மேலும் அறிய

DGP on Kalpana Nayak Issue: கூடுதல் டிஜிபி கல்பனா நாயக் மீது கொலை முயற்சி ஏதும் நடக்கவில்லை.. அடித்துச் சொல்லும் காவல்துறை...

காவல்துறை கூடுதல் டிஜிபி கல்பனா நாயக் மீது கொலை முயற்சி ஏதும் நடக்கவில்லை என டிஜிபி அலுவலகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

தமிழ்நாடு காவல்துறையின் கூடுதல் டிஜிபி-யாக பொறுப்பு வகிக்கும் கல்பனா நாயக்கின் எழும்பூர் அலுவலகத்தில், கடந்த ஆண்டு ஜூலை மாதம் தீ விபத்து ஏற்பட்டது. நல்வாய்ப்பாக அந்த விபத்தில் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.

கூடுதல் டிஜிபி-ஐ கொலை செய்ய சதி.?

இந்த நிலையில், தன்னுடைய அறையில் நிகழ்ந்த தீ விபத்து, தன்னை கொல்வதற்காக நடந்த சதியாக இருக்கலாம் என சந்தேகிப்பதாக, தமிழக டிஜிபி சங்கர் ஜிவாலுக்கு, கூடுதல் டிஜிபி கல்பனா நாயக் புகார் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். இந்த தகவல் வெளியாகி, காவல்துறை மற்றும் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, அண்ணாமலை உள்ளிட்டோர் தங்களது கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர்.

சதி நடக்கவில்லை என டிஜிபி அலுவலகம் விளக்கம்

நிலைமை இப்படி இருக்க, இச்சம்பவம் தொடர்பாக டிஜிபி அலுவலகம் தற்போது அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், கூடுதல் டிஜிபி கல்பனா நாயக்கின் கடிதம் கிடைக்கப்பெற்ற உடன், அது குறித்து உடனடியாக தீவிர விசாரணை நடத்துமாறு உத்தரவிட்டு, காவல் ஆணையருக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், சம்பவம் நடந்த அன்றே எழும்பூர் காவல் நிலையத்தில் வழக்கு பதியப்பட்டதாகவும், உடனடியாக திருவல்லிக்கேணி துணை ஆணையர், தடயவியல் நிபுணர்கள், மின்சாரத்துறையிலிருந்து நிபுணர்கள், காவலர் குடியிருப்பு வாரிய அதிகாரிகள், ப்ளு ஸ்டார் நிறுவனத்தை சேர்ந்த நிபுணர்கள் அனைவரும் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டதாக கூறப்பட்டுள்ளது.

மேலும், வழக்கு மத்திய குற்றப்பிரிவிற்கு மாற்றப்பட்டு, அதைத் தொடர்ந்து நடந்த விரிவான விசாரணையில், 31 சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டதாகவும், தீ விபத்திற்கான காரணங்களை ஆராய, தடயவியல், தீயணைப்புத்துறை மற்றும் மின்சாரத்துறை நிபுணர்களிடம் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது நிபுணர்களின் அறிக்கைகள் கிடைத்துள்ளதாகவும், காப்பர் வயரில் ஏற்பட்ட உராய்வே காரணம் என தெரியவந்திருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. மேலும், தடயவியல் நிபுணரின் அறிக்கைப்படி, சம்பவ இடத்தில் பெட்ரோல், டீசல் உள்பட எந்த எளிதில் தீப்பிடிக்கும் ரசாயனம் இருந்ததற்கான தடயம் இல்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுவரை நடந்துள்ள விசாரணைகளின்படி,  வேண்டுமென்றே தீப்பற்ற வைத்ததற்கான அறிகுறிகள் இல்லை என்றும், கூடுதல் டிஜிபி கல்பனா நாயக்கின் உயிருக்கு திட்டமிட்ட அச்சுறுத்தல் இருப்பதற்கான ஆதாரமும் இல்லை எனவும் டிஜிபி அலுவலகம் அதன் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

 

மேலும் காண
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

SC Women CJI: 75 ஆண்டுகள் - உச்சநீதிமன்ற முதல் பெண் தலைமை நீதிபதி யார்? பதவிக்காலத்தில் ட்விஸ்ட்
SC Women CJI: 75 ஆண்டுகள் - உச்சநீதிமன்ற முதல் பெண் தலைமை நீதிபதி யார்? பதவிக்காலத்தில் ட்விஸ்ட்
TN Land Registration: ஓய்ந்தது தலைவலி, மீண்டும் பவுத்தி பட்டா..! ஆட்சியர்களுக்கு பறந்த உத்தரவு, தேவையான ஆவணங்கள்
TN Land Registration: ஓய்ந்தது தலைவலி, மீண்டும் பவுத்தி பட்டா..! ஆட்சியர்களுக்கு பறந்த உத்தரவு, தேவையான ஆவணங்கள்
Terrorists: பயங்கர ஆயுதங்களுடன் தீவிரவாதிகள், 10 பேரை சுட்டுக்கொன்ற ராணுவம் - மியான்மர் பார்டரில் சம்பவம்
Terrorists: பயங்கர ஆயுதங்களுடன் தீவிரவாதிகள், 10 பேரை சுட்டுக்கொன்ற ராணுவம் - மியான்மர் பார்டரில் சம்பவம்
Operation Sindoor: 23 நிமிடங்கள்; சீன பாதுகாப்பு அமைப்பின் கண்ணில் மண்ணைத் தூவி, இலக்குகளை அடித்த இந்திய ராணுவம்
23 நிமிடங்கள்; சீன பாதுகாப்பு அமைப்பின் கண்ணில் மண்ணைத் தூவி, இலக்குகளை அடித்த இந்திய ராணுவம்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Tirupathur | “நாயா அலையவிடுறாங்க” போலி ஆதார் கார்டில் பத்திரப்பதிவு பாஜக நிர்வாகி அட்டூழியம்!TVK Vijay Madurai Meeting  | 100 வேட்பாளர்கள் ரெடி? மதுரையில் அறிவிப்பு! விஜயின் பக்கா ஸ்கெட்ச்EPS Plan | Ponmudi vs Lakshmanan  | பொன்முடி இனி டம்மி!  பவருக்கு வந்த எ.வ.வேலு  லட்சுமணன் GAME STARTS

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
SC Women CJI: 75 ஆண்டுகள் - உச்சநீதிமன்ற முதல் பெண் தலைமை நீதிபதி யார்? பதவிக்காலத்தில் ட்விஸ்ட்
SC Women CJI: 75 ஆண்டுகள் - உச்சநீதிமன்ற முதல் பெண் தலைமை நீதிபதி யார்? பதவிக்காலத்தில் ட்விஸ்ட்
TN Land Registration: ஓய்ந்தது தலைவலி, மீண்டும் பவுத்தி பட்டா..! ஆட்சியர்களுக்கு பறந்த உத்தரவு, தேவையான ஆவணங்கள்
TN Land Registration: ஓய்ந்தது தலைவலி, மீண்டும் பவுத்தி பட்டா..! ஆட்சியர்களுக்கு பறந்த உத்தரவு, தேவையான ஆவணங்கள்
Terrorists: பயங்கர ஆயுதங்களுடன் தீவிரவாதிகள், 10 பேரை சுட்டுக்கொன்ற ராணுவம் - மியான்மர் பார்டரில் சம்பவம்
Terrorists: பயங்கர ஆயுதங்களுடன் தீவிரவாதிகள், 10 பேரை சுட்டுக்கொன்ற ராணுவம் - மியான்மர் பார்டரில் சம்பவம்
Operation Sindoor: 23 நிமிடங்கள்; சீன பாதுகாப்பு அமைப்பின் கண்ணில் மண்ணைத் தூவி, இலக்குகளை அடித்த இந்திய ராணுவம்
23 நிமிடங்கள்; சீன பாதுகாப்பு அமைப்பின் கண்ணில் மண்ணைத் தூவி, இலக்குகளை அடித்த இந்திய ராணுவம்
ஸ்டாலின் சொன்ன அந்த வார்த்தை... பழனிசாமிக்கு ஏன் தொடை நடுங்குது? அமைச்சர் ரகுபதி விளாசல்
இதை, அவரின் பேரன்கூட நம்பமாட்டான்.. ‘Cringe’ செய்யும் பழனிசாமி.. விளாசி தள்ளிய திமுக
'Bhargavastra' Anti Drone System: இப்ப வாங்கடா; அடுத்த வான் பாதுகாப்பு அமைப்பு ‘பார்கவஸ்திரா‘ சோதனை வெற்றி - இந்தியா அசத்தல்!
இப்ப வாங்கடா; அடுத்த வான் பாதுகாப்பு அமைப்பு ‘பார்கவஸ்திரா‘ சோதனை வெற்றி - இந்தியா அசத்தல்!
Stalin's Plan for Senthil Balaji: செந்தில் பாலாஜியை வைத்து ஸ்டாலின் போடும் கணக்கு - ஒர்க்அவுட் ஆகுமா தேர்தல் ஸ்கெட்ச்.?
செந்தில் பாலாஜியை வைத்து ஸ்டாலின் போடும் கணக்கு - ஒர்க்அவுட் ஆகுமா தேர்தல் ஸ்கெட்ச்.?
Cabinet Meeting Outcomes: ஸ்ரீஹரிகோட்டாவில் ரூ.3,985 கோடியில் சூப்பர் ப்ளான் - கிரீன் சிக்னல் காட்டிய மத்திய அமைச்சரவை
ஸ்ரீஹரிகோட்டாவில் ரூ.3,985 கோடியில் சூப்பர் ப்ளான் - கிரீன் சிக்னல் காட்டிய மத்திய அமைச்சரவை
Embed widget