மேலும் அறிய

Police Suicide: பணிநீக்கம் செய்யப்பட்ட காவலர் தூக்கிட்டு தற்கொலை - என்ன காரணம்..?

திருமுல்லைவாயலில் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட காவலர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

திருமுல்லைவாயலில் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட காவலர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

போலீஸ்:

ஆவடியை அடுத்த திருமுல்லைவாயல் பகுதியில் வசித்து வந்தவர் வள்ளிநாயகம். இவரது சொந்த ஊர் நெல்லை மாவட்டம்.  இவர், 2013-ஆம் ஆண்டு போலீசில் வேலைக்கு சேர்ந்தார். இவர் ஆவடி போலீஸ் கமிஷனரகத்தில் காவல் கட்டுப்பாட்டு அறை காவலர் பிரிவில் பணியாற்றி வந்தார்.  தற்போது திருமுல்லைவாயல் காவல் நிலையத்தில் போலீஸ் ரோந்து வாகனத்தில் ஓட்டுநராக  வேலை செய்து வந்தார்.

இவருடைய மனைவி திலகவதி, அம்பத்தூர் பகுதியில் உள்ள ஒரு ஐ.டி. நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இத்தம்பதிக்கு 2 மகன்கள் உள்ளனர்.  கடந்த 5-ந் தேதி அதிகாலையில் சப்-இன்ஸ்பெக்டர் முருகேசனுடன், போலீஸ்காரர் வள்ளிநாயகம் ரோந்து வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். திருமுல்லைவாயல் அருகே சாலை தடுப்பு சுவரில் மோதி வாகனம் விபத்துக்குள்ளானது. ரோந்து வாகனத்தின் முன்பகுதி சேதம் அடைந்தது. இந்த விபத்தில் சப்-இன்ஸ்பெக்டர் முருகேசன் மற்றும் வள்ளிநாயகம் இருவருக்கும் லேசான காயம் ஏற்பட்டது.

தூக்கிட்டு தற்கொலை:

இதையடுத்து  ரோந்து வாகனத்தை கவனக்குறைவாக ஓட்டி விபத்துக்குள்ளாக்கியதாக கடந்த 8-ந் தேதி வள்ளிநாயகம் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். சேதமடைந்த வாகனத்துக்கான செலவையும் அவரே ஏற்றுக்கொள்ளும்படி கூறியதாக சொல்லப்படுகிறது. இதனால் மன உளைச்சலில் இருந்த வள்ளிநாயகம், சக காவலர்களிடம் இது பற்றி கவலையுடன் கூறியுள்ளார். வள்ளிநாயகத்தின் 2 மகன்களும் நெல்லையில் உள்ள தங்கள் பாட்டி வீட்டுக்கு சென்றுள்ளதால்,  வள்ளிநாயகமும், அவரின் மனைவி மட்டும் வீட்டில் இருந்துள்ளனர். 

இந்நிலையில் நேற்று காலை வள்ளிநாயகத்தின் மனைவி திலகவதி வேலைக்கு சென்று விட்டார். வள்ளிநாயகம் மட்டும் வீட்டில் தனியாக இருந்ததார். அலுவலகத்தில் இருந்து திலகவதி, தனது கணவருக்கு போன் செய்துள்ளார். பலமுறை அழைத்தும் அவர் அழைப்பை ஏற்காததால், அதே பகுதியில் வசிக்கும் தனது உறவினர் ஹரி என்பவருக்கு தகவல் தெரிவித்துள்ளார். ஹரி வீட்டிற்கு சென்று பார்த்தபோது, வள்ளிநாயகம் வீட்டின் படுக்கை அறையில் உள்ள மின்விசிறியில் தூக்கில் தொங்கிய நிலையில் இறந்திருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுபற்றி தகவல் அறிந்து வந்த திருமுல்லைவாயல் போலீசார், வள்ளிநாயகத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக  கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

Suicidal Trigger Warning.
 
வாழ்க்கையில் கவலைகளும், துன்பங்களும் வந்து கொண்டுதான் இருக்கும். அவைகளை தற்காலிகமாக்குவதும், நிரந்தரமாக்குவதும் நாம் கையாளும் விதத்தில் தான் உள்ளது. தற்கொலை என்பது எதற்கும் தீர்வு ஆகாது. வாழ்க்கைக்கான நோக்கத்தைப் பற்றிய தெளிவும் அதை அடைவதற்கான வழிகளையும் கண்டறிய துவங்கினால் வாழ்க்கை சுவாரஸ்யமானதாக இருக்கும். அப்படி தங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டாலோ தற்கொலை எண்ணம் உண்டானாலும் அதனை மாற்ற கீழ்காணும் எங்களுக்கு அழைக்கவும். மாநில உதவி மையம் :104.
 
 
சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,
எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,
சென்னை - 600 028.
தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060)
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Magalir Urimai Thogai: இது தொடக்கமே.. மகளிர் உரிமைத் தொகை மேலும் உயரும்; முதலமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
இது தொடக்கமே.. மகளிர் உரிமைத் தொகை மேலும் உயரும்; முதலமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
ADMK BJP: அதிமுக கூட்டணி.. அமித்ஷாவிற்கு தலைவலி - இதுதான் சங்கதி!
ADMK BJP: அதிமுக கூட்டணி.. அமித்ஷாவிற்கு தலைவலி - இதுதான் சங்கதி!
Chennai Metro Rail Work: சென்னை மெட்ரோ பணியில் கலக்கும்
சென்னை மெட்ரோ பணியில் கலக்கும் "மயில்"; எந்த மயில்னு யோசிக்கிறீங்களா.? இத படிங்க தெரியும்
PM Kisan 22nd Installment: பிரதம மந்திரி கிசான் நிதியின் 22-வது தவணை எப்போ வரும்.? அதுக்குள்ள விவசாயிகள் இத செஞ்சுடுங்க
பிரதம மந்திரி கிசான் நிதியின் 22-வது தவணை எப்போ வரும்.? அதுக்குள்ள விவசாயிகள் இத செஞ்சுடுங்க
ABP Premium

வீடியோ

Magalir Urimai Thogai | ''மகளிருக்கு இன்னொரு CHANCE..!''கலைஞர் மகளிர் உரிமைத்தொகை
Rajinikanth 75th Birthday Celebration|’’ரஜினி என் குலசாமி!’’வீடு முழுக்க RAJINISMவியக்க வைத்த ரசிகர்
Tindivanam Bus Accident - டயர் வெடித்து விபத்து ஒருவர் பலி, 15 பேர் படுகாயம்; உதவிய விழுப்புரம் கலெக்டர்
Nainar Nagendran Meet EPS | டெல்லிக்கு அழைத்த அமித் ஷா; ஈபிஎஸ்-நயினார் திடீர் சந்திப்பு; அண்ணாமலை பலே ப்ளான்!
LAW & ORDER இனிமே இவர் கையில் தமிழகத்தின் புதிய பொறுப்பு DGPயார் இந்த அபய் குமார் சிங் IPS? | Abhay Kumar Singh | MK Stalin | TN New DGP

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Magalir Urimai Thogai: இது தொடக்கமே.. மகளிர் உரிமைத் தொகை மேலும் உயரும்; முதலமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
இது தொடக்கமே.. மகளிர் உரிமைத் தொகை மேலும் உயரும்; முதலமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
ADMK BJP: அதிமுக கூட்டணி.. அமித்ஷாவிற்கு தலைவலி - இதுதான் சங்கதி!
ADMK BJP: அதிமுக கூட்டணி.. அமித்ஷாவிற்கு தலைவலி - இதுதான் சங்கதி!
Chennai Metro Rail Work: சென்னை மெட்ரோ பணியில் கலக்கும்
சென்னை மெட்ரோ பணியில் கலக்கும் "மயில்"; எந்த மயில்னு யோசிக்கிறீங்களா.? இத படிங்க தெரியும்
PM Kisan 22nd Installment: பிரதம மந்திரி கிசான் நிதியின் 22-வது தவணை எப்போ வரும்.? அதுக்குள்ள விவசாயிகள் இத செஞ்சுடுங்க
பிரதம மந்திரி கிசான் நிதியின் 22-வது தவணை எப்போ வரும்.? அதுக்குள்ள விவசாயிகள் இத செஞ்சுடுங்க
Trump's C5 Plan.?: ஐரோப்பாவிற்கு G7; ஆசியாவிற்கு C5; ட்ரம்ப்பின் பலே பிளான்.? எந்தெந்த நாடுகள் தெரியுமா.?
ஐரோப்பாவிற்கு G7; ஆசியாவிற்கு C5; ட்ரம்ப்பின் பலே பிளான்.? எந்தெந்த நாடுகள் தெரியுமா.?
Gold Rate Dec.13th: அய்யய்யோ.! தங்கம் விலை ரூ.99,000-த்தை நெருங்கியது; ஒரே நாளில் ரூ.2560 உயர்வு - இன்று விலை என்ன.?
அய்யய்யோ.! தங்கம் விலை ரூ.99,000-த்தை நெருங்கியது; ஒரே நாளில் ரூ.2560 உயர்வு - இன்று விலை என்ன.?
Magalir Urimai Thogai: மகளிர் உரிமை தொகை ரூ. 1000 கிடைக்கவில்லையா.! மீண்டும் ஒரு வாய்ப்பு- எப்போ தெரியுமா.?
மகளிர் உரிமை தொகை ரூ. 1000 கிடைக்கவில்லையா.! மீண்டும் ஒரு வாய்ப்பு- எப்போ தெரியுமா.?
Hyundai Verna: ரூ.13 லட்சம்தான் ஆரம்பம்.. ஹுண்டாய் Verna காரை வாங்கலாமா? வேண்டாமா?
Hyundai Verna: ரூ.13 லட்சம்தான் ஆரம்பம்.. ஹுண்டாய் Verna காரை வாங்கலாமா? வேண்டாமா?
Embed widget