மேலும் அறிய

Diwali 2025: தீபாவளி சிறப்பு பேருந்துகள்.. 8 லட்சம் மக்கள் சொந்த ஊர்களுக்கு பயணம்..

சென்னையின் கிளாம்பாக்கம், கோயம்பேடு, மாதவரம் பேருந்து நிலையங்களிலிருந்து வழக்கமான பேருந்துகளுடன் சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட்டன

சென்னை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, சென்னையிலிருந்து சொந்த ஊர்களுக்கு பயணிக்கும் மக்களுக்காக அரசு போக்குவரத்துத்துறை சிறப்பு ஏற்பாடுகளை செய்தது. இதன் தொடர்ச்சியாக, கடந்த அக்டோபர் 16 முதல் 19 ஆம் தேதி நள்ளிரவு 12 மணி வரை, மொத்தம் 15,429 அரசுப் பேருந்துகள் இயக்கப்பட்டு, 7,94,990 பயணிகள் பயணம் செய்துள்ளனர் என்று அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் தகவல் தெரிவித்துள்ளார்.

தீபாவளி இன்று உற்சாகமாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில், நீண்ட விடுமுறையை பயன்படுத்தி லட்சக்கணக்கான மக்கள் ரயில்கள், பேருந்துகள் மற்றும் தனியார் வாகனங்களில் சொந்த ஊர்களுக்கு திரண்டுள்ளனர். மக்களின் பயண வசதிக்காக அரசு 20,000-க்கும் மேற்பட்ட பேருந்துகள் சிறப்பு பேருந்துகளாக இயக்கப்பட்டது

அதன்படி, வியாழக்கிழமை (அக்.16) முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கம் தொடங்கியது. சென்னையின் கிளாம்பாக்கம், கோயம்பேடு, மாதவரம் பேருந்து நிலையங்களிலிருந்து வழக்கமான பேருந்துகளுடன் சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட்டன. இத்துடன், இந்த நிலையங்களை இணைக்கும் வகையில் மாநகரப் பகுதியில் கூடுதல் பேருந்துகளும் இயக்கப்பட்டன.

நான்கு நாட்களில் 8 லட்சத்திற்கும் மேற்பட்டோர் சொந்த ஊர்களுக்குப் பயணம் செய்துள்ளதாகவும், மேலும் 3.59 லட்சம் பயணிகள் முன்பதிவு செய்துள்ளதாகவும் அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.

அதிகாரிகள் கூறுகையில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மக்கள் பாதுகாப்பாகவும் தங்குதடையின்றியும் பயணம் மேற்கொள்ளும் வகையில், அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்த பணியில் ஈடுபட்டு வருகின்றன என்றும் தெரிவித்துள்ளனர்.

அமைச்சர் பதிவு: 

மேலும் இது குறித்து போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ் சிவசங்கர் வெளியிட்டுள்ள பதிவில்

தீபாவளி திருநாளை முன்னிட்டு, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தலைவர் தளபதி முக ஸ்டாலின்
அவர்கள், மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் மரியாதைக்குரிய உதயநிதி ஸ்டாலின் அவர்கள் உத்தரவின் படி, இன்று (19.10.2025) கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தில் நான்காவது நாளாக நேரில் ஆய்வு மேற்கொண்டோம்.
 
2025 தீபாவளிப் திருநாளுக்காக, 16.10.2025 முதல் இன்று (19.10.2025) வரையில், நான்கு நாட்களுக்கு சென்னையிலிருந்து தினசரி இயக்கக் கூடிய 8,361 பேருந்துகளும், 6,933 சிறப்புப் பேருந்துகள் ஆக மொத்தம் 15,294 பேருந்துகளும் இயக்கப்பட்டு 7,88,240 பயணிகள் பயணம் செய்துள்ளனர். இந்த சிறப்பு இயக்கத்தின் செயல்பாடுகள் குறித்தும், பயணம் மேற்கொண்ட பயணிகளின் எண்ணிக்கை மற்றும் அவர்களுக்குச் செய்யப்பட்ட வசதிகள் குறித்தும் துறை சார்ந்த அலுவலர்களிடம் விரிவாகக் கேட்டறிந்தோம். மக்களின் பயணம் பாதுகாப்பாகவும், தங்குதடையின்றியும் அமைய, திராவிட மாடல் அரசு 24 மணி நேரமும் களத்தில் நின்று பணியாற்றும். உடன் அரசு விரைவு போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குனர் மோகன், விழுப்புரம் கோட்ட அரசு போக்குவரத்து கழக மேலாண் இயக்குனர் குணசேகரன், கும்பகோணம் கோட்ட அரசு போக்குவரத்து கழக மேலாண் இயக்குனர் தசரதன் உள்ளிட்ட துறை சார்ந்த அலுவலர்கள்.
 

About the author ஜேம்ஸ்

I, James, am a passionate journalist with 3 years of experience in the media industry. I studied Digital Journalism, driven by a strong desire to excel in this field. I began my career as a Video Producer and have since evolved into a dedicated and enthusiastic content writer, with a strong focus on sports and crime reporting. In addition, I cover infrastructure, politics, entertainment, and other important world events, striving to deliver accurate and engaging news to the public. I currently work as an Assistant Producer at the ABP NADU Tamil website.
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Switzerland Bar Blast: ஸ்விட்சர்லாந்தில் சோகம்; 40 பேர் பலி; பாரில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் பயங்கர வெடி விபத்து
ஸ்விட்சர்லாந்தில் சோகம்; 40 பேர் பலி; பாரில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் பயங்கர வெடி விபத்து
ஜன.6 வேலைநிறுத்த போராட்டத்தில் பங்கேற்கலைன்னா சஸ்பெண்ட்; வெளியான அதிரடி தகவல்!
ஜன.6 வேலைநிறுத்த போராட்டத்தில் பங்கேற்கலைன்னா சஸ்பெண்ட்; வெளியான அதிரடி தகவல்!
CBSE: 10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை மாற்றம்! புதிய தேதிகள் அறிவிப்பு: மாணவர்கள் கவனத்துக்கு!
CBSE: 10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை மாற்றம்! புதிய தேதிகள் அறிவிப்பு: மாணவர்கள் கவனத்துக்கு!
iPhone Mega Discount: ஐபோன் பிரியர்களுக்கு ஜாக்பாட்.! புத்தாண்டில் ரூ.16,000-த்திற்கு மேல் தள்ளுபடி; எந்த மாடல் தெரியுமா.?
ஐபோன் பிரியர்களுக்கு ஜாக்பாட்.! புத்தாண்டில் ரூ.16,000-த்திற்கு மேல் தள்ளுபடி; எந்த மாடல் தெரியுமா.?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Jananayagan Bhagavanth Kesari | பகவந்த் கேசரி ரீமேக்கா? ஜனநாயகன் பட சீக்ரெட்! இயக்குநர் OPENS UP
Manickam Tagore | ”வைகோ, திருமா தலையிடாதீங்க” மாணிக்கம் தாகூர் பரபர POST! நடந்தது என்ன?
DMK Congress Alliance | ”ஆட்சியில பங்கு கேட்காதீங்க” முடிவு கட்டிய திமுக! ப.சிதம்பரத்திடம் மெசேஜ்
Migrant Worker Attack | கஞ்சா போதை, பட்டா கத்தி! வடமாநில நபர் கொடூர தாக்குதல்! சிறுவர்கள் வெறிச்செயல்
Madesh Ravichandran |’’தமிழன அடிமைனு சொல்லுவியா?’’முதலாளியை அலறவிட்ட தமிழர் லண்டனில் மாஸ் சம்பவம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Switzerland Bar Blast: ஸ்விட்சர்லாந்தில் சோகம்; 40 பேர் பலி; பாரில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் பயங்கர வெடி விபத்து
ஸ்விட்சர்லாந்தில் சோகம்; 40 பேர் பலி; பாரில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் பயங்கர வெடி விபத்து
ஜன.6 வேலைநிறுத்த போராட்டத்தில் பங்கேற்கலைன்னா சஸ்பெண்ட்; வெளியான அதிரடி தகவல்!
ஜன.6 வேலைநிறுத்த போராட்டத்தில் பங்கேற்கலைன்னா சஸ்பெண்ட்; வெளியான அதிரடி தகவல்!
CBSE: 10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை மாற்றம்! புதிய தேதிகள் அறிவிப்பு: மாணவர்கள் கவனத்துக்கு!
CBSE: 10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை மாற்றம்! புதிய தேதிகள் அறிவிப்பு: மாணவர்கள் கவனத்துக்கு!
iPhone Mega Discount: ஐபோன் பிரியர்களுக்கு ஜாக்பாட்.! புத்தாண்டில் ரூ.16,000-த்திற்கு மேல் தள்ளுபடி; எந்த மாடல் தெரியுமா.?
ஐபோன் பிரியர்களுக்கு ஜாக்பாட்.! புத்தாண்டில் ரூ.16,000-த்திற்கு மேல் தள்ளுபடி; எந்த மாடல் தெரியுமா.?
Cigarette price: பிப்.1 முதல் சிகரெட் விலை அதிரடி உயர்வு; ஒரு சிகரெட்டின் விலை ரூ.72 ஆ? என்னென்ன பொருட்களுக்கு எவ்வளவு அதிகம்?
Cigarette price: பிப்.1 முதல் சிகரெட் விலை அதிரடி உயர்வு; ஒரு சிகரெட்டின் விலை ரூ.72 ஆ? என்னென்ன பொருட்களுக்கு எவ்வளவு அதிகம்?
Teachers Protest: கொட்டும் மழையில் குவிந்த ஆசிரியர்கள்: 7-வது நாளாக நீடிக்கும் போராட்டம்!
Teachers Protest: கொட்டும் மழையில் குவிந்த ஆசிரியர்கள்: 7-வது நாளாக நீடிக்கும் போராட்டம்!
அடுத்த எம்எல்ஏ நான் தான்.! போட்டி போட அதிமுகவில் குவிந்த விருப்ப மனுக்கள் இவ்வளவா.!!
அடுத்த எம்எல்ஏ நான் தான்.! போட்டி போட அதிமுகவில் குவிந்த விருப்ப மனுக்கள் இவ்வளவா.!!
TNPSC: தேர்வர்களே.. நாளை கடைசி- குரூப் 2 தேர்வு குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட டிஎன்பிஎஸ்சி!
TNPSC: தேர்வர்களே.. நாளை கடைசி- குரூப் 2 தேர்வு குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட டிஎன்பிஎஸ்சி!
Embed widget