிவான அறிவிப்பை வெளியிட வேண்டும் என்ற பெற்றோர் தரப்பில் கூறப்படுகிறது.      

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

SBI Debit Card Charges: எஸ்.பி.ஐ. பயனாளரா நீங்க? கட்டணம் உயர்வுக்கு தயாராகுங்கள் - எதற்கெல்லாம் தெரியுமா?
எஸ்.பி.ஐ. பயனாளரா நீங்க? கட்டணம் உயர்வுக்கு தயாராகுங்கள் - எதற்கெல்லாம் தெரியுமா?
PhD Admission: இனி பிஎச்.டி. மாணவர் சேர்க்கைக்கும் நுழைவுத் தேர்வு; யுஜிசி அறிவிப்பு
PhD Admission: இனி பிஎச்.டி. மாணவர் சேர்க்கைக்கும் நுழைவுத் தேர்வு; யுஜிசி அறிவிப்பு
இரட்டை இலை வழக்கில் தேர்தல் ஆணையம் பரபர உத்தரவு! பெருமூச்சு விட்ட இ.பி.எஸ்.! ஓபிஎஸ்க்கு பின்னடைவு!
இரட்டை இலை வழக்கில் தேர்தல் ஆணையம் பரபர உத்தரவு! பெருமூச்சு விட்ட இ.பி.எஸ்.! ஓபிஎஸ்க்கு பின்னடைவு!
Lok Sabha Election 2024: நீலகிரி மக்களவை தொகுதி! ஆ.ராசா மனு நிறுத்தி வைக்கப்பட்ட பின்பு ஏற்பு - நடந்தது என்ன?
நீலகிரி மக்களவை தொகுதி! ஆ.ராசா மனு நிறுத்தி வைக்கப்பட்ட பின்பு ஏற்பு - நடந்தது என்ன?
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

CV Shanmugam: என்னாது! தேமுதிக வேட்பாளருக்கு பம்பரம் சின்னமா? உளறிய CV சண்முகம் | Cuddalore | DMDKNirmala Sitharaman : ”காசு இல்லப்பா..! அதான் தேர்தல்ல நிக்கல” நிர்மலா சீதாராமன் பகீர் | BJP | ModiGaneshamurthi Death :”கணேசமூர்த்தி மறைவு..” கதறி அழுத வைகோ.. தொண்டர்கள் உருக்கம் | Vaiko | MDMKJayalalitha daughter deepa :தேனி தொகுதியில் திடீர் ஜெயலலிதா மகள்! யாருடன் கூட்டணி? | Theni

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
SBI Debit Card Charges: எஸ்.பி.ஐ. பயனாளரா நீங்க? கட்டணம் உயர்வுக்கு தயாராகுங்கள் - எதற்கெல்லாம் தெரியுமா?
எஸ்.பி.ஐ. பயனாளரா நீங்க? கட்டணம் உயர்வுக்கு தயாராகுங்கள் - எதற்கெல்லாம் தெரியுமா?
PhD Admission: இனி பிஎச்.டி. மாணவர் சேர்க்கைக்கும் நுழைவுத் தேர்வு; யுஜிசி அறிவிப்பு
PhD Admission: இனி பிஎச்.டி. மாணவர் சேர்க்கைக்கும் நுழைவுத் தேர்வு; யுஜிசி அறிவிப்பு
இரட்டை இலை வழக்கில் தேர்தல் ஆணையம் பரபர உத்தரவு! பெருமூச்சு விட்ட இ.பி.எஸ்.! ஓபிஎஸ்க்கு பின்னடைவு!
இரட்டை இலை வழக்கில் தேர்தல் ஆணையம் பரபர உத்தரவு! பெருமூச்சு விட்ட இ.பி.எஸ்.! ஓபிஎஸ்க்கு பின்னடைவு!
Lok Sabha Election 2024: நீலகிரி மக்களவை தொகுதி! ஆ.ராசா மனு நிறுத்தி வைக்கப்பட்ட பின்பு ஏற்பு - நடந்தது என்ன?
நீலகிரி மக்களவை தொகுதி! ஆ.ராசா மனு நிறுத்தி வைக்கப்பட்ட பின்பு ஏற்பு - நடந்தது என்ன?
The Goat Life Review: பாலைவனத்தில் போராடும் சாமானியன் - ஆடு ஜீவிதம் படத்தின் முழு விமர்சனம்!
The Goat Life Review: பாலைவனத்தில் போராடும் சாமானியன் - ஆடு ஜீவிதம் படத்தின் முழு விமர்சனம்!
CJI Chandrachud: ”அச்சுறுத்தலில் நீதித்துறை” - உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதிய 600 வழக்கறிஞர்கள்
CJI Chandrachud: ”அச்சுறுத்தலில் நீதித்துறை” - உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதிய 600 வழக்கறிஞர்கள்
Breaking News LIVE : முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு மேலும் 4 நாட்கள் காவல் நீடிப்பு..!
Breaking News LIVE : முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு மேலும் 4 நாட்கள் காவல் நீடிப்பு..!
Clever trailer launch: புதுசா இருக்கே! இரண்டு நாய்கள் மட்டுமே நடித்துள்ள 'கிளவர்' திரைப்படம் - ட்ரெயிலர் ரிலீஸ்
Clever trailer launch: புதுசா இருக்கே! இரண்டு நாய்கள் மட்டுமே நடித்துள்ள 'கிளவர்' திரைப்படம் - ட்ரெயிலர் ரிலீஸ்
Embed widget