மேலும் அறிய

Ditwah Cyclone: திணறி வரும் டிட்வா? வறண்ட காற்றால் தடுமாறும் புயல் - சென்னை, தமிழகத்தில் கனமழை தொடருமா?

Ditwah Cyclone Update: வறண்ட காற்றின் தாக்கத்தின் காரணமாக டிட்வா புயல் மேக கூட்டங்களை உருவாக்க முடியாமல் திணறி வருவதாக தனியார் வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Ditwah Cyclone Update: டிட்வா புயல் இன்று மாலை அல்லது இரவில் சென்னையை நெருங்கும் தனியார் வானிலை ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.

டிட்வா புயல் திணறல்:

கனமழை தந்த மோசமான அனுபவங்கள் காரணமாக வானிலை ஆய்வு மையத்தின் தரவுகள் மற்றும் அப்டேட்களை தாண்டி, தனியார் வல்லுநர்களின் தரவுகளுக்கும் மக்கள் முக்கியத்துவம் தர தொடங்கியுள்ளனர். அந்த வகையில் டெல்டா வெதர்மேன் எனப்படும் ஹேமசந்தர், டிட்வா புயல் தொடர்பான முக்கிய தகவலை வெளியிட்டுள்ளார். இன்று அதிகாலை 4.30 மணி நிலவரப்படி, “நேற்று (29.11.2025) காலை 10:30 மணிக்கு டெல்டா கடல் பகுதியை அடைந்த டிட்வா புயல் தொடர்ந்து ஒரே இடத்தில் நீடிக்கிறது. தற்போது நாகப்பட்டினத்திற்கு கிழக்கே-வடகிழக்கே 60கிமீ தொலைவிலும், சென்னைக்கு 230 கிமீ தெற்கே-தென்கிழக்கிலும் நிலை கொண்டுள்ளது. வறண்ட காற்று, காற்று முறிவால் புயல் பாதிக்கப்பட்டுள்ளது.  புயலின் மையப்பகுதியை நோக்கி ஊடுருவிய வறண்ட காற்று மற்றும் காற்று முறிவால் பாதிக்கப்பட்டு டிட்வா புயல் மேக கூட்டங்களை உருவாக்க முடியாமல் திணறி வருகிறது” என ஹேமச்சந்தர் தெரிவித்துள்ளார்.

ஏன் கனமழை பொழியவில்லை?

தொடர்ந்து, “புயல் வலுவிழந்து வருவதால் மழை குறைந்து வருகிறது. அதிகபட்சமாக மயிலாடுதுறை மாவட்டம் திருவெண்காட்டில் 22 செண்டி மீட்டர் நெடுவாசல் பகுதிகளில் 16 செண்டி மீட்டர், தரங்கம்பாடி 15 செண்டி மீட்டர், நாகப்படினத்தில் 14 செண்டி மீட்டர் அளவிற்கு கனமழை பதிவாகியுள்ளது. குறிப்பாக டெல்டா மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பதிவாகி வருகிறது. புயல் அருகே வந்து அதன் மேற்குபகுதி காவிரி படுகை மீது விழுந்தாலும், அதிகப்படியான மேகக் குவியல் உருவாகாததன் காரணமாக அதீத மழை குறுகிய காலத்தில் தீவிரமடைவது என்பது நிகழவில்லை. தொடர்ந்து வடக்கு நோக்கி பயணிக்கும் புயல் வலுவிழந்து காணப்படும் நிலையில், சென்னைக்கு அருகில் வரும்போது மேற்கத்திய தாழ்வுநிலையில் ஒரு ஊடுருவல் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் மீண்டும் வலுவடையுமா? வறண்ட காற்று அகற்றப்பட்டு, ஈரப்பதம் மிகுந்த காற்று மீண்டும் உருவாகிறதா? என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்” என ஹேமச்சந்தர் வலியுறுத்தியுள்ளார்.

சென்னையை நோக்கி பயணம்:

மேலும், “இன்று காலை 8 மணி முதல் புயல் நாகையில் இருந்து விலகி சென்னையை நோக்கி நகரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பயணத்தின் போது வறண்ட காற்று அகற்றப்படுவதற்கு வாய்ப்பு உள்ளது. அப்படி நடந்தால் மழை மேகங்கள் உருவாக்கப்பட்டு, சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பொழிய வாய்ப்புள்ளது. ஆனால் அது சென்னைக்கு அருகே வலுப்பெறுகிறதா? அல்லது நெல்லூர் அருகே வலுப்பெறுகிறதா? எப்ன்பதை பொறுத்து இருந்து தான் அறிய வேண்டும். தற்போதைய நிலையில் காவிரி டெல்டா மாவட்டங்களான நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர் மற்றும் அதனை ஒட்டி இருக்கக் கூடிய திருவாரூர் மற்றும் தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று விட்டு விட்டு மழை பொழியும். அதேசமயம் அதீத கனமழைக்கான வாய்ப்பு விலகியது என்று எடுத்துக்கொள்ளலாம்” என தனியார் வானிலை ஆய்வாளர் ஹேமச்சந்தர் தெரிவித்துள்ளார்.

 

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

பிசியோதெரபி கிளினிக்கில் பாலியல் தொழில் ; ஆன்லைன் புக்கிங் மோசடி அம்பலம்
பிசியோதெரபி கிளினிக்கில் பாலியல் தொழில் ; ஆன்லைன் புக்கிங் மோசடி அம்பலம்
செண்டாக் கலந்தாய்வு எப்போது? 12,885 மாணவர்கள் தவிப்பு: தனியார் கல்லூரிகளில் தஞ்சம் புகும் அவலம்!
செண்டாக் கலந்தாய்வு எப்போது? 12,885 மாணவர்கள் தவிப்பு: தனியார் கல்லூரிகளில் தஞ்சம் புகும் அவலம்!
டிஜிட்டல் யுகத்தில் தடம் பதிக்கும் ஆரோவில்! புதிய மைல்கல்லாக உருவெடுத்த ‘ஆரோவில் தொலைக்காட்சி’!
டிஜிட்டல் யுகத்தில் தடம் பதிக்கும் ஆரோவில்! புதிய மைல்கல்லாக உருவெடுத்த ‘ஆரோவில் தொலைக்காட்சி’!
ITI முடித்தவர்களா நீங்க? அல்லது நேரடியா ஃபேக்டரில வேலை கத்துக்கணுமா? இதோ உங்களுக்கான மாஸ் வாய்ப்பு!
ITI முடித்தவர்களா நீங்க? அல்லது நேரடியா ஃபேக்டரில வேலை கத்துக்கணுமா? இதோ உங்களுக்கான மாஸ் வாய்ப்பு!

வீடியோ

காங்., கவுன்சிலர் புடவையை இழுத்த திமுக கவுன்சிலர்கள்! வெளியான பகீர் வீடியோ!
மீண்டும் DELIMITATION மசோதா திமுக-வை நாடிய பாஜக? ஸ்டாலின் அவசர ஆலோசனை!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: ஆதங்கத்தை கொட்டித் தீர்த்த மாணவர்.. கைகட்டி அமைதியாக கேட்ட முதலமைச்சர் விஜய் - வீடியோவைப் பாருங்க
CM Vijay: ஆதங்கத்தை கொட்டித் தீர்த்த மாணவர்.. கைகட்டி அமைதியாக கேட்ட முதலமைச்சர் விஜய் - வீடியோவைப் பாருங்க
"லஞ்சம் வாங்குனா இதான் கதி.." கட்சிக்காரனுக்கே இந்த கதியா? விஜய் ஆக்ஷனால் அரசியல் கட்சிகள் அச்சம்!
Iraq Vs Donald Trump: 'ட்ரம்ப்பை கொல்பவருக்கு 10 மில்லியன் டாலர் வெகுமதி'; ஈராக்கிய பயங்கரவாதக் குழு அதிரடி அறிவிப்பு
'ட்ரம்ப்பை கொல்பவருக்கு 10 மில்லியன் டாலர் வெகுமதி'; ஈராக்கிய பயங்கரவாதக் குழு அதிரடி அறிவிப்பு
Madurai Hc ; பழனி மட நிலப் பதிவு: சார்பதிவாளருக்கு நிபந்தனை ஜாமின் - சிக்கலில் இருவர்!
Madurai Hc ; பழனி மட நிலப் பதிவு: சார்பதிவாளருக்கு நிபந்தனை ஜாமின் - சிக்கலில் இருவர்!
Udhayanithi Stalin:
Udhayanithi Stalin: "லட்சக்கணக்கான இளைஞர்கள் ஏமாற்றம்.." காவலர் நியமனம் ஒத்திவைப்பிற்கு உதயநிதி கண்டனம்
Reliance Jio Satellite LEO Network: ஸ்டார்லிங்க்-க்கு ஆப்பு ரெடி.! சொந்த செயற்கைக்கோள்களை நிறுவ ஜியோவுக்கு கிடைத்த அனுமதி; முழு விவரம்
ஸ்டார்லிங்க்-க்கு ஆப்பு ரெடி.! சொந்த செயற்கைக்கோள்களை நிறுவ ஜியோவுக்கு கிடைத்த அனுமதி; முழு விவரம்
செடான் கார்களில் பின்புற வைப்பர் ஏன் இல்லை? அறிவியல், வடிவமைப்பு ரகசியம்
செடான் கார்களில் பின்புற வைப்பர் ஏன் இல்லை? அறிவியல், வடிவமைப்பு ரகசியம்
CM Vijay: அமைச்சர்களுக்கு கட்டுப்பட மறுக்கும் அதிகாரிகள்..? அடுத்த ஆக்ஷனுக்கு ரெடியாகும் முதலமைச்சர் விஜய்!
CM Vijay: அமைச்சர்களுக்கு கட்டுப்பட மறுக்கும் அதிகாரிகள்..? அடுத்த ஆக்ஷனுக்கு ரெடியாகும் முதலமைச்சர் விஜய்!
Embed widget