மேலும் அறிய

Melpathi Temple Issue : பட்டியலின மக்களை கோயிலுக்குள் அனுமதிக்க எதிர்ப்பு.. திரெளபதி அம்மன் கோவிலுக்கு சீல் வைத்த அதிகாரிகள்..

விழுப்புரம் : மேல்பாதி திரௌபதி அம்மன் கோவிலில் பட்டியலின மக்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்காத கோவிலுக்கு அதிகாரிகள் சீல்.

விழுப்புரம் மாவட்டம் கோலியனூர் அருகிலுள்ள மேல்பாதி கிராமத்தில் உள்ள திரெளபதி அம்மன் கோயிலில் கடந்த ஏப்ரல் மாதம் 7ஆம் தேதி தீமிதி திருவிழா நடைபெற்றது ,அப்போது அதே ஊரை சேர்ந்த பட்டியலின இளைஞர்கள் சிலர் கோயிலுக்குள் சென்றுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த ஒரு தரப்பினர் (வன்னியர்) பட்டியலின இளைஞர்கள், பெண்களை தாக்கியுள்ளனர்.

இது குறித்து வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்கு பதிவு செய்துள்ள வளவனூர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் இரு தரப்பினரிடனும் மாவட்ட நிர்வாகத்தினர் 7 முறை சமாதான பேச்சுவார்த்தை நடத்தியுள்ள நிலையில், ஆதிக்க சமூக தரப்பினர் பட்டியலின மக்களை கோயிலுக்குள் அனுமதிக்க தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

Villupuram Melpathi Draupadi Amman Temple Attack On Listed PeopleTNN |  விழுப்புரம் அருகே கோவிலில் வழிபாடு செய்த பட்டியலினத்தவர் மீது தாக்குதல்

விழுப்புரம் வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் இரு தரப்பினரையும் அழைத்து இரண்டு முறை சமாதானம் கூட்டம் நடத்தப்பட்டது. அதில் உடன்பாடு எட்டப்படவில்லை. அதனை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் பழனி தலைமையில் (24-05-23) இரண்டாவது முறையாக இரு தரப்பினரையும் அழைத்து சமாதான கூட்டம் நடத்தப்பட்டது. மாவட்ட ஆட்சியர் பழனி தலைமயில் நடைபெற்ற கூட்டத்தில் மாவட்ட காவல் கண்கானிப்பாளார் பொறுப்பு மோகன்ராஜ், விழுப்புரம் வட்டாச்சியர் ரவிச்சந்திரன் ஆகியோர் கலந்துகொண்டு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக நடத்தப்பட்ட சமாதான பேச்சுவார்த்தையில் பட்டியலின மக்களை கோயிலுக்குள் அனுமதிக்க ஆதிக்க சமூக தரப்பினர் சம்மதம் தெரிவித்தனர். பின்னர் மீண்டும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் இந்த விவகாரம் தொடர்பாக விழுப்புரத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார், காட்டுமன்னார்கோயில் சட்டமன்ற உறுப்பினர் சிந்தனைசெல்வன் ஆகியோர் தலைமையில் அனைத்து கூட்டம் நடைபெற்றது.

Melpathi Temple Issue : பட்டியலின மக்களை கோயிலுக்குள் அனுமதிக்க எதிர்ப்பு.. திரெளபதி அம்மன் கோவிலுக்கு சீல் வைத்த அதிகாரிகள்..

இந்த கூட்டத்தில் 11 கட்சிகளை சேர்ந்த பிரிதிநிதிகள் கலந்துகொண்டு தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர். இறுதியாக வருகின்ற 5-ஆம் தேதி அனைத்து கட்சி பிரிதிநிதிகள் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளிக்கவும், நடவடிக்கை இல்லை என்றால் மாநில அளவில் அரசியல் கட்சி தலைவர்களை ஒருங்கிணைத்து விழுப்புரத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என முடிவு செய்யப்பட்டது.

இந்தநிலையில் மேல்பாதி கிராமத்தில் உள்ள தர்மராஜா திரெளபதி அம்மன் கோவிலில் பட்டியலின மக்கள் சாமி தரிசனம் செய்ய ஒரு தரப்பு மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் இரு தரப்பினரையும் 7 முறைக்கு மேல் அழைத்து ஆட்சியர் பழனி பேச்சுவார்த்தை நடத்தியதில் உடன்பாடு எட்டாததால் ஆட்சியர் பழனியின் உத்தரவின் பேரில் குற்றவியல் நடைமுறைச் சட்டப் பிரிவு 145 (1) இன் கீழ் விழுப்புரம் கோட்டாட்சியர் அவர்கள் முதல்நிலை உத்தரவைப் பிறப்பித்து மேல்பாதி அருள்மிகு திரௌபதி அம்மன் கோயிலின் வாயிலைப் பூட்டி சீல் வைத்துள்ளனர் அதிகாரிகள்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

சிறுத்தை நடமாட்டம்! திருப்பத்தூரில் பள்ளிகளுக்கு விடுமுறை - மாவட்ட ஆட்சியர் அதிரடி
சிறுத்தை நடமாட்டம்! திருப்பத்தூரில் பள்ளிகளுக்கு விடுமுறை - மாவட்ட ஆட்சியர் அதிரடி
Tirupathur Leopard: திருப்பத்தூரில் பள்ளிக்கு அருகே முகாமிட்டுள்ள சிறுத்தை! எங்கிருந்து வந்தது தெரியுமா?
Tirupathur Leopard: திருப்பத்தூரில் பள்ளிக்கு அருகே முகாமிட்டுள்ள சிறுத்தை! எங்கிருந்து வந்தது தெரியுமா?
Breaking News LIVE: திருப்பத்தூர்: சிறுத்தையை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க மருத்துவ குழு வருகை
Breaking News LIVE: திருப்பத்தூர்: சிறுத்தையை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க மருத்துவ குழு வருகை
Bakrid 2024: பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு செஞ்சியில் ரூ.7 கோடிக்கு ஆடுகள் விற்பனை!
Bakrid 2024: பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு செஞ்சியில் ரூ.7 கோடிக்கு ஆடுகள் விற்பனை!
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

Leopard Attack in School | பள்ளிக்குள் புகுந்த சிறுத்தை பீதியில் உறைந்த குழந்தைகள் குவிந்த வீரர்கள்Annamalai Vs Tamilisai | தமிழிசை சந்தித்த அ.மலை! மோதலுக்கு முற்றுப்புள்ளி! கமலாலயம் HAPPY!Thoppur Lorry Accident  | தொப்பூரில்  பயங்கரம்! நடுரோட்டில் கவிழ்ந்த பஸ் பதைபதைக்கும் காட்சிகள்Vikravandi By Election | அன்புமணி வசமான பாமக! விக்கிரவாண்டியில் போட்டி! தைலாபுரம் EXCLUSIVE!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
சிறுத்தை நடமாட்டம்! திருப்பத்தூரில் பள்ளிகளுக்கு விடுமுறை - மாவட்ட ஆட்சியர் அதிரடி
சிறுத்தை நடமாட்டம்! திருப்பத்தூரில் பள்ளிகளுக்கு விடுமுறை - மாவட்ட ஆட்சியர் அதிரடி
Tirupathur Leopard: திருப்பத்தூரில் பள்ளிக்கு அருகே முகாமிட்டுள்ள சிறுத்தை! எங்கிருந்து வந்தது தெரியுமா?
Tirupathur Leopard: திருப்பத்தூரில் பள்ளிக்கு அருகே முகாமிட்டுள்ள சிறுத்தை! எங்கிருந்து வந்தது தெரியுமா?
Breaking News LIVE: திருப்பத்தூர்: சிறுத்தையை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க மருத்துவ குழு வருகை
Breaking News LIVE: திருப்பத்தூர்: சிறுத்தையை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க மருத்துவ குழு வருகை
Bakrid 2024: பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு செஞ்சியில் ரூ.7 கோடிக்கு ஆடுகள் விற்பனை!
Bakrid 2024: பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு செஞ்சியில் ரூ.7 கோடிக்கு ஆடுகள் விற்பனை!
சாதி மறுப்பு திருமணம்:  நெல்லை மார்க்சிஸ்ட் கம்னியூஸ்ட் அலுவலகத்தை சூறையாடிய பெண் வீட்டார்..!
சாதி மறுப்பு திருமணம்: நெல்லை மார்க்சிஸ்ட் கம்னியூஸ்ட் அலுவலகத்தை சூறையாடிய பெண் வீட்டார்..!
மீன் லாரிக்குள் இருந்த  1000 கிலோ போதைப் பொருட்கள் - சிக்கியது எப்படி...?
மீன் லாரிக்குள் இருந்த 1000 கிலோ போதைப் பொருட்கள் - சிக்கியது எப்படி...?
Coimbatore Cricket Stadium: கோவையில் கிரிக்கெட் மைதானம் அமைக்க இடம் ஆய்வு; வாக்குறுதியை நிறைவேற்ற களமிறங்கிய உதயநிதி
Coimbatore Cricket Stadium: கோவையில் கிரிக்கெட் மைதானம் அமைக்க இடம் ஆய்வு; வாக்குறுதியை நிறைவேற்ற களமிறங்கிய உதயநிதி
கஞ்சா விற்பனையில் போட்டா போட்டி! பெற்றோர் கண் முன்னே 20 வயது இளைஞர் கொடூர கொலை! நடந்தது என்ன?
கஞ்சா விற்பனையில் போட்டா போட்டி! பெற்றோர் கண் முன்னே 20 வயது இளைஞர் கொடூர கொலை! நடந்தது என்ன?
Embed widget